Showing posts with label போலி சுன்னத் வல். Show all posts
Showing posts with label போலி சுன்னத் வல். Show all posts

3 Dec 2018

பரேல்விகளின் நபி அஹ்மத் ரிஜாகான் பரேலவி !


பரேல்விகள் அஹ்மத் ரிஜாகானை நபிமார்களை விட மேன்மை மிக்கவர் என்பதாக கருதுகிறார்கள்.இதனின் உண்மை நிலையை தங்களுக்கு முன்பாக தெளிவுப்படுத்தி கூறுகிறேன்.

நமது தாழ்மையான வேண்டுகோள் இந்த கட்டுரையை கவனத்துடன் படித்துப் பாருங்கள்!

அஹ்மத் ரிஜாகான் கவ்ஸர் எனும் நீரை புகட்டுபவர் :

   அனைத்து முஸ்லிம்களின் கொள்கை கவ்ஸர் நீரை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் புகட்டுவார்கள்.எனினும்,பரேல்விகள் இதற்கு எதிரான கொள்கையின் பேரில் கவ்ஸர் நீரை புகட்டுபவர் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி என்பதாக கூறுகின்றனர்

جب زبانیں سوکھ جائیں پیاس سے 
جام کوثر کا پلا احمد رضا 

தாகத்தினால் நாவுகள் வரண்டுவிடும் பொழுது கவ்ஸர் நீரை புகட்டுபவர் அஹ்மத் ரிஜா
 (نغمتہ الروح )

முக்கிய குறிப்பு: 

இந்த நூலை பரேல்விகள் மறுப்பதை நாம் பார்த்துவருகிறோம்.அவர்களுக்கு கூறுகிறோம் " அபூகலீம் சித்தீக் ஃபானி பரேல்வி இந்த நூலின் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு 'ஆயினே அஹ்லுஸ்ஸுன்னா' என்ற நூலில் பதில் அளித்துள்ளார்.எனவே இந்த நூல் ஏற்கத்தக்கதல்ல என்ற வாதம் ஏற்புடையதில்லை."

பரேல்விய ஹகீமுல் உம்மத் முஃப்தி அஹ்மத் யார் கான் நயீமி குஜராத்தி இவரின் மகனார் இக்திதார் கான் நயீமி அவரின் தந்தையின் முழுமைப் பெறாத குர்ஆனின் விளக்கவுரையை முழுமைப்படுத்தியுள்ளார்.

   அந்நூலில் வரும் வாசகம்:

نبی پر ایمان فرض ہے اطاعت نہیں

நபியின் மீது ஈமான் கொள்வது பர்ளாகும்.கட்டுப்படுவது பர்ளு இல்லை.
(تفسیر نعیمی )

மார்க்கம்,வழிமுறை என்பது எனது நூலிலிருந்து வெளிப்படுவதாக உள்ளது.இதன் பேரில் அமல் செய்வது அனைத்து கடமைகளையும் விட பெரும் கடமையாகும்.
(وصایا شریف )

வாசகர்களே! நடுநிலையோடு கவனியுங்கள்! நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவது பர்ளு இல்லை.அஹ்மத் ரிஜாகானிற்கு கட்டுப்படுவது அனைத்து பர்ளுகளை விடவும் பெரிய பர்ளாகும்.(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

இதுமட்டுமின்றி, பரேல்விகளின் கொள்கை என்னவெனில் ....

  அஃலா ஹஜ்ரதின் கொள்கைகளுக்கு ஏற்ப இல்லாதவர் காபிராவார்.இது சரியானதாகும்.
الصوارم الہندیہ ,فتاوی صدر) 
الافاضل ,انوار شریعت )

கவனித்துப் பாருங்கள்! 
அஃலா ஹஜ்ரதின் கொள்கைகளுக்கு ஏற்ப இல்லையெனில் அவர் காபிர்.
நபி ஸல் அவர்களுக்கு கட்டுப்படுவதற்கு எந்த மதிப்பும் இல்லை.

அஹ்மத் ரிஜாகான் மல்பூஜாதில் எழுதியுள்ளார்:

 மேன்மைமிக்க குர்ஆனை பாதுகாக்கும் வாக்குறுதி தரப்பட்டுள்ளது.அதனின் வார்த்தை பொருளுடன் .......
சில வரிகளுக்கு பிறகு  எழுதுகிறார் :
        "அண்ணலார் வசனங்களில் சிலதை மறந்திருக்க வாய்ப்புள்ளது".

இதனின் கருத்து நபி (ஸல்)அவர்கள் வசனங்களில் சிலதை மறந்திருக்க வாய்ப்புள்ளது.

அஃலா ஹஜ்ரதின் மீது கண்மூடித்தனமான நேசம் கொண்டவர்கள் அவரை குறித்த நிலைப்பாட்டை பாருங்கள்! 

அஃலா ஹஜ்ரதின் நாவு, பேனாவை அல்லாஹ் தனது பாதுகாப்பில் எடுத்துக் கொண்டான்.நாவு பேனாவில் புள்ளி அளவிற்கு கூட தவறு ஏற்படுவதானது சாத்தியமில்லை.
(احکام شریعت )

அஃலா ஹஜ்ரதின் நாவு பேனாவில் புள்ளி அளவிற்கு கூட தவறு நிகழாது.நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் வசனங்களில் சிலதை மறக்க வாய்ப்புள்ளது.

பரேல்விகளிடம் நமது கேள்வி என்னவெனில்  நபி (ஸல்) அவர்களின் நாவை அல்லாஹ் தனது பாதுகாப்பில் எடுத்துக் கொள்ளவில்லையா?
அஃலா ஹஜ்ரதின் நாவு பேனா இரண்டையும் அல்லாஹ் பாதுகாப்பில் எடுத்துக்கொண்டான் எனில் இது நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்தை குறைப்பதாக ஆகாதா? பரேல்விகளே பதில் தாருங்கள்!

ஸாஹிப் ஜாதாஹ் அபுல்கைர் முஹம்மது ஜுபைர் பரேல்வி அவரது நூலான 'மஃபிரதுத்தன்பில்' எழுதியுள்ளார்:

அஃலா ஹஜ்ரதின் கொள்கை விரும்பிகள் ரிஜாகான் பரேல்வியை நபி (ஸல்) அவர்களை விட உயர்ந்தவர் என்பதாக கருதுகிறார்கள்.
(انوار کنزالایمان ,مغفرت ذنب )

அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆதார நூல்கள் :



6 Aug 2016

அஹ்மத் ரிழா கான் பரேல்வியும்,அவரது வழி கெட்ட கொள்கையும்.


வடஇந்தியாவில் உத்திரபிரதேசத்தில் பரேல்வி என்ற ஊரிலிருந்து ஆரம்பித்தது தான் இந்த போலி சுன்னத் வல் ஜமாத் போலி சுன்னத் வல் ஜமாத் எனும் பரேல்வியக் கொள்கை......



இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லீம்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்த பொழுது முஸ்லீம்களிடத்தில் சண்டையை தோற்றிவிக்க ஆங்கிலேயர்கள் இருவரை தேர்ந்தெடுத்தார்கள்.

1 . மிர்சா குலாம் அஹமட் காதியானி.
2 . அஹ்மத் ரிழா கான் பரேல்வி

இதில் நாம் காணவிருப்பது அஹ்மத் ரிழா கான் பரேல்வியும்,அவரது வழி கெட்ட கொள்கையும்.

அஹ்மத் ரிழா கான் பரேல்வி என்பவர் 1856 ல் பிறந்தார் 1921 ல் இறந்தார் இவருடைய தந்தை பெயர் நகூ அலி கான் மற்றும் இவருடைய தாதா பெயர் ரிதா அலி கான் ஆகும்.
[தத்கிர உலமா இ ஹிந்த் 1/1]

அஹமது ரிழா கானின் இயர்பெயர் அம்மான் மியான் இவருடைய  தாய் மற்றும் தந்தை இவரை அஹமது மியான் என்றும் இவரது தாதா அஹமது ரிதா என்றும் அழைப்பார்கள்.
[அல் பரேல்வி பக்கம் 25]

சியாகளின் வம்சாவழி.

அஹமது ரிழா கானின் தாதா சியாகளை சார்ந்தவராக உள்ளார் அஹமது ரிழா பின் நகீ அலீ பின் ராஜா அலீ பின் கஸிம் அலி.
[ஹயாத் ஆலா ஹஜ்ரத் பக்கம் 2]

தனக்கு தானே பெயர் சூட்டிய அஹமது ரிழா கான் பரேல்வி:

           அஹமது ரிழா கான் பரேல்வி தனக்கு தானே அப்துல் முஸ்தபா (முஹம்மது நபியின் அடிமை) என்று பெயர் வைத்துக்கொண்டார்.
[மன்ஹுவ அஹமது ரிதா ப.15]

இவரின் ஆசிரியர் காதியானி சகோதரர்:

      மிர்ஷா குலாம் அஹ்மது காதிகாதியானி யின் சகோதரர் அஹமது காதிர் பேக் என்பவர் அஹமது ரிழா கான் பரேல்வியின் ஆசிரியர் ஆவார்.
[அல் பரேல்வி பக்கம் 36]

 அஹமது ரிழா கான் பரேல்வியும் ,அவரது சஹாகளும் தங்களுடைய கிதாபுகளிலே இஸ்லாதிற்க்கு முரணான பல வழிகெட்ட கொள்கைகளை எழுதியுள்ளார்கள் அவை கீளே தரப்பட்டுள்ளது.
  
பரேல்விகளின்  வழி கெட்ட கொள்கை:

1.கேள்வி : அல்லாஹ்வை அல்லாஹ் சாஹிப் என்று அழைக்கலாமா? 
பதில்: இது ஆகுமானதாகும்.
  [மல்பூஜாத் பக்கம் 281]

 2. குளிப்பு கடமையான நிலையும் தரூதே சரீப் ஓதலாம்.
 [பதாவா ரிஜ்வியா பக்கம் 13]

 3.நபிமார்களை மனிதர்கள் என்பவன் காபிராவான் .
[கன்ஜுல் ஈமான் பக்கம் 5] 

4.நபிமார்கள் காபிர்களின் கையில் சஹீதாகப்பட்டாலும் அவர்கள் முஜாஹிதீன்கள் கிடையாது.
 [தப்சீர் நூருல் இர்பான் பக்கம் 654]

 5.முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு கிடைத்த நுபுவ்வத் அவர்களுக்கு பிறகு மீண்டும் வருமாயின் அது காஜி முஹம்மத் அகில் அவருக்கு தான் கிடைத்திருக்கும்.( நவூதுபில்லாஹ் )
 [மகாபீலே சுல் மஜ்லிஸ் பக்கம் 70 ,காஜா முஹமது சுலைமான்] 

6.நுபுவ்வதுடைய தொடர்ச்சி போய்கொண்டேயிருக்கும் .யார் வந்தால் நுபுவ்வத் முடிவுக்கு வரும்? நுபுத்துடைய தொடர்ச்சி முடிவுக்கு வராமலிருந்தால் அப்துல் காதிர் ஜெய்லானி தான் அடுத்து நபியாக வந்துருப்பார்கள் . ( நவூதுபில்லாஹ் )
 [இர்பானே சரீஅத் வால்யூம் 3/ பக்கம் 83] 

  அஹ்லுஸ்ஸுன்னாவிற்க்கு மாற்றமான கொள்கை.

 விளக்கம் :

 لو كان بعدي نبي لكان عمر

எனக்கு பிறகு நபி வருவதாக இருந்தால் உமராக இருப்பார் என நபி  ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

 7.இப்லீசுடைய அறிவானது நபியவர்களின் அறிவைவிட விரிவானது.
 ( நவூதுபில்லாஹ் )
 [அன்வாரி ஷாதிஃ 359]

8.ஜிஹாத் இந்திய முஸ்லீம்களின் மீது ஹராமாகும்.பர்ளு இல்லை. [முஹஜ்ஜத் அல் முதமன்ன பக்கம் 208] 

9.ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹூ அவர்கள் கியாமத் நாளில் நரகத்தின் சீட்டை (டிக்கேட்டை) காண்பிப்பார்கள்.( நவூதுபில்லாஹ் )
 [அல் அமான் வல் ஊலா பக்கம் 58] 

10.பணங்காடை ஆந்தை சாப்பிடுவதற்க்கு ஹலாலாகும். 
 [பதாவா ரிஜ்வியா பக்கம் 20/312]

11.கிளி சாப்பிடுவதற்க்கு ஹலாலாகும்.
 [அன்வாரே ஷரீயத் பக்கம்  119]
 

12.கோரை பல் கொண்ட வௌவால் சாட்பிடுவதற்க்கு ஹலாலாகும்.
 [பதாவா ரிஜ்வியா 20/318]

13.பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று எழுதுவதால் எந்த பலனும் இல்லை. 
[பதாவா ரிஜ்வியா 21/640] 

14.பன்றி ,விந்து ,இரத்தம் இவை அணைத்தும் அசலானதும் தூய்மையானதும் ஆகும் . 
 [பதாவா ரிஜ்வியா 4/440]

 15.லாயிலாக இல்லல்லாஹு வஹதஹூ லாஸரீகலஹூ என்ற துஆவை மய்யிதுடைய கபனில் எழுதி அந்த மய்யிதை கபரில் வைத்தால் அந்த மைய்யிதின் அருகில் முன்கர் ,நகீர் மலக்குமார்கள் வரமாட்டார்கள் . 
[பதாவா ரிஜ்வியா பக்கம் 4/127] 

16.கபரின் அருகில் பாங்கு சொல்வது முஸ்தஹப்பாகும்(விருபத்திற்க்குரியதாகும்).
 [பதாவா ரிஜ்வியா பக்கம் 4/54] 

17.கபரின் பக்கத்தில் பாங்கு சொல்வதால் சைத்தான் ஓடுகிறான்,அந்த கபருக்கு பரகத் இறங்குகிறது. 
 [ஜாஅல் ஹக் பக்கம் 1/315]

 18. கபருக்கு விளக்கேற்றி வைப்பது ஆகுமான காரியங்களில் உள்ளதாகும் . [ஜாஅல் ஹக் பக்கம் 300]

 அஹ்லுஸ்ஸுன்னாவிற்க்கு மாற்றமான கொள்கை .

விளக்கம் : 

*கபருக்கு அருகில் விளக்கேற்றுவது ஜாஹிலியத்துடைய நடைமுறையாகும்
. [பதாவா ஆலம் கிரி பக்கம் 1/178] 

*கபரின் அருகில் விளக்கேற்றுவது ஹராமான காரியமாகும். 
[பதாவா ஸாஹ் ரபியுத்தீன் பக்கம் 14]

 *கபருக்கு அருகில் விளக்கேற்றுவது ஆகுமானதல்ல. 
 [ ரூஹீல் மாணி 10/219] க

19. வஹாபிகள் அசலான முஸ்லீம்கள் கிடையாது .அவர்களின் 5 நேர தொழுகையை ஏற்றுக்கொள்ளப் படாது.அவர்களுடன் முஷாபஹா செய்வது பாவமான செயலாகும். அவர்களுடைய ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம். அவர்களுடன் திருமணம் செய்து கொள்ளவும் வேண்டும். [பதாவா ரிஜ்வியா பக்கம் 13]

20.ஆங்கிலம் அல்லாஹ்வின் ரஸுல்,லண்டன் அல்லாஹ்வின் காபா. (மஆதல்லாஹ்)
 [அன்கலாப் அல்ஹகீகத் 31]

21.  ஆதம் (அலை) அவர்கள் இப்லீஸுடைய உஸ்தாத் ஆவார்கள்.
[ஆலிமுல் தக்ரீர் 100]

 

makkah live

Sample Text

madina live