Showing posts with label பரேலி. Show all posts
Showing posts with label பரேலி. Show all posts

24 Jun 2021

நபிமார்கள் பொய் கூறுவார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் !


தஸ்பியதுல் அகாயித் என்ற நூலில் காஸிம் (ரஹ்) அவர்கள் நபிமார்கள் பொய் சொல்வார்கள் என்று எழுதியதாக பரேல்விகள் வழமை போல் பழிசுமத்துகின்றனர்.இது குறித்து விரிவான விளக்கத்தை இனி பார்ப்போம்
ஸர்ஸய்யித் அஹ்மத் கான் அவர்கள்,கொள்கைகள் சம்பந்தமாக தமக்கு எழும் பதினைந்து சந்தேகங்களுக்கு பதில் தருமாறு காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களிடம் கடிதம் அனுப்பினார்கள். அதில் ஒன்று தான் இவை.

கேள்வி: சொல்,செயல் அனைத்திலும் அல்லாஹ்வின் தூதர்கள் உண்மையாளர்கள்.அவசியமான (مصلحت) சமயத்தில் நபியின் பக்கம் இணைத்து சொல்வதில் குப்ரின் அச்சம் இருக்கும் போது மிக ஒழுக்ககேடான செயலாகும்.அவசியமான (مصلحت) சமயம் என்பதில் எனது கருத்து பொதுமக்கள் அவசியமாக(مصلحت)
கருதியிருப்பதை தான். சொல் அல்லது செயலை கொண்டு வருவது எதார்த்தத்தில் அனுமதியில்லை.எனினும்,அவசிய சமயத்தில் அதனை கூறுவது (தஸ்பியதுல் அகாயித் பக்கம்:5)

ஸர்ஸய்யித் ஸாஹிபின் சந்தேகத்திற்கு ஹழ்ரத் நானூத்தவி (ரஹ்) அவர்கள் பல பக்கங்களில் பதில் தருகிறார்கள். 
அதனின் சுருக்கம் என்னவெனில் பொய் பலவகைகள் உள்ளது.ஒன்று تعریض (சமிக்ஞையாக கூறுவது)தவ்ரியா (சிலேடையாக கூறுவது) போன்றவைகள் அனைத்தும் வெளிப்படையில் தோற்றத்தில் பொய்யாக தெரியும்.எனினும் எதார்த்தத்தில் உண்மைதான்.
தெளிவான பொய்யில் விளக்கம் உள்ளது.பாதிப்புகளிலிருந்து (பொய்) நீங்கி,நன்மையாக இருந்தால் ஒரு வகையில் நன்மைகளில் உள்ளதுதான்.உதாரணமாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் கூறுபவர் பொய்யர் இல்லை.(ஹதீஸின் சுருக்கமான கருத்து) எனினும், ஏமாற்றுதல்,மோசடி அல்லது பாதிப்பை ஏற்படுத்துதல் அல்லது தேவையின்றி கூறுவது ஹராமாகும்.சில சமயங்களில் சமிக்ஞை வார்த்தைகளை கூறினால் நிலைமை சரியாகிவிடும் எனும் போது தெளிவான பொய் அனுமதியில்லை.நபிமார்கள் தெளிவான பொய்யிலிருந்து முற்றிலுமாக நீங்கி பரிசுத்தமானவர்கள்.அவர்களை பொறுத்தவரை சமிக்ஞை வார்த்தைகளை கூறுவதையும் விரும்பவில்லை.ஹள்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உலகில் என்னிடமிருந்து சில பேச்சுக்கள் மூடலாக வந்துள்ளது என்பதாக வெட்கம் கொண்டு ஷஃபாஅத்திலிருந்து விலகிகொள்வார்கள்.இது குறித்து விரிவாக இமாம் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
(தஸ்பியதுல் அகாயித் (சுருக்கம்) பக்கங்கள்:22,23,24,25,26)


சுருக்கமான விஷயம் சமிக்கை  வார்த்தைகள் வெளிப்படையில் பொய்யாக தெரிகிறது.மேலும் தெளிவான பொய்யும் சில சமயங்களில் நன்மைகளில் உள்ளது.இதனால் இதனை (சமிக்கைஞான  வார்த்தைகளை) நபியின் விஷயத்தில் பொய்யானது, ஒட்டுமொத்தமாக நுபுவ்வத்திற்கு எதிராக கருதுவது சரியில்லை.எனினும்,இவை மற்ற நபிமார்களின் விஷயத்தில் கூறியதாகும்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி விஷயத்தில் அனைத்து விட்டும் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதாக காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் தெள்ளத்தெளிவாக எழுதியுள்ளார்கள். ஆனால்  பரேல்விகள் நேர்மையற்று அதனை மறைத்துவிடுகின்றனர்.

காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்களின் அசலான வார்த்தைகள்.

پھر دروغ صریح بھی کئی طرح پر ہوتا ہے جن میں سے ہر ایک حکم یکساں نہیں ہر قسم سے نبی معصوم ہونا ضروری نہیں اگر چہ ہمارے پیغمبر صلی اللہ علیہ وسلم سب بھی سے محفوظ رہے ہیں 

பிறகு தெளிவான பொய்யும் பல விதங்களில் உள்ளது.ஒவ்வொன்றின் சட்டமும் ஒன்றல்ல.அனைத்து வகையிலிருந்து நபிமார்கள் நீங்கியிருப்பது அவசியமில்லை.எனினும்,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்தை விட்டும் பாதுகாப்பாக உள்ளார்கள்.(ஆதாரம்:தஸ்பியதுல் அகாயித் பக்கம்:)

ஹழ்ரத் நானூத்தவி (ரஹ்) அவர்கள் பொய்யானது ஒட்டுமொத்தமாக நுபுவ்வத்திற்கு எதிரானது இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பரேல்விய அறிஞர்களின் கருத்துக்களை இனி பார்ப்போம்!

முப்தி மஜ்ஹருல்லாஹ் எழுதியுள்ளார்:

ஸஹீஹ் புகாரி, முஸ்லிமில் அபூஹுரைரா ரளி அறிவிப்பு வருகிறது
நல்லோர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் மிக அதிகமாக இருக்கும்.இதனால் வெளிப்படையான தோற்றத்தில் உள்ள பொய்யையும் ஹழ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் தவறுசெய்தவனாக எண்ணி இஸ்திஃபாரில் ஈடுபட்டார்கள்.
(தப்ஸீரே மஜ்ஹருல் குர்ஆன் 2/978)

குலாம் ரசூல் ஸயீதி எழுதியுள்ளார்: 

ஹழ்ரத் உமர் (ரளி) கூறுகிறார்கள் :
முஸ்லிம்கள் பொய்யிலிருந்து தப்பிப்பதற்கு சமிக்கை வார்த்தைகள் போதுமானது.ஹள்ரத் இம்ரான் இப்னு ஹஸீன் (ரளி) கூறுகிறார்கள் முஸ்லிம்கள் பொய்யிலிருந்து தப்பிப்பதற்கு பொய்யில் பெரிய வாய்ப்புள்ளது......

மேலும் எழுதுகிறார்: அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்:ஹழ்ரத் இப்ராஹும் அலை அவர்கள் மூன்று பொய்களை மட்டும் தான் கூறினார்கள்.இந்த ஹதீஸில் பொய்யைக் கொண்டு கருத்தானது வெளிப்படையில் பொய்யாகும்.எதார்த்தத்தில் சமிக்கை வார்த்தைகள்.
(ஆதாரம்:திப்யானுல் குர்ஆன் 7/605)

ஹழ்ரத் இமாம் காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் பொய்யானது ஒட்டுமொத்தமாக நுபுவ்வத்திற்கு எதிரானது இல்லை.இதனின் நோக்கம் பொய்யில் சமிக்கையாக  கூறுவது,மறைத்து கூறுவது,சிலேடை அனைத்தும் நுழையும்‌.இவை நபிமார்களிடமிருந்து வெளிப்படும். எனவே நுபுவ்வத்திற்கு எதிரானது இல்லை.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அருள்மொழியில் கண்ணியமான நபிக்கு பொய் எனும் வார்த்தையை பயன்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறோம்.

لم يكذب ابراهيم النبي عليه السلام قط إلا ثلاث كذبات (مسلم /٢,٢٦٦)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் முஸ்லிம் நூலின் விரிவுரையில் எழுதியுள்ளார்  சமிக்ஞையாக  இருந்தால் كذب (பொய்) என்பதாக கூறுவதன் தேவை என்ன? என்பதாக கேள்வி எழுப்பினால் நவவி (ரஹ்) அவர்களின் பதில் சமிக்ஞை,சிலேடை போன்றவைகளை பொய் என்பதாக பொதுவாக கூறுவது சரிதான் என்பதை இந்த ஹதீஸிருந்து புரியமுடிகிறது.

இறுதியாக பரேல்விகள் முதலில் அவர்களின் கேடுகெட்ட கொள்கைகளை களையட்டும் !

பரேல்விய அறிஞர் அஹ்மத் யார் கான் நயீமி எழுதியுள்ளார்:

 நபிமார்கள் நாட்டத்துடன், வேண்டுமென்றே  பெரும்பாவங்கள் நுபுவ்வத்திற்கு முன்பாக பின்பாக செய்ததில்லை.ஆனால் தவறுதலாக,மறதியாக ஏற்பட முடியும்.எனினும் அதன்மீது நிலைத்திருக்கமாட்டார்கள்.
(ஆதாரம்:ஜாஅல் ஹக் பக்கம்:)


நபிமார்களிடமிருந்து  பெரும்பாவங்கள் நிகழும் என்பதாக கூறுகிறார் இதற்கு எதிராக பரேல்விகள் என்ன தீர்ப்பு தருவார்கள்?

17 Jun 2021

கண்ணியத்தின் பேரில் ஸஜ்தாவில் பரேல்வி அறிஞரின் பெரும் அறிஞர்கள் மீது விமர்சனம் !


பரேல்விய அறிஞர் ஸய்யத் முஜம்மில் ஹுஸைன் காஜிமி "ஸவூதி தப்ஸீர் பர் ஏக் நஜர்" எனும் நூலில் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களை வரம்புமீறி விமர்சித்துள்ளார்.இறுதியில் அவரின் குற்றச்சாட்டு,விமர்சனம் பரேல்விகளின் தலைவர் அஹ்மத் ரிஜாகான் மற்றும் பெரும் உலமாக்களின் மீதும் திரும்பியுள்ளது.

பரேல்விய அறிஞர் முஸம்மில் ஹுஸைன் தக்வியதுல் ஈமான் பக்கம்:78 இல் இருப்பதாக எழுதியுள்ள வாசகம் :

(கண்ணியத்தின் பேரில் ஸஜ்தா செய்தால் என்ன தவறு என்பதாக எண்ணுகின்றனர்? இதன் மூலம் இணைவைப்பு ஏற்படும்.ஈமான் உள்ளத்தை விட்டு வெளியேறிவிடும் என்பதை நினைவில் வைக்கட்டும்)

இதனை குறித்து பரேல்விய அறிஞர் எழுதியுள்ளார்:

இது ஷரீஅத்தில் ஹராமான காரியமாகும்.திஹ்லவி அவர்கள் இணைவைப்பு என்பதாக கூறுவது அல்லாஹ் அவனின்தூதரின் மீது இட்டு கட்டுவதும், மார்க்கத்தில் வரம்புமீறுவதாகும்.
(ஆதாரம்: ஸவூதி தப்ஸீர் பர் ஏக் நஜர் பக்கம்:196)

பரேல்விய அறிஞர் இருவிஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

1) கண்ணியத்தின் பேரில் செய்யும் ஸஜ்தாவை இணைவைப்பு என்பது வரம்பு மீறும் செயல்.

2)அல்லாஹ், அவனின் தூதரின் மீது பொய்யுரைப்பது‌.

மற்றொரு பெரும் அபாண்டத்தை ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் மீது சுமத்துகிறார்.

மிர்ஸா காதியானியை போன்று தனக்கும் தூதுத்துவம் உண்டு என்பதாக எண்ணுவதாகும். இதன்மீது ஏதேனும் புதிய வஹி வந்ததா? இத்தனை நாட்கள் வரை கண்ணியத்தின் பேரில் செய்யும் ஸஜ்தா பெரும்பாவமாக மட்டும் இருந்தது.இன்று முதல் இணைவைப்பாகி விட்டது.ஈமான் வெளியேறிவிடுகிறது.
(ஆதாரம்: ஸவூதி தப்ஸீர் பர் ஏக் நஜர் பக்கம்:)

நமது பதில்: 
(ஹழ்ரத் மெளலானா  முனாஜிர் அபூ அய்யூப் காதிரி தாமத் பராகாதுஹு அவர்கள் கூறுகிறார்கள்:
தக்வியதுல் ஈமான் நூலில் தேடியும் பரேல்விய அறிஞர் கூறுவது கிடைக்கவில்லை

ஒரு வாதத்திற்கு ஏற்றாலும் அறியாதவர்கள் விளங்கி கொள்ளட்டும்.ஷிர்க் என்பது பல வகைகள் உண்டு.ஆகுமானது என்பதில் தொடங்கி குப்ரு வரை உள்ளது.

உதாரணமாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்வதை இணைவைப்பு என்பதாக கூறியுள்ளார்கள்.எனினும் சத்தியம் செய்துள்ளார்.இது ஆகுமானது என்பதில் சேரும்.

எனவே ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் ஷிர்க் என்பதாக கூறியது பெரும்பாவம் என புரியமுடிகிறது.

அடுத்து ஈமான் உள்ளத்தை விட்டு சென்றுவிடும் என்பதன் விளக்கம் மிஷ்காத் போன்ற நூல்களில் வந்துள்ள ஹதீஸ் முஃமீன் விபச்சாரத்தில் ஈடுபட்டால் ஈமான் உள்ளத்தை விட்டு சென்றுவிடும்.இதன் மூலம் அவர் காபிராகிவிடுவாரா? 
மாறாக பரிபூரண ஈமானை விட்டு தூரமாகிவிடுவார்.இந்த அர்த்தத்தில் தான் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) கூறியுள்ளார்.இப்போதும் புரியவில்லையெனில் இதனையும் பாருங்கள்!

ஹழ்ரத் ஷைகுல் மஷாயிஹ் ஸய்யித் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்:

 அல்லாஹ் அல்லாதவரின் பக்கம் முன்னோக்குவது ஷிர்க் என கூறியுள்ளார்.
(ஆதாரம்:புதூஹுல் கைப், பக்கம்:161)

மற்றொரு இடத்தில் அன்னார் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்:

ஷிர்க் ஏற்படாமல் இருப்பதற்காக ஏதேனும் விருப்பம்,ஆசை,நாட்டத்தை வெளிப்படுத்தாதீர்.(ஆதாரம்:புதூஹுல்கைப்,பக்கம்:24)

மற்றொரு இடத்தில் அன்னார் எழுதியுள்ளார்:

 சிலைகளை வணங்குவது மட்டும் ஷிர்க் இல்லை.மாறாக ஷிர்க் என்பது தனது இச்சைகளை பின்பற்றுவது,அல்லாஹ்வை தவிர உலக,மறு உலகத்தின் ஏதேனும் விஷயத்தை விரும்புவது.(ஆதாரம்:புதூஹுல் கைப்,பக்கம்:26)

அடுத்த விமர்சனம்....
👇👇👇👇👇👇👇👇👇👇

கண்ணியத்தின் பேரில் செய்யும் ஸஜ்தாவை இணைவைப்பு என்பவர் நுபுவ்வத்தை வாதிடுகிறார் அல்லது மார்க்கத்தில் வரம்புமீறி அல்லாஹ் அவனின் தூதரின் மீது பொய்யுரைக்கிறார்.

பரேல்விய அறிஞர் வரம்புமீறி,சகட்டுமேனிக்கு ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களை விமர்சித்துள்ளார்.இது எவ்வாறு திரும்பியுள்ளது என்பதை பாருங்கள்.

பரேல்விகளின் தலைவர் அஹ்மத் ரிஜாகான் எழுதியுள்ளார் :

அல்லாஹ் அல்லாதவருக்கு கண்ணியத்தின் பேரில் ஸஜ்தா செய்பவர் இறைநிராகரித்து விட்டார்.(ஆதாரம்:பதாவா ரிஜ்விய்யா 22/459)

பரேல்விய ரிஜாகான் பல நூல்களிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார். ஷரஹ் நிகாயா,மஜ்மஉல் அன்ஹர்,பதாவா ஷாமிய்யா,ஜாமிஉர் ருமூஜ்,காயதுல் பயான்,தப்யீனுல் ஹகாயிக்,நிஸாபுல் இஹ்திஸாப். 

ரிஜாகான் பரேல்வி நுபுவ்வத்தை வாதிடுபவர், அல்லாஹ் அவனின் தூதரின் மீது பொய்யுரைப்பவர் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.
அது மட்டுமின்றி இந்த அனைத்து நூலின் பெரும் உலமாக்கள் பெரியோர்கள் நுபுவ்வத்தை வாதிடுபவர்களா? அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவர்களா? என்பதை கூறுங்கள்.

இந்த வாசகத்தில் உள்ள குப்ர் என்பதற்கு மாற்றுப் பொருள் கூறமுடியும் என்று வாதிட்டால் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் எழுதியதற்கு மாற்றுப் பொருள் கூற முடியாதா?
 

makkah live

Sample Text

madina live