20 Jun 2021

பரேலவிகளின் தலைவர் அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் ஒப்புதல் பரேல்விகள் யாரும் ஆண்கள் இல்லை !


அல்லாஹ்வின் கிருபையால் பரேல்விகளின் கேடு கெட்ட கொள்கைகளை,வழிகேடான நிலைப்பாடுகளை,பெருமானார் (ஸல்) அவர்கள்,நல்லோர்களை சகட்டுமேனிக்கு விமர்சிப்பதை பதிவு செய்துள்ளோம்.  இவர்கள் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத் போர்வையில் இருந்து கொண்டு சமுதாயத்தை கூறு போடும் சண்டாளர்கள். பித்அத்துகளுக்கு மார்க்க வடிவம் கொடுப்பவர்கள்.

அது மட்டுமின்றி 'அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தை' உயிர் மூச்சாக கொண்டு, வாழ்ந்த பெரியோர்களான தேவ்பந்த் உலமாக்களின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி,குரோதம்,விரோதம் கொண்டு பொய்களை,புரட்டுகளை அவதூறுகளை அள்ளிவீசியவர்கள். இன்னும், ஒரு படி மேல் காபிர் என்பதாக தீர்ப்பளித்த நாசகர்கள். உண்மையில் உறுதியிட்டு சொல்கிறோம் .

"காதியானிகளால் ஏற்படும் பாதிப்புகளை விட பரேல்விகளாகிய இவர்களின் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் விளைவுகளும் மிக பயங்கரமானது". 
   
அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் நிலைப்பாட்டின் பேரில் பரேல்விகள் ஆண்கள் இல்லை. பித்அத்துகளை புதுப்பித்து உயிர் ஊட்டியவர்,மார்க்க வடிவம் கொடுத்தவர்.

மல்பூஜாதின் முதல் பாகம் 46 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார்கள்:

وہ مرد نہیں جو دنیا کو مثل ہتھیلی نہ دیکھے
உள்ளங்கையை பார்ப்பது போல் முழு உலகத்தையும் பார்க்காதவர் ஆண் இல்லை.
(ஆதாரம்:மல்பூஜாத் பக்கம்:46)

இப்பொழுது பரேல்விகள் உள்ளங்கையில் உலகத்தை பார்க்கும் படத்தை அனுப்பட்டும்! உலகம் தெரியவில்லையெனில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வியின் தீர்ப்பின் பேரில் ஆண்கள் இல்லை என்பதை ஒத்துக்கொள்ளட்டும் !

அடுத்து இந்நிலைப்பாடு மிகவும் பயங்கரமானது, அபாயகரமானது ஈமான் மிஞ்சாது. ஏனெனில் மல்பூஜாத்தில் வரும் மற்றொரு சம்பவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் உண்மையை புரிந்து கொள்ள முடியும்.

ஃபாஜில் பரேல்வி மல்பூஜாதில் ஒரு ஹதீஸை எடுத்தெழுதியுள்ளார்:

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நாளை வருவதாக வாக்குறுதி அளித்தார்கள். மறுநாள் நபி(ஸல்) அவர்கள் எதிர்பார்த்தார்கள். எனினும் வாக்குறுதியில் தாமதமானது. ஜிப்ரயீல்(அலை) அவர்கள் வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து பார்வையிட்டார்கள்.ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை புரிந்தார்கள். பெருமானார் தாமதம் ஏன் என காரணம் கேட்டார்கள்? அதற்கு ஜிப்ரயீல் (அலை) கூறினார்கள் ரஹ்மத்தின் வானவர் உருவப்படம் நாய் இருக்கும் வீட்டில் நுழையமாட்டார்கள். பிறகு அண்ணலார் வீட்டில் நுழைந்து தேடிகிடைக்கவில்லை. எனினும் கட்டிலுக்கு கீழ் நாய் இருந்தது. அதனை வெளியேற்றிய பிறகு ஜிப்ரயீல் அலை வந்தார்கள்.
(மல்பூஜாத் பக்கம்:354,பாகம்:3)

பரேல்வி ஸயீத் ஸாஹிப் அவர்கள் ஒரு வினாவிற்கு பதில் தருகிறார்கள்: 
அண்ணலாரின் முதுகின் மீது அசுத்தம் வைக்கப்பட்ட பொழுதும் பிறகு எவ்வாறு அதனுடன் தொழுதிருப்பார்கள்?

 நமது பதில் : நபி ஸல் அவர்களின் முதுகின் மீது என்ன வைக்கப்பட்டது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.(ஷரஹ் ஸஹீஹ் முஸ்லீம் பாகம்:5 பக்கம்:564)

ஆண்கள் இல்லை என்ற நிகழ்வையும், இவ்விரண்டு நிகழ்வையும் ஒப்பிட்டு விளக்குவதற்கு மனம் வரவில்லை. உள்ளம் பதறுகிறது.பரேல்விகளின் நயவஞ்சகுணத்தை புரிந்து கொள்ளுங்கள்.

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்பதாக தேவ்பந்த் உலமாக்கள் கூறினார்கள் என்பதாக அவதூறு ,பொய்யை அள்ளி வீசி காபிர் என்பதாக பத்வா கொடுத்த பரேல்விகள் அஹ்மத் ரிஜகான்,ஸயீத் ஸாஹிபிற்கு எதிராக என்ன ஃபத்வா கொடுப்பீர்கள்?

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live