20 Jun 2021

தேவ்பந்த் பெரியோர்களின் மீது பரேலவிகள் கொடுத்த குப்ர் ஃபத்வா காழ்ப்புணர்ச்சியே ! அவதூறே! - பாகம் : 2

பரேல்விகளின் மிக அதிகமான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் ஹள்ரத் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் ரஹ் அவர்கள் மீதுதான்.

ரிஜாகான் பரேல்வி ஸுப்ஹானுஸ் ஸுப்பூஹ் நூலில் 75 காரணங்களால் , அல்கவ்கபதுஷ்
ஷிஹாபிய்யாவில் 70 காரணங்களால் ஷாஹ் இஸ்மாயில் (ரஹ்) அவர்கள் மீது குப்ர் என்பதாக தீர்ப்பளித்துள்ளார்.

அன்னார் அவர்களைத் தான் தேவ்பந்திகளின் தலைவர் என்பதாக கூறியுள்ளார்.ஆனால் ஆச்சரியம் என்னவெனில் இத்தனை காரணங்கள் இருந்தும் கூட அஹ்மத் ரிஜாகான் பரேல்வி, ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களை காபிர் என்பதாக ஃபத்வா கொடுக்கவில்லை.

அஹ்மத் ரிஜாகான் எழுதியுள்ளார்:

நமது நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹு என்று கலிமா சொன்னவர்களை காபிர் என்பதாக கூறுவதை விட்டும் தடுத்துள்ளார்கள்.
(ஆதாரம்:தம்ஹீதே ஈமான், பக்கம்:132)

நம்மிடத்தில் பேணிக்கையானது காபிர் என்று கூறுவதிலிருந்து நாவை பேணிக்கொள்வது பொருத்தமானது எடுக்கப்படக்கூடியது ஏற்றமானது.(ஆதாரம்:ஸுப்ஹானுஸ் ஸுப்பூஹ், பக்கம்:135)

மெளலானா இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களை குறித்து எந்தளவிற்கு விமர்சித்து எழுதியுள்ளான் என்று பாருங்கள் அப்போதும் காபிர் என கூறவில்லைை

முஸ்லிம்களே! தூய்மையற்ற சபிக்கப்பட்ட ஷைத்தானின் வார்த்தைகளை கவனியுங்கள்.
முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பக்கம் தொழுகையில் சிந்தனை செலுத்துவதானது விபச்சாரியின் சிந்தனை அவளுடன் விபச்சாரத்தின் சிந்தனையை விட கெட்டது.தனது எருமை மாடு,கழுதையின் சிந்தனையில் மூழ்குவதை விட கெட்டது...... முஸ்லிம்களே !  இப்படிப்பட்ட வார்த்தைகள் ஏதேனும் முஸ்லிமின் நாவிலிருந்து வருமா? حاش الله பாதிரிமார்கள், பண்டிதர்கள்,மற்றவர்கள் பகிரங்கமான காபிர்கள்,முஷ்ரிகீன்களின் நூல்களில் பாருங்கள் அவர்கள் சந்திரனை போன்று ஒளிவீசும் இஸ்லாத்தில் சாம்பலை வீசுவதற்கு எழுதுகின்றனர்.
அவர்களிலும் இது போன்ற முன்னுதாரணம் இல்லாமல் இருக்க முடியும். பகிரங்கமான அசுத்தமான வார்த்தைகளை உண்மையான நபி ஸல்லல்லாஹூ அலைஹி அவர்கள் மீது தொடர்பு படுத்தியுள்ளான்.
(ஆதாரம்: அல்கவ்கபதுஷ்
ஷிஹாபிய்யா 201)

(நவூதுபில்லாஹ் இது போன்ற ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் உண்மையில் எழுதவில்லை)

இப்படி எழுதிய பிறகும் ரிஜாகான் பரேல்வி,அன்னாரை காபிர் என்பதாக விமர்சிக்கவில்லை.

எவ்வளவு பெரிய மனசு என்பதை பார்த்தீர்களா??

மெளலானா இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் காபிர் என்பதாக ஃபத்வா அளிக்காததின் காரணத்தை முட்டு கொடுத்து எழுதப்படுகிறது.(لزوم الكفر) குப்ரான கலிமாக்களை கூறுவது வேறு. (التزام الكفر ) அதை கூறியவரை காபிர் என்பதாக கூறுவது வேறு.(ஆதாரம்:குஸ்தாகி கோன் பக்கம்:119)

சுருக்கம் என்னவெனில் அஹ்மத் ரிஜாகான் பரேல்வி கடைசி வரை இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களை காபிர் என்பதாக கூறவில்லை. ஏனெனில் குப்ரான கலிமாக்களை கூறுவது வேறு.அதை கூறியவரை காபிர் என்பதாக கூறுவது வேறு.
ஆக அஹ்மத் ரிஜாகான் கூறும் கருத்தானது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை தொழுகையில் சிந்தனை செய்தால் முறிந்து விடும் என்பது எதார்த்தத்தில் வேறாக இருக்கலாம்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மூத்த சகோதரருக்கு சரிசமமானவர் என்பதாக கூறியது வேறாக இருக்கலாம்.இதனால் பேணிக்கை உலமாக்கள் காபிர் 
என கூறவில்லை.எழுதியவரின் நோக்கம் வேறாக இருக்கலாம்.

முக்கியமான கேள்வி:

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை, மெளலானா இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் உண்மையில் அவமதித்திருந்தால் ஏன் காபிர் இல்லை? நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிப்பது குப்ர் இல்லையா? நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிப்பவர் காபிர் இல்லை என நமது அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத் தேவ்பந்த் உலமாக்கள் கூட ஏற்க மாட்டார்கள். அஹ்மத்ரிஜாகான் பரேல்வியிடத்தில் குப்ர் என்பதற்கு 70,75 காரணங்கள் இருந்தும் கூட காபிர் என கூறமாட்டோம் என்றால் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதத்தில் புழுதி வாரி தூற்றுவது குப்ர் இல்லை அல்லது ரிஜாகான் பரேல்வி பொய்யாக,அபாண்டமாக, அவதூறாக பழி சுமத்தியுள்ளார் என்பது தெளிவாகிறது.

முக்கிய குறிப்பு: 
குப்ரான கலிமாக்களை கூறுவது வேறு.அதை கூறியவரை காபிர் என்பதாக கூறுவது வேறு என்பதில் பரேல்விகளிடத்தில் பல்வேறு முரண்பாடுகள், பொய்கள் உள்ளன.இதனை குறித்து இன்ஷா அல்லாஹ் வேறு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live