17 Dec 2017

பித்அதி பரேலவிகளின் வழிகெடுக்கும் கொள்கைகள்!

பித்அத்தை அங்கீகரிப்பவர்கள், நவீன அனுஷ்டானங்களை இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைப் போன்று பாவித்துச் செய்யும் அனாச்சாரமான கொள்கைக்கு ஹிஜ்ரீ 14ஆம் நூற்றாண்டில் புத்துயிரூட்டியவர் வடநாட்டில் ஆஃலா ஹஜ்ரத் எனப்படும் அஹ்மது ரிஜாகான் பரேலவி என்பவராவார்.

உ.பி.யின் பரேலி எனும் ஊரில் ஹிஜ்ரீ 1272 ஷவ்வால் (கி.பி. 1856 ஜூன் 14) அன்று பிறந்தார். தகப்பனார் பெயர் நகீஅலீ. இவருக்குத் தாயார் வைத்த பெயர் அம்மன் மியான். தந்தை வைத்த பெயர் அஹ்மது மியான். பாட்டனார் தான் அஹ்மது ரிளா அல்லது அஹமது ரிஜா என்று பெயர் வைத்தார். இந்தப் பெயரே பிரபலமானது. இதனால் இக்கொள்கைக்கு "ரிளாகானிய்யத்''  என்று கூறுவர். ஊரின்பால் தொடர்பு படுத்தி "பரேலவிய்யத்'' என்றும் கூறுவர். இவர்களை "பித்அத்வாதிகள்"
என்று தமிழ் நாட்டிலே அறியப்படுவார்கள். இன்னும் "பித்அதி" என்றும் அறியப்படுவார்கள்.



இவர் தனது ஆரம்பக் கல்வியை, தன்னை நபி என வாதிட்ட பொய்யன் மிர்ஸா குலாம் காதியானியின் சகோதரர் மிர்ஸா குலாம் காதிர் பேக்கிடமே கற்றார். இவர் பொய்யர், இஸ்லாமிய உண்மைக் கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

இவர்களின் உலமாகள் :

1.அஹமது யார் கான் நயீமி குஜராத்தி.

2.முப்தி ஹனீப் குரைஷி.

3.இல்யாஸ் அத்தர் காதிரி. 

4.பைஜ் அஹமது உவைஸி.

5.இர்ஷாத் காதிரி.

இன்னும் பலர் உள்ளார்கள்...

இவர்களின் வழிகெட்ட கொள்கைகள் ..

1) பரலேவிகளின் நம்பிக்கைக்குரிய சூபியும் பெரியோரும் வலி குலாம் பரீத் அவர்கள் தனது மல்பூஜாதிலே கூறியுள்ளார்கள்:

حضرت مولانا فرمایا کرتے تھے کہ ہمارے حضرت شیخ کے تمام مریدین برگزیدہ تھے اور محبت شیخ میں اس قدر محو تھے کہ کلمہ طیبہ میں محمد رسول اللہ حضرت شیخ کے ڈر سے کہتے تھے ور نہ ان کا جی چاہتا تھا کہ شیخ کے نام کا کلمہ پڑھیں (حوالہ مقابیس المجالس )

ஹள்ரத் மெளலானா கூறினார்கள் எங்களின் ஹள்ரத் அனைத்து முரீதின்களை விட ஷைகிடத்தில் தனித்துவம் பெற்றவர்கள்.மேலும் ஷைகின் மீதுள்ள அன்பனாது இந்தளவிற்கு அவரை ஆட்கொண்டிருந்தது.கலிமா தய்யிபாவிலே முஹம்மது ரஸுலுல்லாஹ் என்று ஷைகின் மீதுள்ள பயத்தினால்  சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு இல்லையெனில் அவரின் உள்ளமானது ஷைகின் பெயரில் கலிமா படிப்பதை விரும்பியது.
(மகாபீஸ் அல் மஜாலீஸ்)



لو كان بعدي نبي لكان عمر

எனக்கு பிறகு நபி வருவதாக இருந்தால் உமராக இருப்பார் என நபி ஸல் அவர்கள் நவின்றுள்ளார்கள்.


ஆனால் பரேலவிகள் கூறுவதை பாருங்கள் 👇

2) பரலேவி அறிஞர் ஃபாளில் கூறுகிறார்:


'கதம் நுபுவ்வத்' இல்லாமல் இருந்திருந்தால் ஹள்ரத் غوث அவர்கள் நபியாக வரமுடியும்.(عرفان شریعت)


3) سجادہ نشین پیر بل شریف அவரின் மகனார் முஹம்மத் உமர் அவரின் கலிமா :

انگریز اللہ کے رسول ہیں ஆங்கிலம்  அல்லாஹ்வின் ரஸுல் لندن کعبة الله லண்டன் அல்லாஹ்வின் கஃபா .




4) நபிமார்களின் தலைவர், சிறந்தவர்களின் முதல்வர்,
மெளலானா மெளலவி ஹாபிஜ் முஃப்தி ஹகீம் ஸய்யித் ஷாஹ் ஆலி
முஸ்தஃபா ஸாஹிப் கிப்லா தாமத் பரகாத்
(அல்ஃபகீஹ் அம்ரேதஸர், பாகம்:28, ரஜப் ஷஃபான்,1364 ஹிஜ்ரி)



5) ரிளாகான் பரலேவி "மல்பூஜாத்" எனும் அவரது நூலில் சஹாபியை காபிர் என விமர்ச்சித்துள்ளார் :

ایک بار عبد الرحمان قاری کہ کافر تھا اپنے ہمراہیوں کے ساتھ
حضور اقدس صلی اللہ کے اونٹوں پر آپڑا چرانے والے کو قتل کیا اور اونٹ لے گیا اسے قراءت سے قاری نہ سمجھ لیں بلکہ بنو قارہ سے تھا 

  ஒரு தடவை அப்துர் ரஹ்மான் காரி என்கிற இறைநிராகரிப்பாளன்
இருந்தான்.தனது தோழர்களுடன் அண்ணல் நபி ஸல் அவர்களின் ஒட்டகங்களை தாக்கியதுடன்
மேய்ப்பாளரையும் கொலை செய்தான்.
(மல்பூஜாத் இரண்டாம் பாகம் சுருக்கம்)






6) ஹஜ்ரத் உம்முல் முஃமினீன் சையதுல் முர்ஸலீன் முஹம்மது (ஸல்) அவர்களுடைய பிரியத்திற்க்குறிய மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களுடைய பரிசுத்தமான உயிரானது நமது தலைவர் கௌஸுல் அஃலம்  முஹையித்தீன் (ரஹ்) அவர்களுக்கு பால் புகட்டியது. சில நபியவர்களை புகழக்கூடியவர்கள்  இதை கனவு என்பதாக கூறுகின்றார்கள். ஆனால் இது கனவு என்று சொல்வதை விட இதற்க்கு அறிவுரீதியாகவும் சாத்தியம் இருக்கிறது ! சரியத்திலும் இதற்க்கு அனுமதி இருக்கிறது. இது பாரதூரமானதோ அல்லது சாத்தியமில்லாததோ அல்ல! (நஊதுபில்லாஹ்)ண
[ஆதாரம்: இர்பானே சரீயத்]





இதை கனவு என்று சொன்னாலும் பரவாயில்லை ஆனால் அஹமது ராஜா கானோ இதற்க்கு அறிவுரீதியாக சாத்தியமிருக்கிறது! சரியதிலும் அனுமதி இருக்கிறது ! என்று எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குருட்டுத்தனமாக கூறியுள்ளார்.


7) மெளலவி நயீமுத்தீன் முராதாபாதி கூறியுள்ளார் :

குர்ஆனில் நபிமார்களை மனிதர்
என்பவர்களை காபிர் என்பதாக கூறப்பட்டுள்ளது.
(நூருல் இர்ஃபான் 636,448)




8) பரேல்வி மெளலவி உமர் எழுதியுள்ளார்:

 நபி (ஸல்) அவர்கள் கணவன் மனைவி தாம்பத்திய
சமயத்தில் ஹாளிர் நாளிர் எனினும் கிராமன் காதிபீனை போன்று அண்ணலார் (ஸல்)
அவர்கள் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் பார்வையை பேணிக் கொள்வார்கள்.
(மிக்யாஸ்
ஹனஃபிய்யத்)





9)
ஆதம் (அலை) ஆட்சி அதிகாரத்தின் பேரில் சுவனத்தில் இருந்தார்கள்.
ஆதம் (அலை) கிரீடம் அணியப்பட்டு கண்ணியமாக இருந்தார்.இன்று இழிவில் அகப்பட்டுக்கொண்டார்.
(அவ்ராகே ஙம் பக்கம்:2 முதல் பதிப்பு 1348)




10) நபி (ஸல்) அவர்கள் சிலைகளின் பெயரில் அறுத்த மாமிசத்தை நுபுவ்வத்திற்கு முன்பாக  சாப்பிட்டுள்ளார்கள்.
(நூருல் இர்பான் பாகம் 15 ஸுரா கஹ்ப் ஹாஷியா பக்கம் 799)





11) நிகாஹ் கூடிவிடும்.நிகாஹ் என்பது ஈஜாப் மற்றும் கபூல் சம்மதம் கேட்பது அதனை ஏற்பதற்கு பெயராகும்.பிரமாணர் ஓதினாலும் கூடும்.எனினும் வஹ்ஹாபி ஓதுவது சங்கை செய்வதாகும்.எனவே வஹ்ஹாபியை சங்கை செய்வதை தவிர்ந்திருப்பது அவசியமாகும்.(அஹ்காமே ஷரீஅத் பக்கம்:241)



12) இந்துமதமானது பழமையான மற்றும் தொன்று தொட்டுள்ள மதமாகும்.
எல்லா மதமும் அதன் பிறகுதான் வந்தது.ஏனெனில் இந்து மதம் ஆதம் (அலை) அவர்களின் மதமாகும்.
(மகாபீஸுல் மஜாலிஸ் பக்கம் 263)





13) அனைத்து அவதாரம் மற்றும் ரிஷிகள் அந்த நேரத்தின் தூதர்கள் நபிமார்கள்.
 (மகாபீஸுல் மஜாலிஸ் பக்கம்:388)



14) ஆங்கிலேயர்களுக்கெதிராக போரிடுவது முஸ்லீம்கள் மீது பர்ளு இல்லை (ஹராம்) 
(பதாவா ரிஜவியா)



15) ரிஜாகான் பரேல்வி அவர்கள் இர்ஃபானே ஷரீஅத் நூலில் எழுதியுள்ளார்கள்:

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அகில உலகத்தின் பெருமிதமிக்கவர் அல்லது வையகத்தின் பெருமிதமிக்கவர் என்று கூறுவது பொருளற்றதாகும்.
(இர்ஃபானே ஷரீஅத் பக்கம்:37)





16) ஷைத்தான் இல்லையென்றால் உலகில் எந்த ஒன்றும் நடைபெறாது.
(ரஸாயிலே நயீமிய்யா 379)




17) ஸயீத் அஹ்மத் காஜிமி ஸாஹிப் எழுதியுள்ளார்கள்:

 அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஹாஜிர் நாஜிர் என்பது இல்லை.குர்ஆன் ஹதீஸில் ஹாஜிர் நாஜிர் அல்லாஹ்வின் தாத் உள்ளமை குறித்து வரவில்லை.நல்லோர்கள் இந்த வார்த்தையை அல்லாஹ்விற்கு உபயோகிக்கவில்லை.ஸஹாபாக்கள் தாபியீன்கள் ஆய்வுதிறன் மிக்க இமாம்கள் ஹாஜிர் நாஜிர் வார்த்தையை உபயோகிப்படுத்தியுள்ளார்கள் என்பதை எந்த நபரும் கியாமத் வரை நிரூபிக்க முடியாது.இதனால் பிற்காலத்தவர்களில் சிலர் அல்லாஹ்வை ஹாஜிர் நாஜிர் என்பதாக கூற ஆரம்பித்த பொழுது அக்கால உலமாக்கள் இதனை மறுத்தனர்.அது மட்டுமின்றி  உலமாக்களில் சிலர் இவ்வாறு கூறுவதை இறைநிராரிப்பு என்பதாக தீர்ப்பளித்துள்ளனர்.
(தஸ்கீனுல் கவாதிர் பக்கம்:11)





18) மெளலவி அஹ்மத் ரிஜாகானை புகழ்பாடுபவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்பாடுபவர் 
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

آپ کا حامد ہے حامد سید کونین 

அஹ்மத் ரிஜாகான் அவர்களே தங்களை புகழ்பவர் ஈருலக தலைவரை புகழ்பவர்
(அஃலா ஹஜ்ரத் அஃலா ஸீரத் 
பக்கம்:166)



19) இப்லீஸிற்கும் மறைவான ஞானத்தை அல்லாஹ் தந்துள்ளான்.பின்னால் நிகழும் செய்திகளை குறித்தும் அறிவித்துக் கொடுத்துள்ளான் என்பதை அறியமுடிகிறது.
(நூருல் இர்ஃபான் 751)




20) பரேல்விய யார்முஹம்மதுவின்  கேடுகெட்ட கொள்கைகள்.

(A) بیادر کوٹ مٹھن تارخ خیر الوری بنی 
کہ در شکل فرید آمد شہنشاہ حجازایں 

இந்த கவிதையில் யார் முஹம்மது கூறுகிறார்:

 எனது பீர் ஃபரீத் அவர்களின் முகத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுகம் எனக்கு தென்படுகிறது.அண்ணலார் பீர் ஃபரீதின் உருவில் கோட் மடன் வருகை தந்தார்கள் (தீவானே முஹம்மதி 103) 



அல்லாஹ் பாதுகாப்பானாக!

21) (B) دید نشادیدن رسول اللہ 
مظہر مصطفی فرید الدین 

எனது பீர் காஜா ஃபரீதை பார்ப்பது அகில உலகத்தின் தலைவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்ப்பது
(தீவானே முஹம்மதி, பக்கம்: 118)




22) (C) تفسیر و الضحی ہے تجلی فرید کا 
تصویر مصطفی ہے کا نظارا فرید 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசர்கள் சூரா லுஹாவில் வள்ளுஹாவின் கருத்தானது ஈருலகத்தின் தலைவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுகத்திற்கு ஒப்புமையாக கூறியுள்ளார்கள்.அன்னாரின் திருமுகமானது வள்ளுஹா விட பிரகாசிக்கும்.ஆனால் பரேல்வி கூறுகிறார் இது எனது பீர் ஃபரீதின் மதிப்பாகும்.இதன் காரணமாக எனது பீரின் உருவம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருஉருவத்திற்ககு முற்றிலும் ஒத்து இருந்தது.
(தீவானே முஹம்மதி,பக்கம்:  174)




23) (D) وہی جلوہ جو فاراں پر ہوا احمد کی صورت 
اسی جلوے کو پھر عریاں کیا مٹھن کی گلیوں میں

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோற்றத்தில் புனிதம் நிறைந்த மக்கா மலையின் உச்சியில் விஜயம் செய்தார்.அல்லாஹ் அவரை மீண்டும் பீர் ஃபரீதின் தோற்றத்தில் கோட் மடன் தெருக்களில் நிர்வாணமாக்கினான்.
(தீவானே முஹம்மதி, பக்கம்:  191)




அல்லாஹ் பாதுகாப்பானாக! 
இது அப்பட்டமான அபாண்டம் இல்லையா? விமர்சனம் இல்லையா?

24) (E) علی شیر حق پر مشکلکشا دے 
سوا جام کوثر پلا کوئی نی سگبدا

முழு உலக முஸ்லிம்களும் அறிந்துள்ளனர்.கியாமத் நாளில் ஹவ்ளுல் கவ்ஸரின் நீரை நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் புகட்டுவார்கள்.எனினும், இதனை எந்த ஒரு முஸ்லிமும் மறுக்க மாட்டார்கள்.ஆனால்,
இந்த கவிதையின் கருத்து என்ன?

அலி (ரளி) அவர்களை தவிர வேறு எவருக்கும்
புகட்டமாட்டார்கள்.
(தீவானே முஹம்மதி, பக்கம்: 247)



25) முஃப்தி அஹ்மத் யார் குஜராத்தி  நபிமார்களின் தலைவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சப்தத்தில் ஷைத்தான் குரல் எழுப்ப முடியும்.
(அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ஷைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சப்தத்தை எழுப்ப முடியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பமான அம்சங்களில் ஒன்று அவர்களின் ஒத்த தோற்றத்தில் உருமாறமுடியாது.ஸுலைமான் அலை அவர்கள் மஸீஹ் அலை அவர்களின் உருவத்தில் மக்கள் மாறினார்கள்.எனினும் ஷைத்தான் அவனின் குரலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சப்தமாக எழுப்ப முடியும்.உதாரணமாக சூரா நஜ்மை ஷைத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போன்று ஓதினான்.(மவாயிஜே நயீமிய்யா முதல் பாகம்:1 பக்கம்:143)



பரேல்விகள், அப்பாவி முஸ்லிம்களின் உள்ளத்தில் ஷைத்தான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குரலை எழுப்பமுடியும் என்ற வழிகெட்ட கொள்கையை விதைக்கின்றனர்.

இன்னும் இதை பற்றி தெளிவாக தெறிந்து கொள்ள எமது இந்த website யை முழுமையாக பார்வையிடவும்.

                                      அஸ்தக்பிருல்லாஹ் !!!
                      லா ஹவ்ல வலா ஹுவத்த இல்லா பில்லாஹ் !!!

யா அல்லாஹ் உன் ஹபீபாகிய எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பொருட்டால் இந்த பரேலவி கொள்கைகளை விட்டும் காப்பாயாக !! ஆமீன் !!

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live