22 Nov 2017

பெருமானார்ﷺ அவர்கள் பரேல்விகளின் பார்வையில் தற்கொலை செய்து கொண்டு மரணித்தார்களா? (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைபர் போரில் வெற்றி கொண்டார்கள்.யஹுதி பெண்மணி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விருந்துண்ண அழைப்பு கொடுத்தாள்.ஆட்டின் இறைச்சியில் விஷத்தை தடவியிருந்தாள்.முதல் கவளம் சாப்பிட்ட பிறகு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விஷம் என்பதாக தெரிய வந்தது.அதுமட்டுமின்றி
அண்ணலாரே! என்மீது விஷம் உள்ளது உண்ணாதீர்! என இறைச்சி பேசியது.(ஹதீஸின் கருத்து)

இந்த ஹதீஸானது தாரமி,அபூதாவூத், மிஷ்காதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் கிருபையால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விஷயத்தில் பெண்ணின் எண்ணம் நிறைவேறவில்லை.எனினும் நாயகத்தோழர் ஹஜ்ரத் பிஷ்ர் இப்னு பராஇப்னு மஃரூர் உயிர்நீத்தார்கள்.
(ஹதீஸின் கருத்து: அபூதாவூத், முஸ்தத்ரக் ஹாகிம்)




இது அல்லாமல் மிஷ்காத்,அபூதாவூத் அறிவிப்பில் வருகிறது.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் விஷம் தோய்க்கப்பட்ட இறைச்சியை சாப்பிட்டவர்கள் இறந்தனர்.மிஷ்காத் ஷரீபில் சில ஸஹாபாக்கள் என்பதாக அறிவிப்பு வரவில்லை.எனினும் அபூதாவூத், தாரமி ஹதீஸ் நூல்களில் சில ஸஹாபாக்கள் என்பதாக வந்துள்ளது.

இந்த அறிவிப்பில் சிலர் என்பதைக் கொண்டு ஒரு ஸஹாபி என்பதாக ஒரு வாதத்திற்கு வாதிட்டாலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பது தெளிவாகிறது.

ஒரு வேளை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு  மறைவான ஞானம் இருந்திருந்தால் ஒரு ஸஹாபியை மரணிக்க விட்டு இருக்கமாட்டார்கள்.மேலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரணநேரத்தில் விஷத்தின் தாக்கமானது வெளிப்பட்டது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்:

 ஆயிஷாவே நான் கைபரில் விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டு இறைச்சியை சாப்பிட்டேன்.இப்பொழுதும் அதனின் வேதனைகளை உணர்கிறேன்.எனது நரம்புகளை (விஷம்) அறுக்கிறது.

ஹஜ்ரத் அம்மார் இப்னு யாஸர் ரளி அவர்கள் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு ஹதியாவாக, அன்பளிப்பாக அளிக்கப்பட்டால் அன்பளித்தவரை அதனை  உண்ணும்படி  உத்தரவிடுவார்கள்.அதன் பிறகு சாப்பிடுவார்கள்.அண்ணலாருக்கு விஷம் தோய்க்கப்பட்ட கறி கொடுக்கப்பட்டது.இதன் பிறகு பேணிக்கையை கடைப்பிடித்தார்கள்.(அஸ்ஸிராஜுல் முனீர் 3/156)

விஷம் தோய்க்கப்பட்ட இறைச்சியை சில ஸஹாபாக்கள் சாப்பிட்டார்கள்.இதனால் நாயகத்தோழர்கள் சிலர் இறந்தார்கள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணம் வரை விஷத்தின் தாக்கம் இருந்தது.நோவினை ஏற்பட்டது.(அஸ்ஸிராஜுல் முனீர் 2/156)

ஹஜ்ரத் உம்மு முபஷ்ஷிரின் அறிவிப்பில் வருகிறது அவர்கள் கூறுகிறார்கள் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அதன் தாக்கத்தால் வேதனை ஏற்பட்டது.இந்த வேதனையின் காரணம் விஷம் தோய்த்த இறைச்சிதான் எனது சிந்தனையில் உள்ளது.மேலும் அந்த பெண்மனி கூறினார்கள் எனது மகன் பஷர் இப்னு பரா இப்னு மஃரூர் இதனால் இறந்து விட்டார்.அண்ணலார் கூறினார்கள் நானும் இதனை அன்றி வேறு ஏதேனும் வெளிப்படையான காரணத்தை அறியவில்லை.இந்த நேரத்தில் எனது நரம்புகள் அறுபடுவதை உணர்கிறேன்.
(முஸ்தத்ரக் ஹாகிம் 3/219)

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிகழ்ந்தது நிகழப்போகும் அனைத்து மறைவான ஞானமும் இல்லை என்பதையும் அறியமுடிகிறது.ஆரம்பத்தில் யஹுதிய பெண்ணின் சூழ்ச்சி தெரிந்து இருந்தால் பாவமற்ற ஸஹாபாக்கள் ஷஹீதாகி இருக்க மாட்டார்கள்.மேலும் இந்த வேதனை ஏற்பட்டும் இருக்காது.பரேல்விகளிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம் அவர்கள் விருப்பத்தின் பேரில் அல்லது வேண்டுமென்றே விஷம் தோய்த்த இறைச்சியை சாப்பிட்டார்களா? தெரிந்தே ஸஹாபாக்களுக்கு  உண்பதற்கு பணித்தார்களா? இதன் பேரில் ஸஹாபாக்களில் சிலரும் இறந்துவிட்டார்கள்.நமது ஈமான் கொள்கை இதனை ஒரு போதும் ஏற்காது.

எனினும் முஃப்தியார் குஜராத்தி அவர்களின் சிந்தனை ரீதியான ஆய்வை பாருங்கள் முஃப்தி யார் ஸாஹிப் கூறுகிறார்கள்:

 நபி ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம் அவர்கள் அதில் விஷம் இருப்பதை அறிந்திருந்தார்கள்.மேலும் விஷமானது அல்லாஹ்வின் கட்டளையின் படி தாக்கம் செய்யாது என்பதையும் அறிந்திருந்தார்கள்.இதனை நாம் சாப்பிடுவதைதான் அல்லாஹ் விரும்புகிறான் என்பதை அறிந்திருந்தார்கள்.மரணநேரத்தில் இதனின் தாக்கம் திரும்ப வேண்டும்.நமக்கு ஷஹாதத்தின் பாக்கியம்  கிடைக்க வேண்டும் என்பதனால் பொருந்திக்கொண்டார்கள்.
(ஜாஅல் ஹக் 131)


ஸுப்ஹானல்லாஹ்!
இது ஜனாப் முப்திஸாஹிபின் பதில் இப்பொழுது நாம் இதனை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்! 

எப்பொழுது  
நபி ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம் அவர்களுக்கு விஷம் உள்ளது என்பதை அறிந்தும் ஏன் சாப்பிட்டார்கள்? ஸஹாபாக்களை சாப்பிட ஏன் ஏவினார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5778

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live