28 Aug 2017

ஆபாசத்தின் தலைவன் ரிஜாகான் பரேல்வியே!



(ஜவ்வாத் பரேல்வியின் மறுப்பிற்கு நமது மறுப்பு)

போதை பரேல்விகளுக்கே!

பொய்யன் பரேல்வி ஜவ்வாத் ரப்பானி இது குறித்து மறுப்பு என்ற பெயரில் வழக்கம்போல் உளறியுள்ளார்.உண்மையில் நமக்கு மறுப்பில்லை.ஏனெனில் இது குறித்து விரிவான விமர்சனத்தை இதுவரை எடுத்துக்கூறவில்லை.அஹ்மத் ரிஜாகான் பரேல்வி எழுதிய நிகழ்வானது

அஹ்மத் ரிஜாகான் கூறுகிறார்:

கிராமத்தில் பதினெட்டு அல்லது இருபது வயது நிரம்பிய பெண்ணை நான்  பார்த்தேன்.அவளின் தாயார் வயோதிகராக இருந்தார்கள்.தாயாரின் பாலை (குடிப்பதை) விடவில்லை.தாயார் பால் கொடுக்க மறுத்தாள்.அவள் வலுக்கட்டாயமாக படுக்கவைத்து மார்பில் ஏறி பால் குடிக்க ஆரம்பித்தாள்
(மல்பூஜாத் ஃபரீத் புக்ஸ்டால் 311)


தஃவத் இஸ்லாமியினரால் வெளியிடப்பட்ட மல்பூஜாதில் இதனை நீக்கவிட்டனர் என்பதை மட்டும்தான் நாம் கூறியிருந்தோம்.இந்த சம்பவத்தில் உள்ள அசிங்கத்தை,ஆபாசத்தை அறிவுக்கு பொருந்தாத கருத்தை குறித்து விமர்சிக்கவில்லை.எனினும், பொய்யன் பரேல்வி ஜவ்வாத் ரப்பானி அவசரமாக மறுப்பளிக்க புகுந்து உளறியுள்ளார்.எனவே இந்த ஆய்வில் பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் வாதங்களுக்கும் சேர்த்து மறுப்பளிக்கப்படுகிறது.
இனி இதனை குறித்து விரிவான மறுப்பை இனி பார்ப்போம்!

நமது வாதங்கள்:

(1)ஒரு பலகீனமான பெண்ணிற்கு பதினெட்டு வருடம் வரை பால் எப்படி வரும்?

(2)பதினெட்டு வயது பெண், பலகீனமான பெண்ணின் மடியில் அமர்ந்து பால் குடிப்பாளா?

(3) அஹ்மத் ரிளாகான் பரேல்விக்கும், அந்தப்பெண்ணிற்கும் மத்தியில் உள்ள உறவும் தொடர்பும் என்ன?

(4) மஹ்ரமில்லாத பெண்ணின் சண்டை, சச்சரவை பார்ப்பது கூடுமா?

(5) அஹ்மத் ரிஜாகானின் ஷரீஅத்தில் மஹ்ரமில்லாத பெண் பால் கொடுக்கும் காட்சியை பார்ப்பது கூடுமா?

பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் வாதமும் நமது பதிலும்:

இந்த காட்சியை பார்த்தது ரிஜாகான் பரேல்வி இல்லை மாறாக பூஸரி (ரஹ்) அவர்கள்தான்.

நமது பதில்: 

இமாம் பூஸரி (ரஹ்) அவர்கள் மீது இட்டுகட்டியுள்ளார்.புனைந்து கூறியுள்ளார்.உண்மையில் இந்த சம்பவத்தைப் பார்த்தது ரிளாகான் பரேல்விதான்.இமாம் பூஸரி (ரஹ்) அவர்கள் இல்லை.இதற்கு ஆதாரம் மல்பூஜாதிலேயே தெளிவாக உள்ளது.இமாம் பூஸரி (ரஹ்)
அவர்கள் உதாணத்தை மட்டும்தான் கூறுகிறார்.அதற்கு சான்றாக ஆபாசமும், அருவருப்பும் நிறைந்த சம்பவத்தை கண்ணால் கண்டதாக கூறுவது ரிஜாகான் பரேல்விதான். இதற்கான ஆதாரத்தை பார்வையிடவும்!
பரேல்வி ஜவ்வாத் ரப்பானி
அவசர கதியில் பதில் கொடுத்ததால் மல்பூஜாத்தை சரியாக வாசிக்கவில்லை.

அடுத்து பரேல்வி ஜவ்வாத் ரப்பானி ரிஜாகான் பரேல்வியின் ஆபாச நிகழ்விற்கு முட்டு கொடுக்க புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீஸில் விளையாடுகிறார்.முதலில் ஹதீஸையும் அது  குறித்து விளக்கத்தையும் இனி பார்ப்போம்!

    உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்' என்று கூறினார்கள்.

ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) 
அவர்கள் இந்த ஹதீஸின் விளக்கவுரையில் எழுதியுள்ளார்கள்: 

கைதியான பெண்களை பார்ப்பது கூடும்.இதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பெண்ணை பார்ப்பதை விட்டும் தடுக்கவில்லை.இதற்கு முன்னால் உள்ள ஹதீஸும் அந்த பெண்ணை பார்ப்பது அனுமதி என்பதை விளக்குகிறது.

ஆக, போர் கைதி பெண்களுக்குரிய சட்டத்தை எடுத்து கூறி, ரிஜாகான் பரேல்விக்கு வக்காலத்தும் வாங்கும் ஜவ்வாத் ரப்பானியின் வாதம் தவிடுபொடுயாகிறது.


இனி, தேவ்பந்த் பெரியோர்களின் நூலில் சுமத்தும் குற்றச்சாட்டும்,
நமது மறுப்பும்: 


பரேல்வி ஜவ்வாத் ரப்பானி உங்களின் ஆபாசங்களையெல்லாம் எடுத்துப் போடவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.நிர்பந்தமாக எடுத்து கூறுகிறேன் என்பதாக பொங்கியவாறு படம் போடுகிறார்.

உண்மையில் இந்த வாதத்தை எடுத்துக் கூற முழுமையான தகுதியுள்ளவர்கள் நாங்கள்தான்.ரிஜாகானின் திரிபுகளின் வரிசையில் இந்த சம்பவத்தை வெறும் எடுத்து மட்டும்தான் கூறினோம்.இதிலுள்ள ஆபாசத்தையும், அசிங்கத்தையும் அறிவுக்கு பொருந்தாத கருத்தையும் விமர்சிக்கவில்லை.
எனினும்,
ஜவ்வாத் ரப்பானி நமக்கு மறுப்பளித்த காரணத்தால்தான் விளக்கவேண்டிய அவசியம்  ஏற்பட்டது.உங்களின்நூலில் உள்ள ஆபாசத்தை பட்டியலிட்டால் தாங்க மாட்டீர்கள் என்பதைப் போல் விமர்சிக்கிறார்.நமது நூலில் உள்ள கருத்தை திரித்து ஆபாசமாக திரிக்கலாம்.ஆனால் உண்மையில் பரேல்விய ஆபாசங்களின் பட்டியல் நம்மிடத்தில் உள்ளது உதாரணத்திற்கு  சில வரிகளில்

*பரேல்விய அசிங்கங்கள் ஆபாசங்களின் நீண்ட பட்டியல் தெளிவான ஆதாரத்துடன் உள்ளது.

(1)பரலேவிய
பெரியோரும் கழுதை புணர்தலும்,

(2)ரிளாகானும் பிரத்தியேக கட்டிலும், (

(3)பரலேவிய
ஜுபைரும் கவர்ச்சி வசீகரிப்பும்,

(4)பரலேவிய பெரியோரும் சிறுவர்களை
முத்தமிடுவதும்,

(5)பரலேவிய பெரியோரும் தாடிமுளைக்காத சிறுவரை ரசித்து இன்பம்
பெறுவதும்,

(6)ரிளாகானும் ஆணுறுப்பும்

தேவ்பந்தில் பெரியோர் ஒருவர் இருந்தார்.மெளலானா பரீதுத்தீன் ஸாஹிப் அவர்கள் அன்னாரின் காலத்தில் ஒரு மஜ்தூபான பெண் இருந்தாள்.நிர்வாணமாக அலைந்து கொண்டிருந்தாள்.எவரோ ஒருவர் கேட்டார்.மானத்தை ஏன் மறைப்பதில்லை? அதற்கு கூறினாள் மாடுகள்,கழுதைகளிடம் பர்தா கடைப்பிடிப்பதில்லை.பர்தா மனிதர்களிடம்தான். (கடைப்பிடிக்கவேண்டும்.) ஒருநாள் வழக்கம்போல் நிர்வாணமாக சுற்றி திரிந்தாள்.ஒரே மூச்சில் கூறினாள் ஆடையை கொண்டு வாருங்கள்! ஆடையை கொண்டு வாருங்கள்! மனிதர் வருகிறார். கொஞ்ச நேரத்தில் மெளலானா பரீதுத்தீன் ஸாஹிப் விஜயம் செய்தார்கள்.
(மஜாதீப் கி புர் அஸ்ரார் துன்யா பக்கம்:84)




இந்த சம்பவத்தில் کسی نے پوچھا எவரோ ஒருவர் கேட்டார் என்பதாக தெளிவாக  உள்ளது.தேவ்பந்த் மெளலானா அல்லது மாணவர் என்பதாக அறவே இல்லை.ஜவ்வாத் ரப்பானி வழக்கம் போல் திரித்து இட்டுகட்டி  கூறியுள்ளார்.

மேலும், பரேல்வி அஹ்மத் ரிஜாகான் சம்பவத்தில் ஆபாசத்தை, அருவருப்பை, சண்டை, சச்சரவை கண்ணால் கண்டுகழித்துள்ளார்.இருவருக்கும் மத்தியில் சமரசம் செய்துவைக்கவில்லை.
பொதுவெளியில் பால் கொடுத்ததை கண்டிக்கவில்லை.ஆனால் இந்த சம்பவத்தில் அந்த மனிதர் நன்மையை ஏவி தீமையை தடுத்துள்ளார்.மானத்தை ஏன் மறைப்பதில்லை? என கண்டித்துள்ளார் என்பதையும் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்!

அடுத்து பெண்ணின் மர்மஸ்தானம் என்பது கோதுமையை போன்றது என்பதாக கிராமவாசிக்கு தேவ்பந்த் பெரியார் பதில் அளித்ததை முன்வைத்து ஆபாசமாக சித்தரித்துள்ளார் பரேல்வி ஜவ்வாத் ரப்பானி

நமது பதில்:

தேவ்பந்த் பெரியார் அவர்கள் میں نے خود دیکھا நானே பார்த்தேன் என பரேல்வி அஹ்மத் ரிஜாகானைப் போன்று பயன்படுத்தவில்லை.எதார்த்தம் என்னவெனில் பெண் குழந்தையின் மர்மஸ்தானத்தை பார்த்ததை முன்வைத்து கூறியிருக்கலாம்.இது தவறொன்றும் இல்லை.இதனை ஆபாசம் என்று மீண்டும் வாதிட்டால் பரேல்வி நூலிலிருந்து நாம் காட்டுகிறோம்

பரேல்வி ரிளாகானி
ஷம்சுத்தீன் கவாஜா ஷம்சுத்தீன் ஸயாலவி எழுதியுள்ளார் :

கன்னிப் பெண்கள் எண்ணுகிறார்கள் தேன் கூட்டில் உள்ள தேனின் சாறு நிரம்பி இருப்பதைப் போன்று பெண்ணின் இரண்டு தொடைக்கு மத்தியில் இருப்பதானது உள்ளது.திருமணம் நிகழ்ந்த பிறகு கட்டுப்பாட்டை மீறி வெளியேறி நிற்கிறது.ஒரு போதும் (தேன் கூடு) அல்ல. இது குளவிகளின் கூடு !

(மிர்ஆதுல் ஆஷிகீன் பக்கம் 171)




கன்னிப் பெண்கள் எண்ணுகிறார்கள் என்றால் அந்தப் பெண்கள் யார்? பரேல்விய அறிஞரிடம் கூறினார்களா? பெண்ணின் இரண்டு தொடைக்கு மத்தியில் இருப்பது தேன் நிரம்பிய சாறு அல்ல.மாறாக, குளவி கூடு என்பதை பரேல்விய அறிஞர் பார்த்தாரா?

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live