15 Jul 2017

தஃவதே இஸ்லாமியினரின் தவ்பாவும் உண்மை நிலையும் முட்டு கொடுக்கும் பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கு நமது மறுப்பு.

  பரேல்வி அஹ்மத் ரிஜாகானின் மல்பூஜாதில் உள்ள பல்வேறு திரிபுகளை புரட்டலை பட்டியலிட்டோம்.இதற்கு மறுப்பு என்ற வகையில் பரேல்வி ஜவ்வாத் ரப்பானி வலுவிழந்த வாதங்களை வைத்துள்ளார்.இது குறித்து நமது மறுப்பை காண்போம்!


நமது மூன்று நூல்களில் உள்ள வாசகங்களை முன்வைத்து விமர்சித்துள்ளார்.இது நமக்கு எதிரானதல்ல.ஏனெனில் எழுத்துப்பிழை என்பது இயல்பான ஒன்று. இதுதான் நமது நிலைப்பாடு எனினும் பரேல்வி நிலைப்பாடு தவறு ஏற்படுவது வார்த்தைகளை மாற்றுவது நீக்குவது எதார்த்தமான ஒன்றல்ல.உண்மையில் திட்டமிட்டு நடப்பது என்பதாக வாதிட்டுள்ளனர்.இதன் மூலம் மல்பூஜாதில் நடந்த திரிபுகள் அனைத்தும் திட்டமிட்டு நடந்துள்ளது என்பதானது பரேல்விகளின் எழுத்தின் மூலம் நிரூபணமாகிறது.பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் கூற்றின் படி நமது மூன்று நூல்களில் மூன்று இடங்களில் திரிபுகள் நடந்துள்ளது என்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் மல்பூஜாத்துடன் ஒப்பிடும் போது மிக குறைந்த ஒன்றாகும்.ஆனால் மல்பூஜாதில் மட்டும்  அரங்கேறிய திரிபுகள் புரட்டுதல் நீக்குதல் ஏராளம்! ஏராளம்!

அடுத்து உண்மையில் தஃவதே இஸ்லாமியினரின் மன்னிப்பு என்பது ரிஜாகான் பரேல்வியின் மானம் மரியாதையை காப்பதற்காக நிகழ்ந்த ஒன்றாகும்.இதற்கான ஆதாரத்தை இனி பார்ப்போம்!

தஃவதே இஸ்லாமியினரின் மக்தபதுல் மதீனா கராச்சியினரால் வெளியிடப்பட்ட திரிபுகள் நடந்த  மல்பூஜாத்தையும் புதிய மல்பூஜாத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கி கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: 

தவ்பாவிற்கு பிறகு உள்ள மல்பூஜாத் பதிப்பு ஜுன் 2009 ல் பின்வருமாறு  எழுதப்பட்டுள்ளது: 

மல்பூஜாத்திலிருந்து நீக்கிய விஷயங்கள் சேர்க்கப்படுகிறது.எனினும் சில நிகழ்வுகள் அடுத்த பதிப்பில் சேர்க்கப்பட்டு விடும்.



📖 நபிமார்களின் மனைவிமார்கள் கப்ரில் சமர்ப்பிக்கப்படுதல் நீக்கப்பட்டது.பிறகு சேர்க்கப்பட்டுவிட்டது.

📖 பதினெட்டு வயது பெண் பால் குடித்த பெண் நீக்கப்பட்டது.பிறகு சேர்க்கப்பட்டுவிட்டது.

📖 கழுதையின் மறைவான ஞானம் நீக்கப்பட்டது.பிறகு சேர்க்கப்பட்டுவிட்டது.




இது மட்டுமின்றி சில சம்பவங்கள் நீக்கப்பட்டது.பிறகு சேர்க்கப்பட்டுவிட்டது.ஆக இதனை முன்வைத்து பார்க்கும் போது தவ்பா செய்தது உண்மை என தோன்றலாம்.எனினும் ரிஜாகான் பரேல்வியின் புதிய மல்பூஜாத்திலும் சில இடங்களில் தவறுகள் திருத்தப்பட்டுள்ளது.
பிர்அவ்ன் கூறியதாக அல்லாஹ் கூறும் குர்ஆன் வசனம் மீண்டும் சரியாக திருத்தப்பட்டுள்ளது.

முந்தைய மல்பூஜாதில் சாப்பிட ஆரம்பிக்கும் போது  பிஸ்மில்லாஹ்வை மறந்து விட்டால் بسم الله على اوله و آخره என தவறாக எழுதப்பட்டது. بسم الله اوله و آخره என்ற துஆ சரியாக எழுதப்பட்டுள்ளது.





மேலும் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த சம்பவம் அதில் வரும் நபர் அப்துர்ரஹ்மானுல் காரி என்பதாக மல்பூஜாதில் எழுதப்பட்டிருந்தது.மதீனா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட மல்பூஜாதில் அப்துர்ரஹ்மான் புஜாரி என பெயர் மாற்றப்பட்டது.தவ்பாவிற்கு பிறகு வெளியிடப்பட்ட மல்பூஜாதில் அப்துர்ரஹ்மான் காரி என்பதாக மாற்றப்பட்டுள்ளது.

எனினும் இந்த மல்பூஜாதின் ஓரக்குறிப்பில் அப்துர்ரஹ்மான் புஜாரி தான்.
அப்துர் ரஹ்மான் காரி அல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.



எனவே இதன் மூலமும் தவ்பா என்பது நடிப்பு என்பதை தெள்ளத்தெளிவாக அறியமுடிகிறது.ரிளாகான் பரேல்வி ஸஹாபியை அல்லது தாபியை காபிர் என்பதாக சித்தரித்துள்ளார் என்பதானது அப்பட்டமாக வெளிப்படுகிறது.ஆக நமது வாதத்தின் படி தஃவதே இஸ்லாமியினரின் தவ்பாவானது கண்துடைப்பு ரிளாகானின் மானம், மரியாதை காக்க நிகழ்ந்தேறியுள்ளது என்பதை தெள்ளத் தெளிவாக நிரூபணமாகிறது.

முக்கிய குறிப்பு:

அப்துர்ரஹ்மான் காரி ஸஹாபி அல்லது தாபியி என்பதை நிரூபித்தோம்.இதனை குறித்து விரிவான வாதங்களை நமது தளத்தின் இந்த லிங்கில் பார்வையிடவும்.

http://ummathemuhammedhiya.blogspot.in/2016/09/blog-post_21.html?m=1

ஜவ்வாத் ரப்பானிக்கு இது குறித்து நாம் ஒரு சவாலை முன்வைத்தோம்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நடந்த இந்த சம்பவம் இடம் பெற்ற ஹதீஸ்களின் நூல்களிலிருந்து அப்துர் ரஹ்மான் காரி என்பதை எடுத்து காட்டும்படி கூறினோம்.இது வரை பரேல்வி ஜவ்வாத் ரப்பானி வாய்திறக்கவில்லை.இப்பொழுதும் அவகாசம் தருகிறோம்! முடிந்தால் எடுத்து காட்டி நிரூபிக்கட்டும்!

அடுத்து பதாவா ரஷீதிய்யாவில் ஸஹாபாக்களின் விமர்சனமும் உண்மை நிலை:

எழுத்துப்பிழை என்பதை வாக்கிய அமைப்பே நமக்கு தெரியப்படுத்துகிறது. ஸஹாபாக்களை காபிர் என்பவன்  இமாம் செய்வதற்கு தகுதியில்லாதவன்.பெரும்பாவி என்பதன் மூலம் அஹ்லுஸ்ஸுன்னா விட்டு வெளியேறுவான் என்பதுதான் உண்மையாகும்.அஹ்லுஸ்ஸுன்னா என்பதாக இருந்தால் இமாமத் செய்ய தகுதியில்லை என்பதாக எவ்வாறு கூறமுடியும்? இதற்கு பரேல்வி ஜவ்வாத் ரப்பானி நேரடியாக பதிலளிக்கட்டும்! இது குறித்து விரிவான மறுப்பை நமது தளத்தின் லிங்கில் பார்வையிடவும்!

http://ummathemuhammedhiya.blogspot.in/2016/01/3.html?m=1

முக்கிய குறிப்பு:

இன்ஷா அல்லாஹ்! விரைவில் ஒரு ஸஹாபியை குறித்து பரேல்விகளின் விமர்சனத்தை கட்டுரை வடிவில் காண்போம்!

இப்பொழுதுள்ள பதாவா ரஷீதிய்யாவில் அதனை அமைதியாக  நீக்கிவிட்டார்கள் என பரேல்வி ஜவ்வாத் ரப்பானி குற்றம் சுமத்தியுள்ளார்.இதற்கு மறுப்பை  பரேல்விகளின் நூலிலிருந்து காண்போம்!

காபிர்களின் உணவை சாப்பிடுவது கூடும் என்பதற்குரிய ஆதாரங்களை கூறி வரும் சமயத்தில் வரும் வாசகம்:

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்ட உணவை நுபுவ்வத்திற்கு முன்பும்  உண்டுள்ளார்கள்.

 (நூருல் இர்பான், நயீமி குதுப்கானா)




பிறகு அதனை அமைதியாக மாற்றிவிட்டார்கள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்ட உணவை நுபுவ்வத்திற்கு முன்பும்  சாப்பிட்டதில்லை.

(நூருல் இர்பான்)




பதாவா ரஷீதிய்யாவில் வரும் வாசக அமைப்பே எழுத்துப்பிழை என்பதை உணர்த்துகிறது.ஆனால் பரேல்விகளின் நூலில் உள்ள வாசகத்தில் எழுத்துப் பிழை என்பதாக வாதிடமுடியாது.உண்மையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது களங்கம் கற்பிப்பதுதான்.

அடுத்து அமல்களின் சிறப்புகளில் உள்ள விமர்சனத்திற்கு மறுப்பையும், மறுப்பிற்கு மறுப்பையும் நாம் அளித்துவிட்டோம் இதுவரை பதிலளிக்கமுடியாத பரேல்வி ஜவ்வாத் ரப்பானி சத்தியத்தை மறைக்க புலம்பிக்கொண்டுள்ளார்.உண்மையில் திராணி இருந்தால் மீண்டும் நாம் வைத்த வலுவான வாதங்களுக்கு பதிலளிக்கட்டும்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள் என்பதற்குரிய குற்றச்சாட்டிற்குரிய முழுமையான மறுப்பை இந்த லிங்கில் பார்வையிடவும்!

http://ummathemuhammedhiya.blogspot.in/2016/01/6.html?m=1

இதற்கு பதிலளிக்க முடியாத பரேல்வி ஜவ்வாத் ரப்பானி பழைய வாதத்தையே கூறிக்கொண்டுள்ளார்.ملنا என்பதற்கு அடக்கமாகுதல் என்கிற பொருளும் உண்டு என்பதற்குரிய ஆதாரத்தை பார்க்கவும்!


பரேல்விகளின் நூலிலிருந்தே பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கு மறுப்பு:

    பரேல்விய அறிஞர் "ஹயாதே ஸத்ரில் அஃபாஜில்" என்ற நூலில் 115ம் பக்கத்தில்  எழுதியுள்ளார்:

அண்ணல் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பிற்கும் நேசத்திற்கும் உரிய பேரர் ஹுஸைன் (ரளி) அவர்களின் கர்பலா நிகழ்ச்சியை குறித்து வார்த்தைகளால் நீண்டதொரு வரலாற்றை விவரித்து கூறும் பொழுது ரோஜாவின் இதழ்கள் மண்ணிலே கலந்து விட்டது.இதன் வெளிப்படையான அர்த்தம் ஹுஸைன் (ரளி) அவர்கள் மண்ணிலே கலந்துவிட்டார்கள். இங்கும் ملنا என்பதாக தான் வருகிறது. பரேல்விகளும் பரேல்விய ஜவ்வாத் ரப்பானியும் ஹுஸைன் (ரளி) அவர்கள் மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் என்பதை ஏற்க தயாரா?


அடுத்து "அவ்ராகே கம்" என்ற நூலில் பரேல்விய அறிஞர் அல்லாமா அபுல் ஹஸனாத் ஸய்யித் முஹம்மத் காதிரி அவர்கள் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தை குறித்து கூறும் போது இவ்வாறு எழுதியுள்ளார் .

تیر ممات نے اسے فنا کیا 

மரண அம்புகள் அவரை (அண்ணலாரை) அழித்துவிட்டது. "ஃபனா" என்பதற்கு அர்த்தம் நாசப்படுத்துதல்,அடியோடு அழித்தல்,வீணாக்குதல் என்பதாகும்.


இதற்கு எதிராக பரேல்விகளும் பரேல்விய ஜவ்வாத் ரப்பானியும் கொதித்தெழ தயாரா? இவர்களிடத்தில் மழுப்பலும் , புரியாமல் உலரலும் வருமே தவிர பதில் வராது.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live