28 Apr 2017

ரிஜாகானின் பரேல்வியின் மல்பூஜாத்தில் திரித்தல் திரிபுகள் தொடர்- 2

(4) ரிஜாகான் பரேல்வி வாய்மையுள்ள, ஆய்வுமிக்க, ஷரீஅத்திற்கு எதிராகாத மஜ்தூபை குறித்து கூறுகிறார்:
அந்த மஜ்தூப் (தன்னிலை மறந்தவர் ) வானத்தின் பக்கம் தலையை உயர்த்தி மழையை அனுப்பு! அல்லது என்னை உயர்த்திக் கொள்! என்று துஆ செய்தார்.
இதே போன்று அந்த மஜ்தூப் மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறினார் அல்லாஹ் அக்பர்! எனது கணவன் (ஹய்யுன் லா யமூது) எப்பொழுதும் மரணிக்க மாட்டான் . எப்படி விதவையாக்குகிறீர்கள்?
 (மல்பூஜாத் பரீத் புக்ஸ்டால் 169)






மல்பூஜாதில் திரித்தல் :

தஃவதே இஸ்லாமியர் வெளியிட்ட மல்பூஜாத்திலே இந்த சம்பவங்களை குறித்து எழுதியுள்ளனர்.எனினும் இரண்டு வாக்கியங்களையும் நீக்கவிட்டனர்.அதிலும் குறிப்பான இறைநிராகரிப்பு வாக்கியத்தை  நீக்கிவிட்டனர்.
 (மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் மக்தபதுல் மதீனா கராச்சி 278)






(5) உண்மையான மஜ்தூப் தொழுகையை விடமாட்டார்.அவர் தொழுவதை பார்ப்பதில்லை.ஒருவர் ஸய்யித் கவுஸ் அஃஜம் அவர்களிடத்தில் ஸய்யிதி கஜீப் அல்பான்  மூஸிலி அவர்களை குறித்து முறையிட்டார்.அன்னார் எப்பொழுதும் தொழுவதில்லை.அதற்கு கவுஸ் அஃஜம் அவர்கள் கூறினார்கள் அவரிடத்தில் எதையும் கூறாதீர்கள்! அவரின் தலையானது எப்பொழுதும் கஃபாவின் ஸுஜுதில் இருக்கிறது.
(மல்பூஜாத் பரீத் புக்ஸ்டால் 210)




மல்பூஜாத்தில் திரித்தல்:

இதனை  தஃவதே இஸ்லாமியர் வெளியிட்ட மல்பூஜாத்திலே இந்த சம்பவத்தை நீக்கிவிட்டனர்.
(மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் மக்தபதுல் மதீனா கராச்சி 280)


(6) பரேல்வி அஃலா ஹஜ்ரத் தனது கடுமையான இனவெறி
காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்
இவ்வாறே வஹ்ஹாபி, காதியானி ,தேவ்பந்தி,  ஷர் சையது கானை பின்பற்றியவர்கள் , ஹதீஸ் மறுப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக மதம் மாறியவர்கள் அவர்களின் ஆண்கள்,பெண்களுக்கு உலகில் முஸ்லிம் அல்லது காஃபிர் அல்லது மதம் மாறியவன்  அல்லது விலங்குடன் நிக்காஹ் நடந்தால் வீணாகிவிடும்.தெளிவான விபச்சாரம் குழந்தைகள் விபச்சாரத்தில் பிறந்தவை .(மல்பூஜாத் பரீத் புக்ஸ்டால் 227)




மல்பூஜாத் திரித்தல்:

தஃவதே இஸ்லாமியர் வெளியிட்ட மல்பூஜாத்திலே இந்த சம்பவத்தில் மதம்மாறிய மனிதன் அல்லது விலங்கு என்ற வார்த்தையை நீக்கிவிட்டனர்.அஃலா ஹஜ்ரத்தின் இந்த கருத்தில் உடன்படாமல் இருந்திருக்க வேண்டும்.அல்லது ரிஜாகானின் சிந்தனையை வறட்சியை மறைப்பதற்கு நீக்கியிருக்க வேண்டும்.
 (மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் மக்தபதுல் மதீனா கராச்சி 30)





(7) நபிமார்களை குறித்து அவமரியாதை களங்கத்தை ஏற்படுத்தும் வாசகம் நீக்கம்:

முஹம்மத் இப்னு அப்துல் பாகி  ஜர்கானியின் பக்கம் இணைத்து சொல்கிறார் நபிமார்களின் மண்ணறையில் பரிசுத்தமான மனைவிமார்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள்.அவர்களுடன்  இரவு கழிப்பார்கள் (மல்பூஜாத் பரீத் புக்ஸ்டால் 276)





மல்பூஜாத் திரித்தல் :

தஃவதே இஸ்லாமியர் வெளியிட்ட மல்பூஜாத்திலே இதனை நீக்கிவிட்டனர். (மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் மக்தபதுல் மதீனா 362)

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live