29 Jul 2016

ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி கபுரை வலம் வர சொன்னார்களா?

"ஹிஃப்ழுல் ஈமான்'


 
"தர்' என்றால் இறந்துபோன உடல் எனப்பொருள். "காஹ்' என்றால் "இடம்' எனப்பொருள். ஈது தொழுகை தொழும் திடலை "ஈத்காஹ்' என்று அழைக்கிறோம் அல்லவா? இவ்வுலகில் வாழ்ந்து மறைந்துபோன அவ்லியாக்கள், இறை நேசர்கள் அடங்கியுள்ளதாகக் கருதப்படும் இடம் "தர்கா' என்று அழைக்கப்படுகின்றது.

இறந்துபோன அவ்லியாக்கள் உயிரோடும் உணர்வோடும் இருக்கிறார்கள். நம்முடைய அழைப்புக்கு செவிமெடுக்கிறார்கள். நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்றொரு பரவலான நம்பிக்கை இந்திய நாட்டு மக்களிடையே காணப்படுகின்றது.

இஸ்லாம் இந்நம்பிக்கையை ஆதரிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இத்தகைய நம்பிக்கைகள் தவறு என்பதை வலியுறுத்தவே இஸ்லாம் இம்மண்ணுலகுக்கு வந்தது.
"தர்கா'வை வலம் வருவது, முத்தமிடுவது போன்ற செயல்கள் செய்யப் படுகின்றன. இவை சரியா, ஷரீஅத் இதைச் சரி காண்கிறதா? என்பது குறித்து மெளலானா அஷ்ரஃப் அலி தானவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆராய்ந்துள்ளார்கள்.

ஹகீமுல் உம்மத் மெளலானா அஷ்ரஃப் அலி தானவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) இந்தியாவில் தோன்றிய தலைசிறந்த உலமாக்களில் ஒருவராவார். இஸ்லாமியக் கல்வியிலும் கேள்வியிலும் சிறந்த குடும்பம் ஒன்றில் ஹிஜ்ரி 1280 ஆம் ஆண்டு மெளலானா பிறந்தார்கள். உ.பி. மாநிலம் தேவ்பந்த் நகரிலுள்ள தாருல் உலூம் படசாலையில் பயின்று ஹி.1301 ஆமாண்டு மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களுடைய கரங்களினால் பட்டம் பெற்றார்கள்.

தொடர்ந்து பல்வேறு பாடசாலைகளிலும் இஸ்லாமிய மையங்களிலும் பணியாற்றினார்கள். அக்கால கட்டத்தில் முஸ்லிம் உம்மாவின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது. இஸ்லாம் என்றால் என்ன? எனும் அடிப்படை அறிவும் அற்ற மக்களாக முஸ்லிம்கள் இருந்தார்கள்.

முஸ்லிம்களிடையே இரண்டு மிகப்பெரும் நோய்கள் பரவிக் கொண்டிருந்தன. ஒருபுறம் ஆங்கிலேய ஆட்சிக்கு அவர்கள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். மேலைப் பண்பாட்டைப் பின்பற்றினால்தான் வெற்றிபெற முடியும் என்ற எண்ணம் அவர்களுடைய சிந்தனையில் வெகுவாக ஊறிப்போயிருந்தது.

வியாபாரம், அரசாங்கப் பணிகள் என்று எல்லாவற்றிலும் மேற்கத்திய நடைமுறையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முஸ்லிம்கள் முற்றிலுமாக அடிமைகளாகிக் கொண்டிருந்தார்கள்.மேலைப் பண்பாட்டையும் மேலைக் கல்வியையும் புறக்கணித்துவிட்டு நம்மால் முன்னேறவே முடியாது என்று பல முஸ்லிம் பெருந்தகைகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள். மேலை நாகரீகத்தின் தொட்டில்களாகத் திகழ்ந்த பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் முஸ்லிம்களின் இளைய தலைமுறை பயின்று எக்கட்டுப்பாடும் இல்லாத சர்வ சுதந்திரமான வாழ்க்கையை முஸ்லிம்கள் விரும்பினார்கள்.
பொதுவிடங்களில் மற்றவர்கள் பார்வையில் தங்களை முஸ்லிம்கள் என்று வெளிப்படுத்திக் கொள்ளவே அவர்கள் கூச்சப்பட்டார்கள். பள்ளிவாசலோடும் பெண்கள் அணியும் பர்தாவோடும் இஸ்லாமை நிறுத்திவிட்டு மற்ற வாழ்வியல் நடவடிக்கைகளை தங்களிஷ்டம் போல நடத்திக் கொள்ளவே முஸ்லிம்கள் விரும்பினார்கள்.
இந்த "திசைகேடு'க்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்டு, இஸ்லாமிய வாழ்விலக்கை சுட்டிக்காட்டிய பெரும்பணியை செய்தவர்களுள் மெளலானா அஷ்ரஃப் அலி தானவி குறிப்பிடத்தகுந்தவர்.

தொடர்ச்சியான மக்கள் சந்திப்புகள், சொற்பொழிவுகள், இடைவிடாத பயணங்கள் என்று அவருடைய வாழ்வு ஓய்வில்லாமல் கழிந்தது. ஃபுரூகுல் ஈமான், இஸ்லாஹுல் ஃகயால், ஆதாபுல் மஆஒரஹ், ஹயாத்துல் முஸ்லிமீன், பிஹிஷ்தி ஸேவர் என்று பல பயனுள்ள நூற்களை யாத்துள்ளார்கள்.

"ஹிஃப்ழுல் ஈமான்' என்ற சிற்றேட்டையே இங்கு "தர்கா- வழிபாடா வழிகேடா?' என்ற தலைப்பில் கொடுத்துள்ளோம். சொல்லப்படும் விஷயத்தை விட்டுவிட்டு குறுக்குச் சால் ஓட்டுவது என்றும் வழிகேடர்களின் இயல்பாக இருந்து வருகின்றது. இந்நூல் வெளிவந்தவுடன் "அஷ்ரஃப் அலி நாயை விடக் கேவலமாக அண்ணலாரைப் பற்றி எழுதியுள்ளார்' என்று "பரேலவி'க்கள் சந்துகளில் நின்றுகொண்டு பிரச்சாரம் செய்யத்தொடங்கினார்கள். அதற்கும் பதில் கொடுக்கப்பட்டது. அதனையும் சேர்த்தே தமிழில் தந்துள்ளோம்.

தர்காகளுக்கு போவது, நேர்ச்சை செய்வது, ஸஜ்தா செய்வது என்று இறைவழிபாட்டோடு தொடர்புடைய எல்லா காரியங்களையும் ஒரு கூட்டம் தொடர்ந்து செய்து வருகின்றது. வட நாட்டில் "பரேலி' என்ற ஊரில் பிறந்த "அஹ்மத் ரழா கான்' என்பவர், ஷரீஅத்தில் இவ்வாறு செய்ய ஆதாரம் உள்ளது என்று அதற்கான "சான்றுகளை' தொகுத்து அளித்தார்.
"காதியான்' ஊரில் பிறந்த "குலாம் முஹம்மது'வை விட மோசமான சீர்கேட்டை ரழா கான் ஏற்படுத்தினார். தன்னுடைய கருத்தை எதிர்த்த எல்லா உலமாக்களையும் வாய்க்கு வந்தபடி ஏசுவதில் அவருக்கு நிகர் அவரே! தேவ்பந்த் உலமாக்கள், ஜமாஅத்தே இஸ்லாமி அறிஞர்கள், தப்லீக் ஜமாஅத்தினர் என்று அனைவரைப் பற்றியும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுக்கலானார்.
இதன் காரணமாக தர்கா வழிகேட்டில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு, "பரேலவிகள்' என்ற பெயர் வந்தது. பரேலவிகள் உட்பட யாவருக்கும் நேர்வழி காட்டுமாறு வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம். நேர்வழி கிடைத்த பிறகு, அதனைத் தொலைப்பதை விட கொடுமையான செயல் வேறு எதுவும் இல்லை!
..............................................


"ஹிஃப்ழுல் ஈமான்'


மெளலானா அஷ்ரஃப் அலி தானவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி

தர்காவுக்கு போவோர் அனைவரும் அங்கு போவதையும் அங்கு செய்யப்படும் செயல்களையும் "நன்மை' என்றும் "ஸவாப்' என்றும் நினைத்தே செய்கிறார்கள். தவறான செயல் என்று தெரிந்தே யாரும் எதையும் செய்வதில்லை. தர்காவில் அடங்கியுள்ளதாகக் கருதப்படும் அவ்லியாக்களுக்காக ஸஜ்தாவும் செய்கிறார்கள். அதை நன்மை என்று கருதியும் ஷரீஅத் அனுமதி அளிக்கின்றது என்று நினைத்தும்தான் செய்கிறார்கள்.

ஸஜ்தா இரண்டு வகைப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இபாதத் என்று நினைத்து வணக்கம் என்று நினைத்து செய்யப்படும் ஸஜ்தா ஒருவகை. அது ஒரே இறைவனான அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டும். மரியாதைக்காக செய்யப்படும் ஸஜ்தா இன்னொரு வகை. அதை யாருக்காகவும் செய்யலாம். மரியாதைக்காக என்ற நினைப்பில் செய்வதால் தவாஃப், ஸஜ்தா, முத்தம் போன்றவற்றில் எந்தக் குற்றமும் இல்லை என்பதே அவர்களுடைய வாதம்.
மரியாதைக்கான ஸஜ்தா என்பது வரவேற்பதற்காக செய்யப்படும் வந்தனம் செய்யும் வடிவிலான ஸஜ்தா என்பதைப் புரிந்து கொள்கிறோம். ஒருவருக்கு மரியாதை செய்யும் நோக்கில் ஸஜ்தா செய்யப்படுவதைப் பற்றி ஷரீஅத் என்ன கருதுகின்றது? என்பதை இப்போது பார்க்க வேண்டும்.

மரியாதைக்காக மற்றவர்களுக்கு ஸஜ்தா செய்யலாம் எனக் கூறுபவர்கள் அதற்கு என்ன ஆதாரம் காட்டுகிறார்கள் என்று பார்க்கவேண்டும். முந்தைய ரீஅத்துகளில் இது அனுமதிக் கப்பட்டு இருந்தது எனக் கூறுகிறார்களா? அல்லது முஹம் மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ரீஅத்திலும் ஆதாரம் உள்ளது எனக் கூறுகிறார்களா?.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வானவர்களும் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அவருடைய பெற்றோர், சகோதரர்களும் ஸஜ்தா செய்ததாக குர்ஆனில் குறிக்கப்பட்டுள்ளதற்கு என்னதான் பொருள்? தலையைத் தரையில் கிடத்தி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸஜ்தா செய்தார்கள் என்று பொருளா? அல்லது வேறு ஏதேடனும் பொருளா? குர்ஆன் விரிவுரைவூயாளர்கள் பலரும் அதற்கு "தலையைச் சாய்த்து பணிவது' என்றே பொருள் கூறியுள்ளார்கள். ஆகையால், பணிவு என்றுதான் இதன்மூலம் பொருள் கொள்ளமுடியும்.

ஒருவேளை முந்தைய ஷரீஅத்துகளில் இதற்கு அனுமதி இருந்தது என்று வைத்துக் கொண்டாலும் நமக்கு அது அனுமதிக்கப்பட்டுள்ளதா என்றொரு கேள்வி எழுகின்றது. ஏனெனில், முந்தைய ஷரீஅத்துகளில் ஆகுமாக்கப்பட்டிருந்த எத்தனையோ வியங்கள் நமக்கு தடை செய்யப்பட்டு விட்டன. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ரீஅத்தில் கூடப்பிறந்த தங்கையைக் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இப்போது அது பயங்கரமான ஹராம்.

இன்னும் சொல்லப்போனால் நம்முடைய ஷரீஅத்திலேயே எத்தனையோ விஷயங்கள் முதலில் அனுமதிக்கப்பட்டிருந்தன. பிறகு, அவை தடை செய்யப்பட்டுவிட்டன. உதாரணமாக, சாராயம், கள் அருந்துவதற்கு முதலில் தடையேதும் இல்லை. எல்லோரும் சாராயம் குடித்துக்கொண்டுதான் இருந் தார்கள். அப்புறம் அது ஹராமாக ஆக்கப்பட்டு விட்டது. ஆகையால், முந்தைய ரீஅத்துகளில் அனுமதிக்கப்பட்ட ஒரு செயல் இப்போதும் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு ஏதும் அவசியம் கிடையாது. அப்படி அனுமதியுள்ளதாக யாரேனும் கூறினால் அதற்கு அவர் ஆதாரம் காட்ட வேண்டும்.
திருமறை குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ அப்படிப்பட்ட அனுமதி ஏதும் கிடையாது என்பதே முந்தைய ஷரீஅத்தில் ஒரு விஷயம் அனுமதிக்கப்பட்டு இருந்ததாக நம்முடைய ஷரீஅத்தில் அறிவிக்கப்பட்டால் அதற்கு நம்முடைய ஷரீஅத்திலும் அனுமதி உள்ளதாகத் தானே அர்த்தம் என்று யாரேனும் கூறலாம். உண்மைதான். ஆனால், அதற்கு நம்முடைய ஷரீஅத்தில் தடையேதும் வெளிப்படையாக தெரிவிக்கப்படாமல் இருக்கவேண்டும். அதை ஹராம் என்று கூறாமல் இருக்கவேண்டும். இல்லையென்றால் முந்தைய ஷரீஅத்தில் இருந்த அவ்வனுமதி இப்போது இல்லை என்றுதான் பொருள். இதைப்பற்றி நம் முடைய ஷரீஅத் என்ன கூறுகின்றது என்பதைப் கைஸ் இப்னு ஸஅத் ரழியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி அறிவிக்கிறார்.
""நான் ஹீரா என்ற பகுதிக்குப் போயிருந்தேன். அங்கள்ள மக்கள் தங்களுடைய தலைவருக்கு ஸஜ்தா செய்துவந்தார்கள். இந்தத் தலைவரைவிட ஸஜ்தா செய்யப்படுவதற்குத் தகுதியானவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தாம் என்று நான் மனதிற்குள் கூறிக்கொண்டேன். மதீனா திரும்பியபிறகு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், "ஹீரா பகுதியினர் தங்களது தலைவருக்கு ஸஜ்தா செய்கிறார்கள். ஸஜ்தா செய்யப்படுவதற்கு தாங்கள்தாம் உண்மையிலேயே முழுத்தகுதி உடையவர்கள்' என்று தெரிவித்தேன்.

"நான் இறந்த பிறகு என்னுடைய கபுறு வழியாக நீங்கள் சென்றால் என்னுடைய கபுறுக்கு ஸஜ்தா செய்வீர்களா?' என்று என்னிடம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். "இல்லை' எனக் கூறினேன். "அப்படியயன்றால் எனக்கு ஸஜ்தா செய்யாதீர்கள். ஸஜ்தா செய்யலாம் என்று யாருக்கேனும் நான் அனுமதி வழங்க நினைத்தால், தங்களுடைய கணவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு பெண்களிடம் கூறுவேன். அல்லாஹுத் தஆலா கணவர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை மனதில்கொண்டு தான் இவ்வாறு நான் கூறுகிறேன்' என்று இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஸஜ்தா செய்ய அனுமதிக்குமாறு அண்ணலாரிடம் நபித் தோழர் கேட்டாரே அது எம்மாதிரியான ஸஜ்தா? இபாதத்- வணக்கம் என்ற வகையிலான ஸஜ்தாவா? மரியாதைக்காக செலுத்தப்படும் ஸஜ்தாவா? இபாதத் என்ற வகையிலான ஸஜ்தா என்றால் அது ஒர்க் ஆயிற்றே, அப்படியயன்றால் ஒரு ஸஹாபி ஒர்க் செய்வதற்காக அண்ணலாரிடம் அனுமதி கோரினார் என்று எடுத்துக் கொள்வதா? நஊது பில்லாஹ்.

சாதாரண பகுத்தறிவுள்ள ஒரு மனிதன் கூட ஓரிறைவனை விட்டு விட்டு வேறு எதையும் வணங்கமாட்டான் எனும் போது மதிப்புக்கும் கண்ணியத்துக்கும் உரிய ஒரு ஸஹாபி எங்ஙனம் முன்வருவார்? சாத்தியமே இல்லை.

ஒரு விஷயத்துக்கு அனுமதி இருந்தாலும் இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றினால்தான் அதைப்பற்றிக் கேட்பீர்கள். உங்களுடைய அறிவே அது தவறு என்று எடுத்துக் கூறி அதைப்பற்றிக் கேட்பதை விட்டு உங்களை தடுத்து நிறுத்தி விட்டால் அனுமதி கேட்க மாட்டீர்கள். ஒரே இறைவனை விட்டுவிட்டு இன்னொன்றை வணங்குவதை பாமர மனிதனின் அறிவுகூட ஒப்புக் கொள்ளாது. அதை ஷரீஅத்தும் அனுமதிக்காது. சாதாரண மனிதனுக்குக் கூட தோன்றாத ஓர் எண்ணம் ஸஹாபிக்கு உதித்தது என்று கூறமுடியுமா?

அனுமதி இருந்தாலும் இருக்கும் என்று அவருக்குத் தோன்றியதால்தான் கேட்டுள்ளார். அப்படியயன்றல் அது மரியாதைக்கான ஸஜ்தாவாகத்தானே இருக்கவேண்டும். மரியாதைக்கான ஸஜ்தாவுக்கு அனுமதி அளித்து இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்களா, இல்லையா என்பதை தெளிவாகவே தெரிந்து கொள்கிறோமே.
இவ்வளவு தெளிவாக இறைத்தூதர் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறி விட்ட பிறகு முந்தைய ஷரீஅத்துகளில் அனுமதி இருந்தது எனும் வாதம் அடிபட்டுப் போய்விடுகின்றது.

உயிரோடு உள்ள இறைநேசருக்கே ஸஜ்தா செய்யக்கூடாது எனும் போது இறந்துவிட்ட இறைநேசர் கபுறுக்கு முன் ஸஜ்தா என்ற பேச்சே எழ வழியில்லை.
தங்களுக்கு ஸஜ்தா செய்யவா என்று அனுமதி கேட்ட அந்த நபித்தோழரே, என்னுடைய கபுறுக்கு ஸஜ்தா செய்வாயா என்று இறைத்தூதர் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருப்பிக் கேட்ட போது, கபுறுக்கெல்லாம் ஸஜ்தா செய்யமாட்டேன் என்று தன்னுடைய மறுப்பை தெளிவாகவே பதிவு செய்து விட்டார்.
இறந்துவிட்ட ஒருவருக்கு ஸஜ்தா செய்யவே கூடாது என் பதில் அவருக்கு சந்தேகமே எழவில்லை. உயிருள்ள ஒருவருக்கு ஸஜ்தா செய்யலாமா கூடாதா என்றுதான் அவருக்கு சந்தேகம்.

இறந்துபோன ஒருவருக்கு ஸஜ்தா செய்வது, உயிருள்ள ஒரு வருக்கு ஸஜ்தா செய்வதைவிட இழிவான செயல் என்பதை ஹதீஸ் தெள்ளத்தெளிவாக விளக்கிவிடுகின்றது. உயிருள்ள ஒருவருக்கு ஸஜ்தா செய்யலாமா என்றால் அது கூடாது என்பதை ஹதீஸே விளக்கிவிட்டது. உயிருள்ள ஒருவருக்கே ஸஜ்தா செய்யக்கூடாது என்றால் இறந்துபோனவருக்கு கண்டிப்பாக செய்யக்கூடாது என்பதையே புரிந்துகொள்கிறோம். அதுவும் எப்படிப்பட்ட ஆள்? இறைவனுக்கு மிகவும் பிரியமான, இறைநேசர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் எட்ட முடியாத தொலைவில் உள்ள அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கபுறுக்கு முன்னால். இறைத்தூதர் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய கபுறில் உயிரோடு இருப்பார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதானே!. 

பொதுவாக எல்லா நபிமார்களும் இறப்புக்குப் பின்னாலும் கபுறுகளில் உயிரோடு இருப்பார்கள்; அவர்களுடைய உடலை மண் திண்ணாது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். அப்படிப்பட்ட அண்ணலார் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கபுறுக்கு முன்னாலேயே ஸஜ்தா செய்யக்கூடாது என்றால் என்ன பொருள்? மற்ற கபுறுகளுக்கு முன்னால் செய்வது வெறுமனே ஹராம் கிடையாது; மற்றவர்களுடைய உடலை மண் திண்ணாது என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்பதால் அது, பயங்கரமான ஹராம் ஆகும்.
இமாம்களைப் பின்பற்றவோ, தக்லீத் செய்யவோ மாட்டோம் என்று சொல்பவர்களுக்கும் இதில் வலுவான ஆதாரம் உள்ளது; ஏதேனும் ஓர் இமாமைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும் ஆதாரம் உள்ளது. இருப்பினும் இமாம்களைப் பின்பற்றுபவர்களுக்காக, மேலதிகமான ஆதாரம் ஒன்றைக் காட்டுகிறோம்.
மார்க்க அறிஞர்களுக்கு முன்பும் தலைவர்களுக்கு முன்பும் மக்கள் அடிபணிந்து காலைத்தொட்டுச் செய்கின்ற வணக்கம் "ஹராம்' ஆகும். செய்பவனும் அதனை அங்கீகரித்து ஏற்றுக் கொள்பவனும் குற்றவாளிகள் ஆவர். சிலைகளுக்கு முன்பு செய்யும் வணக்கத்தைப் போன்றதே இது! அவ்வாறு ஸஜ்தா செய்பவன் காஃபிராக ஆகிவிடுகிறானா என்றால், அது அவனுடைய நிய்யத்தைப் பொறுத்தது.

வணக்கம், மரியாதை எனும் நோக்கில் செய்தானேயானால் காஃபிராகி விடுகிறான். வரவேற்கும் நோக்கில் செய்வானேயானால் காஃபிராக ஆக மாட்டான்; ஆனால், பெருங்குற்றம் ஒன்றைப் புரிந்தவன் ஆகிவிடுவான்.காலைத்தொட்டு வணங்குவதே இபாதத்தைப் போன்று உள்ளது என்ற காரணத்தால் ஹராமாகிவிடுகின்றது எனும் போது அதைவிட அதிகமாக, இபாதத்துக்கு நெருங்கி உள்ள ஸஜ்தா ஏன் ஹராமாக ஆகாது?
இந்த ஃபத்வாவின் அடிப்படையிலும் மரியாதை நிமித்தம் செய்யப்படும் ஸஜ்தா ஹராமானதாக ஆகிவிடுகின்றது.

மரியாதையை மனதில் கொண்டு செய்யப்படும் ஸஜ்தா என்று நாம் இனம்பிரித்ததால்தான் இந்த விளக்கம் எல்லாம்! இபாதத் நோக்கிலும் வேறேதோ எண்ணங்களை மனதில் கொண்டும் செய்யப்படும் ஸஜ்தாவாக இருந்தால் அது குஃப்ராக ஆகிவிடுகின்றது.அப்படிப்பட்ட எண்ணங்கள் எல்லாம் எங்களுக்குக் கிடையவே கிடையாது, மரியாதை எனும் நோக்கில்தாம் நாங்கள் இதைச் செய்கிறோம் என்று கூறினால், எல்லா இபாதத்துகளையும் இவ்விதமே தரவாரியாக இனம் பிரிக்கவேண்டும்; இறைவனல்லாதவற்றுக்கும் அவற்றை செய்துவர வேண்டும். தொழுகையையும் இரண்டாகப் பிரிக்கவேண்டும். ஒன்று இபாதத் வணங்கும் நோக்கில் செய்யப்படுவது. இன்னொன்று மரியாதை செய்யும் நோக்கில் புரியப்படுவது.
முதலாவது இறைவனுக்காக மட்டும் செய்யப்படவேண்டும்; மற்றவர் களுக்காக செய்யக்கூடாது. இரண்டாவதை மற்றவர்களுக்காகவும் செய்யலாம். இவ்வாறாக, நோன்பு ஹஜ் என்று எல்லா இபாதத்துகளையும் பிரித்துவிட வேண்டும். ஏனென்றால், நோக்கத்தைப் பொருத்தவரை ஸஜ்தாவும் மற்ற எல்லா வணக்கங்களும் ஒன்றுபட்டே தொழுகை, நோன்பு என்றிவ்வாறாக எல்லா இபாதத்துகளையும் பிரிக்கும் துணிச்சல் யாருக்கேனும் உண்டா?. யாரேனும் ஒரு நல்லடியாரோ அவ்லியாவோ இவ்வாறு கூறி யுள்ளார்களா? அவ்வாறு கூறியிருந்தால் அவர் கூறியிருக்கிறார் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேண்டும். அப்படியே நிரூபித்தாலும் ஏதோ ஒரு நல்லடியார் கூறினார் என்பதற்காக ஷரீஅத்தைத் தூக்கி எறிந்துவிட முடியாது. ஏனென்றால், இஸ்லாமியப் பேரறிஞர் ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார் என்று அவருடைய ஒரு கூற்றை தங்களுக்கு ஆதாரமாக இத்தகையோர் காட்டுகிறார்கள்.

அவர் என்ன கூறினார்? எப்போது கூறினார்? எந்த அர்த்தத்தில் கூறினார்? என்று எதுவுமே தெரியாமல் கூறிக்கொள்கிறார்கள். அப்படியே யாரேனும் ஒருவர் கூறியிருந்தாலும் ஷரீஅத் யாருக்காகவும் மாறாது; மாற்றவும் முடியாது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மூன்றாவதாக கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில் இபாதத் எது? மரியாதை எது? என்பதை அடையாளப் படுத்துவதில் பொதுவாக மக்கள் தவறிழைக்கிறார்கள். அவர்களால் இயலாத விஷயம் அது! ஹராமான செயலுக்கு வழிகோல்பவையும் ஹராமே என்ற ஷரீஅத்தின் விதியையும் நாம் மறந்துவிடலாகாது.

"கஅபத்துல்லாஹ்வை வலம் வருவது தொழுகையைப் போன்றதாகும்!' என்று ஹதீஸ்களில் வந்துள்ளது. (காண்க: திர்மிதி, நஸாயி, தாரமி).

ஒன்றோடு ஒன்று ஒத்த விஷயங்களைத்தான் உவமையாகக் கூறுவார்கள். சிங்கத்தைப் போன்றவன் என்றால் சிங்கத்தைப் போன்ற வீரம் அவனிடமும் இருக்கின்றது என்றுதானே பொருள்! தொழுகையில் நிரம்பியுள்ள ஓர் அம்சம் வலம் வருவதிலும் காணப்பட வேண்டும். அப்போதுதான் உவமை யாகக் கூறமுடியும். தொழுகை என்பதே இபாதத்; இபாதத்தின் உயர்ந்ததோர் வடிவம். அப்படியயனில், தொழுகை எவ்வாறு ஓர் இபாதத்தோ, இபாதத்தின் உயர்ந்த ஒரு வடிவமோ அவ்வாறே வலம் வருதலும் தவாஃப் செய்தலும் இபாதத்தே என்று விளங்கிக்கொள்ள முடிகின்றது.

அல்லாஹ் அல்லாத ஒன்றுக்கு இபாதத் செய்வது ஹராம் மட்டுமல்ல, குஃப்ரும் கூட! எந்தவொரு முஸ்லிமாலும் மறுக்கமுடியாத அசைக்கமுடியாத ஆதாரங்களைக் கொண்டது.
உயிரோடு உள்ளவர்களோடும் இறந்து போனவர்களோடும் இத்தகைய நடைமுறைகளைச் செய்வது படு பயங்கரமான ஹராம் ஆகும். இறையில்லம் அல்லாத வேறு ஒரு இடத்தை தவாஃப் செய்வதும் வலம் வருவதும் ஹராம் ஆகும்; கபறுகளை தவாஃப் செய்வது அதைவிடவும் அதிகமான ஹராம் ஆகும். இதைப்பற்றிய உலமாக்களின் ஃபத்வா வையும் பார்ப்போம்:

""மதீனா முனவ்வராவில் உள்ள இறைத்தூதர் அவர்களின் அடக்கஸ்தலத்தை தவாஃப் செய்யக்கூடாது. ஏனெனில், தவாஃப் என்பது இறையில்லம் கஅபத்துல்லாஹ்வோடு மட்டும் சம்பந்தப்பட்டது. இதன் காரணமாக, நபிமார்களுடைய அவ்லியாக்களுடைய கபுறுகளை தவாஃப் செய்வது ஹராமாகும்'', என லதாயிஃப் நூலில் கூறப்பட்டுள்ளது.அவ்லியாக்களை விட எல்லாவகையிலும் மேம்பட்ட, உடலை மண் திண்ணாது என்ற சுபச்செய்தி கூறப்பட்ட நபிமார்களின் கபுறுகளை தவாஃப் செய்வதே தடுக்கப்பட்டுள்ள போது அவ்லியாக்களின் கபுறுகளை தவாஃப் செய்வது அதை விடவும் அதிகமாகக் கண்டிக்கப்பட்டதாகும்.

ஆக, அல்லாஹ் அல்லாதவற்றை தவாஃப் செய்வது முற்றிலும் ஹராம்! நபிமார்களின் கபுறுகளை தவாஃப் செய்வது அதைவிடவும் ஹராம்! அவ்லியாக்களின் கபுறுகளை தவாஃப் செய்வது அதைவிடவும் அதிக ஹராம்!.

ஷா வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ன கூறுகிறார்?

தர்காவை வலம் வருவது சரியே என்று சாதிப்பவர்கள் தங்களுடைய கூற்றுக்கு ஆதாரமாக ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நூலிலிருந்து ஆதாரம் காட்டுகிறார்கள். ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மத் துல்லாஹி அலைஹி இந்தியாவில் தோன்றிய மிகப்பெரிய இமாம்களில் ஒருவர். இந்தியாவில் தோன்றிய எல்லா இஸ்லாமிய இயக்கங்களுக்கும் மூலமாக விளங்கியவர். வழி கெடாத தூய தஸவ்வுஃப் வழியில் வந்த அவர் அது குறித்து தம்முடைய நூற்களில் பலவிடங்களிலும் எழுதியுள்ளார். அவருடைய "இன்திபாஹ் ஃபீ ஸலாஸிலு அவ்லியாவுல் லாஹ்' எனும் நூலில் கபுறுகளை தவாஃப் செய்வது குறித்து எழுதியுள்ளார். அதையே தமக்கு ஆதாரமாக இத்தகையோர் காட்டுகிறார்கள்.
கபுறுகளை "தவாஃப்' செய்யுமாறு அவர் கூறியுள்ளது எந்த அர்த்தத்தில் என்று நாம் பார்த்தாகவேண்டும். கண்ணியத்தோடும் மரியாதைக்காகவும் "தவாஃப்' செய்யுமாறு அவர் கூறவில்லை. உலகப்பற்றை முற்றிலுமாகத் துறந்து மறுமை வாழ்வொன்றையே மனதில் கொண்டு வாழவேண்டும் என்பது தூய இஸ்லாமிய தஸவ்வுஃப் கொள்கையாளர்களின் கருத்து. அவ்வகையில் தமது ஆன்மாவை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும்வகையில் இறையடியார்களின் அடக்கஸ்தலங்களுக்கு கபுறு ஜியாரத் அடிப்படையில் வெறுமனே சென்று வருமாறு அவர்கள் கூறுகிறார்கள்.


சாதாரணமாக தவாஃப் என்றால் "வலம் வருதல்' என்றுதானே பொருள். அந்த அர்த் தத்தில்தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செல்வதையும் சாதாரண மக்களுக்கு ஆகுமானதாக ஆக்க வில்லை. ஷரீஅத்தையும் தரீக்கத்தையும் நன்கு உணர்ந்துள்ள நிறை அறிவு பெற்றவர்கள் மட்டுமே செல்லவேண்டும் என்று விதியாக்கப்பட்டுள்ளது.

கீழ்வரும் ஹதீதை கவனமுடன் படித்தால் நாம் சொல்ல வருவது எளிதில் விளங்கும். ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுவின் தந்தை மறைந்துவிட்டார். அவருக்கோ ஏராளமான கடன். கடன்கொடுத்தோர் தமது தொகையை திருப்பியளிக்குமாறு ஜாபிரை நிர்ப்பந்தப் படுத்தத் தொடங்கினார்கள். ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்து தம்முடைய தோட்டத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டார். அவருடைய வேண்டுகோளை ஏற்று இறைத்தூதரும் வருகை தந்தார்கள். பேரீத்தம் பழங்கள் பறிக்கப்பட்டு ஓரிடத்தில் ஒன்றாகக் குவிக்கப்பட்டன. அப்பெரிய குவியலை மூன்றுமுறை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "தவாஃப்' செய்தார்கள். அதாவது "சுற்றி' வந்தார்கள். புகாரியில் பதிவாகியுள்ள ஹதீதில்கூட "தாஃப' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதன் காரணமாக அக்குவியலில் மிகப்பெரிய அளவிற்கு வளம் (பரக்கத்) ஏற்பட்டது. கடன்கள் எல்லாம் அடைபட்டுவிட்டன. மீதமும் ஆகிவிட்டது.பழக்குவியலை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "தவாஃப்' செய்தார்கள்; புனிதமாகக் கருதினார்கள் என்று கூற முடியாது. ஷரீஅத் கூறும் "தவாஃப்' அல்ல இது!

இதே பொருளில்தான் கபுறுகளை "தவாஃப்' செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. அதாவது கபுறுகளை சுற்றி வாருங்கள் எனக்கூறப்பட்டுள்ளது. கபுறுகளை சுற்றி வருமாறு கூறப்பட்டுள்ளது கூட அவற்றினுடைய புனிதத் தன்மையைக் கருத்தில் கொண்டு அல்ல! தற்போது சாதாரண பொதுமக்களும் பாமரர்களை ஒத்த அறிஞர்களும் புனிதமாக எண்ணித்தானே கபுறுகளைச் சுற்றி வருகிறார்கள். மாறாக, கபுறுகளைக் காண்பதால் என்ன தாக்கம் உண்மையிலேயே ஏற்பட வேண் டுமோ அதைப் பெறும் நோக்கிலேயே கூறப்பட்டுள்ளது. "தவாஃப்' எனும் வார்த்தைக்கு ஷரீஅத்தில் கூறப்படும் அர்த்தத்தை இங்கு கொள்ளக் கூடாது. மொழியில் அதற்கு என்ன அர்த்தமோ அதனையே இங்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.

"அந்நிஸா' அத்தியாயத்தில் சுதந்திரமான பெண்களை "முத் ஆ'' செய்து கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. (வசனம் 24). ஷரீஅத்தில் "முத்ஆ' என்றொரு திருமணம் உள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து அக்காலக்கெடு முடிந்துவிட்டால் இந்தத் திருமணம் முறிந்துவிடும் என்ற முன்நிபந்தனையோடு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது முத்ஆ ஆகும். அதேசமயம் "முத்ஆ'' என்றால் "பயனுறுதல்'' என்பது மொழிப்பொருள். முத்ஆ என்பதன் மொழிப் பொருளை இங்கு எடுக்க வேண்டுமே தவிர ரீஅத் தரும் பொருளை எடுக்கக் கூடாது. வழிகேட்டுப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் அவ்வாறே பொருள் கொள்கிறார்கள்.
அடிமையை குர்ஆன் "அப்து'' என அழைக்கின்றது. "அப்து'' என்றால் அடிமை என்றும் பொருள். வணங்குபவன் என்றும் பொருள். அவன் அப்து என்பதால் அவனுடைய எஜமானன் "மஃபூத்'' அதாவது வணங்கப்படுபவன் என்று பொருள் கொண்டால் என்னாவது? ஒர்க்கின் வாசலை விரியத் திறந்தது போலாகாதா? ஆக, வெறுமனே வார்த்தையை மட்டும் பார்த்துவிட்டு, எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் நாமாகவே ஒரு பொருளை கற்பிதம் செய்துகொண்டால் அது எவ்வகை யிலும் சரியாகாது.

"இட்டுக்கட்டுவது' என்று இதற்குத்தான் பெயர்! ஒருவேளை "தவாஃப்'' எனும் வார்த்தையை ரீஅத் எந்தப் பொருளில் கையாள்கின்றதோ அதே பொருளில்தான் அவர் பயன்படுத்தியுள்ளார் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அது ஆதாரமாக ஆகாது. ஏனெனில் அவர் எந்த இடத்திலும் "ஆகுமானது'' "செய்யலாம்' என்ற பதங்களை உபயோகிக்கவில்லை. மாறாக, இப்படியயல்லாம் கபுறுகளை தவாஃப் செய்து மெய்யறிவு பெற முயற்சிக்கிறார்கள் என்று ஒரு வழிமுறையை தெரியப்படுத்துகிறார். அந்த வழிமுறை அங்கீகரிக்கப்பட்டதுதானா என்பதைப் பற்றி அவர் எதுவொன்றையும் தெரிவிக்கவில்லை.

அங்கீகரிக்கப்படாத வழிமுறையும் இருக்கின்றதா? என்று எவரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு "ஆம்'' என்பதுதான் பதில்.

இயற்கைக்கு மாற்றமான காரியத்தை ஒருவன் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். உடனே அவன் மெய்யறிவு பெற்றுவிட்டான் என்றோ, இறைவனை நெருங்கிவிட்டான் என்றோ முடிவு செய்துவிட முடியுமா?. இதுபோன்ற வியக்க வைக்கும் நிகழ்வுகளை குஃப்பார்களும் செய்கிறார்கள். "நொடிப்பொழுதில் பூமியை சுற்றி வருவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று ஒருமுறை அபு யஜீத் அவர்களிடம் கேட்கப்பட்டது. "அதிலென்ன பெரிய ஆச்சரியம் இருக்கின்றது. ஒரு வினாடி நேரத்திற்குள் ஷைத்தான் கிழக்கிலிருந்து மேற்கிற்கு சென்றுவிடுகிறான். ஆனால், அவனுக்கு அல்லாஹ்விடத்தில் எந்தவிதமான மதிப்பும் இல்லையே!' என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து காற்றில் பறப்பதைப் பற்றி கேட்கப்பட்டது.
"பறவைகள் கூடத்தாம் காற்றில் பறக்கின்றன!' என அவர் பதிலளித்தார்' என்று ஷைக் அக்பர் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்.

தஸவ்வுஃப் துறையில் "மெய்ஞ்ஞான உணர்வு' என்றொரு முறையைப் பின்பற்றுகிறார்கள். அதன்படி அவர்களுக்கு நிகழ்வுகளைப் பற்றிய மெய்யறிவு கிட்டுகின்றது என்பது நம்பிக்கை. அதற்காகக் கையாளப்படும் வழிமுறையைப்பற்றியும் ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் விளக்கியுள்ளார்.

"அச்சமயம் முன்புறம் ஒரு குர்ஆனையும் இடதுபுறம் ஒரு குர்ஆனையும் வலதுபுறம் ஒரு குர்ஆனையும் பின்புறம் ஒரு குர்ஆனையும் வைக்கவேண்டும்'. இதைச்சொல்லிவிட்டு கூடவே அதை விமர்சிக்கவும் செய்கிறார்கள். "முதுகுக்குப்பின் புறம் குர்ஆனை வைப்பதை நான் மரியாதைக்குறைவாகக் கருதுகிறேன்'. ஆக, ஒரு வியத்தை ஒருவர் சொல்லியிருக்கிறார் என்ப தாலேயே அதனை அவர் சரியயன்று நினைக்கிறார் என்றோ அதனை வலியுறுத்துகிறார் என்றோ சொல்லிவிட முடியாது. எடுத்தெழுதுவது என்பது வேறு. வலியுறுத்துவது, ஆதரிப்பது என்பது வேறு.

ஆதரிக்கவில்லை என்றால் அதனை அவர் வெளிப்படையாக விமர்சித்திருக்கவேண்டும். வெளிப்படையாக விமர்சித் திருந்தால் அதனை அவர் ஆதரிக்கவில்லை என்று புரிந்து கொள்ளலாம். இங்கு குர்ஆனை அவமதிக்கும் விஷயத்தில் ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். ஆனால், தவாஃப் விஷயத்தில் அவ்விதம் அவர் விமர்சிக்கவில்லை. ஆகையால், அதனை அவர் ஆதரிப்பதாகத்தான் அர்த்தம் என்றும் ஒருசிலர் சொல்லக்கூடும். சொல்லவும் செய்கிறார்கள்.
இஸ்லாமிய ஷரீஅத்தை கற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பிலுள்ள இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மெளனம் காத்தால் அதனை நாம் ஆமோதிப்பாக, சம்மதமாக எடுத்துக்கொள்ளலாம். அதில்லாமல், இறைத்தூதர் அல்லாத இன்னொருவர் மெளனம்காத்தால் அதனை நாம் ஆமோதிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது.
இரண்டாவதாக, ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அதை எங்குமே எதிர்த்துக் கருத்து கூறவில்லை என்று கூறுவதும் தவறாகும். ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தம்முடைய "துஹ்ஃபத்துல் முவஹ்ஹிதீன்' எனும் இன்னொரு நூலில் "கஅபத்துல்லாஹ்வைத் தவிர வேறு எதை வலம் (தவாஃப்) வந்தாலும் அது மிகப்பெரிய இறைநிராகரிப்பாகும்' என்பதை மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
(பழமைவாய்ந்த ஆலயத்தையும் அவர்கள் சுற்றிவரவேண்டும்) என்ற இறைவசனத்தையும் அப்போது கோடிட்டுக் காட்டியுள்ளார்கள்.ஒரு நடைமுறையை சொல்லவரும்போது அவ்விடத்திலேயே அதற்கான மறுப்பையும் சொல்லியாக வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வான்மறை குர்ஆன் பல விடங்களில் இறை நிராகரிப்பாளர்களின் கூற்றுகளை பதிவு செய்துள்ளது. அவற்றிற்கான மறுப்பை வேறோர் இடத்தில் அது கொடுக்கின்றது. நெற்றியை தரையில் வைப்பது, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து முத்தம் கொடுப்பது போன்றவற்றிற்கும் இதுவே தெளிவான பதிலாகும்

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live