21 Apr 2017

சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்பதின் மறுப்பிற்கு நமது மறுப்பு.

பரேல்வி ஜவ்வாத் ரப்பானி மறுப்பு என்ற பேரில் மீண்டும் தனது அறியாமையை
வெளிப்படுத்தியுள்ளார்.

அப்துஸ்ஸமீஃ ராம்பூரி அவர்கள் இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களின் சீடர்
என்கிறார்.தேவ்பந்த் பெரியோர்களும் அன்னாரின் சீடர்கள்தான்.

பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் ஒட்டுமொத்த வாதத்தின் சுருக்கம்:

தேவ்பந்திகள் பெருமானாரின் நேசிப்பதாக கூறிக்கொண்டு அன்னாரின் சிறப்புகளை
மறுக்கிறார்கள் என சித்தரிக்கின்றார்.பெருமானாரின் ஞானத்தை குறைத்து
மதிப்பிடுவதாக சித்தரிக்கிறார்.

இதற்கு நமது பதிலை விட பரேல்வி அறிஞர் அஹ்மத் யார் கான் கூறுவதை  பதிவு
செய்கிறோம்:

நபி (ஸல்) அவர்களின் ஞானமானது  படைப்புகளின் அனைத்து விட அதிகம்
என்பதை தேவ்பந்திகளும் ஏற்கிறார்கள் (ஜாஅல்ஹக் 119)




படைப்புகளில் மனிதர்கள் வானவர்கள் ஷைத்தான்கள் இவையல்லாத அனைத்தும்
உள்ளடங்கும்.எனவே நபி (ஸல்) அவர்களின் ஞானம் பெரியது என்பதை தான் தேவ்பந்த
உலமாக்கள் ஏற்கிறார்கள்.

இதற்கு மாற்றமாக பரேல்வி ஜவ்வாத் ரப்பானி நபி (ஸல்)
அவர்களின் ஞானத்தை தேவ்பந்த் உலமாக்கள் குறைத்து மதிப்பிடுவதாக கூறுவது
பொய்யும் இட்டுகட்டுதலும் அபாண்டமுமாகும் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

பரேல்வி ஜவ்வாத் ரப்பானி மறுப்பில் பல்வேறு விஷயங்களுக்கு தாவியுள்ளார்.இதில்
ஒட்டுமொத்தமாக அனைத்திற்கும் பதில் அளிப்பதை விட தனித்தனியாக மறுப்பளிப்பது
பொருத்தமானது என நினைக்கிறோம்.

பெருமானார் ஸல் அவர்கள் எனக்கு சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என
கூறியதை முதலில் எடுத்துக் கொள்வோம்!

ஷைக் அப்துல் ஹக் (ரஹ்) அவர்களின் கூற்றை கலீல் அஹ்மத் (ரஹ்) அவர்கள் பொதுவாக
கூறியதை பரேல்வி ஜவ்வாத் ரப்பானி மதாரிஜுன் நுபுவ்வத்தில் இருந்து எடுத்து
காட்டி ஏன் மறுப்பளிக்கவேண்டும்? இது மோசடியா? இல்லையா?

மதாரிஜு நுபுவ்வத்தில் உள்ளது என கலீல் அஹ்மத் (ரஹ்) கூறியிருந்தால் மோசடி என
சொல்லலாம்.எனவே உண்மையில் கலீல் அஹ்மத் ரஹ் அவர்கள் மீது அபாண்டமாக
பழிசுமத்தியவர் ஜவ்வாத் ரப்பானி பரேல்வி தான்.

நாம் அஷிய்யத்துல் லம்ஆத்தை எடுத்து காட்டியவுடன் திகைத்து மோசடி செய்தது
வெளிப்பட்டவுடன் வாதத்தை திசை திருப்பியுள்ளார்.

நமது வாதம் என்ன? எனக்கு சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்பதாக நபி
ஸல் அவர்கள் கூறியதை  ஷைக் (ரஹ்) அவர்கள் ஆதாரம் எடுத்துள்ளார்களா? இல்லையா?
ஆதாரம் எடுத்துள்ளார்கள் என்றால் இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கது.இல்லையெனில்
ஏற்கத்தக்கது இல்லை.அஷிய்யத்துல் லம்ஆதில் உள்ள வாசகத்தை பாருங்கள்!

அறிந்து கொள்ளுங்கள்!
முன்னால் பின்னால் பார்ப்பது வழமைக்கு மாற்றமானது.வஹியின் மூலம் அல்லது எண்ண
உதிப்பின் மூலம் சில சமயங்களில் பெறப்படும்.எப்பொழுதும் பெறப்படாது.இதனை
உறுதிப்படுத்தும் ஹதீஸ் உள்ளது.நபி (ஸல்) அவர்களின் ஒட்டகமானது
தொலைந்துவிட்டது.எங்கு சென்றது? என தெரியவில்லை.
முனாபிகுகள் கூறினார்கள்: முஹம்மத் கூறுகிறார்கள் வானத்திலிருந்து செய்திகளை
கூறுகிறேன் (ஆனால் இப்பொழுது) ஒட்டகம் எங்கு சென்றது? ' என தெரியவில்லை
என்கிறார்.அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது
சத்தியமாக! அவன் அறிவித்து கொடுத்ததை தவிர எனக்கு தெரியாது.இப்பொழுது அல்லாஹ்
எனக்கு அறிவித்து கொடுத்துவிட்டான் இந்த இடத்தில் உள்ளது.அதனின் கடிவாளம்
மரத்தில் சிக்கியுள்ளது.மேலும் கூறினார்கள் நான் மனிதன் இந்த சுவருக்கு
பின்னால் என்ன இருக்கிறது என்பது தெரியாது.அல்லாஹ் எனக்கு அறிவித்து
கொடுத்தால் தவிர .
(அஷிய்யதுல் லம்ஆத்)


இதனை நாம் முதல் மறுப்பில் கூறியிருந்தோம்.ஆனால் ஜவ்வாத் ரப்பானி இதனை மறைத்து
மோசடி செய்துள்ளார்.ஆக ஷைக் (ரஹ்) அவர்கள் ஆதாரமாக எடுத்துள்ளார்கள் என்பது
அப்பட்டமாக வெளிப்படுகிறது.

அடுத்து நபி (ஸல்) அவர்களுக்கு சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்பதால்
தேவ்பந்திகள் பெருமானாரை அவமரியாதை செய்கிறார்கள் என பரேல்வி ஜவ்வாத் ரப்பானி
வாதிடுகிறார்

நமது மறுப்பு:

பரேல்வி ஸயீத் ஸாஹிப் அவர்கள் ஒரு வினாவிற்கு பதில் தருகிறார்கள் அண்ணலாரின்
முதுகின் மீது அசுத்தம் வைக்கப்பட்ட பொழுது பிறகு எவ்வாறு அதனுடன்
தொழுதிருப்பார்கள்?

சரியான பதில்: 

நபி ஸல் அவர்களின் முதுகின் மீது என்ன வைக்கப்பட்டது என்பது
அவர்களுக்கு  தெரியவில்லை.
(ஷரஹ் ஸஹீஹ் முஸ்லீம் பாகம்:5 பக்கம்:564)



சுவருக்கு பின்னால் இருப்பது தெரியாது என்பதற்காக கொதித்தெழுந்த பரேல்வி
ஜவ்வாத் ரப்பானி முதுகின் மீது இருப்பது  தெரியாது என்பதற்காக கொதித்தெழ தயாரா?

அடுத்து கலீல் அஹ்மத் (ரஹ்) அப்துஸ்ஸமீஃ ராம்பூரி அவர்களுக்கு
மறுப்பளிப்பதானது ஹாளிர் நாளிர் குறித்தாகும்.அண்ணலாரின் ஞானம்
குறித்தல்ல.இதனை குறித்து விரிவான கட்டுரையில் இன்ஷா அல்லாஹ் பரேல்வி ஜவ்வாத்
ரப்பானியின் பொய் பித்தலாட்டங்களை தகர்த்தெறிவோம்.

அடுத்து அன்வாரே ஸாதிஆ' வில் வரும் வாசகம்: 

மீலாத் சபைகள் பூமியில் அனைத்து
இடங்களிலும் தூய்மையான தூய்மையற்ற இடங்களில் நடைபெறுகிறது.மார்க்க ரீதியான
சபைகள் அது அல்லாதவைகள் அனைத்து சபைகளில் நபி (ஸல்) அவர்கள் ஹாளிர் நாளிர்
என்பதாக நாம் சொல்லவில்லை.மலகுல் மெளத் இப்லீஸ் ஹாளிர் இதை விட அதிகமான
இடங்களான தூய்மையான தூய்மையற்ற குஃப்ரான குப்ரற்ற இடங்களில் பெறப்படும்.
(அன்வாரே ஸாதிஆ 359)







நபி (ஸல்) அவர்கள் ஹாளிர் நாளிர் ஆகுவதை விட ஷைத்தான் ஹாளிர் நாளிர் ஆகும்
இடங்கள் அதிகம் என்பதை அப்துஸ்ஸமீஃ ராம்பூரி அவர்கள் நிறுவுகிறார்கள்.

அஹ்மத் ரிளாகான் பரேல்வி கூறுவதைப் பாருங்கள்!

எந்த தன்மை மனிதன் அல்லாததிற்கு இருக்கமோ அதில் மனிதனுக்கு பரிபூரணம் என்பது
இல்லை.எந்த தன்மை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இருக்குமோ அதில் முஸ்லிமுக்கு
பரிபூரணம் இல்லை.
(மல்பூஜாத் அஃலா ஹள்ரத்)







பரேல்விகளின் வாதப்படி ஹாளிர் நாளிர் பெருமானார் (ஸல்) அவர்களை விட
ஷைத்தானுக்கு அதிகம் (அல்லாஹ் பாதுகாப்பானாக) என்பதால் ஹாளிர் நாளிர் என்பது
அஹ்மத் ரிஜாகானின் கூற்றின்படி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பரீபூரணத்துவம்
இல்லை என்பது தெளிவாகிறது.ஏனெனில் எந்த தன்மை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு
இருக்குமோ அதில் முஸ்லிமிற்கு பரிபூரணத்துவம் இல்லை எனவே ஹாளிர் நாளிர் தன்மை
ஷைத்தானுக்கு பெருமானார் (ஸல்) அவர்களுக்கு சரிசமமாக மட்டுமல்ல அதனை விட
அதிகமாக உள்ளது.

பரேல்விகளின் நிலைப்பாடு என்னவெனில் ஹாஜிர் நாஜிர் என்பது பெருமானாரின்
பரீபூரணத்துவம் அதனை மறுப்பவர் காபிர் என பரேல்வி குலாம் நஸீருத்தீன் இபாரத்
அகாபிர் கா தஹ்கீகி வ தன்கீதி ஜாயிஷா பக்கம் 69ல் பார்க்கவும்.





ஆக அப்துஸ்ஸமீஃ ராம்பூரி அவர்கள் பெருமானாரை விட ஹாஜிர் நாஜிர் ஷைத்தானுக்கு
அதிகம் என்பதாக கூறி பெருமானாரின் பரிபூரணத்தை மறுக்கிறார்.அஃலா ஹஜ்ரத்
ரிஜாகான் அவர்கள் பரிபூரணத்தை மறுக்கிறார்.இருவரும் பரேல்வி ஜவ்வாத்
ரப்பானியின் பார்வையில் காஃபிரா ?

பரேல்விகளிடத்தில் நபி ஸல் அவர்கள் நல்லோர்கள்
மட்டும் ஹாளிர் நாளிர் அல்ல மாறாக கிருஷ்ணன் ஹிந்து மத கடவுள் ஹாளிர் நாளிர்
அல்லாஹ் பாதுகாப்பானாக
(நூல் மல்பூஜாத் பாகம் 1 பக்கம்:177)





பரேல்வி அறிஞர் மற்றோர் இடத்தில் கூறுகிறார்:(சுருக்கம்)

இப்லீஸின் பார்வை முழு உலகமும் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்க்கிறது.அனைத்து
முஸ்லிம்களின் நாட்டங்கள் அது மட்டுமின்றி உள்ளத்தின் சிந்தனையும்
அறிகிறான்.நல்ல எண்ணத்தை விட்டு விலக வைக்கிறான்.கெட்ட எண்ணத்தை
பாதுகாக்கிறான்.ஷைத்தானுக்கே இவ்வளவு ஆற்றல் இருக்கும் போது அல்லாஹ்வின்
புறத்திலிருந்து அடியார்களின் நேர்வழிக்காக உள்ள நபிமார்கள் நல்லோர்களுக்கு
இருக்கும்  ஆற்றலை என்ன சொல்வது
(தப்ஸீர் நயீமி 3/114)




அப்துஸ்ஸமீஃ ராம்பூரி அண்ணலார் ஹாளிர் நாளிர் இருக்கிறது என்பதற்கு
ஷைத்தானுடன் ஒப்பிட்டு  ஆதாரம் எடுத்துள்ளார்.மற்றொரு பரேல்வி அறிஞர்
ஷைத்தானுடன்  ஒப்பிட்டு ஆதாரம் எடுத்துள்ளார்.பெருமானார் ஸல் அவர்களுடன்
ஷைத்தானை ஒப்பிடுவது சரியா? இதனை குறித்து பரேல்வி அறிஞர் கூறுவதைப் பாருங்கள்

நபி (ஸல்) அவர்களின் விஷயத்தில் லேசான உதாரணம் கூறுவது லேசான வார்த்தைகளை
உபயோகிப்பது குப்ராகும்.
(நூருல் இர்ஃபான்)




அருவருப்பானவைகளைக் கொண்டு ஒன்றை ஒப்புமையாக கூறினால் அதன் மூலம்
இழிவுப்படுத்துதலும் களங்கப்படுத்துதலும் பெறப்படும்.

(அஸ்ஸவாரிமுல் ஹிந்திய்யா)





அடுத்து நபி ஸல் அவர்கள் மறைவான ஞானத்தை மறுப்பது நயவஞ்சகர்களின் செயல்
என்கிறார்.யார் முனாஃபிகுகள் என்பதை அடுத்த கட்டுரையில் பரேல்விகளின் மோசடி
என்ற பெயரில் கட்டுரையின் மூலம் அம்பலப்படுத்துகிறோம்.(இன்ஷா அல்லாஹ்)

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live