24 Apr 2017

பரேல்விகளின் திரிபுகளும், திரித்தல்களும் தொடர்-1

நமது பெரியோர்களின்  நூல்களில் சிறிய தவறுகளை கூட பெரும் தவறாக சித்தரிக்கும் பரேல்விகள்.
அவர்களின் நூல்களில் காணும் பெரும் தவறுகள் கண்ணிற்கு தெரிவதில்லை.நமது தவறுகள் அவர்களுக்கு மலையை போன்றும். அவர்களின் தவறுகள் கடுகை போன்றும் தெரிகிறது.

மார்க்க அறிஞரின் நூலிலும் பேச்சிலும் தவறுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும்.எனினும் ஒரே நூலில் பல்வேறு திரித்தல் திரிபுகள் செய்வது பெரிய தவறாகும்.நூலில் வாசக அமைப்பை மாற்றுவதும்  வார்த்தையை மாற்றுவதும் எதார்த்தமான ஒன்றாகும். தேவ்பந்த் பெரியோர்களின் நூல்களில் மாற்றப்படும் வாசகங்களில் இணைவைப்பு,இறைநிராகரிப்பு, அவமரியாதை இதனால் தான் திரித்தல் செய்யப்படுகிறது என்பதாக சித்தரிக்கின்றனர்.இவ்வாறு இல்லையெனில் வாசகத்தை ஏன் மாற்றும் தேவை ஏற்பட்டது? என வினா தொடுக்கின்றனர்.

வாசகங்களை மாற்றுவதில் பரேல்விகளின் நிலைப்பாடு:

தேவ்பந்த் வஹ்ஹாபிகள் தங்களின் பெரியோர்களின் நூல்களில் உள்ள அவமரியாதையான வாக்கியங்களை திரிக்கின்றனர்.நீக்கிவிடுகின்றனர்.
இவர்கள் தங்களின் பெரியோர்களின் நூல்களிலிருந்து வாக்கியங்களை மாற்றுவதன் மூலம் உறுதியாக அவர்களிடத்திலும் அந்த வாக்கியங்கள் அவமரியாதையும் இறைநிராகரிப்புமாகும் என்பதைதான் இவர்களின் செயல்கள் நிரூபிக்கிறது.அந்த வாக்கியங்கள் இறைநிராகரிப்பு அவமரியாதை இல்லையெனில் பிறகு அந்த வாக்கியங்களை நீக்கும் திரிபு செய்யும் தேவை ஏன் ஏற்பட்டது?
(اکابر دیوبند کا تکفیر کا افسانہ)




லாஹுரில் ஸியானதுல் முஸ்லிமீன் மற்றும் இர்ஷாதுல் முஸ்லிமின் பெயரில் சங்கங்கள் உள்ளது.அந்த நிறுவனத்தினர் இந்த மோசடி செய்கின்றனர்.அவர்களது பெரியோர்களின் குஃப்ரான வாசகங்களில் மாற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.வருங்கால சந்ததியினர் பழைய நூல்களில் உள்ள குஃப்ரான வாசகங்கள் அறியக்கூடாது என்பதினாலாகும்.புதிய பதிப்புகள் இதனை தான் உறுதிப்படுத்துகிறது.எதார்தத்தை பொய்யாக்குவது,குஃப்ரை ஈமானாக காட்டுவது மற்றொரு பாவமாகும்.இவர்களின் செயல்களின் மூலம் இதனைதான் அறிய முடிகிறது.இன்றைய தேவ்பந்த் உலமாக்களிடத்திலும் இந்த  குப்ரான வாசகங்கள் உறுதியாக குஃப்ராகும்.அவ்வாறு இல்லையெனில் அவைகளை மாற்றும் தேவை ஏன் ஏற்பட்டது?
(سفید و سیاہ )




ஆக  வாசகங்களில் இறைநிராகரிப்பு, இணைவைப்பு,அவமரியாதை போன்ற காரணங்களினால்  திரிபுகள் செய்யப்படுகிறது.நீக்கப்படுகிறது என்பதாக பரேல்விகளின் வாதிடுகின்றனர். ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில் பரேல்விகளின் தலைவர் ரிஜாகான் பரேல்விய மல்பூஜாதில் மட்டும் எத்தனை திரித்தல் திரிபுகள் அரங்கேறியுள்ளது என்பதை இனி காண்போம்!

பரேல்விகளின் தஃவதே இஸ்லாமியினரால் வெளியிடப்பட்ட ரிஜாகான் பரேல்வியின் மல்பூஜாத்தில் கடுமையான திரித்தல்களும் திரிபுகளும்:

பரேல்விகளின் தலைவர் நிறுவனர் ரிஜாகான் பரேல்வியின் மல்பூஜாத் பிரபல்யமாக அறியப்படும் ஒன்றாகும். அவர்களின் மகனார் பரேல்விய முஃப்தி அஃஜம் ஹிந்த் முஸ்தஃபா ரிஜாகான் அவர்கள் ஒன்று சேர்த்தார்.கோர்வை செய்தார்.

மல்பூஜாத் மற்றும் அதனை தொகுத்தவர்கள் குறித்து பரேல்விகளின் நிலைப்பாடு:

மல்ஃபூஜாதே அஃலா ஹஜ்ரத்தின் அறிவிப்பாளரான தலைவர் முப்தி அஃஜம் ஹிந்த் அவர்கள் நம்பகமானவர்,உலகப்பற்றற்றவர், இறையச்சம், மார்க்கப்பற்று ,இல்மின் கம்பீரம் விசாலாமான வாசிப்பு வலுவான நினைவாற்றலின் காரணமான ஏற்கத்தக்கது என்பதும் அவர்களின் மீது பெருமிதம் கொள்ளச்செய்கிறது.இதனால் தலைவர் முஃப்தி அஃஜம் ஹஜ்ரத் ஹிந்த்  அவர்கள் கோர்வை செய்த மல்பூஜில் எந்த வித சந்தேகமும் தடுமாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.
(மல்பூஜாதே அஃலா ஹள்ரத் பதிப்பகம் மக்தபதுல் மதீனா கராச்சி பக்கம்:46)




இதுதான் ரிஜாகான் பரேல்வியின் மல்பூஜாத்தை குறித்து சுருக்கமான அறிமுகம்.

இந்த மல்பூஜாத்தில் அஹ்மத் பரேல்வியின் புனையப்பட்ட, இறைநிராகரிப்பு,இணைவைப்பு, அவமரியாதை கொள்கைகள் தெளிவாக வெளிப்படுகிறது.இதனால் பரேல்விகள் திரிக்க ஆரம்பித்தனர்.அஃலா ஹஜ்ரதின் பொய்யான கொள்கைகள் நிலைப்பாடுகள் மறைக்கப்பட்டன. பரேல்விகளின் பிரபல்யமான நிறுவனம் தஃவதே இஸ்லாமியினரால் 'மஜ்லிஸு மதீனதுல் இல்மிய்யா'  ன் பேரில் மல்பூஜாதே அஃலா ஹள்ரத் ஆதாரங்களுடன் எளிமையாக வெளியிடப்பட்டது.

மல்பூஜாத் நூலின் பல பக்கங்களில் திரிபுகள் திரித்தல் நீக்குதல் அரங்கேறியுள்ளது.

(1) அஹ்மத் ரிஜாகான் பரேல்வி ஒரு நபரின் கனவை குறித்து கூறுகிறார்: 

عرض کی یا رسول اللہ حضور کہاں تشریف لئے جاتے ہیں فرمایا برکات احمد جنازہ کے نماز پڑھنے الحمد للہ یہ جنازہ مبارک میں نے پڑھایا 

அன்னார் கேட்டார் யாரசுலுல்லாஹ்! எங்கு சென்று கொண்டுள்ளீர்கள்? பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பரகாத் அஹ்மதின் ஜனாஸா தொழுகைக்கு (சென்று கொண்டுள்ளேன் ) என்றார்கள். அஃலா ஹஜ்ரத் ரிஜாகான் பரேல்வி கூறுகிறார்: அல்ஹம்துலில்லாஹ்! இந்த பரக்கத்துமிக்க ஜனாஸாவிற்கு நான் தொழவைத்தேன்.
(மல்பூஜாத் பரீத் புக்ஸ்டால் லாஹுர் பக்கம் 144)








திரித்தப்பட்ட மல்பூஜாத் :

 الحمد للہ یہ جنازہ مبارک میں نے پڑھایا 

அல்ஹம்துலில்லாஹ்! இந்த பரக்கத்துமிக்க ஜனாஸாவிற்கு நான் தொழவைத்தேன் என்ற வாசகமானது தஃவதே இஸ்லாமியினரால் வெளியிடப்பட்ட பதிப்பில் நீக்கி விட்டனர்.
 (ஆதாரம் மல்ஃபூஜாதே அஃலா ஹஜ்ரத் மக்தபதுல் மதீனா கராச்சி பக்கம் 205)





முக்கிய குறிப்பு: 

ரிஜாகான் பரேல்வி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இமாமத் செய்த நிகழ்வு என்கிற தலைப்பில் இது குறித்த விரிவான கட்டுரையை நமது தளத்தின் இந்த லிங்கில் பார்வையிடவும்.

ummathemuhammedhiya.blogspot.in/2016/09/blog-post.html?m=1

ummathemuhammedhiya.blogspot.in/2017/03/blog-post.html?m=1

(2) ரிஜாகான் பரேல்வி அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வை எழுதியுள்ளார் :

ایک بار عبد الرحمان قاری کہ کافر تھا اپنے ہمراہیوں کے ساتھ حضور اقدس صلی اللہ کے اونٹوں پر آپڑا چرانے والے کو قتل کیا اور اونٹ لے گیا اسے قراءت سے قاری نہ سمجھ لیں بلکہ بنو قارہ سے تھا 

ஒரு தடவை அப்துர் ரஹ்மான் காரி என்ற காபிர் இருந்தான்.தனது தோழர்களுடன் நபி ஸல் அவர்களின் ஒட்டகங்களின் அருகே சென்றான்.மேய்ப்பாளரை கொன்று விட்டு ஒட்டகங்களை கொண்டு சென்று விட்டான். கிராஅத் என்பதால் காரி என்பதாக எண்ணிவிடாதீர் மாறாக பனூகாராவை (கோத்திரத்தை) சேர்ந்தவன் (மல்பூஜாத் பரீத் புக்ஸ்டால் லாஹுர் பக்கம் 164)





திரித்தப்பட்ட மல்பூஜாத்:

'அப்துர் ரஹ்மான் காரி' என்பதை அப்துர் ரஹ்மான் புஜாரி என்பதாக தஃவதே இஸ்லாமியினரால் வெளியிடப்பட்ட மல்பூஜாதில் மாற்றம் செய்தனர்.

மேலும்
 قراءت سے قاری نہ سمجھ لیں

 கிராஅத் என்பதினால் காரி என்பதாக எண்ணிவிட வேண்டாம் என்ற வாசகத்தையும் நீக்கிவிட்டனர்.(மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் மக்தபதுல் மதீனா பக்கம் 229) 




முக்கிய குறிப்பு:

 ரிஜாகான் பரேல்வி ஒரு ஸஹாபியை குறித்து காபிர் என்பதாக எழுதியுள்ளார் என்பதாக விரிவான கட்டுரையை நமது தளத்தில் பார்வையிடவும்.

ummathemuhammedhiya.blogspot.in/2016_09_01_archive.html?m=1


ummathemuhammedhiya.blogspot.in/2017/02/blog-post_27.html?m=1

(3) ரிஜாகான் பரேல்வி ஷைகை சிந்தித்தல் (تصور شیخ) 
குறித்து விளக்கி எழுதியுள்ளார்:

 அப்துல் அஜீஜ் தப்பாங்  என்பவர் அவரின் சீடரான அஹ்மத் ஸல்ஜமாஸியின் இரு சம்பவங்களை குறித்து எழுதியுள்ளார் அதில் ஒரு நிகழ்வின் தனித்தன்மையை பாருங்கள்!

  پیر مرشد ہر آن مرید کے ساتھ ہے حتی کہ اس وقت بھی اپنے مرید کے ساتھ ہوتا ہے جب وہ اپنی پیوی سے ہمبستری کر رہاہو 

பீர் பெரியோர் முர்ஷித் வழிகாட்டி  ஒவ்வொரு நொடியும் முரீதுடன் தான் உள்ளார்.முரீதானவர் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போதும் அவருடன் ஷைகு உள்ளார்.
(நூல் மல்பூஜாத் 169 பரீத் புக்ஸ்டால் லாஹுர்)





திரித்தப்பட்ட மல்பூஜாத் தஃவதே இஸ்லாமியினரால் வெளியிடப்பட்ட மல்பூஜாதில் இந்த நிகழ்வையே மறைத்துவிட்டனர்.
 (நூல் மல்பூஜாதே அஃலா ஹஜ்ரத் 234)




0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live