15 Mar 2017

பரேலவிய கொள்கையும் (நூரா & பஸரா), இஸ்லாமிய கொள்கையும் பாகம் :2

தமிழகத்தில் இருவகையான குழப்பவாதிகள்.
ஒரு வகையினர் மத்ஹபை ஏற்காதவர்கள். மற்றொரு வகையினர் மத்ஹபை ஏற்ற பரலேவிகள்.

இதில் முதல் வகையினரை விட மிக மோசமானவர்கள் வழிகேடர்கள் மத்ஹப்போர்வையில்
ஒளிந்திருக்கும் இரண்டாவது வகையினர்தான்.
முதல் வகையினர் ஹதீஸ்களில் பலகீனம் என்றாலே அனைத்தையும் புறந்தள்ளி
விடுவார்கள்.

இரண்டாவது வகையினரான பரேல்விகள் அடிப்படை இல்லாத, அறிவிப்பாளர் தொடர் அற்ற,
புனையப்பட்ட, இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்களை,கூட ஆதாரம் எடுப்பவர்கள்.
நாம் இப்பொழுது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நபி (ஸல்) அவர்கள் நூரா என்பதிலும்
அடிப்படையற்ற, அறிவிப்பாளர் தொடர் அற்ற, ஹதீஸ்களைதான் முன்வைக்கின்றனர்.இனி
இது குறித்து விரிவான ஆய்வை பார்ப்போம்!

(1)நபி ஸல் அவர்கள் நம்மை போன்ற மனிதர் என்பதின் விளக்கம்:

நபி (ஸல்) அவர்கள் நம்மை போன்ற மனிதர் என்பதாக நாம் கூறுவதை பரலேவிகள்
திரித்து நபி (ஸல்) அவர்களை மற்ற மனிதர்களைப் போன்று சாதாரணமாக கருதுகிறார்கள்
என்பதாக குற்றம்சுமத்துகிறார்கள்.

நம்மின் கொள்கையானது நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் சிறந்தவர்கள் படைப்புகளில்
மேலானவர்கள் நமக்கும் அண்ணலாருக்கும்  சிறப்பு என்ற வகையில் வித்தியாசமானது
வானம் பூமிக்கு மத்தியில் உள்ள வித்தியாசத்தை விட பன்மடங்காகும்.நபி (ஸல்)
அவர்களின் சிறப்பை மனிதர்களில் எவரும் எட்டமுடியாது.அருகில் கூட செல்லமுடியாது.
அண்ணலார் நம்மை போன்ற
மனிதர் என்பதின் கருத்தானது நம்மைப் போன்றுதான் இருகைகள் இருகால்கள் இருகண்கள்
அண்ணலாருக்கும் உள்ளது.எனினும் அல்லாஹ்வின் அனுமதியிரின் பேரில் அவைகளின்
மூலம் முஃஜிஸா எனும் அற்புதங்களை நிகழ்த்தி காட்டியுள்ளார்கள்.இதனை வைத்து நபி
(ஸல்) அவர்கள் நூர் என்பதாக கூறமுடியாது.ஏனெனில் ஸஹாபாக்களும் நல்லோர்களும்
கராமத் எனும் அற்புதங்களை அல்லாஹ்வின் அனுமதியின் பேரில்
நிகழ்த்திகாட்டியுள்ளார்கள்.எனவே அற்புதங்களை வெளிப்படுத்தி காட்டுவதினால் நபி
(ஸல்)
அவர்கள் நூராக ஆகமுடியாது.

முதல் ஹதீஸ்: 

நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஒளியிலிருந்து படைத்தான் என்பதாக
பரலேவிகள் காட்டும் ஆதாரங்களும் நமது மறுப்பும்:

ﺃﻭﻝ ﻣﺎ ﺧﻠﻖ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻧﺒﻴﻚ ﻳﺎ ﺟﺎﺑﺮ - ﺍﻟﺤﺪﻳﺚ‏) ﺭﻭﺍﻩ ﻋﺒﺪ ﺍﻟﺮﺯﺍﻕ ﺑﺴﻨﺪﻩ ﻋﻦ ﺟﺎﺑﺮ
ﺑﻦ ﻋﺒﺪ
ﺍﻟﻠﻪ ﺑﻠﻔﻆ ﻗﺎﻝ ﻗﻠﺖ : ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ، ﺑﺄﺑﻲ ﺃﻧﺖ ﻭﺃﻣﻲ ، ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﻦ ﺃﻭﻝ ﺷﺊ ﺧﻠﻘﻪ
ﺍﻟﻠﻪ ﻗﺒﻞ
ﺍﻷﺷﻴﺎﺀ . ﻗﺎﻝ : ﻳﺎ ﺟﺎﺑﺮ ، ﺇﻥ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﺧﻠﻖ ﻗﺒﻞ ﺍﻷﺷﻴﺎﺀ ﻧﻮﺭ ﻧﺒﻴﻚ ﻣﻦ ﻧﻮﺭﻩ ،
ﻓﺠﻌﻞ ﺫﻟﻚ
ﺍﻟﻨﻮﺭ ﻳﺪﻭﺭ ﺑﺎﻟﻘﺪﺭﺓ ﺣﻴﺚ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ ، ﻭﻟﻢ ﻳﻜﻦ ﻓﻲ ﺫﻟﻚ 
ﺍﻟﻮﻗﺖ ﻟﻮﺡ ﻭﻻ ﻗﻠﻢ ﻭﻻ ﺟﻨﺔ ﻭﻻ
ﻧﺎﺭ
ﻭﻻ ﻣﻠﻚ ﻭﻻ ﺳﻤﺎﺀ ﻭﻻ ﺃﺭﺽ ﻭﻻ ﺷﻤﺲ ﻭﻻ ﻗﻤﺮ ﻭﻻ ﺟﻨﻲ ﻭﻻ ﺇﻧﺴﻲ ، ﻓﻠﻤﺎ ﺃﺭﺍﺩ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﻳﺨﻠﻖ
ﺍﻟﺨﻠﻖ ﻗﺴﻢ ﺫﻟﻚ ﺍﻟﻨﻮﺭ ﺃﺭﺑﻌﺔ ﺃﺟﺰﺍﺀ ، ﻓﺨﻠﻖ ﻣﻦ ﺍﻟﺠﺰﺀ ﺍﻷﻭﻝ ﺍﻟﻘﻠﻢ ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻧﻲ ﺍﻟﻠﻮﺡ
ﻭﻣﻦ
ﺍﻟﺜﺎﻟﺚ ﺍﻟﻌﺮﺵ ، ﺛﻢ ﻗﺴﻢ ﺍﻟﺠﺰﺀ ﺍﻟﺮﺍﺑﻊ ﺃﺭﺑﻌﺔ ﺃﺟﺰﺍﺀ ﻓﺨﻠﻖ ﻣﻦ ﺍﻟﺠﺰﺀ ﺍﻷﻭﻝ ﺣﻤﻠﺔ ﺍﻟﻌﺮﺵ
ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻧﻲ ﺍﻟﻜﺮﺳﻲ ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻟﺚ ﺑﺎﻗﻲ ﺍﻟﻤﻼﺋﻜﺔ ، ﺛﻢ ﻗﺴﻢ ﺍﻟﺠﺰﺀ ﺍﻟﺮﺍﺑﻊ ﺃﺭﺑﻌﺔ ﺃﺟﺰﺍﺀ
ﻓﺨﻠﻖ
ﻣﻦ ﺍﻷﻭﻝ ﺍﻟﺴﻤﺎﻭﺍﺕ ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻧﻲ ﺍﻷﺭﺿﻴﻦ ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻟﺚ ﺍﻟﺠﻨﺔ ﻭﺍﻟﻨﺎﺭ ، ﺛﻢ ﻗﺴﻢ ﺍﻟﺮﺍﺑﻊ
ﺃﺭﺑﻌﺔ
ﺃﺟﺰﺍﺀ ﻓﺨﻠﻖ ﻣﻦ ﺍﻷﻭﻝ ﻧﻮﺭ ﺃﺑﺼﺎﺭ ﺍﻟﻤﺆﻣﻨﻴﻦ ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻧﻲ ﻧﻮﺭ ﻗﻠﻮﺑﻬﻢ ﻭﻫﻰ ﺍﻟﻤﻌﺮﻓﺔ
ﺑﺎﻟﻠﻪ
ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻟﺚ ﻧﻮﺭ ﺇﻧﺴﻬﻢ ﻭﻫﻮ ﺍﻟﺘﻮﺣﻴﺪ ﻻ ﺇﻟﻪ ﺇﻻ ﺍﻟﻠﻪ ﻣﺤﻤﺪ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ - ﺍﻟﺤﺪﻳﺚ - ﻛﺸﻒ
ﺍﻟﺨﻔﺎﺀ - ‏(1 265 / )

அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் என்
தந்தையும் தங்களுக்கு
அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ் எல்லாப்
பொருட்களையும் படைப்பதற்கு முன்னர்
முதலில் படைத்தது எது என்று எனக்கு
அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி
(ஸல்) அவர்கள்,ஜாபிரே! அல்லாஹ் அனைத்து
பொருட்களையும் படைப்பதற்கு முன்னர்
உம்முடைய நபியுன் ஒளியை அவனுடைய
ஒளியிலிருந்து படைத்தான். அந்த ஒளியை
அல்லாஹ் நாடியவாறு வல்லமை கொண்டு
சுற்றக் கூடியதாக ஆக்கினான். அந்த நேரத்தில்
லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) இருக்கவில்லை,
பேனா இருக்கவில்லை, சொர்க்கம், நரகம்,
வானவர்கள்,வானம், பூமி, சூரியன், சந்திரன்,
ஜின், மனிதன் (என்று யாரும்) இருக்கவில்லை.
அல்லாஹ் படைப்பினங்களைப் படைக்க எண்ணிய
போது அந்த ஒளியை நான்கு பகுதியாகப்
பிரித்தான். முதல் பகுதியிலிருந்து
பேனாவைப் படைத்தான். இரண்டாம்
பகுதியிலிருந்து லவ்ஹ் (ஹுல் மஹ்ஃபூல்) ஐப்
படைத்தான். மூன்றாம் பகுதியிலிருந்து
அர்ஷைப் படைத்தான். பின்னர் நான்காம்
பகுதியை (மீண்டும்) நான்கு பகுதிகளாகப்
பிரித்தான். அதன் முதல் பகுதியில் அர்ஷைச்
சுமப்பவர்களைப் படைத்தான். இரண்டாம்
பகுதியிலிருந்து குர்ஷியைப் படைத்தான்.
மூன்றாம் பகுதியிலிருந்து ஏனைய
வானவர்களைப் படைத்தான்.
பின்னர் நான்காம் பகுதியை நான்கு
பகுதிகளாகப் பிரித்தான்.
அதன் முதல் பகுதியிலிருந்து வானங்களைப்
படைத்தான். இரண்டாம் பகுதியிலிருந்து
பூமிகளைப் படைத்தான். மூன்றாம்
பகுதியிலிருந்து சொர்க்கம், நரகத்தைப்
படைத்தான்.
பின்னர் நான்காம் பகுதியை நான்கு
பகுதிகளாகப் பிரித்தான். அதன் முதல்
பகுதியில் முஃமின்களின் பார்வையின்
ஒளியைப் படைத்தான். இரண்டாம்
பகுதியிலிருந்து அவர்களின் உள்ளங்களின்
ஒளியைப் படைத்தான். அதுதான் அல்லாஹ்வை
அறிதலாகும்.

மூன்றாம் பகுதியிலிருந்து
மனிதனின் ஒளியைப் படைத்தான். இதுதான்
தவ்ஹீத் என்ற லாயிலாஹ இல்லல்லாஹ்,
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்பதாகும்.
(நான்காம் பகுதியைக் கொண்டு ஏனைய
படைப்புகளைப் படைத்தான்)
(நூல் : கஷ்புல்
கஃபா, பாகம்:1, பக்கம் :265)



இந்த ஹதீஸை ஜர்கானி (ரஹ்) அவர்கள் மவாஹிபு லதுன்யா என்ற கிரந்தத்தில்
முஸன்னஃப் அப்துர்ரஜ்ஜாக் என்பதாக எடுத்து எழுதியுள்ளார்கள்.

இந்த ஹதீஸை குறித்து தேவ்பந்தின் தற்கால பெரும் மார்க்க அறிஞர் மெளலானா மெளலவி
ஹள்ரத் முஃப்தி ஸயீத் அஹ்மத் பாலன்பூரி (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள்:

முஸன்னஃ அப்துர்ரஜ்ஜாக் என்ற நூலானது 11பாகங்களில்
உள்ளது.நான் 11 மாணவர்களிடத்தில் தனித்தனியாக ஒவ்வொரு பாகத்தையும் கொடுத்து
ஒவ்வொரு வார்த்தையாக படித்துப் பாருங்கள்! தேடிப்பாருங்கள்! என்று
கூறினேன்.எனினும் மாணவர்களில் எவருக்கும் இந்த ஹதீஸ்
கிடைக்கவில்லை.

(ஆதாரம்:இல்மி குதபாத் பக்கம் 90 தலைப்பு ஹதீஸ் அவ்ர் ஸுன்னத்
மே ஃபர்க்)



இமாம் ஸுயூத்தி ரஹ் அவர்களிடத்தில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் குறித்து
கேட்கப்பட்ட பொழுது, நம்பிக்கைகுரிய அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கப்படவில்லை
என்று பதிலளித்தார்கள் .
(அல்ஹாவி)





எனவே இந்த ஹதீஸானது எந்த ஒரு நூலிலும் அறிவிப்பாளர் தொடருடன் இல்லை என்பதே
பொய்யானது.புனைந்துரைக்கப்பட்டது என்பதற்கு போதுமான சான்றாகும்.

அண்ணலார் ஒளியிலிருந்து படைக்கப்பட்டார்கள் என்பதை அல்லாமா அப்துல்ஹைலக்னவி
ரஹ் ஆஸாருல் மர்ஃபூஆ ஃபி அஹ்பாரில் மவ்ளூஆவில்  பொய்யானது என்கிறார்கள்.

இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் ஷரீஃபின் முன்னுரையில்
குறிப்பிட்டுள்ளார்கள்:

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (ஆரம்பக் காலங்களில் ஹதீஸ்கள் அறிவிக்கப்படும்போது அவற்றின்)
அறிவிப்பாளர் தொடர்கள் குறித்துக் கேட்டதில்லை. ஆனால், (பிற்காலத்தில்)
குழப்பங்கள் தோன்றியபோது உங்களுக்கு இந்த ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின்
பெயர்களையும் எங்களுக்கு அறிவியுங்கள்" என்று கூறலாயினர். ஆகவே, அந்த
அறிவிப்பாளர்கள் நபிவழிக்காரர்களா என்று கவனித்து, அவ்வாறிருந்தால் அவர்கள்
அறிவிக்கும் ஹதீஸ்கள் மட்டும் ஏற்கப்படும். அவர்கள் (நபிவழியில் இல்லாதவற்றைக்
கூறும்) புதுமைவாதிகளாய் இருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படாது.

இதை ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்னு ஸீரின் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 110 ல் வபாத் இவரின் கூற்றின்படி முதல் நூற்றாண்டில் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் கேட்கப்படவில்லை.அதன் பிறகு ஹதீஸின்
அறிவிப்பாளர் தொடர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.எனவே நபி (ஸல்) அவர்களை
அல்லாஹ் ஒளியிலிருந்து படைத்தான் என வரும் ஹதீஸானது முதல் நூற்றாண்டில் உள்ள
எந்த ஹதீஸ் நூலிலிருந்தாவது பரலேவிகள் ஆதாரம் காட்டிவிட்டால் அதனை
அறிவிப்பாளர் தொடர் இன்றி ஏற்கதயார்? இல்லையெனில் ஏற்கமாட்டோம்.

ஏனெனில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அறிவிப்பாளர் தொடரும் மார்க்கத்தின் ஓர் அங்கமே. அறிவிப்பாளர் தொடர் (இஸ்னாத்)
மட்டும் இருந்திருக்காவிட்டால் (மார்க்கத்தில்) நினைத்தவர்கள்
நினைத்ததையெல்லாம் சொல்லியிருப்பார்கள்.

அப்பாஸ் பின் அபீரிஸ்மா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், நமக்கும் மக்களுக்குமிடையே
அறிவிப்பாளர் தொடர் என்ற கால்கள் உள்ளன (அவற்றைக் கொண்டே ஹதீஸ்கள் நிற்கும்)"
என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்.
 (ஸஹீஹ் முஸ்லிம் முன்னுரை )



இதன் மூலம் அறிவிப்பாளர் தொடரின் அவசியத்தை நாம் உணரமுடியும்.எனவே அண்ணலார்
ஒளியிலிருந்து படைக்கப்பட்டார்கள் என்பதாக வரும் ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர்
அற்றது.அறவே இதனை வைத்து ஆதாரம் எடுக்க முடியாது.
நபி (ஸல்) அவர்கள் சொல்லாததை சொல்வது பெரும் பொய்யும் பாவமுமாகும்.இதனை
குறித்து அண்ணலார் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

இந்த ஹதீஸின் விளக்கத்தில்
இமாம் பத்ருத்தீன் அய்னி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்)அவர்களின் பெயரில் கூறும் பொய்யானது நல்ல எண்ணத்தில் கூறினாலும்
திட்டமிட்டு கூறினாலும் (இரண்டும்) மேற்கூறிய ஹதீஸிற்கு எதிராக
அமையக்கூடியது.

(ஷர்ஹு ஸஹீஹுல் புகாரி 2/148)

(2) நபி ஸல் அவர்கள் நூர் என்பதற்கு ஆதாரமாக முன்வைக்கும் இரண்டாவது ஹதீஸும்
நமது மறுப்பும்:

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ்
படைப்பதற்கு நான்காயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே நானும்
அலீயும் ஒளியாக இருந்தோம்.
அது அல்லாஹ்வைத் துதித்துக்
கொண்டிருந்தது. இன்னும்
அவனை பரிசுத்தப்படுத்திக்
கொண்டிருந்தது என்று நபி (ஸல்)
அவர்கள் கூறியதாக இப்னு
அஸாகிர் என்ற நூலில்
இடம்பெற்றுள்ளது.

நமது மறுப்பு:

இது நபி (ஸல்) அவர்கள் கூறாத,
அவர்களின் பெயரால், அவர்களின்
மீதே இட்டுக் கட்டப்பட்ட
செய்தியாகும். இதன்
அறிவிப்பாளர் தொடரில்
அல்ஹஸனுப்னு அலிய்யுப்னு
ஜகரிய்யா பின் முஹம்மத் என்பவர்
இடம் பெறுகிறார். இவர்
ஹதீஸ்களை இட்டுக் கட்டக்கூடியவர்.
மேலும் இவர் உறுதியான
அறிவிப்பாளார்கள் கூறியதாக
இட்டுக்கட்டி கூறக்கூடியவர்.
இவ்வாறு இப்னு அதி என்பவர்
கூறுகிறார்.
(நூல்: மீஸானுல்
இஃதிதால், பாகம் 2, பக்கம் 257.)





(3)நபி ஸல் அவர்கள் நூர் என்பதற்கு ஆதாரமாக முன்வைக்கும் மூன்றாவது  ஹதீஸும்
நமது மறுப்பும்:

ஆயிஷா (ரளி) அவர்கள் ஒரு நாள் இரவில் நபி (ஸல்) அவர்களுடன் படுக்கையில்
இருந்தார்கள்.திடீரென்று அவர்களின் கரத்திலிருந்து ஊசியானது விழுந்து
விட்டது.நபி (ஸல்) அவர்களின் ஒளி பொருந்திய முகத்தின் வெளிச்சத்தில் ஊசியை
கண்டார்.அதனை எடுத்துக்கொண்டார்கள்.

நமது மறுப்பு:

இந்த ஹதீஸானது வீணானது.இட்டுகட்டப்பட்டதாகும்.
மெளலானா அப்துல்ஹைலக்னவி (ரஹ்) அவர்கள் 'ஆஸார் மஃர்பூஆ ஃபி அஹ்பாரில் மவ்ளூஆ'
வில் இட்டுகட்டப்பட்டது என கூறியுள்ளார்கள்.அண்ணலாரின் அழகை குறித்து பயான்
செய்பவர்கள் இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்களிலிருந்து ஒரு அறிவிப்பை எடுத்து
சொல்கிறார்கள்.

ஆயிஷா (ரளி) அவர்கள் ஒரு நாள் இரவில் நபி (ஸல்) அவர்களுடன்
படுக்கையில் இருந்தார்கள்.திடீரென்று அவர்களின் கரத்திலிருந்து ஊசியானது
விழுந்து விட்டது.நபி ஸல் அவர்களின் ஒளி பொருந்திய முகத்தின் வெளிச்சத்தில்
ஊசியை கண்டார்.அதனை எடுத்துக்கொண்டார்கள்.

இந்த அறிவிப்பானது மஆரிஜ் நுபுவ்வத்
மற்றும் வரலாற்று நூல்களில் உள்ளது.அவைகளில் ஏற்கத்தக்கவை ஏற்கத்தகாதவை
அனைத்து இருக்கும்.இந்த ரிவாயத்தானது கருத்து ரீதியாக அறிவிப்பாளர் தொடர்
ரீதியாக நிரூபணமாகவில்லை.

(அல்ஆஸாருல் மர்ஃபூஆ ஃபி அஹ்பாரில் மர்ஃபூஆ)



மெளலானா ஸய்யித் ஸுலைமான் நத்வி (ரஹ்) இந்த ரிவாயத்தை குறித்து முற்றிலும்
பொய்யானது என கூறியுள்ளார்.
(ஸீரதுன் நபி பாகம்:3 பக்கம்:166)

இந்த ரிவாயத்தானது புகாரி மற்றும் முஸ்லிமில் வரும் ஸஹீஹான ஹதீஸிற்கும் எதிராக
அமைந்துள்ளது.

ஒரு நாள் இரவு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களைப் படுக்கையில்
நான் காணவில்லை. அவர்களைத்
தேடி (துளாவிப்) பார்த்தேன்.
அப்போது அவர்கள் பள்ளிவாசலில்
இரு கால்களையும் நாட்டி
வைத்து (ஸஜ்தாவில்) இருந்தனர்.
அவர்களின் உள்ளங்கால்கள் மீது
எனது கைகள் பட்டன என்று
ஆயிஷா (ரலி)
அறிவிக்கின்றார்கள்.
(நூல்: முஸ்லிம் 751)

இந்த ஹதீஸில் ஆயிஷா (ரலி)
அவர்கள் இருட்டில் நபி (ஸல்)
அவர்களைக் காணாமல் துளாவிப்
பார்க்கின்றார்கள். பின்னர்
நபியவர்களின் கால்கள் தட்டுப்பட்ட
பின்னர் தான் அவர்கள்
தொழுகையில் இருக்கின்றார்கள்
என்பதை விளங்கிக்
கொள்கின்றார்கள்.
இவர்கள் கூறுவது போன்று நபி
(ஸல்) அவர்கள் ஒளியாக,
வெளிச்சமாக இருந்திருந்தால்
ஆயிஷா (ரலி) அவர்கள் இருட்டில்
தேடியிருக்க மாட்டார்கள்.
நபியவர்களின் வெளிச்சத்தை
வைத்தே அவர்கள்
எங்கிருக்கின்றார்கள் என்பதைக்
கண்டு பிடித்திருப்பார்கள்.

நான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய
இரண்டு கால்களும் அவர்களை முன்னோக்கியிருக்கும். அவர்கள் ஸுஜுது செய்யும்போது
என்னை விரலால் குத்துவார்கள். அப்போது நான் என்னுடைய இரண்டு கால்களையும்
மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்துவிட்டால் இரண்டு கால்களையும்
(மறுபடியும்) நீட்டிக் கொள்வேன். அந்த நாள்களில் (எங்களின்) வீடுகளில்
விளக்குகள் கிடையாது' என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி,முஸ்லிம்) 
இதனின்
விரிவுரையில் இமாம் நவவி (ரஹ்) கூறுகிறார்கள்:

ஆயிஷா (ரளி) அவர்களின் வீடுகளில் விளக்கு இல்லை என்ற வாசகத்தின் மூலம்
தங்கடத்தை கூறுகிறார்கள்.வீட்டிலே விளக்கு இருந்திருந்தால் அண்ணலார் ஸஜ்தா
செய்யும் நேரத்திலே கால்களை நானே  சுருட்டியிருப்பேன்.அன்னார் என்னை அழுத்த
வேண்டிய தேவை இருந்திருக்காது.

(ஆதாரம்:ஷர்ஹு முஸ்லிம்)



அல்லாமா அய்னி (ரஹ்)
இதனின் விரிவுரையில் எழுதியுள்ளார்கள்:

விளக்கு இல்லை என்பதின் கருத்து
விளக்கு இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும் நேரத்தில் நானே
கால்களை குறுக்கியிருப்பேன்.என்னை அன்னார் அழுத்தும் தேவை ஏற்பட்டு
இருக்காது.
(ஆதாரம்:உம்ததுல் காரி)





நபி (ஸல்) அவர்களுக்கு நிழல் இல்லை என வந்துள்ள ஹதீஸை முன்வைத்து அண்ணலார்
நூர் என்பதாக வாதிடுகிறார்கள். இதனை குறித்து ஆய்வை இனி பார்ப்போம்!

படைப்புகள் அனைத்திற்கும் நிழல் உண்டு.
அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் பார்க்கவில்லையா? அதன் நிழல் வலம் மற்றும்
இடப்புறங்களில் சாய்ந்து அல்லாஹ்வுக்கு விழுந்து பணிகின்றன.
(சூரா அந்நஹ்ல்:48)

வானங்களிலும் பூமியிலும் உள்ளவை விரும்பியோ விரும்பாமலோ அவனுக்கே ஸஜ்தா
செய்கின்றன.அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் ஸஜ்தா செய்கின்றன.
(சூரா
அர்ரஃது:15)

நபி (ஸல்) அவர்களுக்கு நிழல் உண்டு என்பதானது ஹதீஸ்களின் மூலம் நிரூபணமாகிறது.

இமாம் ஹாகிம் (ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ள ஹதீஸ் ஒரு நாள் இரவு
நபி (ஸல்) அவர்கள் தொழவைத்துக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று தனது கையை முன்னால் கொண்டு சென்றார்கள்.பிறகு பின்னால் கொண்டு
சென்றார்கள்.யாரசூலுல்லாஹ்! இதற்கு முன்பாக தாங்கள் செய்யாத ஒரு காரியத்தை
செய்ததை நாங்கள் பார்த்தோம் என கேட்டோம்.அண்ணலார் கூறினார்கள் ஆம்! நிச்சயமாக
சுவனம் எனக்கு காட்டப்பட்டது.அதில் கனிகள் தாழ்ந்திருக்கும் உயர்ந்த மரங்களை
பார்த்தேன்.அதிலிருந்து சிறிதளவு எடுக்க எண்ணிணேண்.பின்னால் செல்லும் படி
எனக்கு வஹி வந்தது.எனவே நான் பின்னால் வந்துவிட்டேன்.எனக்கு நரகமும்
காட்டப்பட்டது.அது எனக்கும் உங்களுக்கு மத்தியில் இருந்தது.அதனின் நெருப்பு
ஜுவாலையில் எனது நிழலையும் உங்களின் நிழலையும் நான் பார்த்தேன். (ஹாகிம்
மற்றும் தஹபி ஸஹீஹ் என  கூறுகிறார்கள்)


இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் மூலம் ஸஹாபாக்களுக்கு நிழல் இருந்ததைப் போன்று
அண்ணலாருக்கும் நிழல் இருந்தது என்பதை விளங்க முடிகிறது.அண்ணலாருக்கு நிழல்
இல்லையெனில் நரக நெருப்பின் ஜுவாலையில் தனது நிழலை பார்த்தேன் என்பதாக
கூறுவதற்கு எந்த அர்த்தமுமில்லை என்பதாக ஆகிவிடும்.

இரண்டாவது ஆதாரம்:

(ஹதீஸின் சுருக்கமான கருத்து)

ஆயிஷா ரளி கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் பிரயாணத்தில் இருந்தார்கள்.அதில் அண்ணலாரின் மற்ற
மனைவிமார்களும் உடன் இருந்தனர்.ஸஃபிய்யா (ரளி) ஒட்டகத்திற்கு நோய்
ஏற்பட்டுவிட்டது.ஜைனப் (ரளி) அவர்களிடம் தேவைக்கு அதிகமான ஒட்டகம்
இருந்தது.நபி (ஸல்) அவர்கள் ஜைனப் (ரளி) அவர்களுக்கு கூறினார்கள்  ஸஃபிய்யா
(ரளி) அவர்களின் ஒட்டகம் நோய் ஏற்பட்டுவிட்டது. எனவே வளர்க்கும் ஒட்டகத்தை
கொடுப்பது நல்லது என்றார்கள்.அதற்கு அவர்கள் கூறினார்கள்
என்ன  யூதப் பெண்ணிற்கு நான் கொடுப்பதா? அண்ணலார் அவர்களின் பொருத்தமில்லாத
பேச்சால் கோபம் கொண்டார்கள்.அண்ணலார் அவர்கள் துல்ஹஜ் அல்லது முஹர்ரம் இரு
மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள் ஜைனப் ரளி அவர்களிடம் செல்வதை
விட்டுவிட்டார்கள். ஜைனப் (ரளி) கூறினார்கள் (அண்ணலார் என்னை ஒதுக்கியதால்)
நிராசையடைந்தேன்.மேலும் எனது கட்டிலை அங்கிருந்து எடுத்துவிட்டேன்.
மேலும் கூறினார்கள் அதே நிலையில் நான் இருந்தேன்.திடீரென்று ஒரு நாள் முற்பகல்
வேளையில் நபி (ஸல்) அவர்களின் நிழல்  முன்னோக்கியவாறு என் பக்கம் வந்து
கொண்டிருந்தது.

 (தபகாத் இப்னு ஸஃத் )


இதில் உள்ள அறிவிப்பாளர்.

 (1)அஃப்பான் இப்னு முஸ்லிம் ஸிஹாஹ் சித்தாவின்
அறிவிப்பாளர் இமாம் இஜ்லி கூறுகிறார்:

பலமானவர், உறுதியானவர்  இமாம் அபூஹாதிம்
ரஹ் கூறுகிறார்கள்: பலமானவர் உறுதிமிக்கவர்.

அல்லாமா இப்னு ஸஃத் (ரஹ்) கூறுகிறார்: 

பலமானவர் அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பவர்
ஆதாரம்பிடிக்கத்தக்கவர்.

இப்னு ஹிராஷ் (ரஹ்) கூறுகிறார்: 

முஸ்லிம் நல்லோர்களில் வலுவானவர், மற்றும்
ஹதீஸ் கலை வல்லுனர்.

இப்னு கானிஃ கூறுகிறார்கள்: 

பலமானவர்,நம்பிக்கையாளர்
இமாம் இப்னு ஹிப்பான் கூறுகிறார்கள்:பலமானவர்களில் உள்ளவர் .
(தஹ்தீபுத்தஹ்தீப்)



(2)இரண்டாவது அறிவிப்பாளர் ஹம்மாத் இப்னு ஸலமா  (ரஹ்) அவர்களைக் குறித்து
இமாம் தஹபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

இமாம் ஹாபிள் இஸ்லாமிய பெரியோர்.

 (தத்கிரதுல் ஹுப்பாள்)

 (3)மூன்றாவது
அறிவிப்பாளர்
ஸாபித் பனானி (ரஹ்) இவரும் ஸிஹாஹ் ஸித்தாவின் அடிப்படையான அறிவிப்பாளர்
இமாம் நஸாயி மற்றும் இஜ்லி (ரஹ்) கூறுகிறார்கள்:

பலமானவர்
என்கிறார்கள்.

(4)நான்காவது அறிவிப்பாளர் ஷமீஷா (ரஹ்)
அவர்கள் இவரைக் குறித்து இப்னுஹஜர் (ரஹ்) அவர்கள் ஏற்கத்தக்கவர் என
கூறியுள்ளார்கள்.
 (தக்ரீப்)




 (5)ஐந்தாவது அறிவிப்பாளர் ஆயிஷா ரளி அவர்கள்
ஆக இந்த ரிவாயத்தின் அனைத்து அறிவிப்பாளர்களும் பலமானவர்கள் இந்த ரிவாயத்தானது
முஸ்னத் அஹ்மத் மற்றும் மஜ்மஉஸ்ஸவாயித்தில் வருகிறது.

 அதில் வருகிற வாசகத்தின்
சுருக்கம்:

 ரபீஉல் அவ்வல் மாதம் வந்த பொழுது அண்ணலார் என்னிடத்தில்
வந்தார்கள்.மேலும் கூறுகிறார்கள் நான் அவரின் நிழலை பார்த்த போது ஒரு ஆணிண்
நிழல் என்பதாக சொல்லிக்கொண்டேன்.அண்ணலார் என்னிடத்தில் வருவதில்லையே இவர்
யாராக இருக்க முடியும்?அந்தநேரத்தில் அண்ணலார் வந்துவிட்டார்கள்.
 (முஸ்னத்
அஹ்மத்,மஜ்மஉஸ்ஸவாயித்)





(1)அப்துர்ரஜ்ஜாக் இவரை ஏராளமான ஹதீஸ்கலை வல்லுனர்கள் பலமானர் என்பதாக
கூறியுள்ளனர்.(தத்கிரதுல் ஹுப்பாள்)

(2)இரண்டாவது ஜஃபர் இப்னு ஸுலைமான் இவரை குறித்து இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள்
கூறுகிறார்கள் பிரச்சனையில்லை என்கிறார்கள்.
இமாம் இப்னு மயீன் கூறுகிறார்கள்: 

பலமானவர் என்கிறார்கள்.


அல்லாமா இப்னு ஸஃதான் (ரஹ்) கூறுகிறார்கள்:

பலமானவர்
இமாம் அபூஅஹ்மத் கூறுகிறார்கள் ஹதீஸில்  ஹஸன்  (ஏற்கத்தக்கவர்)

 இமாம் இப்னு
மதீனி (ரஹ்) அவர் நம்மிடத்தில் பலமானவர் இமாம் பஜ்ஜார் (ரஹ்) கூறுகிறார்கள்:

ஹதீஸில் ஸ்திரமானவர்.

(தஹ்தீப் தஹ்தீப்)

(3)மூன்றாவது ஸாபித் பனானி (ரஹ்) இவரைக் குறித்து முன்னால்
சென்றுவிட்டது.நான்காவது ஷமீஸா இவரைக் குறித்து முன்னால் சென்றுவிட்டது. ஆக
இந்த அறிவிப்புகளின் மூலம் நபி ஸல் அவர்களுக்கு நிழல் உண்டு நிரூபணமாகிறது.

நபி ஸல் அவர்களுக்கு நிழல் உண்டு பரலேவிகளின் ஆதாரங்களும் நமது மறுப்பும் :

(1)முதல் ஆதாரம்: 

முஹத்திஸ் இப்னுல் ஜவ்ஜி (ரஹ்) அவர்கள் 'அல்வஃபா பிஅஹ்வாலில்
முஸ்தஃபாவில்' மற்றும் அவரிடமிருந்து முல்லா அலி 'ஜமஉல் வஸாயில்' இமாம் மனாவி
'ஷர்ஹு ஷமாயில் அலா ஹாமிஷ் ஜம்உல்வஸாயில்' எடுத்தெழுதியுள்ளார்கள்.

أخرج أحمد بن عبد اللَّه الغدافي في جزئه كما في إمتاع الأسماع - (ج 2 / ص 170) قال:أخبرنا عمرو بن أبي عمرو عن محمد بن السائب عن أبي صالح عن ابن عباس رضي اللَّه عنه: لم يكن لرسول اللَّه ظل، ولم يقم مع شمس قط إلا غلب ضوؤء الشمس، ولم يقم مع سراج قط إلا غلب ضوءه على ضوء السراج.
*وأخرجه ابن الجوزي في الوفا بتعريف فضائل المصطفى (ج 1 / ص 301)


இப்னு அப்பாஸ் (ரளி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது:

நபி (ஸல்) அவர்களுக்கு நிழல் இல்லை.அண்ணலார் சூரிய ஒளியில் நின்றால் அவர்களின்
நூரானது அதனை விஞ்சிவிடும்.சந்திர ஒளியில் நின்றால் அவர்களின் நூரானது அதனை
விஞ்சிவிடும்.

நமது மறுப்பு:

இந்த அறிவிப்பானது நாம் அறிவித்த ஸஹீஹான ஹதீஸிற்கு எதிராக
உள்ளது.அதுமட்டுமின்றி அறிவிப்பாளர் தொடர் அற்றது.இட்டுக்கட்டப்பட்டது.

சில அறிவிப்புகளில் அறிவிப்பாளர்களின் தொடர்போடப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸில் வரக்கூடிய

محمد بن السائب

 இமாம்கள் இவரை "பொய்யர்" என கூறியுள்ளார்கள்.


(2)இரண்டாவது ஆதாரம்:

இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி (ரஹ்) எழுதியுள்ளார்கள் நபி (ஸல்) அவர்களுக்கு
நிழலானது சூரிய,
சந்திர வெளிச்சத்தில் பார்க்கப்படாது.
(ஹஸாயிஸுல் குப்ரா)



நமது மறுப்பு:

இந்த அறிவிப்பானது ஏற்கத்தக்கதும் ஆதாரப்பூர்வமானதும் அல்ல.இதில்
அப்துர்ரஹ்மான் இப்னு கைஸ் ஜஃபரான் என்பவரை இமாம் அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தி
அவர்கள் பொய்யர் என்கிறார்கள்.

 இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் கூறுகிறார்கள்:

இவரின்
ஹதீஸ் பலகீனமானது விடப்பட்டு விட்டது .

இமாம் முஸ்லிம்  கூறுகிறார்கள்:

இவர்
ஹதீஸில் ஒன்றுமில்லாதவர்

அபூஜுர்ஆ கூறுகிறார்கள்:

பொய்யர்.

 அபூஅலி
கூறுகிறார்கள்:

பொய்யான ஹதீஸ்களை உருவாக்குபவர்.

இமாம் நஸாயி கூறுகிறார்கள்: 

ஹதீஸில் விடப்பட்டவர்.

இமாம் ஸாஜி கூறுகிறார்கள்:

இவர் பலகீனமானவர் .
(தாரீக் பக்தாத்)

இந்த அனைத்து விமர்சனங்களையும் ஹாபிள் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள்
தஹ்தீபுத்தஹ்தீபில் எடுத்தெழுதியுள்ளார்கள்.இதனையும் சேர்த்து கூறியுள்ளார்கள்.

முஹத்திஸ் இப்னு அதி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

இவரின் அதிகமான ஹதீஸ்களிலே
பலமானவர்கள் அவருக்கு துணையாக அறிவித்ததில்லை.

ஹாகிம் அபூஅஹ்மத் (ரஹ்)
கூறுகிறார்கள்:

 ஹதீஸில் ஒன்றுமில்லாதவர்.

அபூநயீம் இஸ்பஹானி கூறுகிறார்கள்: 

ஒன்றுமில்லாதவர்.

அடுத்து ஹள்ரத் முல்லா அலி காரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

ஹகீம் திர்மிதி அவர்கள் இந்த ரிவாயத்தை அவரது நூலான நவாதிருல் உசூலில்
அப்துர்ரஹ்மான் இப்னு கைஸின் வாயிலாக அறிவித்துள்ளார்கள்.இவர்
விமர்சிக்கப்பட்டவர்.இவர்  அப்துல்மலிக் இப்னு வலீதிடமிருந்து
அறிவித்துள்ளார்கள்.இவர் அறியப்படாதவர்.இவர் தக்வானிடமிருந்து
அறிவித்துள்ளார்கள்.

(ஷர்ஹுஷ்ஷஃபா)

இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவெனில் இமாம் ஸுயூத்தி (ரஹ்) அவர்களே அப்துர்
ரஹ்மான் இப்னு கைஸை குறித்து பொய்யர் புனைபவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

(மனாஹிலுஸ்ஸஃபா ஃபி தஹ்ரீஜு அஹாதிஸிஷ்ஷிஃபா)




ஹள்ரத் அப்துல் அஜீஜ் (ரஹ்)கூறுகிறார்கள்: 

நவாதிருல் உசூலின் அதிகமான ஹதீஸ்கள்
ஏற்கத்தக்கவை இல்லை.
(புஸ்தானுல் முஹத்திஸீன்)



இமாம் ஸுயூத்தி (ரஹ்) அவர்கள் 'ஜாமிஉல் கபீர்' என்ற அவரது நூலில் ஹதீஸ்
பலமானது பலகீனமானது என்பதற்கு அடிப்படையை கூறுகிறார்கள்:

இப்னு அதி (ரஹ்) இப்னு உகைலி (ரஹ்) கதீப் பஃதாதி (ரஹ்) இப்னு அஸாகிர் அல்லது
ஹகீம் திர்மிதி,மற்றவர்களின் பக்கம் ஹதீஸை இணைக்கப்படும்.மேலும் இவர்களைதவிர
ஒரு சாராரை கூறினால் இவர்களின் பக்கம் இணைத்து சொன்னதே பலகீனம் என்பதற்கு
போதுமானது.

(3)மூன்றாவது ஆதாரம்:

நபி (ஸல்) அவர்களின் மீது எப்பொழுதும் மேகம் நிழலிட்டது.இதனால் அண்ணலாரின்
நிழலானது பூமியில் படவில்லை.

(தவ்ளீஹுல் பயான்)

நமது மறுப்பு:

இதில் நமது நிலைப்பாடு எப்பொழுதும் மேகமானது அண்ணலாருக்கு
நிழலிடவில்லை.மாறாக சில சமங்களில் 'முஃஜிஸா' என்ற அற்புதத்தின் மூலம் மேகமானது
அண்ணலாருக்கு நிழலிட்டது.
எனினும்,எப்பொழுதும் மேகமானது நிழலிடும் என்பதானது  முற்றிலும் தவறானது.ஸஹீஹான
ஹதீஸில் வந்துள்ளது.

கடுமையான வெய்யில் காலத்தில் சில சமயம் தோழர்கள்
அண்ணலாருக்கு  நிழலிட்டார்கள். எப்பொழுதும் நபி (ஸல் ) அவர்களின் மீது
மேகமானது நிழலிட்டால் ஸஹாபாக்கள் நிழலிடும் தேவை ஏற்பட்டு
இருக்காது.

புகாரியில் வருகிறது ..

நபி ஸல் அவர்கள் மீது சூரிய ஒளி பட்ட பொழுது
அபூபக்கர் (ரளி)எழுந்து தனது போர்வையால் அண்ணலாருக்கு நிழலிட்டார்.(புகாரி)

நபி (ஸல்) அவர்கள் ஜிஃரானா என்ற இடத்தில் இருந்தார்கள்.அவர்களின் மீது வஹி
இறங்கியது.அவரின் மீது ஆடையால் நிழலிடப்பட்டது.(புகாரி)

எனினும்,சில சமயங்களில் மேகம் நிழலிடும் என்பதை நாம் ஏற்கிறோம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live