Showing posts with label ஷைகுல் இஸ்லாம். Show all posts
Showing posts with label ஷைகுல் இஸ்லாம். Show all posts

11 Sept 2016

இப்னு தைய்மியா (ரஹ்) அவர்கள் பற்றி பரேலவிய முன்னோர்கள் & ஆதரிப்பாளர்களின் கருத்து.

ஷைகுல் இஸ்லாம் இப்னு 
தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் பரலேவிய உலமாக்கள் மற்றும் பரலேவியர்கள் அங்கீகரிக்கும் உலமாக்களின் பார்வையிலே!
  
பரலேவிகள், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்களை வழிகேடன் என்பதாகவும், இறைநிராகரிப்பாளன் என்பதாகவும் வரம்பு கடந்து விமர்சிக்கின்றனர்.
ஆனால் பரலேவிகளின் ஆரம்ப கால பெரியோர்கள் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்களை ஷைக் என்றும், இமாம் என்றும், கல்விக்கடல் என்பதாகவும் அங்கீகரித்துள்ளனர்.
  
பரலேவிய அறிஞர் கூறுகிறார்: 

இமாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) மற்றும் அவரைச் சார்ந்தவர்களுடன் கருத்து வேறுபாடு இருந்த போதும் எனது தாதா அஃலா பீர் முஹ்ர் அலி ஷாஹ் (ரஹ்) அவர்கள் அன்னாருக்காக (இப்னு தைய்மிய்யா) அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! ' 'என துஆ செய்தார்கள். அன்னாரின் பெயருடன் ஷைகு என்பதை இணைத்துதான் எழுதுவார்கள்.(لطمة الغيب ص 284)

பரலேவிய அறிஞர் பீர் நஸீம் கூறுகிறார்: 

அக்காலத்தின் பெரும் மார்க்க மேதையைப் போன்றவர்தான் இப்னு தைய்மிய்யா ரஹ்
 (راہ رسم منزل با ص )

  பீர் மெஹர் அலி ஷாஹ் (ரஹ்) பரலேவி குறிப்பிடுகிறார்:

இப்னு தைய்மிய்யா (ரஹ்) மற்றும் அவர்களின் மாணவர்கள்
கல்விக்கடல், இஸ்லாமிய சேவகர் என்பதில் எந்த ஒரு விமர்சனமும் இல்லை.
مہہ( منیب باب )

  பரலேவிகளால்  போற்றப்படும் அறிஞர் உமர் பரலேவி அவர்கள், இமாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) எழுதியுள்ளார்கள்: இப்னு தைய்மிய்யா (ரஹ்) சுன்னாவின் தலைவர்

அப்துல் ஹகீம் ஷரஃப் காதிரி பரலேவி تذکرہ اکابر اہلسنت என்ற நூலில்  
உமர் பரலேவி அவர்களை நல்ல அறிஞர் என்பதாக அங்கீகரித்துள்ளார்கள் ۔

இப்னு ஆபிதீன் ஷாமி (ரஹ்) அவர்கள், இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்களை "ஷைகுல் இஸ்லாம்" என்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்கள் (رد المحتار )

இப்னு ஆபீதின் ஷாமி (ரஹ்) அவர்களைப் பற்றி பரலேவிய தலைவர் கூறுகிறார்கள்:  

அஹ்மத் ரிளாகான்
உறுதி மிக்க  ஆய்வாளர்களில் முத்திரையாக திகழ்ந்தார்கள். (فتاوی رضویہ)

  நல்ல அறிஞர் என்றும், தலைவர் என்றும் இப்னு ஆபிதீன் ஷாமி ரஹ் அவர்களை  அஹ்மத் ரிளாகான் பரலேவி குறிப்பிட்டுள்ளார் (فتاوی رضویہ)


அல்லாமா சூயூத்தி (ரஹ்) அவர்கள் பரலேவிகளால் போற்றப்படும் மிகப் பெரும் மார்க்க மேதை
இவர் (ஸுயூத்தி ரஹ்) அவர்கள், இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்களைப் பற்றி கூறுவதைப் பாருங்கள் :

ابن تيمية الشيخ الامام العلامة الحافظ الناقد الفقيه المجتهد المفسر البارع شيخ الاسلام

 இப்னு தைய்மிய்யா அவர்கள்
மூத்த அறிஞர் , இமாம் பெரும் மேதை, ஹாபிள் ஆய்வுத்திறன் உடையவர் பகீஹ், முஜ்தஹித் எனும் ஆய்வாளர் தேர்ச்சி மிக்க விரிவுரையாளர் இஸ்லாத்தின் பெரியோர்  (طبقات الحفاظ) 

இமாம் இப்னு தைய்மிய்யா ரஹ் அவர்களை புகழ்ந்த ஸுயூத்தி (ரஹ்) அவர்களைப் பற்றி ரிளாகான் பரலேவி கூறுகிறார்: 


ஹதீஸ் கலையில் கரைகண்ட ஹாபிள், முத்திரையானவர் இமாம், கண்ணியமானவர் மார்க்கத்தின் தீனின் சங்கையானவர் ஸுயூத்தி ரஹ் அவர்கள் (فتاوه رضويه) 


இமாம் இப்னு தைய்மிய்யா ரஹ் அவர்கள் மற்றும் இப்னு கையிம் ரஹ் அவர்கள் இருவரும் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் பெரியோர்களில் உள்ளவர்கள் இந்த ஜமாஅத்தின் நல்லோர்களில் உள்ளவர்கள் என முல்லா அலி காரி ரஹ் அவர்கள் புகழ்ந்துள்ளார்கள்.(جمع الوسائل فی شرح الشمائل )


ஹனீஃப் குரைஷி பரலேவி அவர்கள், முல்லா அலி காரி ரஹ் அவர்களை பிரபல்யமான முஹத்திஸ் என குறிப்பிட்டுள்ளார் 
(روائد مناظر گستاخ کون )


இமாம் ஸுன்னா இப்னு தைய்மிய்யா ரஹ் என அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி குறிப்பிட்டுள்ளார்கள்
(تعارف فقہ و تصوف ) 

கவாஜா குலாம் பரீத் அவர்கள், இப்னு தைய்மிய்யா ரஹ் அவர்களை அஹ்லே ஹதீஸினரின் இமாம் இமாம் ஹள்ரத் இமாம் இப்னு தைய்மிய்யா என புகழ்ந்துள்ளார்கள்

 (مقابیس المجالس) 

கவாஜா குலாம் ஃபரீத் பரலேவிய அறிஞர்களில் உள்ளவர் என்பதானது பரலேவிகளின் அங்கீகாரம் பெற்ற நூலான تذکرہ اکابر اہل سنت வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 ஆக இதன் மூலம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் தனித்து விளங்கும் அறிஞர் பெரும் மார்க்க மேதை அது மட்டுமின்றி முல்லா அலி காரி ஹனஃபி ரஹ் அவர்களின் கண்ணோட்டத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் நல்லோர்களில் உள்ளவர்.எனினும் இன்றைய அறியாமை நிறைந்த பரலேவிகள் உண்மை நிலையை அறியாமல் இமாம் இப்னு தைய்மிய்யா ரஹ் அவர்களை விர்சிப்பதானது உண்மைக்கு எதிரானதும்,அபாண்டமும் பொய்யுமாகும்.

முக்கிய குறிப்பு:இமாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் பெரும் மார்க்க அறிஞராக இருந்த போதிலும் சில சட்டங்களில் பெரும்பான்மை
அறிஞர்களுக்கு மாற்றமாக தீர்ப்பளித்துள்ளார்கள் என்பதையும் நினைவில் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறோம்.

ஆதாரங்கள் :














                                     





4 Sept 2016

பரேலவிகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் : 19 (தேவ்பந்த் ஆலிம்கள் வஹாபிகளா? 2)

பரேலவிகளின் வாதம் :

தப்லீக் ஜமாதின் நிறுவனர் மௌலானான இல்யாஸ் (ரஹ்) அவர்களின் குருமார்கள் வஹாபிசத்தையும் ,அதன் தலைவர்களையும் தங்களின் புத்தகத்தில் புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.ஆகவே தப்லீக் ஜமாதும் வஹாபிகள் தான் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் மௌலான இல்யாஸ் (ரஹ்) அவரின் குருவான ரஷீத் அஹமது காங்கேஹி (ரஹ்) அவர்கள் தனது فتاوى رشيدية ல் வஹ்ஹாபிஸத்தையும் அதன் தலைவரான "முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபையும்" ஆதரித்து எழுதியுல்லார்கள் .

நமது பதில்:

ரஷீத் அஹமது காங்கேஹி (ரஹ்) அவர்கள் "அப்துல் வஹ்ஹாப்" அவர்களை பற்றி கேள்விப்பட்டதை வைத்து தான் பத்வா கொடுத்தார்கள்.

அந்த பத்வாவில் سناہے என்ற வார்த்தை உள்ளது. அவரை நன்கு ஆராயாமலும் ,அவர் ஹம்பலி மத்ஹப் என்று பரவலாக பேசப்பட்டதாலும், பித்அதை வண்மையாக சாடுபவராக இருந்ததாலும் இவ்வாறாக فتاوي கொடுத்துள்ளார்கள்.

ரஷீத் அஹமது காங்கேஹி (ரஹ்) அவர்களின் மறைவிற்க்கு பிறகு முஹம்மது இப்னு வஹ்ஹாப் நஜ்தியை பற்றி ஆதாரமுள்ள தகவல்கள் தேவ்பந்த் உலமாகளுக்கு தெறிய வந்த பிறகு அவரையும் ,அவரை சார்ந்தவர்களையும் வழிகேடர்கள் என பத்வா அளித்தார்கள்.

மேலும் மௌலானா கலீல் அஹமது அம்படேவி (ரஹ்) அவர்கள் المهند الي المفند என்ற தேவ்பந்த் உலமாகளின் 'அகீதா (عقيده) கிதாபில் இதை தெளிவாக சொல்லியுள்ளார்கள். மேலும் அவர்களை 'காரிஜியாக்களை' போன்று நாங்கள் கருதுகின்றோம் என்றும் சொல்லுயுள்ளார்கள்.

பரேலவிகளின் வாதம்:

 ரஷீத் அஹமது காங்கேஹி (ரஹ்) அவர்கள் அறிவித்த فتاوي வை ஏன் இன்னமும் நீக்க வில்லை? அப்படியென்றால் இன்னும் நீங்கள் அப்துல் வஹாப் நஜ்தியை ஆதரிக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

நமது பதில் :

ஒரு கிதாபை எழுதியவர் ஒரு விசயத்தில் தவறான கருத்துடையவராக இருப்பதால் அந்த கிதாபை அகற்ற வேண்டும் என்பது பல பாதகங்களை ஏற்படுத்தும்.

அந்த வாசகங்களை நீக்க வேண்டும் என்ற விஷயம் அந்த நூலை தொகுத்தவருடைய உரிமையாகும்.

உதாரணமாக ஈசால் சவாபுடைய விசயத்தை امام شافعي (ரஹ்) அவர்கள் சேராது என்று தீர்க்கமாக கூறியுள்ளார்கள். மற்ற மூன்று இமாம்களும் சேரும் என்று கூறுகிறார்கள். شافعي மத்ஹபை சேர்ந்தவர்கள் امام شافعي (ரஹ்) அவர்களின் கருத்தின் படி அமல் செய்யாமல் மற்ற மூன்று இமாம்களின் கருத்தின் அடிப்படையில் தான் அமல் செய்கிறார்களே தவிர امام شافعي (ரஹ்) அவர்களின் கருத்தை கிதாபிலிருந்து நீங்க யாரும் முற்படவில்லை!!..





அப்துர் காதிர் ஜெய்லானி (ரஹ்) அவர்கள் غنية الطالبين ல் 72 வழிகெட்ட கூட்டத்தாரை பற்றி கூறும் போது  ஹனபி மத்ஹபின் தலைவர் "இமாம் அபூ ஹனீபா" (ரஹ்) அவர்களை சார்ந்த சிலரை வழிகெட்டகூட்டத்தில் சேர்த்துள்ளார். அதை நீக்க வில்லை!!..

حديث 
களில் مولوغ ஆன ஹதீஸ்கள் என சுட்டிக்காட்டப்பட்டும் உள்ளன அதையும் நீக்க வில்லை!!..

இதையெல்லாம் அதிலிருந்து எடுத்துவிடும் படி சொல்லப்படவில்லை. ஆனால் இந்த பத்வாவை நீக்க சொல்லது தான் பரேலவிகளின் காழ்புணச்சியை வெளிப்படுத்துகிறது.

பரேலவிகளின் வாதம்:

இன்னும் தேவ்பந்திகள் தங்கள் புத்தகங்களில் இப்னு தைமியாவை "ஷைகுல் இஸ்லாம்" என்றும் புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.

நமது பதில் :

 الحافظ ابن حجر العسقلاني
(ரஹ்)
அவர்களும் கூட ابن تيمية அவர்களை شيخ الاسلام என்றே புகழ்ந்துள்ளார்களே!!

مسألة الزيارة والطلاق
என்ற வாசகத்தை படித்து விட்டு علامة ابن حجز (ரஹ்) அவர்கள் ابن تيمية வை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பரேலவிகளே உங்களை பொருத்த மட்டில் இப்படி சொன்ன இப்னு ஹஜர் அல் அஸ்கலனி (ரஹ்) அவர்கள் வழிகேடரா??

இன்னும் ...

இமாம் அல்அலுஸீ (ரஹ்) அவர்கள் தனது روح المعاني  ல் இப்னு தய்மியாவை புகந்து எழுதியுள்ளார்கள்.








இமாம் ஸாமி (ரஹ்) அவர்கள் தனது "பதாவா ஸாமி" ல் இப்னு தய்மியாவை புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.



எங்கே பரேலவிகள் இமாம் அல்அலுஸீ (ரஹ்) ,இமாம் ஸாமி (ரஹ்), அவர்களுக்கு எதிராக கொடிப் புடிக்க தயாரா??

இதெல்லாம் பரேலவிகளின் காழ்புணர்ச்சியே தவிர வேறு இல்லை!

அல்லாஹூ அஃலம்.

இதனின் முதலாம் பகுதியை காண இங்கு கிளிக் :

தேவ்பந்த் ஆலிம்கள் வஹாபிகளா? 1
 

makkah live

Sample Text

madina live