30 Jan 2017

ஹள்ரத் காஸிம் நானூதவி (ரஹ்) ,ஹள்ரத் கங்கோஹி (ரஹ்) இருவரின் மீதும் இணைத்து சொல்லப்படும் பரேலவிகளின் குற்றச்சாட்டுகளுக்க வாயடைக்கும் பதில்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

முனாளிரே இஸ்லாம் (இஸ்லாமிய விவாதகர் ) தர்ஜுமானே மஸ்லக் (சரியான பாதையின்
மொழிப்பெயர்ப்பாளர்)
சத்திய தேவ்பந்த் அறிஞர் சங்கையும் மேன்மையும் நிறைந்த
ஹள்ரத் மெளலானா ரப் நவாஜ் ஹனபி
அன்னாரின் கண்ணியத்தை அல்லாஹ்தஆலா அதிகரிப்பானாக!

சுன்னத்தான ஸலாத்திற்கு பிறகு தாங்கள் நலமுடன் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்
என ஆதரவு வைக்கிறேன்.தங்களுக்காக துஆ செய்கிறேன்.இஸ்லாமிய எதிரிகளின்
சதிகளிலிருந்து அல்லாஹ் தங்களை அல்லாஹ் தங்களை காப்பானாக! ஆமீன்.

  எழுதுபவதின் நோக்கம் நான் இரண்டு நாட்களுக்கு முன்பாக இணையத்தில்
"தேவ்பந்தியோ கா இஸ்லாம்"
என்ற கட்டுரையை படித்தேன்.அதில் தேவ்பந்த் உலமாக்களின் தலைவர், பேரறிஞர்,
மார்க்க ஞானம் நலவுகளை  பங்கிடுபவர்,
ஹள்ரத் காஸிம் நானூதவி (ரஹ்) (அல்லாஹ் அவரின் மண்ணறையை ஒளிரச்செய்வானாக!)
ஹள்ரத் கங்கோஹி (ரஹ்) இரு பெரியோரும் மார்க்க அறிவிலும், உலகப்பற்றற்ற
வாழ்விலும், இறையச்சத்திலும் தன்னிகராக திகழ்கிறார்கள்.இருவரின் மீது பெரும்
அபாண்டமும் பழியும் சுமத்தப்படுகிறது.உலமாயே தேவ்பந்திகள் மீது அவதூறு சேற்றை
அள்ளிவீசியுள்ளனர்.தேவ்பந்த் பெரியோர்களுக்கு அவப்பெயரை உண்டாக்குவதற்காக
பழிக்கும்வகையில்  தங்களின் தைரியத்தை வெளிப்படுத்துகின்றனர். (இதனைக் கொண்டு
கருத்து பரலேவிகள்)

"பரலேவிகளின் இஸ்லாம்"
என்ற கட்டுரைக்கு மறுப்பாக பரலேவிகள் இந்த கட்டுரையை வெளியிட்டுள்ளனர் என்பதை
புரியமுடிகிறது.
"பரலேவியோ கா இஸ்லாம்"
என்ற கட்டுரையின் ஆசிரியர் யார்? எங்கு எழுதப்பட்டு இருந்தது?
என்பதை நான் அறியவில்லை.
இணையத்திலும் கிடைக்கவில்லை.
"தேவ்பந்தியோ கா இஸ்லாம்"
என்ற கட்டுரையை வார்த்தை வார்த்தையாக எழுதுகிறேன்.பிறகு இது குறித்த எனக்கு
எழும் சந்தேகங்களை குறிப்பிடுகிறேன்.இதற்கு சரியான விளக்கத்தை தாங்கள்
அளிக்குமாறு ஆதரவு வைக்கிறேன்.
தேவ்பந்தியோ கா இஸ்லாம்

தேவ்பந்திகள் தங்களது இறைநிராகரிப்புகளை மறைக்கின்றனர்.இதன் பக்கம் மக்களின்
கவனம் செல்லுவதை விட்டும் தடுப்பதற்கு
"பரலேவியோ கா இஸ்லாம்"
என்ற பெயரில் பொய்களை புனைந்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளனர்.அதில் சத்திய
உலமாக்களின் வாசகத்தை திரித்துள்ளனர்.

அதனுடன் "ஃபுயூளாத் ஃபரிதிய்யா" போன்ற
ஏற்கப்படாத நம்பகத்தன்மையற்ற ஆதாரங்களை கொடுத்துள்ளனர்.இதற்கும் நமது
அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் பிரிவைச் சேர்ந்த பரலேவி ஹனபியினருக்கும் எந்த
சம்பந்தமில்லை. நாம் தேவ்பந்த் பெரியார்களின் காமகளியாட்டங்களை அவர்களின்
நம்பகத்தகுந்த நூல்களிலிருந்து சமர்பிக்கிறோம்.இவர்கள் ஆங்கிலேயர்களின்
கைக்கூலிகள், மனோ இச்சையை நேசிப்பவர்கள், ஷைத்தான்களை வணங்கும் இவர்களின்
வெறுக்கத்கக்க உருவங்களை, அப்பாவிமக்கள் அறிந்து  தங்களின் அடிப்படையான
இறைநம்பிக்கையை பாதுகாத்து கொள்வதற்காக இந்த கட்டுரை மறுப்பாக எழுதப்படுகிறது.

தேவ்பந்திகளின் திக்ரு சபை:

ஓரினச் சேர்க்கை நோய்
ஒரு முறை கங்கோஹி ஸாஹிபின் கான்காஹ் )மெய்ஞானப் போதனைப் பள்ளியில்)
கூட்டமாயிருந்தது.அது போது ஹள்ரத் கங்கோஹி மற்றும் ஹள்ரத் நானூதவி ஸாஹிபின்
மெய்ஞானச் சீடர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அங்குதிரண்டிருந்தனர்.
மேற்படி இரு மவ்லானாக்களும் கூட அங்கேயிருந்தனர்.
  அப்போது ஹள்ரத் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி காதல் ரசம் ததும்பும் குரலில்
ஹள்ரத் மெளலானா காசிம் நானூத்தவியை நோக்கி இங்கு சிறிது எனது பக்கத்தில் வந்து
படுத்துக்கொள்ளுங்களேன்!
என்று கூற ஹள்ரத் காசிம் நானூதவி சிறிது நாணமுற்றாலும் கூட மறுபேச்சு எதுவும்
பேசாமல் உடனே தயக்கத்துடன் மவ்லானவை பார்க்க.... மவ்லான ரஷீத் அஹ்மத் கங்கோஹி
வற்புறுத்தவே உடனே சட்டென்று வந்து படுத்துக்கொண்டார். அடுத்து
ஹள்ரத்தவர்களும் மவ்லானா காசிம் நானூத்தவிக்கு பக்கத்தில் வந்து அதே கட்டிலில்
படுத்துக்கொண்டார்.இதன்பின் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி காசிம்
நானூத்தவியின் பக்கமாகத் திரும்பி படுத்து  எவ்வாறு ஒரு உண்மையான காதலன் தனது
காதலியின் உள்ளத்தை அமைதியுறச் செய்வானோ அப்படி  தமது கைகளை அவரது மார்பின்
தடவ
மவ்லானா காசிம் நானூத்வி மியான் என்ன செய்கிறீர் 'இவர்கள் என்ன சொல்வார்கள்?
என கேட்க ஹள்ரத் கங்கோஹி சொல்வார்கள்தான் சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும்!
என்று கூறினார்'.

தாடிவைத்த மாப்பிள்ளை:

  ஒரு தடவை கூறினார்கள்
ரஷீத் அஹ்மத் கங்கோஹியான
நான், 'மெளலவி முஹம்மது காசிம் ஸாஹிப் அவர்களை மணமகன் தோற்றத்தில் கனவில்
பார்த்தேன்.எனக்கு அவரின் மூலம் திருமணம் நடைபெற்றது.கணவன் மனைவிக்கு
மத்தியில் ஒருவொருக்கொருவர் பலன் பெறுவார்களோ அவ்வாறு எனக்கு அவரின் மூலமும்,
அவர் என்னின் மூலமும் பலன் பெற்றார்.

மன அமைதி பெறுதல்:

மெளலானா காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் சிறுவர்களிடம் சிரித்து
பேசுவார்கள்.ஜலாலுத்தீன் மகனார் மெளலானா முஹம்மத் யஃகூப் அவர்கள் சிறுவராக
இருந்த பொழுது  அவரிடத்தில் மிகவும் சிரித்து பேசுவார்கள்.சில சமயங்களில்
தொப்பியை கழட்டிவிடுவார்கள்.சில சமயங்களில் இடுப்பு நாடாவை
அவிழ்த்துவிடுவார்கள்.

உலமாயே தேவ்பந்த்தினருக்கு எதிராக எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையை தங்களுக்கு
வரிக்கு வரி எடுத்தெழுதியுள்ளேன். இது குறித்து சில ஐயங்கள் எழுகிறது.அதற்கு
தகுந்த தெளிவான பதிலை அளிப்பீர்கள் என நம்பிக்கை கொள்கிறேன்.(அல்லாஹ்
தங்களுக்கு கூலியை தந்தருள்வானாக!)

எனக்கு எழும் ஐயங்கள் :

(1)"பரலேவிகளின் இஸ்லாம்"
என்ற பெயரில் தேவ்பந்த் உலமாக்களிடமிருந்து கட்டுரை வெளியானதா? வெளியானது
எனில் எவர் இதனை எழுதியது?

(2)பரலேவிகளின் இஸ்லாம் என்ற பெயரில் உள்ள
கட்டுரையில் உண்மையும் சத்தியமும் உள்ளதா? அல்லது சூழ்ச்சியும் பொய்யும்
கலந்துள்ளதா?

(3)பரலேவிகளின் இஸ்லாம் என்ற கட்டுரையில் கூறப்பட்ட "ஃபுயூளாத் ஃபரீதிய்யா"
என்ற நூலானது பரலேவியர்களின் வழிமுறையைச் சேர்ந்ததா? இல்லையா?

(4)பரலேவியர்களின் வழிமுறையைச் சேர்ந்தது எனில் அவர்களிடத்தில் இந்த நூலானது
ஏற்கத்தக்கதா? இல்லையா? இதற்கு தெளிவான பதிலை ஆதாரங்களுடன் தாருங்கள்!

(5)"ஃபுயூளாத் ஃபரீதிய்யா" பரலேவியர்களின் நூலாக இருந்தால் அதனை
நம்பகத்தகுந்தது இல்லை என்பதாக பரலேவிகள் ஏன் வாதிடுகின்றனர்? "தேவ்பந்தியோ கா
இஸ்லாம்" என்ற கட்டுரை உண்மையா? சத்தியமானதா? அல்லது சூழ்ச்சி மோசடி பொய்
நிறைந்துள்ளதா?

(6)தேவ்பந்தியோ கா இஸ்லாம் என்ற கட்டுரை பரலேவியர்களில் யார்
எழுதியது? அதில் தரப்பட்ட ஆதார நூல்கள் சரியா? இல்லையா?

(7)தேவ்பந்தியோ கா
இஸ்லாம் என்ற பெயரில் உள்ள கட்டுரையில் கூறப்பட்ட நூலான அர்வாஹே ஸலாஸா இது
தேவ்பந்த் வழிமுறையைச் சேர்ந்ததா இல்லையா?  இதனை எழுதியவர் யார்?

பதில்:

نحمده و نصلى على رسوله الكريم

ஜனாப்! கண்ணியத்திற்குரிய ஆஸிம் ஸாஹிப் தாங்கள் ஆரோக்கியத்துடன் நலவுடன்
இருப்பீர்கள் என அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கிறேன்.தாங்கள் அனுப்பிய கடிதமானது
சில நாள்களுக்கு முன்பு அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் முனாளிர் இஸ்லாம் பீர்
தரீகத் உஸ்தாத் முர்ஷிதி மெளலானா ஹள்ரத் "அல்லாமா ரப் நவாஜ் ஹனஃபி ஸாஹிபி"
அவர்களிடம் வந்து சேர்ந்தது.எனினும் அன்னாருக்கு ஓய்வு கிடைக்காத அளவிற்கு
தீன் சேவைகளின்,பணிகளின் காரணமாக தங்களின் கட்டுரைக்கு பதில் அளிக்கும்
சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.இதனால் பதில் அளிக்கும் பொறுப்பை அடியேனுக்கு
அன்னார் பணித்தார்கள்.தங்களின் கடிதத்திற்கும் அதிலே கூறப்பட்டுள்ள
சந்தேகங்களுக்கும்  கேள்விகளுக்கும் பதிலை அளிக்கிறேன். ஆரம்பமாக எனது
நிறுவனத்தின் புறத்திலிருந்து தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக வேண்டி நம்மிடத்தில்
சிரமத்துடன் தொடர்பு கொண்டுள்ளீர்கள்.ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் சிலரின்
நம்பிக்கையானது நாட்கள் செல்ல செல்ல எதிரிகளின்  பேச்சால் குற்றச்சாட்டுகளை
செவியுற்று, தேவ்பந்த் பெரியோர்களின் மீது ஏற்கத்தகாத வசைபாடலை
ஆரம்பித்துவிடுகிறார்கள். இனி வரிசையாக பதில்களைப் பார்ப்போம்!

   எந்தவித சந்தேகமின்றி காஸிம் நானூத்தவி (ரஹ்) அவர்கள் மார்க்க
ஞானங்கள்,நலவுகளை பங்கிடுபவராக,இஸ்லாத்தின் ஆதாரமாக,போராளியாக
திகழ்கிறார்கள்.அக்கால மார்க்க அறிஞர்,பெரும் ஹதீஸ் கலை வல்லுனர், அல்லாமா
மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்)
இரு பெரியோர்களும் மார்க்க ஞானத்தில்,சமுதாய சேவைகளில்,பற்றற்ற வாழ்வில்,
இறையச்சத்தில்
அவர்களுக்கு நிகர் அவர்களேதான். இருவரும் அக்காலத்தில் பரீபூரணத்துவம் பெற்ற
நல்லோர்கள், இறையச்சமுள்ளவர்களின் தலைவர்கள்,மற்றும் பின்பற்றத்தக்கவர்கள்.
இது மிகைப்பான வெறும் வர்ணனை அல்ல.

இரு பெரியோர்களின் மீது உள்ள நல்லெண்ணத்தில் மெய்நிலை மறந்து கூறும்
வார்த்தைகளும் அல்ல.மாறாக இரு  பெரியோர்களின் தனிச்சிறப்பு,
பாக்கியம்,உலகப்பற்றற்ற வாழ்வு, இறையச்சம்,இவைகளைப் பற்றி பலர் சாட்சியளிக்கம்
அளிக்கின்றனர் (பரலேவிகள் உட்பட).

முஹம்மது அஹ்மத் பரகாதி ஸாஹிப் அவர்கள் பரலேவி மத்ஹபின்  ஹைதராபாதின்
தனிச்சிறப்பு பெற்ற மார்க்க ஆறிஞர்,ஆய்வாளர்,
அன்னார் அவரின் தந்தை பரகாத் அஹ்மத் ஸாஹிபிடமிருந்து கூறுகிறார்கள் :

கண்ணியத்திற்குரிய தந்தையார் (மெளலான ஹதீம் தாயிம் அலி) மெளலானா முஹம்மத்
காஸிம் அவர்களின் மாணவரைப் போன்று இருந்தார்கள்.இதன் காரணமாக ஒரு தடவை நான்
அன்னாரை சந்திப்பதற்காக தேவ்பந்த் சென்றிருந்தேன்.அந்நேரத்தில் மெளலானா
அவர்கள் "ஜத்தா" மஸ்ஜிதில் உறங்கி கொண்டிருந்தார்கள்.அந்த நிலையிலும்
அவர்களின் உள்ளமானது இறைநினைவில் சப்தமிட்டு திக்ரு செய்தது.

(மெளலானா ஹகீம் ஸய்யித் பரகாத் அஹ்மத் ஸீரத் அவர் உலூம் பரகாத் அகாடமி
லியாகாத் ஆபாத் கராச்சி)



ஸுப்ஹானல்லாஹ்!அல்லாஹ் அக்பர்! இந்தளவிற்கு பாக்கியம் பெற்ற பரிசுத்தமான
பெரியோரின் மீது ஆபாசமான குற்றச்சாட்டை அள்ளிவீசுவதானது 'நிரந்தரமான
கேடுகெட்ட குணமும்,சாதவும் நிறைந்துள்ள துர்பாக்கியமும்,
உள்ளம் இருள் படிந்து இருப்பதுதான் காரணமாகும். இதை தவிர வேறு எதுவாக இருக்க
முடியும்?

அன்னாரின் இஸ்லாத்திற்கு அத்தாட்சியாக விளங்கும் விலாயத், மார்க்க
அறிவு,இறையச்சம்,மேன்மை இவைகளுக்கு மேலதிகமான ஆதாரங்கள்
விவாத ஜெயசீலர்,
இஸ்லாமிய விவாதகர் ,
ஹள்ரத் மெளலானா நஜீபுல்லாஹ் அவர்களின் கட்டுரை, மெளலானா காஸிம் நானூத்தவி
(ரஹ்) அவர்கள் "பரலேவி அகாபிரீன் கீ நளர் மே" (பரலேவிய பெரியோர்களின்
கண்ணோட்டத்தில்) மஜல்லா நூரே ஸுன்னத் ஸிமாரா 10ல் பார்த்துக்கொள்ளுங்கள்!

மெளலானா கங்கோஹி (ரஹ்) அவர்களின் விஷயத்தில் அன்னாருக்கு எதிராக மாற்று
கருத்து கொண்டவர்களின் நிலைப்பாடு

    தற்கால அறிஞர் மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி ரஹ் அவர்களின் எழுதுகோல்
அர்ஷின் அணியில் செல்கிறது.



அல்லாமா தஹ்ர் ஹள்ரத் மெளலானா குலாம் முஹம்மத் ஸாஹிப் கூறுகிறார்கள்:

மெளலானா காஸிம் நானூவி மற்றும் ரஷீத் அஹ்மத் கங்கோஹி இருவரின் காலத்தை நான்
அடையவில்லை.எனினும் கலீல் அஹ்மத் அம்பேட்டவி மற்றும் மஹ்மூதுல் ஹஸன்
இருவரையும் நான் சந்தித்துள்ளேன்.
சொற்பொழிவை ஒரு தடவை கேட்டுள்ளேன்.இந்த பெரியோர்களைப் பற்றி என்னுடைய
நம்பிக்கை அனைவரும் உலமாயே ரப்பானி உம்மத்தே முஹம்மதிய்யாவின் நல்லோர்கள்
எனினும், நமக்கும் அவர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடுகள் உள்ளன.ஆனாலும்
என் நம்பிக்கை மேற்கூறியதுதான்.
ஏனெனில் அவர்களின் நூல்களை படித்ததன் மூலம் ஏராளமான பலன்களை
பெற்றுள்ளேன்.மக்களால் அவர்களின் நூல்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தானவி ரஹ் அவர்களின் சேவையும் செயல்பாடுகளையும் பார்க்கும் போது
அன்னார் இந்த நூற்றாண்டின் முஜத்தித் (மார்க்கத்தில் புத்துணர்ச்சி அளித்தவர்)
ஆக இருக்க கூடும்.

பிரபல்யமான பரலேவிய பெரியோர் மெளலானா முஹம்மத் முஸ்தாக் அஹ்மத் ஸாஹிப் ஹனஃபி
சிஷ்தி கூறுகிறார்கள்:

ஹள்ரத் மெளலானா முஹம்மத் காஸிம் மெளலானா ரஷீத் இரு பெரியோர்களின் கண்ணியமான
தோழமையிலிருந்து பலன் அடைந்துள்ளேன்.இருவரையும் அமல்செய்யும் பேரறிஞராக
ஷரீஅத்தை பின்பற்றுபவராக இறையச்சமிக்கவராக பார்த்துள்ளேன்.இவர்களை காபிர்
என்பது மிகப்பெரிய பாவமாகும்.

(ஆதாரம்: அல்புர்கான் ஃபி ரத்தில் புஹ்தான்
பக்கம் 57,58)

மெளலானா ரஷீத் அஹ்மத் ஸாஹிப் கங்கோஹி அவர்களும் ஹாஜி ஸாஹிப் அவர்களின் முரீத் சிஷ்யர் மற்றும் பெரிய கலீபா.அன்னார் அவர்களுக்கு மற்றும் பல  கலீபாக்களும் இருந்துள்ளார்கள்.மெளலவி முஹம்மத் காஸிம் மெளலவி முஹம்மத் யஃகூப் ஸாஹிப் மற்றும் பலரும் இருந்துள்ளார்கள். இதனைக் குறித்து அடிக்குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. ஹள்ரத் கவாஜா ஸாஹிப் ரஹ் அவர்களின் இந்த மல்பூஜின் மூலம் மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி மெளலானா முஹம்மத் காஸிம் நானூதவி மற்றும் அவர்கள் அல்லாத உலமாக்கள் தேவ்பந்த்திகள் சரியான கருத்தில்
ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்) அவர்களின் கலீபா ஞானப்பாதையில் நடப்பவர்களாக இருந்துள்ளனர் என்பதானது நிரூபணமாகிறது.எனினும்  சூபிகள் என்ற ஞானிகளில் சிலர், அவர்களை வஹ்ஹாபி என்பதாக தவறாக புரிதலினால் கூறுகிறார்கள்.

(ஆதாரம்:மகாயிஸுல் மஜாலிஸ் பக்கம்:352)



அக்கால பேரறிஞர்,அக்கால  பாண்டித்துவம் பெற்ற அறிஞர், மார்க்கல்வியில் கடல், விவாதகர், ஆய்வாளர், அழகான பேச்சாளர், அறிவிலும்,சிந்தனையிலும் வார்த்தெடுக்கப்பட்டதைப் போன்று இருந்தார்கள்.

(ஹதாயிகுல் ஹனஃபிய்யா பக்கம் 509)






ஹள்ரத் பீர் மொஹர் அலி அவர்களிடம் ஒருவர் "காஸிம் ரஹ் அவர்களைப் பற்றி கேட்ட
போது" அதற்கு அன்னார் வாய்மை,மார்க்க ஞானத்தின் பிறப்பிடமாக உள்ளார்கள்.

(ஆதாரம்:உஸ்வா அகாபிர் பக்கம் 37)

ஷைகுனா அல்லாமா மெளலானா மெளலவி ஹாஜி ஹாஃபிள் முஷ்தாக் அஹ்மத் ஸாஹிப் சிஷ்தி
எழுதியுள்ளார்கள் ஹள்ரத் எஜமானர் தவக்குல் ஷாஹ் ஸாஹிப் ரஹ் அவர்கள் பணிவுடன்
ஆதரவு வைத்தவாறு கூறினார்:

ஒரு தடவை நான் கனவில் கண்டேன்.நபி (ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.நான் மற்றும் மெளலானா முஹம்மத் காஸிம் தேவ்பந்தி இருவரும்
நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் ஓடினோம்.நபி (ஸல்) அவர்களை அடைந்தோம்.மெளலானா
காஸிம் ஸாஹிப் அவர்கள் அண்ணலாரின் பாதச்சுவடு பதிந்த இடத்தில் தனது பாதத்தை
வைத்திருந்தார்கள்.
எனினும் நான் சுய விருப்பமின்றி சென்று கொண்டிருந்தேன்.இறுதியில் மெளலானா
அவர்களை முந்திச் சென்று விட்டேன்.

(ஆதாரம் தத்கிரா மஷாயிக் நக்ஷபந்திய்யா
பக்கம் 527)






பீர் காமில் ஹள்ரத் மெளலானா மியா ஷேர் முஹம்மத் ஷர்கபூரி ரஹ் அவர்களின்
நிலைகளை அன்னாரின் நெருங்கிய சேவகரான ஜனாப் சூஃபி முஹம்மத் இப்ராஹிம் கஸுரி
அவர்கள் கூறுகிறார்கள்:

மெளலானா மெளலவி அன்வர் அலி ஷாஹ் அவர்கள் தேவ்பந்தின் தலைமை ஆசிரியராக
இருந்தார்கள்.அவருடன் படித்த அஹ்மத் அலி முஹாஜிர் லாஹிரி அவர்களின் ஊரான
ஷர்கபூரிக்கு வந்தார்கள்.மியான் ஸாஹிப்  அவர்களை அன்னார் சந்தித்தார்கள்.
உரையாடிக்
கொண்டிருந்தார்.அவர்கள் அன்னாரிடத்தில் உரையாடினார்.ஷாஹ் ஷாஹிப் அவர்கள்
அமைதியாக இருந்தார்கள்.பிறகு அவர்கள் அன்வர் ஷாஹ் ஸாஹிப் அவர்களுக்கு மிகவும்
சங்கையுடன் வழியனுப்பி வைத்தார்.அதுமட்டுமின்றி ஊரின் எல்லை வரை வாகனத்தில்
அழைத்துச் சென்றார்.ஷாஹ் ஸாஹிப் அவர்கள் ஹள்ரத் மியான் ஸாஹிபிடத்தில்
கூறினார்கள் "தாங்கள் என் முதுகில் கைவைத்து தடவுங்கள்" என்றார்.அன்னாரும்
அவ்வாறு செய்தார்கள்.வழியனுப்பி வைத்து விட்டு இருப்பிடத்திற்கு
வந்தார்கள்.அதன் பிறகு அன்னார் என்னிடத்தில் கூறினார் "ஷாஹ் ஸாஹிப் பேரறிஞராக
இருந்தும், என்னைப் போன்ற அற்பமான நபரிடத்தில், அவரின் முதுகில் கைவைத்து தடவ
சொல்லியுள்ளார்" என கூறினார்கள்.மேலும் ஹள்ரத் மியான் ஸாஹிப் கூறினார்கள்
தேவ்பந்தில் நான்கு ஜோதிகள் உள்ளன.அவர்களில் ஷாஹ் ஸாஹிப் ஒருவராவார்.

(ஆதாரம்
கஜீனயே மஃரிஃபத் பக்கம் 384)








ரிளாகான் முஃப்தி அஃலம் ஹிந்த் முஸ்தஃபா ரிளாகானின்
கலீபா மெளலவி அப்துல் வஹ்ஹாப் காதிரி (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள்: 

امکان کذب
சம்பந்தமாக அன்னாருக்கு எதிராக விரோதிகள் கூச்சலிட்டனர்.தக்ஃபீர் பத்வா
வெளியிட்டனர்.தவுக்குல் ஷாஹ் அவர்களின் சபையில் மெளலவி ஒருவர் இமாம் ரப்பானி
ரஷீத் அஹ்மத் கங்கோஹி ரஹ் அவர்களைப் பற்றி நினைவூட்டினார்.மேலும் கூறினார்
அன்னார் امکان کذب யை ஏற்பவர் என்றார் இதனைக் கேட்டு தவக்குல் ஷாஹ் அவர்கள்
தலையை தொங்க போட்டார்கள்.சிறிது நேரம் ஆழ்ந்த இறைதியானத்தில் இருந்த பிறகு
முகத்தை உயர்த்தி பஞ்சாபி மொழியில் கூறினார்கள் (அதன் மொழியாக்கம்) மக்களே!
நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? நான் மெளலானா  ரஷீத் அஹ்மத் ஸாஹிப் அவர்களின்
எழுதுகோல் அர்ஷின் அணியில் செல்வதை பார்த்துக் கொண்டுள்ளேன் .

(தத்கிரதுர்
ரஷீத் இரண்டாம் பாகம்)

தவக்குல் ஷாஹ் அவர்களைப் பற்றி பரலேவி அறிஞர் கூறுகிறார்:

இவர் தேவ்பந்த் உலமாக்களின் ஊழியரும் எச்சமும் ஆக உள்ளார்கள்.

 (ஸாயிகதுர் ரிளா
அலா அஃதாயில் முஸ்தஃபால் மஃரூஃப்)




முக்கிய குறிப்பு:

அல்ஹம்துலில்லாஹ்!
ரிளாகானின் மெளலவிகள் தவக்குல் ஷாஹ் அவர்களின் அறிவிப்பை சரியானது என
ஏற்றுக்கொண்டுள்ளனர்.எனினும் அவரை தேவ்பந்த் உலமாக்களின் ஊழியர் எச்சம்
என்பதாக கூறியுள்ளனர்.

நாம் தவக்குல் ஷாஹ் அவர்கள் யார்? என்பதை இனி பார்ப்போம்!

தவக்குல் ஷாஹ் அவர்கள் பரலேவிய மெளலவி நூர் பஹ்ஷ்ஷின் பீர்(ஆசான்)மற்றும்
முர்ஷித் (வழிகாட்டி) ஆவார்.நூர் பஹ்ஷ் தவக்குலி அவர்கள் தனது ஆசானைப் பற்றி
விரிவாக கூறுகிறார்கள்
(தத்கிரா மஷாயிஹ் நக்ஷபந்த்)

நூர் பஹ்ஸ் அவர்கள் அன்பலாவின் محمدڈن பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியராக இருந்த பொழுது 'தவக்குல் ஷாஹ்' அவரிடத்தில் பைஅத் செய்தார்கள். 
(தத்கிரா அகாபீரே சுன்னத்)


இக்பால் ஜைத் பாரூகி அவர்கள் நூர் பஹ்ஷ் தவக்குலி அவர்களின் சரிதையில்
கூறுகிறார்கள் :

انبالہ அந்த நாட்களில் பெரியோரும் ஆன்மீக ஆசானுமாகிய
தவக்குல்ஷாஹ் (ரஹ்) அவர்களின் ஆன்மீக மையாக திகழ்ந்தது.


மெளலானா குலாம் ரஸுல் காஸிமி பரலேவி வழிமுறையின் தற்கால ஆய்வாளர் இவர்,
ஹகீம் முஹம்மது மூஸா அம்ரதஸ்ரி அவர்களை தனிச்சிறப்பு பெற்ற ஹனஃபி உலமாக்களில்
குறிப்பிட்டுள்ளார்கள்.

அம்ரதஸ்ரி அவர்கள் கூறுகிறார்கள்: 

நான் மெளலவி ரஷீத் அஹ்மத் ஸாஹிப் மாணவரும்
அல்ல.ஆசிரியரும் அல்ல.முரீதும் வழிகாட்டி அல்ல ஆசானும் அல்ல அன்னாரிடத்தில்
எந்த ஒரு தொடர்புமில்லை எனினும் அவர் ஒரு மார்க்க அறிஞர் ஓர் ஆலிமை இவ்விதமாக
விமர்சிப்பது,
தக்ஃபீர் செய்வது எவ்விதத்திலும் அனுமதிக்கப்பட்டதல்ல.

(தத்கிரஹ் உலமாயே
அம்ரதஸ்ரி)


பரலேவிய ஷைகுல் இஸ்லாம் அபுல்ஹஸன் ஜைத் ஃபாரூகி ஸாஹிப் தனது தந்தையிடமிருந்து
அறிவிக்கிறார்கள்:

ஹள்ரத் கங்கோஹி (ரஹ்)
அவர்களின் வஃபாதின் போது அன்னாருக்கு ஏற்பட்ட தாக்கத்தை கூறுகிறார்கள்:

மெளலவி
ரஷீத் அஹ்மத் அவர்களின் மரணத்தினால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தில்லை.அந்த
நேரத்தின்  ஆலிம், நல்லோர்,மார்க்க பற்றுள்ளவராக உள்ளார்கள்.(இன்னாலில்லாஹி வ
இன்னா இலைஹி ராஜிஊன்)

(ஆதாரம்:மகாமத் ஹைர் ஸவானிஹ் ஹாதி காமில் ஷாஹ் அபுல்
ஹைர் பக்கம்:527)






மார்க்கப்பற்றுள்ளவர்களிடத்தில் ஆயிரணக்கனக்கான நபர்கள் மரணிப்பதை விட இவரைப்
போன்ற ஓர் ஆலிம் மரணிப்பது மிகவும் கடினமாகும்.
 (மகாமாது கைரு ஸவானிஹ் ஹாதி
காமில் ஷாஹ் அபுல் ஹைர்)

அல்லாஹ் அக்பர்! பரிசுத்தமான உள்ளம்,ஒளிப்பெற்ற
உள்ளம்,தூங்கும் போது கூட அல்லாஹ் என்ற திக்ரில் திளைத்திருந்த உள்ளம்,
அன்னாரின் எழுதுகோலானது அர்ஷின் அணியில் சென்றது. அன்னார்  இருப்பதே
நற்பாக்கியம். ஆயிரக்கணக்கான நபர்கள் மரணிப்பதை விட அன்னாரின் மரணம்
கடினமானது.இவ்விதமாக நற்சான்று அளிக்கப்பட்ட பெரியோர்களின் மீது பரிசுத்தமான
ஆன்மாக்களின் மீது இந்தளவிற்கு கசப்பான அபாண்டத்தை,குற்றச்சாட்டை அள்ளிவீசுவது
ஈமானற்ற நிலையும், துர்பாக்கியமுமாகும். தனது மண்ணறையை காரிருளாக ஆக்கம்
செயலாகும்.

அர்வாஹே ஸலாஸாவில் வந்த சம்பவத்தை குறித்து வெட்கக்கேடான தலைப்பிடுவது
பரலேவியர்களின் சிந்தனை ரீதியான கேட்டையும் அவர்களின் வீடு  சபைகள் மற்றும்
மதரஸாவில் கற்றுக்கொடுக்கப்படும் நிர்வாண போதனையை வளர்ப்பை
நிரூபிக்கிறது.இவ்வாறான தீய சிந்தனை இல்லையெனில் பாரதூரமாக கூட இல்லாத
கருத்தை அசிங்கமாக சித்தரிக்கமாட்டார்கள்
இந்த சிந்தனை போக்கிற்கு காரணம் பரலேவிய அறிஞர் இக்தாரி நயீம் அந்த சம்பவத்தை
குறித்து ஆபாசமாக சித்தரிப்பதைப் பாருங்கள் உடலுறவு சிறுநீர் மலம் கழித்தல்
போன்றவைகள் வெட்கம் நாணத்துடன் சம்பந்தப்பட்டது.
தனிமையில் மறைவில் உள்ளது.நாய்கள் கழுதைகளைப் போன்று பகிரங்கமாக வெளிப்படையாக
இருக்காது. (راہ سنت )


பரலேவிகள் இந்நிகழ்வை குறித்து ஆபாசமாக சித்தரித்து
திரைமறைவில் செய்யப்படும் என்பதாக குற்றம் சுமத்துகிறார்கள் இந்த சம்பவமானது
திரளில் நடந்துள்ளது.ஆக இதனை ஆபாசமாக சித்தரித்து கருத்து எடுப்பதுதான்
நாய்கள் கழுதைகளைப் போன்ற சிந்தனையின் வெளிப்பாடாகும்.

அந்த சம்பவத்தில்
எங்கும் ஓரினச்சேர்க்கை என்ற வார்த்தை அறவே இல்லை.தனது கையை அவரின் நெஞ்சின்
மீது வைத்தார் என்றுதான் உள்ளது.ஆக நெஞ்சின் மீது கையை வைப்பதை ஓரினச்சேர்க்கை
என்பது நீதமான செயலா? எந்த ரிளாகானிய பீர் (ஆசான்) தனது முரிதின் (சீடர்)
நெஞ்சின் மீது கைவைத்தால் அதுவும்  பரலேவிய மெய்யான சபையின் குறிப்பான அறையாக
இருந்தால் ஓரினச்சேர்க்கை என்பதாக இனிவரும் காலங்களில் கருத்து கொள்ளப்படும்.

வெட்கம்! வெட்கம்! வெட்கம்!

காரூனின் குடும்பத்தவரான ரிளாகான் அவரது மல்பூஜாதில் பின்வரும் சம்பவத்தை
கொண்டுவந்துள்ளார்.

நபி (ஸல்) அவர்களின் சபையில் பெண்மணி தனது மகளை அழைத்து வந்தாள்.காலை மாலை
வலிப்பு நோயினால் அவதிப்படுகிறாள்.நபி (ஸல்) அவர்கள் அருகில்
அமரவைத்தார்கள்.அவளது நெஞ்சில் கை வைத்தவாறு  அல்லாஹ்வின் விரோதியே வெளியேறு!
'நான் அல்லாஹ்வின் தூதர் என்றார்கள்.'
அந்த நேரத்தில்   வாந்தியெடுத்தாள்.கரிந்த வஸ்துவானது வெளியே வந்தது.அந்தப்
பெண் உணர்வு பெற்றாள்.

(ஆதாரம் மல்பூஜாத் அஃலா ஹள்ரத் பாகம் மூன்று பக்கம் 320)





ஒருவரை அருகில் அமரவைப்பது நெஞ்சில் கைவைப்பது ஓரினச்சேர்க்கை என்றால் அண்ணல்
பெருமானார் ஸல் அவர்கள்
ஒரு பெண்ணை அருகில் அமரவைத்து நெஞ்சில் கைவைத்தானது விபச்சாரம் என்பதாக
பரலேவிகள் கருதுவார்களா?  (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
அஸ்தஃபிருல்லாஹ்! அஸ்தஃபிருல்லாஹ்!

நபி (ஸல்)
அவர்களின் வெட்கம்,நாணம்,
ஒழுக்கம்,பேணிக்கை போன்ற மேன்மைமிக்க பண்புகள் நிறைந்து இருப்பதுடன் ஒரு
பெண்ணின் நெஞ்சில் கைவைத்தானது எதை குறிக்கிறது? (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

பரலேவிகள் இதனைக் குறித்தும் ஆபாசம் என்பதாக சித்தரிப்பார்களா?
இங்கு இதனையும் கவனித்தில் கொள்ளவேண்டும்.அசலில் இந்த சம்பவமானது ஹாகிம் என்ற
நூலில் வருகிறது.அதில் ஒரு பெண் தனது மகனை அழைத்து வந்தார் என்று தான்
உள்ளது.

அஹ்மத் ரிளாகானின் குறைந்த மனனத்தன்மை, நினைவாற்றலின் பலகீனத்தால் மகன்
என்பதை மகளாக எழுதிவிட்டார்.பிறகு சட்டென மகள் என்பதை பெண் என்பதாக
மாற்றிவிட்டார்.இவ்வாறு மோசமான மனனத்தன்மையின் காரணமாக கடுமையான தவறுகள்
ஏற்பட்டுள்ளது.இதனை குறித்து விரிவாக அறிய முஃப்தி நஜீபுல்லாஹ் அவர்களின்
கட்டுரை "மல்பூஜாத் அஃலா ஹள்ரத் கா ஜாயிஜா" (ملفوظات اعلی حضرت کا جائزہ) வை
பாருங்கள்!

பரலேவியரை சேர்ந்த தஃவத் இஸ்லாமியினர்  திரித்த மல்பூஜாத்தை வெளியிட்டனர்.இதனை
குறித்து விரிவாக அறிய எனது கட்டுரையான "பரலேவி உலமா யஹுதி கே நக்ஷே கதம்"
(بریلوی علماء (یہود کے نقش قدم என்பதை படியுங்கள்!

எவரேனும் நோயாளி கட்டிலில் படுத்து இருப்பார்.எழ சக்தி இருக்காது.சந்திக்க
வருபவர்கள் ஆலிங்காணம் செய்யும் எண்ணத்தில் தலையை குனிவார்கள்.நெஞ்சு
நெஞ்சோடு  சேரும்.பரலேவிகளின் சிந்தனைக்கு ஏற்ப இதனையும் ஓரினச்சேர்க்கை
என்பார்களா?

சில நாட்களுக்கு முன்பாக பரலேவியர் ஒருவர் என்னிடத்தில் இந்த குற்றச்சாட்டையே
கூறினார்.நான் அதற்கு கூறினேன் இதில் என்ன தவறு உள்ளது?
இதில் நெஞ்சின் மீது கைவைத்தார்கள் என்று மட்டும்தான் உள்ளது.இதனை விட
உண்மையிலே  பெரும் ஆபாசம் நிறைந்த சம்பவங்களை உனது ஆதரவாளர்களின்
நூல்களிலிருந்து கொடுக்கிறேன்.உனது தந்தை  அல்லது சகோதரர் தங்களை நேசத்தில்
பிரியத்தில் ஆரத்தழுவியதில்லையா?
நெஞ்சில் கைவைப்பது பெரும் குற்றம் எனில் மார்புடன் மார்பால் ஆரத்தழுவது
மிகப்பெரும் குற்றமில்லையா?

அஹ்மத் ரிளாகான் பரலேவியின் வரலாற்று சரிதையில் அவரின் அன்பர்கள்
அவரைப்பற்றி  எழுதியுள்ளார்கள் :

"ஜனாப் நவாப் கலப் அலி கான் அவர்கள் அன்னாரை தன்னிடத்தில்
அழைப்பார்கள்.அன்னாரை "பிரத்தேயகமான கட்டிலில்" அமரவைப்பார்கள்.மிகவும் காதல்
நேசத்துடன் உரையாடுவார்கள் .

(ஆதாரம் அல்மீஜான் கா இமாம் அஹ்மத் ரிளா பக்கம்
332)





இந்தக் கட்டுரையை வாசிக்கும் நடுநிலையாளர்களே!
இன்று வரை கட்டில் (نشست) வார்த்தையை கேட்டிருப்பீர்கள்.எவரையேனும்
அமரவைப்பதற்கு "பிரத்தேயகமான கட்டில்" என்று பயன்படுத்தியதை இப்பொழுதுதான்
முதல் முறையாக கேட்டிருக்க கூடும். இப்பொழுது எவரேனும் ஒருவர் இதில்
பரலேவியர்களின்  சிந்தனையை வெளிப்படுத்தியவாறு
ஜனாப் "பிரத்தேயகமான கட்டிலில்" அமவைக்கமாட்டார்கள்.

மாறாக படுக்கத்தான் வைப்பார்கள் என்று கூறினால் பரலேவியர்கள் இதற்கு என்ன
பதில் சொல்வார்கள்?

நவாப் ஸாஹிப் அவர்கள் தன்னுடன் அவரை அமரவைத்து  அல்லது படுக்க வைத்து காதல்
நேசத்துடன் உரையாடுவதற்கு "பிரத்தேயகமான கட்டில்" என்ற வார்த்தையை தவிர வேறு
வார்த்தை கிடைக்கவில்லையா? நவாப் ஸாஹிப் அவர்கள் ஒரு இளம்பருவ  வாலிபரிடத்தில்
உள்ள நேசத்திற்காக காதலுக்காக தனது பிரத்தேயகமான கட்டிலில்
அமரவைக்கிறார்.அவர்களும் நவாபின்   காதலில் அகப்பட்டுவிட்டார் என்று
இந்நிகழ்வை குறித்து விளக்கம் கூறினால் பரலேவிகள் என்ன பதில் கூறுவீர்கள்?
பிரத்தேயகமான கட்டிலுக்கும் ரிளாகானுக்கும் என்ன தொடர்பு?

ரிளாகான் பரலேவி,
நவாப் ஸாஹிப் உடன் "பிரத்தியேகமான கட்டிலில்"
காதல் நேசத்துடன்  அமர்ந்து அல்லது படுத்து என்ன பேசியிருப்பார்? இந்நிகழ்வை
குறித்து பரலேவிகள் என்ன கருதுவார்களோ
என்ன மாற்று விளக்கம் கொடுப்பார்களோ அதுதான் நம்மின் மீது சுமத்திய
குற்றச்சாட்டிற்கு பதிலாகும்.

பரலேவிகளிடத்தில் கழுதையுடன் புணர்பவர் தற்கால ஹிள்ர் அல்லாஹ் பாதுகாப்பானாக!

   ஆபாசமான காரியத்தை செய்பவரை 'தற்கால ஹிள்ர்' என்பதாக பரலேவிகள்
புகழ்ந்துரைக்கின்றனர். எல்லா நிலையிலும் அல்லாஹ், அல்லாஹ் என்ற
இறைதியானத்தில் திளைத்திருப்பதன் மூலம் தேவ்பந்த் உலமாக்களின் மெய்ஞான சபைகள்
ஒளிபெறுவதைப் பார்த்து இந்த கேடுகெட்ட பரலேவிகள்,
அவர்களது வணக்கஸ்தலத்தின் சிந்தனையை முன்வைத்து நம் பெரியோர்களின் மீது
அவதூறை  சுமத்துகின்றனர்.இதனை வெறும் மறுப்பு என்பதற்காக கூறவில்லை.மாறாக
வெட்கம்,நாணம் துறந்த நிர்வாணிய ரிளாகானி பெரியோர் பெருமிதத்துடன்
கூறுகின்றார்.

பரலேவிய ஜமாஅத்தின் ஷம்சுல் ஆரிபின் (இறைஞானிகளின் சூரியன்) நூருல்லாஹ் ஹஸன்
ஷாஹ் புஹாரி அவர்களது நூலில் எழுதியுள்ளார்: 

ஹள்ரத் கவுஸ்அலி ஷாஹ் ஸாஹிப்
பானிபத்தி கத்தஸ ஸிர்ருஹ் கூறுகிறார்கள்:

 "நமது நேசத்திற்குரிய முர்ஷித்
(வழிகாட்டி) ஹள்ரத் பீர் அஃளம் அலி ஷாஹ் ரஹ் கூறுகிறார்கள் :

مہم என்ற
நகரத்திலிருந்து திஹ்லி வந்த போது வழியில் நாம் ஆச்சரியமான விஷயத்தை
கண்டோம்.முற்பகல் வேளையில் ஒரு மரத்தின் நிழலில் வாகனத்தை
நிறுத்தினோம்.ஓய்வெடுத்து வெயில் தணிந்த பிறகு லுஹர் தொழுதுவிட்டு செல்லலாம்
என கருதினோம்.சிறிது நேரத்திற்கு ஒரு பகீர் ஸாஹிப் வந்தார்.நாம்
ரொட்டி,தண்ணீரை அளித்தோம்.அவருடன் நல்ல முறையில் நடந்து கொண்டோம்.அவர்
சாப்பிட்டு உறங்கிவிட்டார்.நாமும் உறங்கினோம்.நமது வாகனம் ஒரு மாளிகையில்
நின்று இருந்ததை கண்விழித்த பொழுது பார்த்தோம்.மாடு புல்லை மேய்ந்து
கொண்டிருந்தது.பகீர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.சமையல்காரர் சமைத்து
கொண்டிருந்தார்.நாம்   மூர்ச்சையாகும் அளவிற்கு நெருங்கினோம்.யா அல்லாஹ்!
இது எவ்வாறு நிகழ்ந்தது? இது எந்த ஊர்? இங்கு ஏன் வந்தோம்? சமையல்காரரிடத்தில்
வினவினோம் இது எந்த ஊர்? அதற்கு அவர் கூறினார் حیرت آفزا (ஹைரத் ஆஃப்ஜா) நான்
அவரிடத்தில் கேட்டேன் நல்லடியாரே! இந்த மாளிகை யாருக்குரியது அவர் கூறினார்
அந்த பகீருக்கு உரியது.எத்தனை நாட்கள் தங்கினாலும் அனைத்து செலவும் அவரின்
பொறுப்பாகும்.எட்டு நாட்கள் இருப்போம் என்பதாக கூறினோம்.உண்மையிலே அந்த ஊர்
வியப்பிற்குரியதாக இருந்தது.நல்ல மனிதர்கள்,புனிதமான தோற்றம் உன்னதமிக்க
சூழ்நிலை,ரம்மியமான இடம்,எங்கு பார்த்தாலும் பொருட்கள் பல்வேறு வகைகளாக
இருந்தது.கடைவீதி மிகவும் நேர்த்தியாக இருந்தது.இந்த காட்சிகள் படம் போன்று
இருந்தது.ஜாமிஆ மஸ்திலே ஜும்ஆ தொழுகை தொழுதார்கள்.இஸ்லாத்தின் வலிமையை
பார்த்தோம்.ஒவ்வொரு நபர்களும் இறைதியானத்திலே ஆழ்ந்திருந்தனர்.அல்லாஹ்
கூறுகிறான் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் என்பதை தவிர எந்த ஒரு பேச்சும்
இல்லை.எட்டாவது நாள் நாம் தூங்கி எழுந்த பொழுது வண்டி அதே மரத்திற்கு கீழே
நின்று இருந்தது.பகீர் தூங்கி கொண்டிருந்தார்.நாம் தொழுது விட்டு
புறப்பட்டோம்.பகீர் நம்முடன் வந்தார்.வழியில் ஒருவரிடத்தில் தேதியை
கேட்டோம்.அவர்  கிழமை தேதி மாதம் மாறாமல் கூறினார்.நாம் ஆச்சரியம்
அடைந்தோம்.இந்த எட்டு நாட்கள் எங்கு சென்றது என்கிற கேள்வி எழுந்தது? இறுதியாக தைரியம் ஏற்பட்டது. அங்கு ஓர் இடத்தில் தங்கினோம்.பகீர் கூறினார் இஷாவிற்கு
பிறகு ரொட்டியை இந்த மஸ்ஜிதிற்கு கொண்டு வாருங்கள் என்றார்.நாம் ரொட்டியை
கொண்டு சென்ற பொழுது அவர் கழுதையுடன் புணர்ந்து கொண்டிருந்தார்.நாம் முகத்தை
திருப்பிக் கொண்டோம்.பிறகு அவர் தொழுது கொண்டிருப்பதை பார்த்தோம்.தொழுது
முடித்த பிறகு சாப்பிட்டார்.பேசினார்.மேலும் அன்றைய  இரவின் நடுநிசியில்
கூறினார்  ஊரில் வண்ணான் துணிகளை துவைத்துக் கொண்டிருப்பார்.நமது போர்வையை
கொண்டு சென்று துவைத்து வாங்கி வா! என்றார்கள்.நாம் கூறினோம் நடுநிசியில் யார்
துவைப்பார்?
அதற்கு அன்னார் 'நீங்கள் செல்வதாக இருந்தால் செல்லுங்கள்! இல்லையெனில் நான்
செல்கிறேன்' என்றார்.ஊரின் வாயிலிருந்து வெளியேறிய போது பகல் இரண்டு மணியாக
இருந்தது.வண்ணானிடத்தில் சென்றோம் அங்கிருந்த வண்ணான் கூறினார் நல்லடியாரின்
போர்வையை கொடுங்கள் துவைத்து கொடுக்கிறேன் என்றார்.தூய்மையாக துவைத்தார்.
வெயிலில் காய்ந்த பிறகு ஒப்படைத்தார்.பகீரின் சமூகத்திற்கு சென்றோம்.அங்கு
நடந்தவைகள் அனைத்தும் நம்மை வியப்பில் ஆழ்த்தியது.கூறினார் ஆச்சரியப்படாதீர்!
இது கண்கட்டி வித்தை இவ்வாறான ஏராளமான விநோதங்களை காட்ட முடியும்.எனினும்
பகீர் மாறுபட்டவர் இவைகளைப் பற்றி சிந்திக்காதீர்! ஸுப்ஹ் நேரத்தில் நாம்
திஹ்லி புறப்பட்டோம்.பகீர் மறைந்துவிட்டார்.நாம் திஹ்லி அடைந்த போது மெளலானா
ஷாஹ் அப்துல் அஜீஜ் ஸாஹிப் முஹத்திஸ் திஹ்லவி அவர்களிடத்தில் கூறினோம் அதற்கு
அன்னார் கூறினார் அந்த பகீர் தற்கால ஹிள்ர் அல்லது நேரங்களின் தந்தை.

(ஆதாரம்:அல்இன்ஸான் ஃபில் குர்ஆன் பக்கம்:253,254,255)




இந்த ஷைத்தானிய நிகழ்வை படித்த பிறகு ஒவ்வொரும் இதனை ஏற்கதான்
வேண்டும்.ரிளாகான் மத்ஹபிலே தொழுகை போன்ற முக்கியமான வணக்கத்தில் தூய்மையானது
நிபந்தனையில்லை. ரிளாகானிய பீர்  கழுதையுடன் புணர்ந்த பிறகு உடனடியாக
தொழுதுள்ளார்.
பரலேவிகளே உங்களுக்கு வெட்கம் இல்லையா?

ரிளாகானி தஜ்ஜால் மெளலவி அஹ்மத் யார் குஜராத்தி அவர்கள் "தப்ஸீர் நயீமில்" ஒரு
நிகழ்வைப் பற்றி கூறுகிறார்கள்: 

ஒருவர், ஒவ்வொரு அழகானவைகளை முத்தமிடும்
பெரியோரை பார்த்தார்.அவரும் அழகானவைகளை முத்தமிடும் நிய்யத்தில் அவருடன்
சென்றார்.

(ஆதாரம்: தப்ஸீர் நயீமி 430)



ஒரு நாள் ஹள்ரத் ஸுல்தான் ஆஷிக் மஹ்பூப் இலாஹி தனது சில குறிப்பான நபர்களுடன்
கடைவீதியில் சென்று கொண்டிருந்தார்.அமீர் خسرو இருந்தார்.கடைவீதியில் ஹள்ரதின்
பார்வை ஒரு இளவயது சிறுவரின்  மீது பட்டது.அமீர் ரஹ் அவர்கள், அன்னாரின்
குணத்தையும் இயற்கை சுபாவத்தையும் அறிந்திருந்தார்.
அன்னாரின் தேடுதலானது,
ஒரு விநாடி நின்றவாறு, இளவயது சிறுவனின் அழகான முகத்தை முன்னோக்கி  அதன் மூலம்
அல்லாஹ்வின் பேரழகை கண்கொண்டு காணவேண்டும்.அமீர் ஸாஹிப் சிறுவரை
நிற்கவைப்பதற்காக கடைவீதியின் பொதுவெளியில் ஆட்டமாடினார்.அந்த சிறுவரும்
வேடிக்கையை கண்டு நின்று விட்டார்.பிறகு பெரும் திரளான கூட்டம்
ஒன்றுதிரண்டிருந்தது.

(ஆதாரம்: மல்பூஜாத் முஹ்ரிய்யா பக்கம் 48)



பரலேவிகளே! கொஞ்சமாவது வெட்கம் கொள்ளுங்கள்!
உங்களின் வழிமுறையைச் சேர்ந்தவர்,
அழகான சிறுவர்களை ரசித்து இன்பம் பெறுவதற்காக
அவரது முரீதானவர் (சிஷ்யர்) கடைவீதியில் ஆட்டம் ஆடியுள்ளார் எனும் போது,
பரலேவிகளே! எங்கள் பெரியோர்களை விமர்சிப்பதற்கு என்ன அருகதை உள்ளது? உண்மையில்
அறவே அருகதை இல்லை.
தயவு செய்து நடுநிலையாளர்களுக்கு வேண்டுகோள் என்னவெனில் குழந்தைகளை பரலேவிய
மதரஸாவில் அனுப்பாதீர்கள்!ஒரு வேளை சேர்த்திருந்தால் மதரஸாவை மாற்றிவிடுங்கள்!
மஸ்ஜிதில் கழுதையுடன் புணர்வது, அழகானவைகளை முத்தமிடுவது, இளவயது சிறுவரை
பார்த்து ரசிப்பதற்கு கடைவீதியில் ஆட்டம் போடுவது, இவைகள் அனைத்தும்
பரலேவியர்கள் கேடுகெட்ட செயலாகும்.எந்த நம்பக்கையில் இவர்களின் மதரஸாவில்
குழந்தைகளை அனுப்புகிறீர்கள் தங்களின் பாசமிகு குழந்தைகளின் வாழ்வை
வீணாக்கிவிடாதீர்கள் இதனை "நாம் பரலேவியர்களின் மீதுள்ள வெறும்
காழ்ப்புணர்ச்சியால் வெறுப்பால் கூறவில்லை."

பரலேவிய அறிஞர் அஹ்மத் யார்
குஜராத்தி இதனை மனம் திறந்து ஏற்கிறார் :

ஆரம்பமாக தீனிய மதரஸாக்கள்
ஹராமாக்கப்பட்ட வேண்டும்.பெரிய பையன்கள், தாடியில்லாத இளவயது சிறுவர்களுடன்
படிக்கிறார்கள்.அவர்களுடன் கலந்துறவாடிகிறார்கள்.இதனால் சில சமயங்களில்
கெட்டமுடிவு வெளியாகிவிடுகிறது.

(ஆதார நூல் ஜாஅல் ஹக் 211)

ரிளாகானின் சிறுவயதில் பாலியல் கலை:

ஜனாப் ஸய்யித் அய்யூப் அலி ஸாஹிப் கூறுகிறார்:
    "கண்ணியத்திற்குரிய ரிளாகான் ஹள்ரத் அவர்களின் வயது ஐந்து அல்லது ஆறாக
இருந்த பொழுது  பெரிய குர்தா (மேலாடை) அணிந்து வெளியே செல்வது வழக்கமாகும்.ஒரு
நாள் வழக்கம் போல் அதே ஆடையில் வெளியில் சென்று கொண்டிருந்தார்கள்.அவருக்கு
முன்பாக சில ஆபாசமான நங்கைகள்  கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.அன்னார் ஆடையை
கழற்றி முகத்தை மூடிக்கொண்டார்கள்.இந்த நிலையைப் பார்த்த பெண்கள் கூறினார்கள்:
"முகத்தை மூடிவிட்டு மர்மஸ்தானத்தை திறந்து விட்டீரே?"
அதற்கு அன்னார் பதில் கூறினார் பார்வை தடுமாறும் பொழுதுதான் உள்ளம்
தடுமாறும்.உள்ளம் தடுமாறினால் மர்மஸ்தானம்  தடுமாறும்.இதனைக்கேட்ட அந்தப்
பெண்கள் மூர்ச்சையாகினர்.எதனையும் பேசுவதற்கு தைரியம் இல்லை.

(ஆதாரம்:மல்பூஜாத்)

சிறுவயதில் மர்மஸ்தானத்தை வெளிப்படுவது இயல்பான ஒன்றுதான்.இதனை நாம் இங்கு
விமர்சனத்திற்கு எடுத்த பின்னணி இனி பார்ப்போம்!

மூன்றை வயதில் இந்தளவிற்கு தெளிவான சிந்தனை விழிப்புணர்வு பேணிக்கை
கற்பொழுக்கம் மேலோங்கி இருந்தது ஆச்சரியம் குறைந்த ஒன்றல்ல.மாறாக அன்னார் தந்த
பதிலில்தான் ஷரீஅத் மற்றும் இறைஞானப் பாதையின் நுணக்கம்
பொதிந்துள்ளது.சிறுவயதில்  நிறைந்த அனுபவம் இன்றைய சூழ்நிலையில்
வயோதிகரிடத்தில் கூட இருப்பது கடினம்தான்.


(ஆதாரம்: அன்வாரே ரிளா பாகம்:1 பக்கம்:254)




இந்நிகழ்வை குறித்து பெருமிதம் கொள்ளும் அளவிற்கு தகுதியுள்ளதா? பொருத்தமானதா?
என்பதை  கவனமாக பார்ப்போம்!

அஃலா ஹள்ரத் மறைப்பதாக இருந்தால் கைவைத்து கண்களை மூடியிருக்கலாம்.அல்லது
மேலாடையின் கையால் கண்களை மறைத்து இருக்கலாம்.அல்லது கண்களை
தாழ்த்தியிருக்கலாம்.அல்லது முகத்தை வேறு பக்கம் திரும்பியிருக்கலாம்.தவறான
பார்வையை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கு அறிவார்ந்த அணுகுமுறைகள் எத்தனையோ
உண்டு.எனினும்,இதற்கு மாற்றமாக நிர்வாணமாக நின்றுள்ளார்.எனவே கண்களை மூடுவது
நோக்கமல்ல. மாறாக,ஆணுறுப்பை திறந்து காட்டுவதுதான் நோக்கமாகும்.

அன்னார் பெரும்
அறிவிலி, அறியாமை நிறைந்தவர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.எத்தனையோ
அறிவார்ந்த அணுகுமுறையை சாமானியர்கள் கூட அறியும் பொழுது, அன்னார்
அதனையெல்லாம்  புறந்தள்ளி, வெட்கக் கேடான செயலை கடைப்பிடித்திருப்பது
பரலேவிகளின் இமாமிற்கு சாமானிய அறிவு, புத்திகூர்மை கூட அறவே இல்லை என்பதை
தெளிவாக அறியமுடிகிறது."அஃலா ஹள்ரத் அவர்கள் சீரிய அறிவு,விழிப்புணர்வு,
பேணிக்கை, கற்பொழுக்கம் போன்ற உன்னதமிக்க பண்புகளால் உயர்ந்து நிற்கிறார்" என
இதன் பிறகும், பரலேவிகள், இமாமின் மீதுள்ள கண்மூடித்தனமான பற்றால்
வாதிக்கின்றனர்.அடுத்த ஆச்சரியம் என்னவெனில் ரிளாகான் மர்மஸ்தானத்தை  திறந்து
காட்டிவிட்டு வெற்று உடம்புடன் நிற்கிறார்.உண்மையில் கண்ணியமான வெட்கம்
நிறைந்த மனிதர் கண்களை தாழ்த்தி விரைவாக சென்று இருப்பார்.ஆனால் ரிளாகான்
பரலேவி அதை செய்யாமல் மர்மஸ்தானத்தை திறந்து காட்டிவிட்டு ஆபாசமான
நங்கைகளுக்கு மனித சுபாவத்தை குறித்து பாடம் நடத்தியுள்ளார்.

முதலில் கண்
தடுமாறும் பிறகு உள்ளம் தடுமாறும் உள்ளம் தடுமாறினால் மர்மஸ்தானம் தடுமாறும்
ஹள்ரத் அவர்கள் மர்மஸ்தானத்தை திறந்து காட்டி கண்களை மூடியது, நங்கைகளான
தங்களை கண்டுதான் என்பதை எப்படி  அவர்கள் அறிந்தார்கள்? ஹள்ரத் கண்களின் மீது
மேலாடையால் மறைத்ததை பார்த்து ஆபாசநங்கைகள்   சிறுகுழந்தையின் செயல் என்பதாக
எண்ணி,
கண்டு கொள்ளாமல் சென்று இருக்கலாமே? ஆக, ரிளாகான் பரலேவி குறும்புத்தனம்,கேலி
செய்யும் விதத்தில் மேலாடையை உயர்த்தி உள்ளார் 'என்பதை ஆபாச நங்கைகள்
அறிந்ததால்தான் இதனைக் குறித்து ரிளாகானிடத்தில் கேட்டுள்ளனர்.சிறுவயது
குழந்தைகள் பாலியல் உணர்வை ஆன்மீக விளக்கத்தை அறியாமல் இருக்கும்.மூன்றை வயது
குழந்தைக்கு இதனைப் பற்றிய வாடை கூட இருக்காது.ஆனால்,உலகத்திலே இந்த குழந்தை
மட்டும்தான் இது போன்ற அனைத்து விஷயங்களையும் அறிந்துள்ளது.குழந்தைகளுக்கு
"ஆண்குறி தடுமாறும்" என்கிற அறிவு இருக்காது.

மெளலவி ரிளாகான் வேறு கலையில்
பாண்டித்துவம் பெற்றவரல்ல.எனினும் எதார்தத்தில்  பாலியல் கலையில் இமாமாக
இருந்துள்ளார்.மூன்றை வயதில் அக்கலையில் தனக்குரிய தனித்துவமான ஆற்றலை
வெளிப்படுத்தி ஆபாசமான பெண்களை மூர்ச்சையாக்கியுள்ளார்.இந்நிகழ்வை முன்வைத்து
பரலேவியர்களுக்கு நாம் கொடுக்கும்,ஆலோசனை.மெளலவி அஹ்மத் ரிளாகான் ஐம்பது
கலைகளில் திறமையாளர் என்பதாக பொய்யாக எழுதப்பட்டுள்ளது.எனினும்,அன்னார் ஐம்பது
கலைகளில் ஒன்றான காமம், காதற் செய்கை துறையில் எங்களது இமாம் பாண்டித்துவம்
பெற்றவர் என்கிற உண்மையை எழுதிவிடுங்கள் முழு உலகத்திலும் அவருக்கு நிகரான
நபர் இருப்பதாக கற்பனை கூட செய்யமுடியாது.
  ஆக சிறுபிராயத்திலேயே காமம் பாலியல் கலைகளை கரை கண்டவரை   இமாமாக கருதும்
பரலேவிகளே! "நீங்கள் எங்களின் கண்ணியமிக்க பெரியோர்களின் மீது ஆபாச அவதூறை
அள்ளிவீசுவதற்கு என்ன யோக்கியதை உள்ளது"?

அடுத்து பரலேவி மஸ்லகின் தனித்துவம் பெற்று விளங்கும் துல்பிகார் அலி ரிளவி
அவர்கள்,
பாகிஸ்தான் ஜம்யிய்யத்துல் உலமாவின் அபுல் ஹைர் ஜூபைர் ஹைதராபாத் மற்றும்
அவர்களின் ஆசிரியர் அஷ்ரப் ஸய்யாலவி விஷயத்தில் எழுதியதாவது :

எனக்கு
புரியவில்லை.ஜுபைரிடத்தில் சிறுபிராயத்தின் எந்த கவர்ச்சி ஈர்ப்பு மீதமாக
இருந்திருந்தது.அதனை உணர்ந்து அனைத்து முன்னால்,பின்னால் செய்த தவறுகளை மறந்து
நெருங்கிய உறவு என்கிற எண்ணத்தின் பேரில் ஹள்ரத் ஷைகுல் ஹதீஸ் அவர்கள் கவாரிஜ்
பிரிவினரின்  தர்ஜூமாவை முன்னுரிமை கொடுத்து அவரை (ஜுபைரை) நிரபராதி ஆக்கிவிட்டார்.

(ஆதாரம்:பீர் கரம் ஷாஹ் பர்மாயே பக்கம்:106,107) 







خراف زادہ
என்பவர் அபுல் ஹைர் ஜுபைர்.ஷைகுல் ஹதீஸ் என்பவர் பரலேவி அஷ்ரஃபுல் உலமா
அஷ்ரஃப் ஸய்யாலவி.வாக்கியத்தில் بچپن کی کشش (சிறுபிராய கவர்ச்சி) மற்றும்
اگلے پچھلے گناہ بھول کرکے (முன்னால் பின்னால் செய்த தவறுகளை மறந்துவிடுதல்)
நமது பண்பானது இதனை ஆய்வு செய்ய அனுமதி அளிக்கவில்லை.

அடுத்து கனவை முன்வைத்து குற்றம் சுமத்துவதற்கு பதில்:

கனவானது ஓர் எதார்தத்தை விளக்குவதாகும்.வெளிப்படையில் ஒன்றாகவும்
அந்தரங்கத்தில் வேறொன்றாகவும் இருக்கும்.இது குறித்து நாம் முன்பே பல
சந்தர்ப்பங்களில் பதில் அளித்திருக்கிறோம்.எனினும் பரலேவிகள் கனவின்
விளக்கத்தை குறித்து துளியும் அறிவு இல்லை என்பதால்தான் இதிலும்
குற்றம்சுமத்தியுள்ளார்கள்.

அல்லாமா அப்துல் ஙனி நாபிஸி(ரஹ்) அவர்களிடமிருந்து
இதற்குரிய விளக்கத்தை பார்ப்பதற்கு முன்பு .

இவரை குறித்து நவாப் அஹ்மத்
ரிளாகான் அவர்கள் ஆரிஃப் பில்லாஹ் அல்லாஹ்வை அறிந்தவர் எனது தலைவர் அப்துல்
கனி
ஆதாரம் (பதாவா ரிஜவிய்யா 26/527)




அந்தக் கனவிற்குரிய விளக்கம் என்ன என்பதை இனி பார்ப்போம்!

ان راى انه ينكح
شابا معروفا فان الفاعل يفعل بالمفعول خيرا 

கனவில்
ஒருவர் தனக்கு அறிமுகமானவரை
நிகாஹ் செய்வதாக பார்த்தால் அதனின் விளக்கமாவது கனவு கண்டவர் எவரை கண்டாரோ
அவரின் மூலம் நன்மையை   பெறுவார்.

(ஆதாரம்:தஃதீருல் அனாம் 2/230)

இதனை வரலாறும் சான்றளிக்கிறது.ஹள்ரத் கங்கோஹி ரஹ் அவர்கள் ஹள்ரத் நானூதவி ரஹ்
அவர்களிடமிருந்து வெறும் நலவுகள் மட்டுமல்ல.மாறாக எண்ணற்ற ஏராளமான நன்மைகளை
பெற்றுள்ளார்கள்.மேலும் ஹள்ரத் ரஷீத்  கங்கோஹி ரஹ் அவர்கள் அல்லாமா அப்துல்
கனி ரஹ் அவர்களின் கனவின் விளக்கத்திற்கு முற்றிலும் பொருந்துகிறார்.கனவை
குறித்து கூறும் போது அதனின் விளக்கத்தை குறிப்பிட்டுள்ளார்கள்.அதனை
பரலேவிகள்  அறியவில்லை அல்லது அறிந்தும் மறைத்துவிட்டனர்.

அதனின் விபரம்:

எனக்கு அவரின் மூலம் அவருக்கு என்னின் மூலம் நன்மை ஏற்படுகிறது.எவ்வாறு கணவன்
மனைவிக்கு மத்தியில் ஒருவர் மற்றவரிடமிருந்து நன்மையை பெறுவாரோ அதைப்
போன்றாகும்.அவர்கள், ஹள்ரத் (ரஹ்)  அவர்களை புகழ்ந்தவாறு நம்மை
முரீதாக்கினார்.(சிஷ்யர்) நாம் ஹள்ரத் அவர்களிடமிருந்து சிபாரிசு பெற்று
அவர்களின் முரீதாக்கிவிட்டோம்.

ஆதாரம் தத்கிரதுர் (ரஷீத் பாகம்:2 பக்கம்:289)

இவ்வாறு அல்லாமா இப்னு சீரின் ரஹ் அவர்களின் விளக்கம் :

من راى انه ينكح رجلا
فان كان ذلك
الرجل مجهولا و هو شاب فإنه يظفر بعدوه وان كان معروفا و ليس
بينهما عداوة فان المفعول يصيب من الفاعل خيرا 

அறியாத நபர் வாலிபராக இருக்கும்
நிலையில் இவரை ஒருவர் திருமணம் செய்வதாக கனவு காண்கிறார்.இதனின் விளக்கம்
விரோதியை வெற்றிகொள்வார். அறிந்தவராக இருவருக்கும் மத்தியில் விரோதம்
இல்லையெனும் போது கனவு கண்டவரிடமிருந்து கனவில் அறியப்பட்டவர் நலவை
பெறுவார்.

(ஆதாரம்: தஃபீருர் ருஃயா)



தேவ்பந்த் உலமாக்களின் மீது  காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதனையும் ஏற்க
மறுத்தால் பரலேவியர்களே உங்களைச் சார்ந்தவர்களின் நூலிலிருந்து ஆதாரத்தை
காண்போம் .

பரலேவி ஷைகுல் ஹதீஸ் தப்ஸீர் பைஜ்மில்லத் பைஜ் அஹ்மத் உவைஸி
எழுதியுள்ளார்:

ஒருவர் தான் பிறரிடம் ஒன்று சேர்வதாக கனவு கண்டால் அத்துடன்
எவரைக் கண்டாரோ அவர் கண்ணியமானவராக இருந்தால் கனவு காண்பவர் நலவுகளை
பெறுவார்.
(ஆதாரம் கவாபோ கி தஃபீர்) 

விமர்சன கட்டுரையில் தாடியுடைய
மாப்பிள்ளை என தலைப்பிட்டு அசிங்கமாக சித்தரித்துள்ளனர்.பின்வரும்
சம்பவத்திற்கு பரலேவிகளே என்ன தலைப்பிடுவீர்கள் ??

புதுமாப்பிள்ளையை பூரணமான
சங்கை, கண்ணியம், மகிழ்ச்சி சந்தோஷம் உடன் மணப்பெண்ணிடத்தில் அழைத்துச்
செல்வது போன்று நாளை மறுமை நாளில் நபி (ஸல்) அவர்கள் புனித கப்ரிலிருந்து
எழுந்திருக்கும் பொழுது எழுபதினாயிரம் வானவர்களுடன் வெளியில் வந்து கண்ணியமான
இடத்திற்கு செல்வார்கள்.

 (ஆதாரம்:பதாவா ரிளவிய்யா கதீம் பாகம்:6 பக்கம்:202மக்தபா ரிஜவிய்யா கராச்சி)



நபி (ஸல்) அவர்கள் கப்ரிலிருந்து எழுந்த பிறகு  அழைத்துச் செல்லப்படுவதை
மணமகன், மணமகளிடத்தில் அழைத்துச் செல்லப்படுவதை போன்று வர்ணிக்கிறார். இதனைக்
குறித்து பரலேவிகள் தாடிவைத்த மணமகன் என தலைப்பிடுவார்களா? (அல்லாஹ்
பாதுகாப்பானாக!)

அடுத்து சிறுவர்களிடத்தில் சிரித்து பேசுதல் விளையாடுதல் இதில் என்ன தவறு
உள்ளது? பரலேவிகள்,
தங்களின் மதரஸாக்களில் சிறுவர்களின் மூலம் மனநிம்மதி பெறுவார்கள். மேலும்,
அவர்களின் பெரியோர்கள் தான் அழகான சிறுவர்களை முத்தமிடுபவர்கள் அவர்களை
ரசிப்பதற்காக கடைவீதியில் ஆடுபவர்கள் இது போன்ற சிந்தனையை முன்வைத்து நமது
பெரியோர்களின் மீது அவதூறு சுமத்துகின்றனர்.மாறாக உங்களின் பெரியோர்கள்
மீதுதான் வெட்கப்படவேண்டும்!

அந்த சம்பவத்தில் இடுப்பு நாடாவை விளையாட்டாக
அவிழ்த்துவிடுவார்கள் என்ற கருத்தில்  உள்ளது.

சில பரலேவிகள் கைலியை அவிழ்த்து
விடுவார்கள் என்பதாக திரித்து கூறுகின்றனர் இது உர்து அகராதிக்கு எதிரானது.ஆரம்பத்தில் சொன்னதைப் போல் சிறுவர்களிடம் சிரித்து விளையாடுவது
இயல்பாக பழகுவது தவறு என்றால் பரலேவிய பெரியோர்கள் சிறுவர்களிடம் நடந்து
கொண்டதை சிந்தித்துப் பார்க்கட்டும்!
( இன்ஷா அல்லாஹ் தொடரும்!)

முக்கிய குறிப்பு: 

நமது கண்ணியத்திற்குரிய இருபெரியோர்களின் மீது களங்கம்
சுமத்துவதுடன் இருவரை சேர்த்து ஆபாசமாக Photoshop ன் மூலம் கற்பனையாக சில
பரலேவிகள் சித்தரிக்கின்றனர்.நாமும் இவர்களை போல்  இறங்கிவந்தால் பரலேவிய
பெரியோரும் கழுதை புணர்தலும், ரிளாகானும் பிரத்தியேக கட்டிலும், பரலேவிய
ஜுபைரும் கவர்ச்சி வசீகரிப்பும்,பரலேவிய பெரியோரும் சிறுவர்களை
முத்தமிடுவதும்,பரலேவிய பெரியோரும் தாடிமுளைக்காத சிறுவரை ரசித்து இன்பம்
பெறுவதும், ரிளாகானும் ஆணுறுப்பும் போன்ற சம்பவங்களை குறித்து Photoshop ன்
மூலம் சித்தரிக்க முடியும்.எனினும் இஸ்லாமும் எங்களது பெரியோர்களும் இதனை
அங்கீகரிக்கவில்லை.ஆங்கிலேயே கைக்கூலிகளான பரலேவிகளின் சிலர் இவ்வளவு
கீழ்த்தரமாக தரம்தாழ்ந்து போகும் அளவிற்கு களம் இறங்கியுள்ளனர்.(அல்லாஹ்
பாதுகாப்பானாக!)

இந்த கட்டுரையானாது முனாளிர் இஸ்லாம் ஹள்ரத் மெளலானா அல்லாமா ஸாஜித் கான்
நக்ஷபந்தி அவர்களின் கட்டுரையிலிருந்து சுருக்கமான மொழிபெயர்ப்பும் மேலதிக
தகவல்களுடன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.





*










0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live