10 Jan 2017

அஹ்லுஸ் ஸுன்னா பார்வையில் வஹ்ஹாபிகள் என்போர் யார்?

கண்ணியத்திற்குரிய உலமாபெருமக்களே! சமுதாய நலன் விரும்பிகளே! 

ஒவ்வொரு ஆலிமும்
அறிய வேண்டிய முக்கியமான செய்தி இன்றைய சூழ்நிலையில் இஸ்லாத்தை சிலர்
விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் கருதுகிறார்கள் தவ்ஹீத் எனும் போர்வையில்
இஸ்லாத்தில் இருப்பதை இல்லை என்பதாகவும்,அஹ்லே சுன்னத் வல்ஜமாஅத் எனும்
போர்வையில் இஸ்லாத்தில் இல்லாததை இருப்பதாக சித்திருக்கிறார்கள் இரு
பிரிவினருமே இஸ்லாத்தின் களைந்தெறியப்பட வேண்டிய விஷக்காளான்கள் சமுதாயத்தை
கூறுபோடும் கயவர்கள் எனவே இஸ்லாமிய மக்களை இவர்களின் சூழ்ச்சியிலிருந்து
காப்பது நம்மின் மீது கடமையாக உள்ளது.



அதே சமயத்தில் உண்மையான அஹ்லே சுன்னத்து
வல்ஜமாஅத் யார் என்பதையும் அறிய வேண்டும். அல்லாஹ்வையும், நபியையும்,
இமாம்களையும் ஏற்றுக்கொண்டும் பித்அத்துகளை எதிர்த்து இக்லாஸுடன் தஃவத்
வேலையும்,தீனுடைய சேவைகளையும் செய்துவருபவர்கள் நடுநிலைமை உலமாக்களான ‘அஹ்லே
ஹக்குகள்’ ஆனால் பித்அத்வாதிகள் எனும் பரலேவிகள் நடுநிலை உலமாக்களை வஹ்ஹாபிகள்
என்பதாக பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவே நாம் வஹ்ஹாபிகள் யார்?
என்பதை அறிந்தால் பொய்யர்களின் உண்மை முகமும்,இஸ்லாத்திற்கு எதிராக இவர்கள்
செய்த சூழ்ச்சிகளும்,குயுக்திகளும் வெட்டவெளிச்சமாகி விடும்.

இனி இதனைப் பற்றி
விரிவான விளக்கத்தை பார்ப்போம்!

 முஃப்தி மஹ்மூதுல் ஹஸன் (ரஹ்) அவர்களின் பதாவா
மஹ்மூதிய்யாவில் باب البدعات والرسوم என்கிற தலைப்பில் வஹ்ஹாபிகளைப் பற்றி
தெளிவாகவும்,விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது. வஹ்ஹாபி என்பவர் முஹம்மது இப்னு
அப்துல் வஹ்ஹாப் நஜ்தியாவார் சுன்னத்தை பின்பற்றுபவராக இருந்தார் என்றாலும்
கூட சில கொள்கையிலும்,அமலிலும் கடுமையான போக்கை கையாண்டவர். மார்க்க அறிவில்
குறையுடையவர். இதனால் இவர்களின் செயல்கள் பெரும்பித்னாக்களுக்கு வழிகோலியது.

இன்றைய சூழ்நிலையில் வஹ்ஹாபிகள் என யாரை? விமர்சிக்கப்படுகிறது எனில்
பெருமானரையும், ஸஹாபாக்களையும், இமாம்களையும் பின்பற்றி மார்க்கத்திற்கு
முரணான பித்அத்களை தடுப்பவர்களுக்கு சொல்லப்படுகிறது. இதனை அல்லாஹ்விடம்
முறையிடுவோம்!

அஹ்லு சுன்னத்து வல்ஜமாஅத்தை சேர்ந்தவர் யாரெனில்
பெருமானரையும், கலீபாக்களையும் பின்பற்றுபவர் கொள்கை,வணக்கங்கள், நற்குணங்களை
பேணிநடப்பவர். ஹனபி யார்? எனில் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களை பின்பற்றி
நடப்பவர்.

வஹ்ஹாபிகள் தோன்றிய வரலாறு; 

சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக
அரபுநாட்டில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் சுன்னத்துகளை நிலை நாட்டுதல்
எனும் பெயரில் தோன்றி அவரின் ஆதரவாளர்களும் பெருகினர். அதே சமயத்தில் சில
மார்க்க சட்டங்களில் பெரும்பான்மை உலமாக்களுக்கு மாற்றம் செய்தனர். குறிப்பாக
மரணத்திற்கு பிறகு நல்லோர்களின் பொருட்டால் வஸீலா தேடுவதையும், பெருமானாரின்
கப்ரை ஜியாரத் செய்யும் எண்ணத்தில் மதீனாவிற்கு பிரயாணம் செய்வதையும் வரம்பு
மீறி மறுத்தனர். இவர்களின் உண்மை நிலை தெரிய ஆரம்பித்தவுடன் நடுநிலை மக்கள்
வெளியேற ஆரம்பித்தனர்.இந்த ஜமாஅத்தின் நோக்கம் அரசை கைப்பற்றுவதுதான்
சுன்னத்தை பின்பற்றுவது பெயரளவில்தான் இருந்தது. இது அரசியல் சம்பந்தப்பட்ட
ஜமாஅத் என்பதும் வெளிப்பட்டது.அரபுலகம் இவர்களை எதிர்த்து போர் செய்து தோல்வி
அடையச் செய்தனர்.

இதனைப் பற்றி விவரம் ரத்துல் முஹ்தார் 3ம் பாகத்தில்
உள்ளது.ஆக இந்த ஜமாஅத்துதான் உண்மையில் வஹ்ஹாபிகளாகும்.

முக்கிய குறிப்பு:

இதன் தொடர்பில் உள்ள மற்றொரு விஷயம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி
பிறந்தது ஹிஜாஜாகும்.சில பித்அத்வாதிகள் நபி ஸல் அவர்கள் பிரார்த்தனை செய்ய
மறுத்த நஜ்த் என்பதாக பொய்யாக திரித்து கூறுகின்றனர் ஆனால் உண்மையில் நபி ஸல்
அவர்கள் குறிப்பிட்ட நஜ்த் ஈராகில் உள்ளது.



இதனை ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்)
பக்தாதி ரஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பித்அத்திகள் இஸ்லாத்தின் பெயரில்
பொய்யானவற்றை திணிப்பவர்கள் என்பதற்கு இது சான்றாகும்.இந்த வஹ்ஹாபிகளில் உள்ள
சிலரின் செயல்கள் இந்த ஜமாஅத்திற்கு அவப்பெயரையும், கேவலத்தையும் ஏற்படுத்தி
விட்டது.

ஆனால் அதே சமயத்தில் ஷாஹ் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் வாழ்ந்தார்கள்.இவர்
யாரெனில் ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவி (ரஹ்) அவர்களின் மகனாராவார்.ஷாஹ்
வலியுல்லாஹ் ரஹ் அவர்கள்தான் முழு இந்தியாவிற்கும் ஸிஹாஹ் ஸித்தாவை
கொண்டுவந்தவர். ஷாஹ் அப்துல்அஜீஜ்  (ரஹ்) அவர்கள் உமர் ரளி வழித்தோன்றலில்
உள்ளவரும்  நக்ஷபந்தியை சேர்ந்தவருமாவார். இவரின் தலைமையின் கீழ்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாத் நடந்தது.இது நம்மில் பெரும்பான்மை
உலமாக்களும் அறியாத விஷயமும் கூட. இந்த ஜிஹாதில் ஷாஹ்இஸ்மாயில் ஷஹீத்  ரஹ்
,ஸையிது அஹ்மது (ரஹ்) இருவரும் ஷஹீதானார்கள்.இந்த ஜமாஅத்தினர் மிகப்பெரிய
உயர்ந்த சேவைகள் செய்தனர் ஆங்கிலேயர்களின் திட்டங்கள் தலைதூக்கமுடியவில்லை
இவர்களுக்கெதிராக வேலை செய்யவில்லை. மாறாக ஆங்கிலேயர்கள் களைப்படைந்தனர்.இந்த
உலமாக்களுக்கு கடுமையான தண்டனை தரப்பட்டது என்றாலும் இந்த ஜமாஅத்தின்
அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் அல்லாஹ் அங்கீகரித்தான். இந்த தருணத்தில்
ஆங்கிலேயர்கள் தங்களுக்கு எதிராக போராடுபவர்களை அன்று அரபலகத்தில் கலகம் செய்த
வஹ்ஹாபிகளின் ஆதரவாளர்கள் என்பதாக பத்வா தேடினர்.இதற்கு இஸ்லாமியர்களில் சிலர்
உதவி புரிந்தனர்.அந்த நல்லோர்களின் புத்தகங்களின் உண்மையான கருத்துக்களை
திரித்தும்,புரட்டியும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பரப்பி வெறுப்பை விதைத்திட
முனைந்தனர்.

ஆக வஹ்ஹாபி என்ற புனைப்பெயரை நல்லோர்களுக்கு முதன் முதலில்
சூட்டியவர்கள் ஆங்கிலேயர்கள் தான் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இந்த
உண்மையை உலகிற்கு சொன்னவர் ஆங்கிலேயே வரலாற்று ஆசிரியர் w.w.ஹுன்டர் விளக்கமாக
எழுதியுள்ளார் அதில் கூறுகிறார் பித்அத் உலமாக்களின் பத்வா மிகப்பெரிய
தண்டனைகளால் சாதிக்கமுடியாததை சாதித்தது. இந்த நூலானது உர்துவிலும்
மொழிபெயர்க்கப்பட்டது அதனின் பெயர் ہماری ہندستان مسلمان (நம் இந்திய
முஸ்லிம்கள்) என்பதாகும்.

அடுத்து வஹ்ஹாபிகள் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களா?
என்கிற கேள்வி எழலாம். அதற்கான பதிலை அறிந்து கொள்வதற்கு முன்பாக வஹ்ஹாபிகளைப்
பற்றிய மேலும் அதிகப்படியான தகவலைப் பார்ப்போம்!

இது சம்பந்தமாக நடுநிலையோடு
மெளலானா மெளலவி மன்ஜுர் நுஃமானி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்துள்ளார் அந்த
நூலிலிருந்து சுருக்கமாக தரப்படுகிறது. மெளலானா அவர்களின் வார்த்தையிலிருந்து
சில விஷயங்கள்: நான் என்னின் சிறுபிராயத்தில் வஹ்ஹாபிகளைப் பற்றிய
விமர்சனங்களை கேள்விப்பட்டேன்.

மேலும் வஹ்ஹாபிகள் மிகப்பெரும் குழப்பவாதிகள்,
நபிமார்களையும்,  நல்லடியார்களையும் ஏற்பதில்லை.அது மட்டுமின்றி அவர்களின்
விஷயத்தில் ஒழுக்ககேடாக, அவமரியாதையுடன் செயல்படுகிறார்கள் என்றும்
விளங்கியிருந்தேன்.அதே நேரத்தில் இப்படி ஒரு சம்பவத்தையும் கேள்விப்பட்டேன்
வஹ்ஹாபிகளில் ஒருவன் நபியின் மீது விரோதம் கொண்டு நல்லடியார்களின் போர்வையில்
மதீனா வந்து தங்கி நபி ஸல் அவர்களின் புனித உடலை வெளியில் எடுத்து அவமரியாதை
செய்யும் எண்ணத்தில் திட்டம் போட்டு செயல் பட்டான். (அல்லாஹ் பாதுகாப்பானாக)


அந்த நேரத்தில் இருந்த மன்னரின் கனவில் நபி ஸல் அவர்கள் தோன்றி திட்டத்தை
அறிவித்து கொடுத்தார் பிறகு மன்னர் மதீனா விரைந்து அந்நபரை பிடித்து தண்டனை
அளிக்கப்பட்டது. இந்நிகழ்வை அன்றைய மக்கள் உறுதியான, ஒப்புக்கொள்ளப்பட்ட
வரலாற்றைப் போல் கூறினர்.

இதனால் நானும் உறுதியாக நம்பினேன் அதை சந்தேகிக்கவுமில்லை இதனை அன்று எவரும்
மறுக்கவுமில்லை.ஆக வஹ்ஹாபிகளைப் பற்றிய அறிமுகம் இவ்வாறுதான் ஏற்பட்டது.எனக்கு
இன்றும் ஞாபகம் வருகிறது அந்த சமயத்தில் வஹ்ஹாபிகளை நானும் ஏசிப்பேசி
கொண்டிருந்தேன். கவிதைகளைப் புனைந்து சபித்துக்கொண்டும் இருந்தேன்.அந்த
நேரத்தில் என் வயது ஏறத்தாழ எட்டை எட்டியிருக்கும்.அதற்குப் பிறகு ஆரம்ப
மார்க்க கல்வியை எனது ஊரில் உள்ள மதரஸாவிலேயே கற்றேன் மதரஸாவின் ஆசிரியர்
தேவ்பந்தில் ஓதியவர் மக்கள் இவரையும் வஹ்ஹாபி என்றனர் ஆனால் வஹ்ஹாபியைப் பற்றி
நான் கேள்விப்பட்ட எந்த ஒரு விமர்சனமும் அவரிடத்தில் நான் பார்க்கவில்லை மாறாக
அவர் நபி ஸல் அவர்களைப் பின்பற்றுபவராகவும், ஷரீஅத்தின் வழியில் நடப்பவராகவும்
திகழ்ந்தார்.அதனுடன் கப்ரு வணக்கங்களையும், பித்அத்களையும்,சடங்கு
சம்பிரதாயங்களையும் எதிர்ப்பவராகவும் கண்டேன் அல்ஹம்துலில்லாஹ்! அந்த ஆசிரியரை
பார்த்ததின் மூலமும் உடன் இருந்ததின் மூலமும் எனக்கு உறுதி
ஏற்பட்டது.வஹ்ஹாபிகள் மீது சுமத்தப்படும் பிரபல்யமான குற்றச்சாட்டுகள்
அனைத்தும் அடிப்படை ஆதாரமில்லாதவைகள்.

ஆனாலும் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப்
பற்றியோ அல்லது முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபியை பற்றியோ ஆசிரியிடமிருந்து
எதையும் நான் அறியவில்லை.அதற்குப் பிறகு மார்க்க கல்விக்காக சொந்த ஊரை விட்டு
வெளியூர் சென்றேன்.என்னுடைய ஆசிரியமும், வழிகாட்டியுமான மெளலானா கரீம் பஹ்ஷ்
ரஹ் அவர்களின் மாணவராகவும்,அவர்களின் தோழமை எனும் நற்பாக்கியமும்
கிடைத்தது.இவர் அன்று மார்க்கம் கல்வியில் தலைசிறந்த விளங்கும் உலமாக்களில்
ஒருவராகவும்,மெளலானா மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்களின் தனித்து விளங்கும்
மாணவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்கள். கண்ணியத்திற்குரிய ஆசிரியர்
பெருந்தகை அவர்கள் தவ்ஹீத் சுன்னத்தை பேணுபவராகவும்,ஷிர்க் பித்அத்தை
எதிர்ப்பதில் தன்னுடைய முன்னோர்களான ஹள்ரத் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் ரஹ் அவர்கள்
மற்றும் ரஷீத் அஹ்மது கங்கோஹி ரஹ் அவர்கள் இருவரின் பிரதிபிம்பமாகவே
இருந்தார்கள்.அதற்குப் பிறகு வஹ்ஹாபிகள் பற்றிய விஷயத்தில் எனக்கு அதிகமான
விளக்கம் கிடைக்கவில்லை.

அதன் பிறகு ஹிஜ்ரி 1946 லே மெளலானா மஸ்ஊது நத்வி
அவர்கள் எழுதிய ایک مظلوم و بد نام مصلح என்ற பெயரில் முஹம்மது இப்னு
அப்துல் வஹ்ஹாப் அவர்களைப் பற்றிய சுயசரிதை நூலாகும். மெளலவி அவர்கள்
சுமார் 25 புத்தகங்களுக்கு மேலாக படித்து பெரும் முயற்சியுடன் எழுதியிருந்தார்
அவரின் சில கருத்துகளில் எனக்கு மாற்று கருத்து உள்ளது.ஆனாலும் வரலாறு எனும்
வகையில் அணுகும் பொழுது நடுநிலையுடன் எழுதியிருந்தார்.அதனைப் படித்ததின் மூலம்
ஷைகு அவர்கள் மனத்தூய்மை நிறைந்த தவ்ஹீத் அழைப்பாளர்,சுன்னத்தில்
பிடிப்புள்ளவர் என்றும், அவரின் அழைப்பின் மூலம் பலன்களும்,மாற்றங்களும்
நிகழ்ந்தன என்றும் அறிந்து கொண்டேன்.அதற்குப் பிறகு அவரின் தவ்ஹீத் அழைப்பைப்
பற்றியும்,செயல்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்வதற்காக அவரின்
மாணவர்கள்,மகன்களின் நூல்களையும், ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்களின் நூல்களையும்
படித்தேன்.அதன் மூலம்

ஷைகு அவர்களின் வழிமுறையானது ஏறக்குறைய ஷைகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா ரஹ்
அவர்கள் மற்றும் இப்னுல் கையிம் ரஹ் அவர்களுக்கு நெருக்கமாக இருந்ததையும்,
ஷிர்க்கை எதிர்ப்பதிலும்,ஏகத்துவ அழைப்பிலும் அவரின் வழிமுறையானது ஷாஹ்
இஸ்மாயில் ஷஹீத் ரஹ் அவர்களுக்கு நெருக்கமாக இருந்ததையும் அறிய
முடிந்தது.ஆனாலும் இருவருக்கு மத்தியில் சில விஷயங்களில் மாற்றுக்கு கருத்து
உள்ளது.

நம்முடைய நாட்டில் உள்ள கப்ரு வணங்கிகள், பித்அத்வாதிகளின்
புறத்திலிருந்து ஷாஹ் ரஹ் அவர்களுக்கு எதிராக பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள்
அவதூறுகள் சுமத்தி பொதுமக்களின் உள்ளத்தில் அவரைப் பற்றிய வெறுப்பை விதைக்க
முயற்சி செய்யப்பட்டதைப் போன்று ஷைகின் விஷயத்திலும் நிகழ்ந்துள்ளது.இவரின்
அழைப்பு பணியில்,சீர்திருத்த முயற்சியில் வாளேந்தி போராடுவதும் உள்ளடங்கி
இருந்தது.இந்த ஜமாஅத்தினருக்கு வெற்றிகள் குவிந்தன.ஒவ்வொரு பகுதியும்
அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.நஜ்திலிருந்து ஹிஜாஜ்,ஹரமைன் ஷரீபைன்
வரையில் அவர்களின் எல்லைக்குள் கொண்டுவந்தனர்.இதனால் பக்கத்து நாட்டின்
அரசர்கள் ஆட்சிக்கு பேரபாயம் இருப்பதாக எண்ணினர்.எனவே தான் அனைத்துவிதமான
குற்றச்சாட்டுகள், அவதூறுகள் பரவுவதற்கு அரசர்களும் துணைநின்றனர். இறுதியாக
உஸ்மானிய ஆட்சி துருக்கியின் கட்டளைக்கு ஏற்ப முஹம்மது இப்னு அலி பாஷாவின்
தலைமையில் படைதிரட்டி சென்று அவர்களுக்கு எதிராக போர் செய்து ஹிஜாஜிலிருந்து
வெளியேற்றியது.அதன் பிறகு ஆலஸஊதின் ஆட்சியையும் முடிந்துவிட்டது.இதன் பிறகு
ஹிஜாஜ் நகரம் ஷைக் அவர்கள் மீது அபாண்டங்களை சுமத்தும் மையமாக
மாறிவிட்டது.

அங்கிருந்து ஷைக்கைப் பற்றி பரவிய பிரபல்யமான விஷயங்களினால்
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வெறுத்தனர் அதையும் தாண்டி முழு உலகில் உள்ள
காபிர்களை விட மிகக் கேடுகெட்டவர்கள் என்பதாக எண்ணினார்கள்.ஹஜ்ஜை நிறைவேற்ற
முழு உலகிலிருந்து இஸ்லாமியர்கள் ஹரமைனுக்கு வருவதால் வஹ்ஹாபிகளைப் பற்றி
சொல்லப்பட்ட,எழுதப்பட்ட வதந்திகள் ஹாஜிகளின் மூலம் முழு உலகமும்
பரவியது.இதனால் பெரும் அறிஞர்கள் கூட உண்மை என்பதாக எண்ணினர்.

புனித மிக்க மக்கா மாநகரத்தின் பிரபல்யமான அறிஞர் ஷாபியி முஃப்தி ஷைக் அஹ்மது
ஜைனி தஹ்லான் அவர்களின் நூலான

خلاصة الكلام فى بيان امراء بلد الحرام ,درر
السنية فى الرد على الوهابية 

வஹ்ஹாபிகளைப் பற்றிய விமர்சனங்களில் சிலதை
பார்வையிடுவோம்!

 و اذا اراد ان يدخل فى دينه يقول له بعد الاتيان با الشهادتين
اشهد على نفسك انك كنت كافرا و اشهد على والديك انهما ماتا كافرين و اشهد على
فلان و فلان و يسمى له جماعة من اكابر العلماء الماضين انهم كانوا كفارا فان
شهدوا و اقبلهم والا امر بقتلهم و كان يصرح بتكفير الامة من منذ ستمائة سنة و
كان يكفر كل من لا يتبعه

 எவராவது ஒருவர் அவரின் மார்க்கத்தில்
நுழையவிரும்பினால் கலிமா ஷஹாதத்தை படிக்க சொல்வார்கள் அதற்குப் பிறகு
இதுவரையில் நீ காஃபிர் உன்னுடைய பெற்றோர் காஃபிர் அவர்கள் இருவரும்
இணைவைப்பாளர்களாக மரணித்தார்கள் என்று சாட்சி சொல்வாயாக! கடந்து சென்ற
உலமாக்களின் பெயரை குறிப்பிட்டு காஃபிர் என்பதாக சாட்சி சொல்வாயாக! இதனை அவர்
ஏற்றுக்கொண்டால் அவரை அங்கீகரித்துகொள்வார்கள்.அதனை அவர் ஏற்கவில்லையெனில்
கொன்றுவிடுவார்கள்.

மேலும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். சென்ற அறுநூறு
வருடங்களுக்கு முன்பாக  சென்றுவிட்ட முஸ்லிம்கள் அனைவரும் காஃபிர்கள். அவர்களை
தவிர உள்ள அனைரும் காஃபிர்கள்.

 و كان يكفر كل من لا يتبعه و ان كان من اتقى
المتقين فيسميهم مشركين و يستحل دماءهم و اموالهم و يثبت الايمان لمن اتبعه
وان كان من افسق الفاسقين و كان ينتقص النبي كثيرا بعبارات مختلفة 

அவர்
உயர்ந்த இறையச்சம் உள்ளவராக இருந்தாலும் சரி! முஷ்ரிக் என்கின்றனர்.
அப்படிப்பட்ட முஸ்லிம்களை கொல்வதும்,அந்த முஸ்லிம்களின் பொருள்களை எடுத்து
கொள்வது கூடும்.அவரை பின்பற்றுபவர்கள் மிகப்பெரும் பாவிகளாக இருந்தாலும்
முஸ்லிம்கள் என்பதாக ஏற்கின்றர்.பலதரப்பட்ட வார்த்தைகளால் நபி ஸல் அவர்களை
இழிவும்,அவமரியாதையும் செய்கின்றனர்.

كانوا يفعلون ذلك ايضا حتى ان بعض اتباعه
كان يقول عصاي هذه خير من محمد لانها ينتفع بها فى قتل الحية ونحوها و محمد قد
مات ولم يبق فيه نفع اصلا من ذلك انه كان يكره الصلوة على النبي و يتاذى
بسماعها 

வஹ்ஹாபிகளில் சிலர் கூறுகின்றனர் என்னுடைய இந்த குச்சி முஹம்மதை விட
சிறந்தது. இதனைக்கொண்டு பாம்பு போன்ற விஷஜந்துக்களை கொல்கிறேன்.முஹம்மது
மரணித்துவிட்டார் அவரின் மூலம் எந்த ஒரு நலவும் இல்லை....தரூத் ஓதுவதை
வெறுக்கிறார்கள்.அதனை செவியேற்பதன் மூலம் தொல்லை ஏற்படுவதாக கருதுகிறார்கள்.

و
كان فى امره مولعا بمطالعة اخبار من ادعى النبوة كاذبا كمسيلمة الكذاب و
السجاح والاسود العنسى و طليحة الاسدي و اضربهم فكان يضمر فى نفسه دعوى النبوة
ولو امكنه اظهار هذه الدعوة لاظهارها 

அந்த நபர்(முஹம்மது இப்னு அப்துல்
வஹ்ஹாப்) முஸைலமா கத்தாப்,அஸ்வதுல் அன்ஸி,ஸஜ்ஜாஹ், தலீஹதுல் அஸதியைப் போன்று
நுபுவ்வத்தை வாதிட்டவர்களின் வரலாற்றை படிப்பதின் பேரில் பிரியமுடையவர்.
உண்மையில் அவரின் உள்ளத்தில் நுபுவ்வத்தை வாதிடும் நாட்டம் இருந்தது.அதனை
மறைத்தும் வைத்திருந்தார். நுபுவ்வத்தை வாதிட சந்தர்ப்பம் கிடைத்திருந்தால்,
பகிரங்கமாக நுபுவ்வத்தை வாதிட்டு இருப்பார். ஆக இவ்வாறு வரம்புமீறி அபாண்டமான
குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

நான் தனிப்பட்ட முறையில் செய்த ஆய்வின்
மூலம் இந்த குற்றச்சாட்டுகள் எதற்கும் ஆதாரமில்லை.  இதற்கு தெளிவான மறுப்பை
பிறகு பார்ப்போம்!

ஷைக் தஹ்லான் அவர்கள் இதற்கு வலுவான எந்த சான்றையும்
காட்டவில்லை.இதைப் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முன்பாக
உறுதியான ஆய்வை மேற்கொள்ளும் தேவையில்லை என்பதாக எண்ணிக்கொண்டாரா? இதற்கு வேறு
என்ன காரணத்தை கூறமுடியும்?

ஆட்சியாளர்களின் சூழ்ச்சியினால் அவர்களைப் பற்றிய
ஏராளமான தவறான கருத்துக்களும், அடிப்படையற்ற விஷயங்களும் பரவியதால் ஷைக்
தஹ்லானைப் போன்ற பெரும் உலமாக்களின் சிந்தனையில் கூட வஹ்ஹாபிகளைப் பற்றிய
வதந்திகள் தாக்கத்தை ஏற்படுத்தியது.அல்லாஹ் அன்னாரின் பிழையை மன்னிப்பானாக!


நம்முடைய இந்தியாவின் சரியான கொள்கையும்,சிந்தனையும் கொண்ட பெரும்
உலமாக்களுக்கு கூட வஹ்ஹாபிகள் வழிகெட்ட கூட்டம் என்ற சிந்தனை ஏற்பட்டது.
ஆட்சியாளர்களின் சூழ்ச்சியின் காரணமாகதான் இது போன்ற குற்றச்சாட்டுகள்
எழுகின்றன' என்பதற்கு உதாரணம் இது போன்ற அனுபவத்தை சுதந்திரப் போரில் நாம்
கண்கூடாக கண்டோம்.அன்றைய சூழ்நிலையில் சுதந்திரப் போரை ஜிஹாது ஃபி ஸபிலில்லாஹ்
என்பதாக உலமாக்கள் எண்ணினர்.

இதன் அடிப்படையில் ஹுஸைன் அஹ்மது மதனி (ரஹ்)
அவர்கள் மற்றும் ஜம்யிய்யத்துல் உலமாயே ஹிந்த் முதல் உலகப் போருக்குப் பிறகு
கிலாபத் இயக்கத்தை ஆரம்பிக்கும் நோக்கத்தில் இந்திய நேஷனல் காங்கிரஸுடன்
சுதந்திரப்போரில் இணைவதற்கு முடிவு செய்யப்பட்டது.இதன் பேரில் சிறைச்சாலைக்கு
சென்றனர்.துன்பங்கள் ஏற்றனர்.ஆனால் முஸ்லிம்களில் இருந்த எதிரிகள் அல்லாஹ்வின்
அச்சமின்றி,மறுமையின் விசாரணையைப் பற்றி கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவர்கள்
மீது அபாண்டமான பழியை சுமத்தினர் இதனால் நன்மக்கள் கூட ஜம்யிய்யத்துல்
உலமாவானது காங்கிரஸிடம் பணம் பெற்றுக்கொண்டும் காங்கிரஸை பாதுகாக்கின்றது.

இது
போன்று தான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவரின் மீதும்
குற்றம்சுமத்தப்பட்டது. இனி முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின்
நிலைப்பாடுகளும், கொள்கையும் எவை? என்பதைப் பார்ப்போம்!

முஹம்மது (ரஹ்)
அவர்களின் மகனார் அப்துல்லா அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை
தெளிவுப்படுத்தியும், சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
அளித்தவற்றில் சில எங்களின் மீது சிலர் பல்வேறு குற்றச்சாட்டுகளை
சுமத்துகிறார்கள் அவைகள்  :

1)நபி ஸல் அவர்களை நாங்கள் விமர்சிப்பதாக
பழிசுமத்துகின்றனர்.

2)நபி ஸல் அவர்கள் மண்ணோடு மண்ணாகி விட்டார்கள்.

3)நபியின் ஜியாரத்தை விரும்புதில்லை.

4)முன்னுள்ள உலமாக்களின் கிரந்தங்களை
ஏற்பதில்லை.

5)அல்லாஹ்விற்கு மனிதனைப் போன்று உருவம் கொடுக்கும் முஸஸ்ஸமா
கொள்கை.

6) எங்களைத் தவிர மற்றவர்களை காஃபிர் என்று கூறுவதாகவும் நபி ஸல்
அவர்கள் மீது தரூத் ஓதுவதை தடுப்பதாகவும் எங்கள் மீது சுமத்தப்படும்
குற்றச்சாட்டிற்கு ஒரே பதில் سبحنك هذا بهتان عظيم இது மிகப்பெரும்
அபாண்டமாகும்.

பிறகு சில வரிகளுக்குப் பிறகு கூறுகிறார் எங்களின் கொள்கை:

1) நபி (ஸல்) அவர்கள் மனித இனத்தில் அனைவரையும் விட
உயர்ந்தவர்களும்,சிறந்தவர்களாகவும், சங்கையானவர்களாகவும் உள்ளார்கள் .

2) நபி
ஸல் அவர்கள் கப்ரில் உயிரோடு உள்ளார்கள். ஷீஹதாக்களை விட நபியின் மீது
ஹயாத்தானது உயர்ந்த அந்தஸ்தில் உள்ளது.

3) நபி ஸல் அவர்களுக்கு ஸலாம் சொல்வதை
செவிமடுக்கிறார்கள் .

4) நபி (ஸல்) அவர்களின் ஜியாரத்தானது சுன்னத்தாகும்,
என்றாலும் மஸ்ஜிது நபவியில் தொழுவதானது மற்ற பள்ளிகளை விட நன்மைகள் அதிகம்
கிடைக்கும் என்ற நோக்கத்தில் பிரயாணம் செய்து அதனுடன் ஜியாரத் செய்யும்
நோக்கம் இருந்தால் எந்த ஒரு பிரச்சனையில்லை.

5)நேரங்களை தரூதில்
செலவழிப்பதானது இரு உலகிலும் நன்மைகளை பெற்றுத்தரும்.கவலைகள், துன்பங்கள்
நீங்குவதற்கு தரூத் போதுமானது.நாம் நல்லடியார்களின் கராமத்தெனும் அற்புதங்களை
மறுப்பவர்களல்ல. அவர்களுக்கு உள்ள சிறப்பான அந்தஸ்தை ஏற்கிறோம்.ஆனால் எந்த ஒரு வணக்கமும் அவர்களுக்காக செய்யக்கூடாது.

6) ஒவ்வொரு முஸ்லிமும் நல்லடியார்கள்
வாழும்போது துஆ செய்யும் படி சொல்லலாம். மறுமைநாளில் நபி ஸல் அவர்கள் ஷாஃபஅத்
செய்வார்கள். ஹதீஸ்களில் வந்துள்ளதைப் போன்று நபி (ஸல் ) அவர்கள் மட்டுமின்றி
நபிமார்கள், நல்லடியார்களும், குழந்தைகளும் ஷஃபாஅத் செய்வார்கள்.

எங்களிடத்தில் இப்னு தைய்மிய்யா,இப்னுல் கைய்யும் இருவரும் முன்மாதிரியான
இமாம்களில் உள்ளவர்கள். இருவரின் கிரந்தங்களையும் சங்கை செய்கிறோம், என்றாலும்
கூட ஒவ்வொரு மஸாயில்களும் அவர்களை தக்லீத் செய்வதோ,பின்பற்றுவதோ இல்லை. பல
மஸாயில்களில் அவர்களுக்கும் நமக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு
உள்ளது.அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று
தலாக் சட்டத்தில் இருவரின் சட்டத்திற்கு மாற்றமாக கண்ணியமிக்க நான்கு
இமாம்களின் கருத்துப்படி செயல்படுகிறோம்.மேலும் நாங்கள் சூஃபிய்ய
வழிமுறையையும், தஜ்கிய்யத்தையும் மறுப்பவர்களில்லை.

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவரின் பிரபல்யமான மாணவர் ஷைகு அப்துல்
அஜீஜுல் ஹஸீனிடம் தன்னுடைய நிலைப்பாடு சம்பந்தமாக ஒரு கடிதத்தை கொடுத்து மக்கா
முகர்ரமாவிற்கு அனுப்புகிறார்கள் அவரின் கடிதத்தில் பலவிஷயங்களை கூறி வருகிற
போது அதில் இறுதியாக குறிப்பிட்டுள்ளார்கள்.

 ولله الحمد متبعون لا مبتدعون علي
مذهب الامام احمد ابن حنبل و انا اشهد الله و ملائكته و اشهدكم اني علي دين
الله و رسوله و اني متبع لاهل العلم حواله محمد بن عبد الوهاب لاحمد عبد
الغفور عطار طبع بيروت 175,173

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் கடிதத்தின் சாராம்சம் இதுதான்
அவரின் நிலைப்பாட்டிற்கும், கொள்கைகளுக்கும் எதிரான கருத்து தவறுதலாக
மக்களிடத்தில் பரவியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக அவரின் நிலைப்பாட்டை
தெளிவுப்படுத்தும் விதமாக கடிதங்கள் அமைந்துள்ளது.  முஹம்மது இப்னு
அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஹம்பலி மத்ஹபை சேர்ந்தவர்கள் என்றும், நான்கு
மத்ஹபுகளையும் எதிர்க்கவில்லை அங்கீகரித்துள்ளார்கள் என்பதையும் அறிய
முடிகிறது.அவர்களை சாராதவர்களை காபிர் என்பதாக கூறும் குற்றச்சாட்டு
அப்பட்டமான அபாண்டம்  என்பதையும் அறிய முடிகிறது.

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் கொள்கையானது அஹ்லே சுன்னத்வல்
ஜமாஅத்திற்கு தோதுவாக உள்ளது என்றாலும் கூட சில விஷயங்களில் மாற்றமாக உள்ளது.
உதாரணமாக: 

1)நபி ஸல் அவர்களின் ஜியாரத்தை சுன்னத்தாக,முஸ்தஹப்பாக,அமல்களில்
சிறந்தது என கூறியிருந்தாலும் கூட لا تشد الرحال என்ற ஹதீஸை முன்வைத்து நபி
ஸல் அவர்களை ஜியாரத் செய்யும் எண்ணத்தில் மட்டும் மதீனா செல்வது கூடாது.

2) நபி ஸல் அவர்களைக் கொண்டோ, நல்லடியார்களைக் கொண்டோ வஸீலா தேடுவது
கூடாது.அமல்களைக் கொண்டு மட்டும் தான் வஸீலா கூடும்.

 3)நபி ஸல் அவர்களின் ரவ்லா
ஷரீஃபில் ஷஃபாஅத்தை அவர்களிடத்தில் வேண்டுவது கூடாது.

 4) தொழுகையை வேண்டுமென்றே
விட்டவர்களை காபிர் என்பதாக கூறுகிறார்கள். (நான்கு இமாம்களில் இமாம் அஹ்மது
இப்னு ஹன்பல் ரஹ் அவர்களும்,முன்னுள்ள இமாம்களில் சிலரும் தொழுகையை
வேண்டுமென்றே விடுபவரை முர்தத்,காபிர் என்பதாக கூறுகிறார்கள்)

ஆக இது போன்ற
மஸாயில்களின் மூலம் இஸ்லாத்திலிருந்து வெளியேறியவர்கள் என்றோ,அஹ்லே சுன்னத்
வல்ஜமாஅத்திலிருந்து வெளியேறியவர்கள் என்றோ, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்
அவர்களை கூறுவது முறையல்ல.

(முக்கிய விஷயம்: முஹம்மது இப்னு வஹ்ஹாப்
அவர்களின் மேலே உள்ளவைகள் தான் நிலைப்பாடு என்பதற்கான சான்று  அவரின் கிதாபுத்
தவ்ஹீத் என்ற நூலிலும்,அவரின் மகனார் அப்துல்லாஹ் இப்னு முஹம்மது அவர்களின்
நூலிலிருந்தும் தரப்பட்டுள்ளது.)

இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரண்படாத வகையில்
அறிஞர்களிடமிருந்து சில சமயங்களில் தனிப்பட்ட கருத்துக்கள் ஏற்படும்.இதில்
எந்த அறிஞரும் விதிவிலக்கன்று.இது போன்ற கருத்துக்களை முன்வைத்து அவர்கள்
அஹ்லுஸ்ஸூன்னத் வல்ஜமாஅத்தை விட்டு வெளியேறியவர்கள் என்பதானது
முறையன்று.

உதாரணமாக ஷாபியி மத்ஹபை சேர்ந்த ரமளி (ரஹ்) அவர்கள்
நபிமார்களிடமும்,அவ்லியாக்களிடமும் இஸ்திகாஸா தேடுவது கூடும்
என்கிறார்கள்.

பத்ஹூல்கதீர் ஆசிரியர் இப்னு ஹூமாம் ரஹ் அவர்கள் தராவீஹ் எட்டு
அல்லது இருபது இரண்டும் கூடும் என்கிறார்கள்.மிகப்பெரிய தாபியி ஸயீதுப்னுல்
முஸய்யிப் ரஹ் அவர்கள் முத்தலாக் விடப்பட்ட பெண் முதல் கணவரையே திருமணம்
செய்து கொள்வதற்கு வேறு ஒருவரை மணந்து அவர் அந்த பெண்ணை தலாக் விடுவது
போதுமானது.உடலுறவு கொள்வது நிபந்தனையன்று.இந்த கருத்துக்களெல்லாம் இஜ்மாவிற்கு
மாற்றமானது.

ஆனாலும் இது போன்ற கருத்துக்களால் இந்த அறிஞர்களெல்லாம்
அஹ்லுஸ்ஸூன்னத் வல்ஜமாஅத்தை விட்டு வெளியேறியவர்கள் என கூறமாட்டோம்.

பொதுவாக
பரலேவிகள் இமாம் இப்னு தைமிய்யா ரஹ் அவர்களை வஹ்ஹாபி என்பதாக
விமர்சிப்பார்கள்.ஆனால் அவரும் அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்தான்
இதனை அல்லாமா முல்லா அலி காரி ரஹ் அவர்கள் “ஜம்உல் வஸாயில் ஃபி
ஷர்ஹிஷ்ஷமாயிலில்”  இதனை கூறுகிறார்கள் இவர்கள் இருவரும் (இப்னுதைமிய்யா
ரஹ்,இப்னுல்கையும் ரஹ் அவர்கள்) அஹ்லேசுன்னத்வல் ஜமாஅத்தின்
பெரியார்களிலிருந்தும்,இந்த உம்மத்தின் நல்லோர்களிலிருந்தும்
உள்ளவர்கள்.

                انهما كانا من اكابر اهل السنة و الجماعة و
من اولىاء هذه الامة




மெளலானா மதனீ ரஹ் அவர்களின் தவறான புரிதலும் தெளிவும்
மெளலானா மதனீ ரஹ் அவர்கள் الشهاب الثاقب என்ற ஓர் நூலை தொகுத்துள்ளார்கள்.
அந்த நூலானது தேவ்பந்த் பெரியார்கள் மீது ரிளாகான் பரேலவி சுமத்திய பொய்யான
குற்றச்சாட்டுகளுக்கும், அபாண்டாமான பழிசுமத்தியதற்கு மறுப்பாக எழுதப்பட்டது.
அதில் அவர்கள் வஹ்ஹாபிய கொள்கைகளுக்கும், தேவ்பந்த் கொள்கைகளுக்கும் மத்தியில்
உள்ள வேறுபாடுகளை எழுதியுள்ளார்கள் ஆனால் மதனி (ரஹ்) அவர்கள் பிற்காலத்தில்
தனது அந்த கருத்திலிருந்து வாபஸ் ஆகிவிட்டார்கள். அதனைப் பற்றிய தெளிவான
விளக்கத்தை இனி பார்ப்போம்!....

மெளலானா ஹுஸைன் அஹ்மது மதனி (ரஹ்) அவர்கள்
ஹிஜ்ரி 1316 முதல் 1333 வரை சுமார் 17, 18 வருடங்கள் வரை மதீனாவில்
இருந்தார்கள். அவரின் புத்தகமான அஷ்ஷிஹாபில் முஹம்மது இப்னு அப்துல்
வஹ்ஹாப்   அவர்களைப் பற்றியும்,அவரின் ஆதரவாளர்கள் விஷயத்தில்
அரபுலகத்தின் நிலையை விளக்குகிறார்கள்.

 اہل عرب خصوصا اس سے محمد بن عبد الوہاب
سے اور اس کے اتباع سے دلی بغض تھا اور ہے اس قدر ہے کے نہ اتنا قوم یہود سے
ہے نہ نصاری سے نہ مجوس سے نہ ہنود سے  صفحہ47 

கருத்து:

அரபுகள் முஹம்மது இப்னு
அப்துல் வஹ்ஹாப் ரஹ் அவர்கள் மீதும்,அவரைப் பின்பற்றவர்களின் மீதும்
யஹூதிகள்,கிறிஸ்துவர்கள்,நெருப்புவணங்கிகள், இந்துக்களை விட மிகவும் குரோதம்
கொண்டிருந்தார்கள். இதனை முன்வைத்தும், மிகப்பெரிய அறிஞரான ஜைனி தஹ்லான்
அவரின் குலாஸதுல் கலாம்,துரருஸ்ஸனியா நூலிலிருந்தும், வஹ்ஹாபிளுக்கு மாற்றமான
பல உலமாக்களின் நூல்களிலிருந்தும் கிடைத்த தகவலை முன்வைத்து எழுதியுள்ளார்கள்.

மதனி (ரஹ்) அவர்கள் பிறகு தனது கருத்தை மாற்றி கொண்டார்கள். மதனி (ரஹ்)
அவர்களே கூறுகிறார்கள்:

நான் நஜ்தி அவர்களைப் பற்றி எழுதிய விஷயங்கள்
பிரபல்யமாக மக்களால் குறிப்பாக உலமாக்களால் பேசப்பட்டதை முன்வைத்தாகும் ஆனால்
அவரின் கிரந்தத்தை பார்த்ததின் மூலம் அவரின் மீது உள்ள விமர்சனங்கள் சரியல்ல
என்பதை அறிந்து கொண்டேன் என கூறுகிறார்கள்.

 ஹள்ரத் மதனி (ரஹ்) அவர்களின் இந்த
வாபஸான தகவலை அவரின் பிரபல்யமான மாணவரான “ஷாஹ் ஷிப்கதுல்லாஹ் புஹ்தயாரி”
கூறியதாக மெளலானா மன்ஜுர் நுஃமானி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனைப் பற்றிய
தெளிவான விளக்கம் தினசரி நாளிதழான “ஜமீன்தார்” லாஹூர்  17 மே 1925 ல்
வெளியானது. இதனை ஹாபிள் அஜுஜ்தீன் முராதாபாதி அவர்கள் அவரின் நூலான அக்மலுல்
பயானில் வெளியிட்டுள்ளார்கள் இந்த நூலானது மக்தபுஸ்ஸலஃபிய்யாவில் வெளியானது.

மதனி ரஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்: 

مجھ کو اس امر کے اعلان کرنے میں
ذرہ پس و پیش نہیں کہ میری وہ تحقیق جس کو میں بخلاف اہل نجد رجوم المدینین
اور الشہاب الثاقب میں لکھ چکا ہوں اس کی بنا ان کی کسی تالیف و تصنیف پر نہ
تھی بلکہ محض افواہوں یا ان کی مخالفین کے اقوال پر تھا اب ان کی معتبر تالیف
بتا رہی ہے کہ ان کا خلاف اہل سنت و الجماعت سے اس قدر نہیں جیسا کہ ان نسبت
مشہور کیا گیا ہے چند جزوی امور میں صرف اس درجہ تک ہے کہ جس کی وجہ سے ان کی
تکفیر تفسیق یا تضلیل نہیں جا سکتی و اللہ اعلم اکمل البیان 

கருத்து:

 எனக்கு
இந்த விஷயத்தை அறிவிப்பதில் கிஞ்சிற்றும் பிரச்சனையன்று.அதாவது
நஜ்துவாசிகளுக்கு எதிரான கருத்தை ருஜுமுல் மதீனீன் மற்றும் அஷ்ஷிஹாப் ஸாகிபில்
ஆய்வு செய்து எழுதியிருந்தேன்.அந்த விமர்சனமானது அவர்களின் எந்த ஒரு
நூலையோ,தொகுப்பையோ கொண்டன்று.மாறாக வெறும் வதந்திகள் அல்லது
அவர்களுக்கெதிரானவர்களின் கூற்றுக்களை முன்வைத்தாகும்.இப்பொழுது அவர்களின்
ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகுப்புகளின் மூலம் அஹ்லுஸ்ஸூன்னத் வல்ஜமாஅத்திற்கு
எதிரானதன்று.சில கிளைச் சட்டங்களில் மட்டும் கருத்து வேறுபாடு உள்ளது.அதன்
மூலம் அவர்களை காஃபிராக,வழிகெட்டவராக ஆக்கமுடியாது.

மெளலானா கலீல் அஹ்மது (ரஹ்) அவர்களின் தவறான புரிதலும் தெளிவும்;

ஷைக் ஹள்ரத் மெளலானா கலீல் அஹ்மது ஸஹாரன்பூரி ரஹ் அவர்களின் தஸ்தீகாத் என்ற
நூலில் 12வது கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்கள். முஹம்மது இப்னு
அப்துல்வஹ்ஹாப் முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டுவததையும்,பொருளை அபகரிப்பதையும்
ஹலால் என்பதாக கருதுகிறார்கள். முஸ்லிம்களை காஃபிர் என்கிறார்கள்.
முன்னோர்களான நல்லடியார்களின் விஷயத்தில் அவமரியாதையுடன் நடந்துகொள்கிறார்கள்.
இவரைப் பற்றிய உங்களின் தீர்ப்பு என்ன? முன்னோர்களையும், கிப்லாவையும்
ஏற்பவர்களையும் காஃபிர் என்பதாக அவர் கூறுவதை கூடும் என்று ஏற்கிறீர்களா?
மெளலானா கலீல் அஹ்மது ரஹ் அவர்கள் கேள்வி கேட்டவரின் பேச்சின் மீது நம்பிக்கை
கொண்டவாறு பதில் அளித்துள்ளார்கள்;

நம்மிடத்தில் அவர்களைப் பற்றிய நிலைப்பாடு
எதுவெனில் ரத்துல் முஹ்தார் ஆசிரியர் கூறியதைப் போன்றாகும்.முஹம்மது இப்னு
அப்துல் வஹ்ஹாபும் அவரைப் பின்பற்றுவோரும் ஹம்பலி மத்ஹபை பின்பற்றுவதாகக்
கூறினாலும் அவர்கள் தங்களின் கொள்கைக்கு எதிரானவர்களை முஷ்ரிக் என்று
கூறுவதாலும் அப்படிப்பட்ட முஸ்லிம்களை கொல்வதும்,அந்த முஸ்லிம்களின் பொருள்களை
எடுத்துக் கொள்வதும், முஸ்லிம்களை மானபங்கம் செய்வது கூடும் என்று கூறுவதால்
முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபும் அவர்களை பின்பற்றுவோரும் கவாரிஜ் என்ற
வழிகெட்ட கூட்டத்தினரைப் போன்று என்றே கூறுகிறோம். அவர்களை காஃபிர் என்று
சொல்லமாட்டோம். ஏனெனில் தங்களின் செயலுக்கு மாற்றம் விளக்கம் கொடுக்கிறார்கள்.
ஆனாலும் அவர்கள் அசத்தியவாதிகள்தான். ஆனால் வெளிப்படையில் பார்க்கும் போது
மெளலானா அவர்களின் பதிலானது கேள்வி கேட்டவரின் சொல்லின் மீது உறுதிகொண்டும்
ரத்துல் முஹ்தாரின் ஆசிரியர் அல்லாமா இப்னு ஆபிதீன் (ரஹ்) அவர்களின்
விளக்கத்தை முன்வைத்து தீர்ப்பளித்துள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது. முஹம்மது
இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் நிலைப்பாடுகள், கொள்கைகள் விஷயத்தில் மெளலானா
அவர்கள் தாங்களே ஆய்வு செய்து சொல்கிறார்களா? அல்லது ஷைக் மற்றும் அவரைச்
சார்ந்தவர்களின் நூலை ஆராய்ந்து சொல்கிறார்களா? என்பதை இந்த தீர்ப்பின் மூலம்
புரியமுடியவில்லை.

ஆனால் “தஸ்தீகாத்” தீர்ப்பிற்குப் பிறகு ஏறத்தாழ இருபது
வருடங்களுக்குப் பிறகு அவர்கள் ஹிஜ்ரி 1344 லே ஹிஜாஜிற்கு இறுதியாக பிரயாணம்
மேற்கொண்டார்கள்.பிறகு மதீனாவில் ஹிஜ்ரத்தின் நிய்யத்திலே தங்கினார்கள்.அந்த
சமயத்தில் ஹரமைன் ஷரீஃபைனின் ஆட்சியானது அப்துல் அஜீஜ் இப்னு ஸஊதின்
கட்டுப்பாட்டில் இருந்தது.இவர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் வழிமுறையைச்
சார்ந்தவர். முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்பின் தோழமையில் இருந்த பிரபல்யமான
அறிஞர் “ஷைக் அப்துல்லாஹ் இப்னு பலீஹத்” இவர் நீதிபதியாக இருந்தார்.இவரும்
மதீனாவில் தங்கியிருந்தார்.இவரின் இடம் மெளலானாவின் இடத்திற்கு அருகில்
எதார்த்தமாக அமைந்திருந்தது.

மெளலானா அவர்கள் அவரை தொடர்படியாக
சந்தித்ததாலும், உரையாடியதாலும் முஹம்மது அவர்களைப் பற்றிய தங்களின்
நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். லாஹுரின் பிரபல்யமான தினசரி நாளிதழான
“ஜமீன்தார்” எடிட்டருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.அந்த கடிதமானது நாளிதழிலும்
வெளியானது.அதற்குப் பிறகு اکابر کے خطوط (பெரியோர்களின் கடிதங்கள்)என்கிற
பெயரில் புத்தக வடிவில் வெளியானது.அந்த கடிதத்தின் விவரம்: நீதிபதியான ஷைக்
அப்துல்லாஹ் இப்னு பலீஹதின் தங்கும் இடமும் நான் தங்கிய இடமும் அருகில்
அமைந்திருந்தது. அவர்களிடத்தில் அதிகமான சந்திப்புகளும் மார்க்க விஷயங்களில்
உரையாடலும் நிகழ்ந்தது.அவர் மிகப்பெரிய மார்க்க அறிஞராகவும்,மத்ஹப்
அஹ்லுஸ்ஸுன்னாவை சார்ந்தவராகவும் இருந்தார்.இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்
வழிமுறைப்படி நடப்பவர்.ஷைகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா,ஷைகுல் இஸ்லாம்
இப்னுல் கையிம் (ரஹ்) இருவரின் புத்தகங்களை மிகவும் நேசிப்பவர்.நம்முடைய
கண்ணோட்டத்திலும் இருபெரியார்கள் உயர்ந்த ஆலிம் பெருமக்கள்.பித்அத்துகள்
மற்றும் சடங்கு சம்பிரதாயங்களை கடுமையாக வெறுப்பார்கள்.

சுருக்கமாக
சொல்வதென்றால் அஹ்லுஸ்ஸுன்னா கொள்கையை விட்டும் சிறிதும் தடம்பிரளவில்லை என்று
சிந்தனை தோன்றியது.அதிகமான நஜ்துவாசிகள் குர்ஆன் ஓதுகிறார்கள்.ஹாஃபிள்கள்
ஏராளமாக இருக்கிறார்கள். ஜமாஅத்துடன் தொழுகையை பேணுதலாக நிறைவேற்றுகிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் மதீனாவிலே கடும்பனி காலம்.ஆனாலும் நஜ்துவாசிகள் சுப்ஹ்
தொழுகையை பேணுதலாக நிறைவேற்றுகிறார்கள்.ஆக அந்த மக்களின் தீனிய சூழலானது
எல்லையற்ற மனநிம்மதியை அளித்தது.

இதன் மூலம் மெளலானா கலீல் அஹ்மது சஹாரன்பூரி
ரஹ் அவர்கள் வஹ்ஹாபிகளைப் பற்றிய முந்தைய தனது நிலைப்பாட்டை
மாற்றிக்கொண்டார்கள் என்பதை அறியமுடிகிறது.

அல்லாமா இப்னு ஆபிதீன் ஷாமி (ரஹ்)
அவர்களின் தவறான புரிதலும் தெளிவும்;

அல்லாமா இப்னு ஆபிதீன் ஷாமி ரஹ் அவர்கள் ரத்துல் முஹ்தாரில் கூறுகிறார்கள்:

அப்துல் வஹ்ஹாபை பின்பற்றுவோர் ஹம்பலி மத்ஹபை பின்பற்றுவதாகக் கூறினாலும்
அவர்கள் தங்களின் கொள்கைக்கு எதிரானவர்களை முஷ்ரிக் என்று கூறுவதாலும்
அப்படிப்பட்ட முஸ்லிம்களை கொல்வதும் கூடும் என்கிறார்கள் அல்லாமா ஷாமி ரஹ்
அவர்கள் இந்த விஷயத்தை சரியாக அறியவில்லை.

ஏனெனில் வஹ்ஹாபி என்று விமர்சிப்பது
அப்துல் வஹ்ஹாப்  அவர்களன்று.மாறாக அவரின் மகனார் முஹம்மது இப்னு அப்துல்
வஹ்ஹாப்தான்.





இதனை வஹ்ஹாபிகளை கடுமையாக விமர்சனம் செய்த ஷைக் தஹ்லான் (ரஹ்)
அவர்களின் கூற்றின் மூலம் எளிதாக விளங்கமுடிகிறது.அப்துல் வஹ்ஹாப் அவர்கள்
அவரின் மகனாரின் அழைப்பு பணிக்கும்,இயக்கத்திற்கும் முற்றிலும் மாற்றமாக
இருந்தார்கள்.(خلاصة ﺍﻟﻜﻼﻡ)

அல்லாமா இப்னுஆபிதீன் (ரஹ்) அவர்கள் வஹ்ஹாபிகள்
என்பவர்கள் அப்துல் வஹ்ஹாபை பின்பற்றுபவர்கள் என்று எழுதியதன் மூலம்
ஆய்வும்,ஆதாரங்களை முன்வைத்து எழுதவில்லை உறுதியாகி விட்டது.மாறாக அன்றைய
காலத்தில் வாழ்ந்த மற்ற அறிஞர்களுக்கு ஏற்பட்ட தவறான புரிதல் அன்னாருக்கு
ஏற்பட்டுவிட்டது.எனவே ஷைக் முஹம்மது அவர்களின் மகன்கள் மற்றும் மாணவர்களின்
நுல்களை நேரடியாக படிப்பதன் மூலம் வஹ்ஹாபிகளைப் பற்றிய எதார்த்த நிலையை
அறிந்து கொள்ளலாம்!

 ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل
فى قلوبنا غلا للذين آمنوا ربنا انك رؤوف رحيم

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live