26 Jul 2016

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களின் வரலாற்று சுருக்கம்.

 ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் இறைநேசரே.



பரலேவிகள்,நமது கண்ணியத்திற்குரிய பெரியோர்களில் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களைதான் குறிப்பாக மற்றவர்களை விட மிக அதிகமாக விமர்சித்துள்ளதை நாம் அறிய முடிகிறது.



அன்னாரின் மீது சுமத்திய  பரலேவியர்களின் பொய்யான வாதங்கள்,அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலை அறிவதற்கு முன்பாக ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு,அன்னாரின் நூலான தக்வியதுல் ஈமானிற்கு கிடைத்த அங்கீகாரம்,அன்னாரைப் பற்றிய நம் பெரியார்களின் நிலைப்பாடு என்ன? என்பதை பார்ப்போம்! 

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் ரஹ் அவர்கள் எட்டு வருடத்தில் குர்ஆன் மனனம் செய்தார்கள்.பிறகு 15,16 வருடங்கள் வரை ஹதீஸ், தப்ஸீர்,பிக்ஹ்,தர்கக்கலை தத்துவக்கலை,போன்ற கல்விகளை கற்றார்கள்.ஹதீஸ்களை ஷாஹ் அப்துல் அஜீஜ் அவர்களிடமிருந்து கற்றார்கள்.சில நூல்களை அப்துல் காதிர் (ரஹ்) அவர்களிடமிருந்து கற்றார்கள்.பிறகு ஆசிரியர்களின் அறிவுரையின் பேரில் கற்பித்தல்,போதனையில் ஈடுபடலானார்கள்.இதற்கு மத்தியில் போர்க்கலையின் பக்கம் கவனம் செலுத்தினார்கள்.மியா ரஹீம் பஹ்ஷ் என்பவரிடமிருந்து குதிரை சவாரியை கற்றுக்கொண்டார்கள். மிர்ஜா ரஹ்மத்துல்லாஹ்டமிருந்து போர்க்கலையில் ஒரு வகை மற்றும் வாள்பயிற்சியையும் கற்றுக் கொண்டார்கள்.பிறகு பாதச்சுவடுகளை வைத்து நபரை கண்டறியும் கலையின் பக்கம் கவனம் செலுத்தினார்கள்.பிறகு மூன்று வருடம் நீரில் நீச்சல் பயிற்சி மற்றும் சண்டையிடும் பயிற்சியையும் மேற்கொண்டார்கள்.அதில் பரிபூரணத்துவ தகுதி அடைந்தார்கள்.இதற்கு மத்தியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க கடற்கரைக்கு அழைத்து வந்துவிடுவார்கள்.மேலும் தண்ணீரில் நின்று கொண்டு பாடம் நடத்துவார்.பிறகு ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார்.ஒரே மூச்சில் ஐந்து மைல்கள் ஓடும் அளவிற்கு தேர்ச்சி பெற்றார்.பிறகு மரத்தில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டார்.பிறகு ஜாமிஆ மஸ்ஜிது மற்றும் பத்ஹீபூரியின் கொதிக்கும் பளிங்கு தரையில் பாதணியின்றி நீண்ட நேரம் நின்று கொண்டு பயிற்சி செய்தார்.இரவில் விழித்திருப்பதை பழக்கமாக்கி கொண்டார்.எட்டு நாட்கள் தொடர்படியாக விழித்திருந்தார்.பிறகு விரும்புகிற நேரத்தில் தூங்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றார்.

விரும்புகிற நேரத்தில் விழித்துக் கொள்வார்.பிறகு வாழ்கையெனும் களத்திலே பல தரப்பட்ட கல்விகளைப் பற்றி முக்கியமான நூல்களை எழுதினார்கள்.ஷாஹ் இஸ்மாயில் அவர்களுடன் இரு பெரியார்களும் மிகவும் பிரியம் வைத்திருந்தனர்.

ஷாஹ் அப்துல் அஜீஜ் (ரஹ்) அவர்கள் தனது சகோதரனின் மகனான ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் அவர்கள் மற்றும் அவரின் பேரனான ஷாஹ் இஸ்ஹாக் ஸாஹிப் இருவரின் தலையில் கைவைத்து இந்த துஆவை ஓதுவார்கள்.

الحمد لله الذي وهب لى على الكبر اسماعيل و اسحاق

இஸ்மாயில் மற்றும் இஸ்ஹாக்கை எனக்கு அளித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்  ஷாஹ் அப்துல் காதிர் அவர்கள் மிகப்பெரிய ஞானவான பெரியோராக திகழ்ந்தார்கள்.

அன்னாரின் ஈமானிய நுண்ணறிவு பிரபல்யமானது.அவர்கள் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீதை மிகவும் நேசித்தார்கள்.இதனால் அவருடைய பேத்தியை இஸ்மாயில் ஷஹீத் அவர்களுக்கு திருமணம் செய்துவைத்தார்கள். இஸ்மாயில் ஷஹீதின் எதிர்காலம் எதிரிகள் கூறுவதைப் போல இருளாக இருந்திருந்தால் ஈமானிய நுண்ணறிவு கொண்ட ஷாஹ் அப்துல் காதர் அவர்கள் பிறகு எப்படி இஸ்மாயில் ஷஹீதை நேசித்திருப்பார்? அவரின் பேத்தியை எப்படி திருமணம் செய்து வைத்திருப்பார்?

ஷாஹ் அப்துல் காதிரின் ஈமானிய நுண்ணறிவுக்கு உதாரணம் ரமளான் மாதம் முப்பதாக இருந்தால் முதல் தராவீஹிலே ஒரு ஜீஸ்உ ஓதுவார்கள்.29 இருந்தால் அதற்கு ஏற்ப ஓதுவார்கள்.அவரின் பெரிய சகோதரர் ஷாஹ் அப்துல் அஜீஜ் தன்னுடைய சகோதரரின் இந்த செயலின் மூலம் இந்த வருடம் ரமளான் முப்பதா? அல்லது இருபத்தொன்பதா? என அறிந்து கொள்வார்கள்.அவரிடத்தில் ஏதேனும் ஷீஆ ஸலாம் கூறினால் வ அலைகும் என்று மட்டும் பதில் கூறுவார்.அஹ்லே சுன்னா ஸலாம் கூறினால் முழுமையாக பதில் அளிப்பார். ஷீஆக்கள் அன்னாரின் நுண்ணறிவை மற்றும் கஷ்ப்பை சோதிப்பதற்கு வந்து ஸலாம் சொல்வார்கள்.ஆக. ஷாஹ் அப்துல் காதிர் அவர்கள், ஷாஹ் இஸ்மாயிலை நேசித்தது மற்றும் உளப்பூர்வமாக பிரியம் கொண்டதன் மூலம் இந்த வாலிபர் நற்பாக்கியம் பெற்றவர் என்பதை அறியமுடிகிறது.


சீர்திருத்தும் மற்றும் ஜிஹாதின் ஆரம்பம்:

 ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் பித்அத் மற்றும் மார்க்கம் தடுத்த காரியங்களுக்கு எதிராக சீர்திருத்த பிரசகங்களை ஜாமிஆ மஸ்ஜிதில் ஆரம்பித்தார்கள்.முதல் தடவை பிரசங்கத்தின் போது இந்த ஆயத்தை ஓதினார்கள்

فلا و ربك لا يؤمنون حتى يعلموك فيما شجر بينهم ثم لا يجدوا فى انفسهم حرجا مما قضيت و يسلموا تسليما

கருத்து: (முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல் முழுமையாக கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.

ஒரு தடவை  ஜாமிஆவில் குர்ஆன் வசனத்துடன் மாற்றுமத சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிராக தீப்பொறி பறக்கும் பிரசங்கத்தை நிகழ்த்தினார்கள்.ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் அவர்களின் உபதேசத்தால் மற்றும் சீர்திருத்த பேச்சால் கேட்பவர்கள் அழும் அளவிற்கு உள்ளத்தில் தாக்கத்தை  ஏற்படுத்தியது.அதே மஜ்லிஸில் அல்லாஹ்விடம் தவ்பா செய்து மெளலானாவின் ஜிஹாத் அணியில் இணைந்தனர்.ஒரு தடவை ஜாமிஆ மஸ்ஜிதில் திருநங்கைகளுக்கு பயான் செய்தார்.அந்த உபதேசத்தின் மூலம் உணர்வு பிறந்தது.அவர்கள் அணிந்திருந்த அக்கால ஆடைகளை கிழித்தெறிந்தனர்.கைகளில் இருந்த மருதாணி நிறத்தை போக்க கல்லில் தேய்த்தனர்.பிறகு அன்னாரிடத்தில் வந்து தவ்பா செய்து தோழமையில் இணைந்து ஜிஹாதில் கலந்து ஷஹாதத்தெனும் வீரமரணம் அடைந்தனர்.

ஒரு தடவை ஷாஹ் அப்துல் அஜீஜ் அவர்களின் மதரஸாவிற்கு வெளியே ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை  இஸ்லாமிய பெண்கள் தங்களின் அலங்காரத்தை வெளிப்படும் வகையில் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களின் நாணமின்மையால் கோபம் கொண்டார்கள். இவர்களெல்லாம் யார்? என கேட்டார்கள்? இவர்கள் தில்லியின் பாரம்பரியமான கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.அக்கம் பக்கத்தில் ஏதேனும் விஷேசம் நடைபெறலாம் அதில் கலந்து கொள்ள செல்கிறார்கள் என மக்களில் சிலர் பதிலளித்தனர்.
அன்னார் கேட்டார்கள் இவர்கள் முஸ்லிம்களில்லையா? நான் அவர்களுக்கு மார்க்கத்தை எத்திவைப்பதானது அவசியமாக உள்ளது.நாளை மறுமையில் இது சம்பந்தமாக நம்மிடத்தில் விசாரிக்கப்படும். அவர்களுக்கு ஏன் புரியவைப்பதில்லை? அதற்கு மக்கள் கூறினார்கள் அவர்களுக்கு பின்னால் செல்லாதீர்கள்! அவர்களின் சமூகத்தில் மதிப்பும் மரியாதை உள்ள பெண்கள் தங்களின் மீது பழிசுமத்திவிடலாம் அதற்கு அன்னார் கூறினார்கள் அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள்வதால் பாக்கியம் பெறலாம்.பிறகு மஃரிபிற்கு  எளிமையான ஆடை அணிந்து அவர்களின் இடத்திற்கு சென்றார்கள்.அன்னாரை ஏழை என்பதாக எண்ணி அனுமதி அளித்தனர்.அன்னார் நின்றவாறு உள்ளத்திற்கு உணர்வூட்டும் தட்டியெழுப்பும் உபதேசம் செய்தார்.அதனால் அனைத்து பெண்களும் அழஆரம்பித்தனர். அவர்களில் موتی என்ற கோத்திரத்தினர் அந்த நேரத்திலேயே தவ்பா செய்தனர்.அவர்களின் அணியில் இணைந்து அந்தப் பெண்கள் முஜாஹிதின்களின் குதிரைகளுக்கு தீவினம் கொடுக்கும் பணி செய்தனர்.
அன்னாரின் உள்ளத்தை தட்டியெழுப்பும் உரைகளுக்கு காரணம் உம்மத்தின் மீதுள்ள கவலையும் நபியவர்களின் மீதுள்ள கலப்பிற்ற அன்பினால்தான்.

இந்த செய்தியை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், துக்கத்தால் அவர்களுக்குப் பின்னால் உம்மையே நீர் அழித்துக் கொள்வீர் போலும்!(சூரா அல்கஹ்ஃப்)

இறைமறையின் திருவசனத்திற்கு ஏற்ப அன்னார் இருந்தார்கள். அல்லாஹ்வின் மீது பேரின்ப காதல் உள்ளத்தில் நிரம்பியிருந்தது.குர்ஆன் பொதுவாக அழைப்பு பணியில் மென்மையை நளினத்தை கடைப்பிடிக்க சொல்கிறது.

فقولا له قولا لينا

கருத்து: அவனுக்குக் கனிவான சொல்லை நீங்கள் இருவரும் சொல்லுங்கள்(தாஹா)

 ஆனால் அதே சமயத்தில் இஸ்லாமிய அழைப்பாளர் குழப்பத்தை விரும்பும் நயவஞ்சகர்களுடன் கடுமையை கடைப்பிடிக்க சொல்லி வலியுறுத்துகிறது.

يايها النبي جاهد الكفار و المنفقين و اغلظ عليهم و مأوهم جهنم و بئس المصير


 நபியே ஏக இறைவனை மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக அவர்களிடம் கடினமாக நடப்பீராக அவர்களின் புகலிடம் நரகம் அது மிகக் கெட்ட தங்குமிடம்.இந்த வசனத்தின் விரிவுரையில் முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள் காபிர்களுடன் வாளேந்தி போராடுங்கள். நயவஞ்சகர்களுடன் கோபத்துடன் கடுகடுப்புடன் நடந்து கொள்ளும்படி குர்ஆன் கட்டளையிடுகிறது.(تفسیر مدارک)

எந்த நபர் தவறான கொள்கையில் நிலைத்திருப்பாரோ அவருடன் கடுமையாக போராடவேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது என்பதாக தப்ஸீர் ஜலாலைனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹள்ரத் ஷாஹ் இஸ்மாயில் அவர்கள் பித்அத்வாதிகள் இணைவைப்பாளர்களுடன் கடுமையாக நடந்த கொண்டதன் காரணமும் இந்த ஆயத்தின் அடிப்படையிலாகும்.


தக்வியதுல் ஈமான் என்ற நூலின் மீது குர்ஆன்,ஹதீஸ்,தப்ஸீரில் சுய விளக்கத்தை புகுத்தி விமர்சனம் செய்பவர்கள் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பெயரளவில் முஸ்லிம்களாக வாழ்ந்தார்கள். இஸ்லாத்திற்கும் அக்கால முஸ்லிம்களுக்கு மத்தியில் வானம்,பூமிக்கு மத்தியில் உள்ள வித்தியாசத்தைப் போல இஸ்லாம் இருந்தது.மாற்று மதத்தவர்ளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லாத அளவிற்கு ஒன்றிப்போயிருந்தனர். இதனை அறிந்து கொண்டால் அன்னாரின் அந்தஸ்தையும்,அவரின் நூலின் பெருமதியை விளங்கு முடியும். முஜத்தித் அல்பஸானி அவர்கள் அவரின் மக்தூபாதில் எழுதியுள்ளார்கள்.

ஹோலி பண்டிகை:

 முஸ்லிம் பெண்கள் ஹோலி பண்டிகையின் போது அவர்களின் மகள்கள் மற்றும் சகோதரிகளின் வீடுகளுக்கு நிறம்பூசப்பட்ட பானையில் சிவப்பு வர்ணம் பூசப்பட்ட அரிசியை அனுப்பி கொண்டிருந்தார்கள். இஸ்லாமியர்களில் இறையச்சமுள்ள சிலரை தவிர பெரும்பாலனவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்கள். இரண்டாவது ஷாஹ் ஆலம் அவர்களின் காலத்திலே அரண்மையில் ஹோலிக்காக விளக்களை அலங்கரித்தனர்.மேலும் சரஸ்வதி தேவியை வணங்கினர்.

தீபாவளி:

தீபாவளிக்கு அடுத்த நாள் பூஜை செய்தனர்.ஷாஹ் ஆலம் இதற்காக கவிதைகள் பாடுவார். தசரா: தசராவின் போது அரண்மையில் கோலாகலமாக கொண்டாடினார்கள்.மேலும் அக்பர் ஷாஹ் ஸானி மற்றும் பகதூர்ஷாஹ் ஜஃபர் இருவருக்கு முன்பாக கழுத்து மற்றும் இறக்கை நீலநிறமாக உள்ள பறவையானது விடப்படும்.தலைவர்கள், பொதுமக்கள் இந்த சடங்கை பார்ப்பதற்கு செல்வார்கள்.

 பூக்கள் மலரும் மாதம்:

 இந்த மாதத்தில் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவார்கள். பதினைந்து நாள் வரை தில்லியில் பலதரப்பட்ட கப்ருகளில் விழா எடுப்பார்கள்.ஹயாத் ஜாவீதிலே மெளலானா ஹாலி குறிப்பிட்டுள்ளார்கள் ஸர்ஸய்யிதின் நானா மற்றும் கவாஜா ஃபரீத் இருவரும் இந்த விழாவிற்கு வழங்கினார்கள்.


கலிகான் குறிப்பிட்டுள்ளார் இந்த மாதத்தின் முதல்நாள் தில்லி முஸ்லிம்கள் தர்ஹாவிற்கு வந்து வழிபடுவார்கள்.ஹள்ரத் چراغ دہلوی ன் கப்ரில் விளக்கு எரிப்பார்கள். இரண்டாம் நாளில் குதுப் ஸாஹிபின் கப்ருக்கு செல்வார்கள்.மூன்றாம்  நாளில் ஹள்ரத்  நிளாமுத்தீன் ரஹ் அவர்களின் கப்ரில்  ஒன்றுகூடி கவ்வாலி என்ற பெயரில் இன்னிசை இசைக்கப்படும்.நான்காம்  நாளில் ஸய்யத் ஹஸன் ரஸுல் ரஹ் கப்ரிலும் ஐந்தாம் நாளில் ஷாஹ் ترکمان கப்ரின் மீது ஆறாம் நாள் அரண்மையில் அந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.

ரக்ஷபந்தி:

ரக்ஷபந்த் நாளில் அரண்மனையிலும் முஸ்லிம் தெருக்களிலும் இந்தப் பண்டிகை கோலாகலாமாக கொண்டாடப்படும்.அக்பர் ஷாஹ் ஷானி மற்றும் பகதூர்ஷாஹ் இருவரின் தலைமையில் பண்டிகை கொண்டாடப்படும்.இந்த விழாவானது  அரண்மையிலிருந்து குதுப் ஸாஹிப் தர்ஹா வரை செல்லும்.

கிருஷ்ணன் ஜெயந்தி :

கிருஷ்ணன் ஜெயந்தி முஸ்லிம்கள் கொண்டாடினார்கள்.சில முஸ்லிம்கள் கம்சன் (அநியாயம் செய்து கொண்டிருந்த மன்னனை கிருஷ்ணண் கொன்றான் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது) என்ற உருவத்தை செய்து அதனின் நெஞ்சை கிழிப்பார்கள்.அதற்கு முன்பாக நெஞ்சில் தேனை நிரப்பிவிடுவார்கள்.அதனை இரத்தமாக எண்ணி கொள்வார்கள்.

சீதலாதேவி வணங்குதல்:

மிர்ஜா மள்ஹர் ஜான் குறிப்பிட்டுள்ளார் :

அம்மை நோய் வெளிப்படும் நேரத்தில் முஸ்லிம் பெண்கள் பெரும்பாலும் இணைவைப்பில் சிக்கியிருந்தார்கள்.சீதா கதை:இந்துக்கள் பண்டிகை காலத்தில் நாராயணின் வணக்கத்தைப் பற்றி கதை சொல்வார்கள்.அதை போன்று முஸ்லிம்களும் நன்றிசெலுத்தும்  பெயரில் சீதா கதை சொல்வார்கள்.இந்த இருகதைகளும் ஒன்றுடன் ஒன்று ஒப்புமையாக இருக்கும்.தர்ஹாவில் இணைவைப்பான காரியங்கள் அரங்கேற்றப்பட்டது.ஷாஹ் வலியுல்லாஹ் வஸிய்யத்தின் மூலம் முஸ்லிம்கள் மார்க்கத்தை விட்டு எவ்வளவு தூரம் விலகியிருந்தார்கள் என்பதை அறியலாம். நீங்கள் மதார் ஸாஹிப்,ஸாலார் ஸாஹிப் கப்ருகளை ஹஜ் செய்கிறீர்கள்.மேலும் இது உங்களின்  கேடுகெட்ட செயலாகும்.(وصیت نامہ) 

 மஸ்ஜிதுகள் பாழடைந்தும்,கப்ருகள் அலங்கரிக்கப்படுதலும்:

 வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் இந்த காலத்திலே மஸ்ஜிதுகள் பாழடைந்தும்,கப்ருகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.தில்லி ஜாமிஆ மஸ்ஜிதில் பெரியார்களின் உருவப் படங்கள் இருந்தன.மிர்ஜா மள்ஹர் ஷானியின் உறவினர் ஸய்யித் இஸ்மாயில் மதனி மதீனாவிலிருந்து இந்தியாவிற்கு வருகை தந்தார்.ஜாமிஆ மஸ்ஜிதின் நினைவுச் சின்னங்களை பார்வையிட சென்றார்.திரும்பி செல்லும் போது பெரியார்களின் உருவப்படங்கள் பள்ளியில் இருப்பதை மிர்ஜா ஸாஹிபிற்கு சுட்டிகாட்டினார்.மிர்ஜா ஸாஹிப் அதனைப் பற்றி ஷாஹ் ஆலம் ஸானிக்கு கடிதம் அனுப்பினார்.பிறகு உருவப் படங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்தியா சுவனத்தின் அடையாளம்:

ஜைத் ஸாஹிப் அவர்கள், ஷிர்க்,குஃப்ரு,சடங்கு, சம்பிராதயம் அரங்கேறிய வேளையில் இந்தியாவை அந்நேரத்தில் சுவனத்தின் அடையாளம் என்பதாக வர்ணித்தார். (இது அறியாமையாகும்) பதினொன்றம் நூற்றாண்டில் மறுமலர்ச்சியாளர்: இந்தியாவிலே முஸ்லிம்கள் மார்க்க ரீதியாக மிகப்பெரிய அறியாமையில் இருந்தனர்.ஆனால் அதே சமயத்தில் அரசியல் ரீதியாக வலிமையாக இருந்தனர்.இந்த நூற்றாண்டில் முஜத்தித் அல்ஃபஸானி ரஹ் ஷாஹ் அப்துல்ஹக் திஹ்லவி இருவரின் சீர்திருத்தம் முயற்சி வெற்றி பெற்றது.அக்பர் ஜஹாங்கீருக்குப் பிறகு ஷாஹ்ஜஹான் மற்றும் ஆலம்கீர் போன்ற மார்க்கப் பற்றுள்ளவர் அரியணையில் ஏறினார்.ஆலம்கீர் ரஹ் அவர்கள் அனைத்து ஷிர்க்,சம்பிரதாயம், சடங்குகள் ஆடம்பர பழக்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அரசியல் ரீதியாகவும் இஸ்லாமியர்களின் ஆதிக்கம் நீங்கியது.இஸ்லாமிய கலாச்சாரங்கள், பண்பாடுகள் விடைபெற்றன. இஸ்லாத்தை காப்பதற்கு ஷாஹ்வலியுல்லாஹ் திஹ்லவி உருவெடுத்தார்.அந்த காலத்திலே மிர்ஜா மள்ஹர் ஜான்,ஜான் பஹ்ருத்தீன் ஷிஷ்தி போன்ற உண்மையான ஞானிகளும் இருந்தனர்.ஆனால் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இருந்தவர் ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவி இந்த முயற்சியானது எழுதுதல்,கற்பித்தல், போதித்தல் என்ற வட்டத்துடன் சுருங்கியது.இதனை செயல் ரீதியான ஜிஹாதின் மூலம் முஸ்லிம்களின் வாழ்க்கையில் உருவாக்கியவர்கள் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் மற்றும் ஸய்யித் அஹ்மத் என்ற இரு பெரியோர்களின் மூலம் பூர்த்தியானது.பிறகு சில நாட்களிலே இந்த முயற்சி தோல்வியை தழுவியது.


இந்த ஜிஹாதானது பாலாகோட் மைதானத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.இதற்குப் பிறகு மீண்டும் இயக்கம் உருவானது.அதுவும் தோல்வியை தழுவியது.பிறகு ஷாமிலி மைதானத்தில் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் மத்தியில் இறுதியாக மோதல் உண்டானது.அதில் ஆர்வமும் துணிவுமிக்க சிலர் இணைந்து ஜிஹாதிற்கு உயிரூட்டினர்.ஆனால் இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.நாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.இதற்குப் பிறகு இஸ்லாமிய கலாச்சாரம்,பண்பாட்டை பாதுகாக்க தாருல் உலூம் தேவ்பந்த் நிறுவப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் இது வெற்றிவாகை சூடியது.

இன்று முஸ்லிம்களிடம் ஷிர்க்,பித்அத்,சடங்கு, சம்பிரதாயம் போன்றவைகளின் மீது வெறுப்பு இருப்பதன் காரணம் பித்அத்,ஷிர்கிற்கு எதிராக திரண்ட ஒட்டுமொத்த முயற்சிதான் காரணமாகும்.உலமாயே தேவ்பந்த்,ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் இவர்களின் வழியில் நடப்பவர்களுக்கு கிடைத்த பலனாகும்.


ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் ரஹ் அவர்களைப் பற்றி ரஷீத் அஹ்மது ரஹ் அவர்களின் நிலைப்பாடு: மெளலவி முஹம்மது இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் இறையச்சமிக்கவராக, பித்அத்தை களைந்தெடுப்பவராக, சுன்னத்தை செயல்படுத்துபவராக, குர்ஆன் ஹதீஸின் படி செயல்படுபவராக, படைப்புகளை நேர்வழியின் பால் அழைப்பவராக வாழ்வு முழுவதும் இதே நிலையில் இருந்து, இறுதியாக அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்து ஷஹீதானார்கள்.இவரின் இறுதிநிலை இறைநேசராகவும், ஷஹீதாகவும் இருந்துள்ளார்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

 ان اولياء الله الا المتقون

இறைநேசர்கள் பயபக்தியாளர்களாக தவிர வேறில்லை.இந்த ஆயத்தின் படி இஸ்மாயில் ஷஹீத் ரஹ் அவர்கள் இறைநேசர் என்பதை விளங்க முடிகிறது.

من قاتل فى سبيل الله فواق ناقة فقد وجبت له الجنة


 கருத்து: அல்லாஹ்வின் பாதையில்,ஒட்டகையில் ஒருமுறை பால் கறந்து மறுமுறை பால் கறக்கும் நேர அளவுக்கு ஒருவர் போரிட்டால்,அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸின் படி அவர்கள் சுவனவாசியாக உள்ளார்கள்.எந்த நபர் வெளிரங்கத்தில் தக்வாவுடன் இருந்தார்.பிறகு அல்லாஹ்வின் பாதையில் உயிர்நீத்தார் அவர் சுவனவாசியாவார்.மேலும் மனத்தூய்மையுள்ள இறைநேசராகவும் உள்ளார்.இப்படிப்பட்ட நபரை நிராகரிக்கப்பட்டவர் என்பவர்தான் நிராகரிக்கப்பட்டவர் இந்தளவிற்கு அங்கீகாரம் பெற்றவரை காபிர் என்பவர்தான் காபிராகுவார்.

من عادى لى وليا فقد آذنته بالحرب

எவர் என்னுடைய இறைநேசரை பகைத்துக் கொள்வாரோ அவரிடத்தில் நான் போர்பிரகடனம் அறிவிக்கிறேன் என ஹதீஸே குத்ஸியில் உள்ளது.

பாருங்கள்! அல்லாஹ்வே! தன்னுடன் போர்செய்பவர் என்று யாரை சொன்னான்? இறைநேசரை பகைத்துக் கொள்பவரைதான் உண்மையில் அங்கீகரிக்கப்பட்ட ஆலிமை நிராகரிக்கப்பட்டவர் என்று சொல்பவர் கட்டாயம் மிகப்பெரிய பாவியாவார்.இதுதான் அனைத்து இமாம்கள் மற்றும் இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களின் நிலைப்பாடாகும்.மேலும் (இறைநேசரை பகைப்பது) இறைநிராகரிப்பிற்கு நெருக்கமாகும். கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் பாவியான பித்அத்திகளுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக! இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் பித்அத்தை எதிர்த்ததாலும்,அதனை அடியோடு களைந்தெறிந்ததின் காரணமாகவும், மார்க்கத்தின் பெயரால் வயிறு வளர்த்துக் கொண்டிருந்ததிற்கு முற்றுப்புள்ளி வைத்ததின் காரணமாகவும் விரோதமும் கோபமும் கொண்டு அன்னாரை தரக்குறைவாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.எவ்வாறு ரவாபிள்கள்,சுன்னத்தை பேணுபவர் மற்றும் ஷைகைன் (ரளி) அவர்களை விரோதம் கொண்டு விமர்சிப்பதைப் போன்று மெளலவி இஸ்மாயில் (ரஹ்) அவர்களை விமர்சிப்பவர்களும் சபிக்கப்பட்டவர்களாக உள்ளார்கள். ஹதீஸின் கருத்தானது எவர் ஒருவரை சபிப்பாரானால் சபிக்கப்பட்டவர் சாபத்திற்குரியவராக  இல்லையெனில் அந்த சாபமானது சபித்தவரின் பக்கமே திரும்புகிறது.ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் ரஹ் அவர்களை சபித்தவரின் மீது சாபமானது நிச்சயமாக திரும்பும்.சபித்தவர்தான் அல்லாஹ்வின் ரஹ்மத்தை விட்டு விரட்டப்பட்டவர்.


மெளலானா கங்கோஹி ரஹ் அவர்கள் கூறினார்கள் தக்வியதுல் ஈமான் என்ற நூலின் மூலம் மிகப்பெரும் பலன்கள் ஏற்பட்டன.அவரின் காலத்திலே இரண்டறை லட்சம் மக்கள் சீர்திருத்தம் பெற்றனர்.அதன் பிறகு எண்ணிடமுடியாத அளவு பலன்கள் ஏற்பட்டன.(ارواح ثلاثہ)

தக்வியதுல் ஈமான் என்ற நூலில் தெளிவான ஆதாரங்களுடன் மிக எளிமையான முறையில் ஏகத்துவ கொள்கை விளக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் ஆற்றலின் மூலம்தான் ஆதம் அலை முதற்கொண்டு அனைத்து படைப்புகளும் படைக்கப்பட்டுள்ளன என்பதை நிரூபித்துள்ளார்கள். அஹ்லுல் பித்அத்,ஷிர்க் செய்பவர்களின் தவறான சிந்தனைகளை தெளிவுப்படுத்தியுள்ளார். இதனால் அதிகமான மக்கள் நேர்வ
ழியின் பாலும்,சரியான கொள்கையின் பால் செல்லும் பாக்கியம் கிடைத்தது.(جہد المقال)

தக்வியதுல் ஈமான் நூலானது ஒவ்வொரு முஃமினின் ஈமானிற்கும் வலிமை ஊட்டகூடியதாகும். உயிருக்கு உணவாக உள்ளது.சந்தேகமின்றி அந்த நூலில் உள்ளதின்படி அமல் செய்வது அவசியமாகும்.அதில் ஆரம்பம் முதல் இறுதி வரை கொள்கைகளும், அமல்களும் உள்ளன.அவைகள் அனைத்தும் அஹ்லே சுன்னாவிற்கு உட்பட்டவைகள்தான். அதிலே இணைவைப்பு கொள்கைக்கு ஷிர்கின் தலையின் மீது தவ்ஹீதின் ரம்பமாக அந்த நூல் திகழுகிறது. அறியாமைக்கால சடங்குகள்,மார்க்கரீதியான பித்அத்கள்,இணைவைப்பு கொள்கைகள் அனைத்திற்கும் மறுப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலே முஸ்லிம்கள் அறியாமை, மனோஇச்சையின் காரணமாக தவறான கொள்கையில் அகப்பட்டிருந்தனர். எத்தனையோ இந்துக்களின் சடங்குகளும் சம்பிரதாயங்களும் இஸ்லாமியர்களிடத்தில் ஊடுருவி இருந்தன.அத்தனை தவறான கொள்கைகளுக்கும் மறுப்பு உள்ளது.(فتاوی دارالعلوم دیوبند)

தொகுப்பாளர் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் உலமாகள்

மௌலவி சையத் இப்ராஹீம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live