14 Aug 2024

மௌலூது கிதாபுகளின் தேவ்பந்த் இருட்டடிப்பு செய்ததா ? அடுக்கடுக்கான ஆதாரங்கள் .

 அண்மையில் மௌலானா சுல்தான் பாகவி அவர்கள் கிதாபுகளில் செய்த இருட்டிப்பு என்ற தலைப்பில் மௌலூது குறித்து தாருல் கிதாப் தேவ்பந்து இருட்டடிப்பு செய்துள்ளார்கள் என்று பேசிய வீடியோ காணமுடிந்தது.

👉🏻அந்த வீடியோவை இங்கே பாருங்கள்👈🏻

 அதைப்பற்றி ஆய்வு செய்த போது எனக்கு கிடைத்த தகவலை நான் பதிவு செய்துள்ளேன்.


இது வீண்விவாதம் என்றெல்லாமல் ஒரு ஆய்வு கண்ணோட்டத்தில் இல்மீ முனாகஷாவாக இதை நான் எடுத்துக் கொண்டேன். தஹ்கீகை விரும்பக்கூடியவர்கள் இதனை வாசித்து பயனடைவீர். அல்லாஹ் அதற்கு தவ்ஃபீக் செய்வானாக!

மௌலானா சுல்தான் பாக்கவி அவர்கள் கூறுவது:

அசல் பிரதியான முஹத்திஸ் இஸ்ஹாக் தெஹ்லவி அவர்களின் பிரதியில் வந்திருக்ககூடிய வாசகம்:

كنتُ أصنع طعاماً في أيام المولد صلة بالنبي صلى الله عليه وسلم


ஆனால் பிற்காலத்தில் இந்த கிதாபை அச்சிட்ட தாருல் கிதாப் தேவ்பந்து அசல்பிரதியில் இடம்பெற்ற வாசகத்திலிருந்து أيام المولد என்ற வார்தைகளை நீக்கவிட்டார்கள். 

புதிய பதிப்பில் வந்திருக்கின்ற வாசகம்:

كنت أصنع طعاماً صلة بالنبي صلى الله عليه وسلم


இதில் உண்மை நிலை என்னவென்பதை இந்த கட்டுரையில் இன்ஷா அல்லாஹ் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பதிப்புகள் குறித்து அறிமுகம் : 

நம்முடைய நாட்டில் இருந்த பழைய பதிப்புகளின் வரலாறு மற்றும் அதை அச்சிட்ட பதிப்பகளின் வரலாறு குறித்து அறிய நாம் கடமைப்பட்டுள்ளோம். குறிப்பாக  طبعة حجيرة பற்றிய தகவல்கள்.

மன்ஹஜு த் தஹ்கீக் வளர்ந்த பிறகு தஹ்கீக் உடைய உசூல்களை பின்பற்றி இன்றைய காலத்தில் ஒரு கிதாபை ஆய்வு செய்து வெளியிடுபவரை முஹக்கிக் محقق என்று அழைக்கிறோம்.


ஆனால் طبعة حجيرة உடைய காலத்தில் அந்தந்த مطبع பதிப்பகத்தில் தலை சிறந்த ஆலிம்கள் இருப்பார்கள். அவர்களின் ஆய்வின் அடிப்படையில் கிதாபுகள் அச்சிடப்படும். அவர்களுக்கு முஸஹ்ஹிஹ்  مصحح என்று சொல்லப்படுகிறது.

கையெழுத்துப் பிரதி மற்றும் அச்சுப் பிரதி இடையிலான வேறுபாடு

  • கையெழுத்துப் பிரதி என்பது மனிதன் தன் கரத்தால் சுயமே எழுதியவை. அதில் பல்வேறு கையெழுத்து வடிவங்கள் இடம் பெற்றிருக்கும். அச்சுப் பிரதி இயந்திரத்தால் வடிவமைக்கப்படுவது.

  • ஒரு கிதாப் அதன் ஏதேனும் கையெழுத்துப் பிரதியை முன்வைத்து பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு நூலாக வடிவமைக்கப்படுகிறது.

  • சில நேரங்களில் ஒரு கிதாப் இரண்டு, மூன்று கையெழுத்துப் பிரதிகளை வைத்து கூட ஆய்வு செய்து அச்சிடப்பட்டிருக்கும்.

கையெழுத்துப் பிரதிக்கு தான் முதல் அந்தஸ்து கொடுக்கப்படும். அச்சிடப்பட்ட பிரதிக்கு இரண்டாம் நிலை தான் என்பது கிதாபுகளை ஆய்வு செய்யும் முஹக்கிகீன்களின் உசூல்களில் ஒன்று.

ஒரு கிதாபுடைய نص ல் கூடுதல், குறைவு சிக்கலின் போது என்ன செய்ய வேண்டும்?

ஒரு கிதாபுடைய نص ல் கூடுதல் குறைவு சிக்கல் உள்ளது. உதாரணமாக ஒரு طبعة வில் ஒரு வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்றொரு طبعة  வில் அந்த வாசகம் இடம்பெறவில்லை. உடனே பழைய  طبعة வில் உள்ளதை எடுத்துக் கொள்வோம். புதிய طبعة வில் உள்ளதை விட்டு விடுவோம் என்று சொல்வது தவறான நிலைப்பாடாகும். அதைவிட அபத்தபானது பழைய طبعة வில் இருப்பது தான் சரி. புதிய طبعة  வில் பதிப்பில் தஹ்ரீஃப் அதாவது நீக்கம் செய்துவிட்டார்கள் என்று சொல்வதாகும்.

நேரடியாகவே விஷயத்திற்கு வருவோம். அத்துர்ருஸ் ஸமீன் ஃபீ முபஷ்ஷராதின் நபிய்யில் அமீன் என்ற கிதாபில்

كنت أصنع طعاماً في أيام المولد صلة بالنبي صلى الله عليه وسلم

என்ற வாசகம் 1899 ல் அஹ்மதி பதிப்பகத்தால் அச்சிடப்பட்ட நூலில் இடம் பெற்றுள்ளது.


இதே நூல் பின்னால் 1418 ல் தாருல் கிதாப் தேவ்பந்து மற்றும் 1443 ல் முஃப்தி இலாஹி பஃக்ஷ் அகாடமியில் அச்சிடப்பட்ட பிரதிகளில்  في ايام المولد என்ற வாசகம் இடம்  பெறவில்லை.  மேலுள்ள இரண்டு பதிப்பில்

كنت أصنع طعاماً صلة بالنبي صلى الله عليه وسلم

என்று மட்டுமே உள்ளது.




இந்நிலையில் பழைய பதிப்பில் இடம் பெற்றதே சரி. பின்னால் அச்சிட்டவர்கள் தஹ்ரீஃப் செய்துவிட்டார்கள் என்று சொல்வது சரியல்ல. அப்படி சொல்வது இல்மீ அனுகுமுறையும் அல்ல.

இதுப்போன்ற சிக்கலில் முஹக்கிகீன்களின் சரியான அணுகுமுறை

ஒரு பதிப்பில் ஒரு வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்றொரு பதிப்பில் அந்த வாசகம் இடம்பெறவில்லை என்றால் அந்த مخطوطة கள் எந்த கையெழுத்துப் பிரதியை முன்வைத்து அச்சிடப்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுக்கு பிறகே அதில் நாம் விடைகாண முடியும்.

கூடுதல் வார்த்தை في ايام المولد இடம் பெற்ற பதிப்பு

1899ல் மௌலான செய்யது ளஹீரு தீன் அவர்கள் மூலமாக அஹ்மதி பதிப்பகத்தில் அச்சிடப்பட்ட طبعة  எந்த கையேட்டு பிரதியை முன்வைத்து அச்சிடப்பட்டது என்ற விவரங்கள் அந்த பதிப்பில் பதிவு செய்யப்படவில்லை.

கூடுதல் வார்த்தை في ايام المولد இடம் பெறாத பதிப்பு

1418ல் மௌலானா ஆஷிக் இலாஹி பரனி அவர்கள் மூலமாக தாருல் கிதாப் தேவ்பந்து பதிப்பகத்தில் அச்சிடப்பட்ட பதிப்பு எந்த கையேட்டு பிரதியை முன்வைத்து அச்சிடப்பட்டது என்ற விவரங்கள் அந்த பதிப்பில் பதிவு செய்யப்படவில்லை.

ஆனால் அவர்களின் மகனார் மௌலானா அப்துர் ரஹ்மான் கவ்ஸர் பரனி அவர்களை தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டபோது தன்னுடைய தந்தை கையெழுத்துப் பிரதியை முன்வைத்தே இந்நூலை தஹ்கீக் செய்து வெளியிட்டார் என்ற தகவலை பகிரந்தார்கள்.

1443ல் மௌலானா நூருல் ஹஸன் ராஷித் காந்தலவி அவர்கள் மூலமாக முஃப்தி இலாஹி பஃக்ஷ் அகாடமியில் அச்சிடப்பட்ட கிதாப் 2 அசல் கையெழுத்துப் பிரதிகளை வைத்து அச்சிடப்பட்டது. இந்நூலுக்கு இந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகள் மட்டுமே இருக்கின்றன என்ற தகவலை நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகளும் ஹிஜ்ரி 1253 அதாவது ஆங்கில வருடக்கணக்கு படி 1837 ஆம் ஆண்டு முஃப்தி அப்துல் கய்யூம் பதானவி அவர்கள் மூலமாக எழுதப்பட்டது என்ற தகவல் இங்கு மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது.







ஆய்வின் இறுதி

கிதாபை ஆய்வுசெய்து அச்சிடுவதற்கான உசூல் என்ன?

  • கிதாபை தஹ்கீக் செய்யக்கூடிய ஒரு முஹக்கிக் உடைய பணி அந்த நூலின் கையெழுத்துப் பிரதிகளில் எது காலத்தால் முந்தியது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

  • அப்படி முந்திய பிரதியை தேர்வு செய்து அதில் இடம்பெற்றுள்ள نص வார்த்தைகளை அப்படியே பதிவு செய்ய வேண்டும்.

  • ஆய்வின் போது முஹக்கிக் தன் தரப்பிலிருந்து கொடுக்கக்கூடிய விளக்கங்களை ஹாஷியாவில் தான் பதிவு செய்ய வேண்டும். நூலாசிரியரின் அசல் نص ல் அதாவது அசல் வார்த்தையில் பதிவு செய்ய முடியாது. அப்படிசெய்ய வேண்டுமானால் அதற்கென சில நிபந்தனைகள் உண்டு.

இதுதான் ஒரு கிதாபை ஆய்வு செய்து அச்சிடுவதற்கான அடிப்படை உசூல்.

  1. துர்ருஸ் ஸமீன் கிதாபுடைய அசல் கையெழுத்துப் பிரதி:

அந்த அடிப்படையில் 1837 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதியே காலத்தால் முந்தியது. அந்த பிரதியை முஹக்கிக் அசலானதாக கருதி அச்சிடுவதற்காக எடுத்துக் கொண்டுள்ளார்கள். தஹ்கீகின் உசூல்களை பேணி அதில் இடம்பெற்றுள்ள  வார்த்தையை அப்படியே பதிவு செய்துள்ளார்கள்.

அவர்கள் தேர்வு செய்த கையெழுத்துப் பிரதியில்  ايام المولد என்ற கூடுதல் வாசகம் இடம்பெறவில்லை.மாறாக كنت أصنع طعاماً صلة بالنبي صلى الله عليه وسلم என்ற வாசகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.


கூடுதல் வாசகம் இடம்பெறாத கையெழுத்துப் பிரதிக்கும், கூடுதல் வாசகம் இடம்பெற்றுள்ள அச்சு பிரதிக்கும் இடையே 52 ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது.

மேற்கூறிய ஆய்வு இப்படியிருக்க மௌலானா சுல்தான் பாகவி அவர்கள் இந்நூலை பின்னால் அச்சிட்டவர்கள்  இருட்டடிப்பு செய்துவிட்டார்கள் என்று சொல்வது தவறான கருத்தாகும். அப்படி சொல்வது கிதாபை ஆய்வு செய்து வெளியிட்ட முஹக்கிக் மீது இட்டுக்கட்டடுவதாக அமைந்துவிடும்.

மேலும் அஹ்மதி பதிப்பகத்தில் அச்சிடப்பட்ட கிதாபில்   ايام المولد என்ற கூடுதல் வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகம் எந்த கையெழுத்துப் பிரதியை முன்வைத்து பதியப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் என்னுடைய ஆய்வில் கிடைக்கவில்லை. அதை ஆய்வு செய்து கண்டறிபவர்கள் தெளிவுபடுத்தவும். நிச்சயமாக நான் அதிலிருந்தும் பயன்பெறுவேன்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் பயனுள்ள கல்வியை வழங்குவானாக! நம்முடைய முன்னோர்களின் வழியில் பயணிக்கும் நஸீபை நம் அனைவருக்கும் வழங்குவானாக! ஆமீன் !

தொகுப்பு: ரியாஸ்தீன் மதராஸி
மேட்டுப்பாளையம்

4 Jul 2021

நபிமார்கள், நல்லோர்களின் சிபாரிசை நம்புபவர்கள் அபூஜஹ்லை போன்ற முஷ்ரிக் என்ற குற்றச்சாட்டும் ! பதிலும் !



இந்த தலைப்பிட்டு பரேல்விகள் எழுதியுள்ளனர் :
மௌலவி இஸ்மாயில் தெஹ்லவி எழுதியுள்ளார் : ஏதேனும் (நபிமார்களை/நல்லோர்களை) தனக்கு சிபாரிசு செய்யும் வகீலாக எண்ணுபவர்,நேர்ச்சை செய்பவர் எதைப்போன்று எனில் அல்லாஹ்வின் படைப்பாளர்,அவனின் அடியார் எண்ணுபவர்.அவரும் அபூஜஹ்லும் இணைவைப்பில் சரிசமமானவர்கள்.
(தேவ்பந்தியத் கே புத்லான் கா இன்கிஷாப் பக்கம்:68)


கவ்கப்pt>கவ்கப் நூரானி எழுதியுள்ளார்:
நபி,இறைநேசரை அல்லாஹ்வின் படைப்பு,அடியார் எண்ணி வக்கீலாக,சிபாரிசு செய்பவராக புரிபவர்,உதவிக்காக அழைப்பவர்,நேர்ச்சை செய்பவரான முஸ்லிம் மற்றும் காபிரான அபூஜஹ்ல் இணைவைப்பில் சரிசமமானவர்கள் 
(தேவ்பந்த் ஸே பரேலி பக்கம்:35)

நமது பதில்:

பரேல்விகள் வழமைபோல்  மோசடி,பொய்யை புனைந்து திரித்துள்ளனர். இவர்களின் திரிபு செய்யும் கலையை பார்த்தால் யஹுதி அறிஞர்களும் வெட்கப்படுவார்கள்.பரேல்விகளில் ஒருவருக்காவது தைரியம்,துணிச்சல் இருந்தால் மேற்சொன்ன வாக்கியங்களை அப்படியே தக்வியதுல் ஈமானில் காட்ட முடியுமா? 

தக்வியதுல் ஈமானில் வரும் அசலான விஷயம்:
இந்த வசனத்திலிருந்து புரியமுடிகிறது. அல்லாஹுதஆலா உலகில் ஒருவருக்கும் கட்டுப்படுத்தும் ஆற்றலை தரவில்லை.ஒருவரும் யாரையும் காப்பாற்ற முடியாது.
அல்லாஹ்வின் தூதர் இருந்த சமயத்தில் காபிர்களும் சிலைகளை அல்லாஹ்விற்கு சமமாக கருதவில்லை என்பதையும் புரியமுடிகிறது.அதுமட்டுமின்றி அவனின் படைப்பு,அவனின் அடிமை என்பதாகத்தான் கருதினார்கள்.அவைகளை அவனுக்கு எதிரில் ஆற்றல் உண்டு என்பதாக கருதவில்லை.எனினும் இந்த அழைப்பு,நேர்ச்சை செய்தல்,வக்கீலாக,சிபாரிசு செய்பவர்களாக கருதியது தான் அவர்களின் குப்ர்,ஷிர்க்.எவரேனும் ஒருவர் யாரிடத்திலாவது இந்த முறையில் நடந்து கொண்டு அவரை அல்லாஹ்வின் அடியான்,படைப்புதான் கருதினால் அவனும் அபூஜஹ்லும் இணைவைப்பில் சமமாகுவார்கள்.(தக்வியதுல் ஈமான் பக்கம்:29)

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் மீது குற்றம்சுமத்துவது பரேல்விகளின் உள்ளம் சீர்கெட்டதன் பேரிலாகும். தக்வியதுல் ஈமானின் அசலான வாசகத்தில் நபிமார்கள், நல்லோர்கள் அறவே இல்லை.ஆனால் பரேல்விகள் எழுத்தின் வேகத்தில் அநியாயமாக புகுத்தி விட்டனர்.ஹள்ரத் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் நல்லோர்கள், நபிமார்களின் சிபாரிசை ஏற்றுக்கொள்கிறார்கள்.

அன்னார் தெளிவாக எழுதியுள்ளார்கள்:
நபிமார்கள்,நல்லோர்களின் சிபாரிசு அல்லாஹ்வின் விருப்பத்தின் பேரில் உள்ளது.
(தக்வியதுல் ஈமான் பக்கம்:28)

அல்லாஹ்வின் விருப்பத்தின் பேரில் சிபாரிசு செய்வார்கள்  என்பதாக இருந்தும் கூட பொய்யாக,நேர்மையின்றி அன்னாரின் மீது அவதூறை அள்ளி வீசுகின்றனர்.முஸ்லிமை அபூஜஹ்லை போன்ற எப்படி கூறுவார்? ஒரு வாதத்திற்கு நபிமார்கள்,நல்லோர்கள் என்பதாக பொருள் கொண்டாலும் ஷாஹ் ஷஹீத் (ரஹ்) அவர்களின் நோக்கமானது முன்னால் வாழ்ந்த இணைவைப்பாளர்கள் நல்லோர்களை சிக்கலை தீர்ப்பவர்கள்,தேவைகளை நிறைவேற்றுபவர்கள், உலகத்தை நிர்வகிப்பவர்கள் என்பதாக விளங்கி அவர்களின் பெயரில் நேர்ச்சை செய்பவர்கள்,
அல்லாஹ்விற்கும் அவர்களின் சிபாரிசை தடுக்கும் சக்தி இல்லை.இது போன்று நபிமார்களை,நல்லோர்களை சிபாரிசு செய்பவர்களாக புரிந்து அவர்களின் பெயரில் நேர்ச்சை செய்தால் சந்தேகமின்றி அபூஜஹலை போன்று இணைவைப்பில் சரிசமம்தான்.

ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் மக்கா முஷ்ரிகீன்கள் குறித்து எழுதியுள்ளார்கள்:
இணைவைப்பாளர்கள் இயற்கையை உண்டாக்குவதில் யாரையும் இணையாக்குவதில்லை.பெரும் காரியங்களை நிர்வகிப்பதில் அல்லாஹ்விற்கு (ஒருவரையும்) இணையாக்கவில்லை.அல்லாஹ் ஒரு காரியத்தை தீர்மானித்து விட்டால் ஒருவரும் தடுப்பதற்கு சக்தி பெறுவார்கள் என்பதையும் ஏற்பதில்லை.மாறாக அவர்களின் இணைவைப்பு சில அடியார்களின் குறிப்பான செயல்களில் உள்ளது.
பேரரசர் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட அடியார்களை அனுப்புவான்.சிறு பணிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக,சுய விருப்பம் பெற்றவர்களாக ஆக்கிவிடுவான்.பேரரசின் புறத்திலிருந்து தெளிவான உத்தரவு குறிப்பிட்ட காரியத்தின் பால் வரும் வரை அவர்களின் சிறுபணிகளில் குடிமக்களின் செயல்பாடுகளில் தானாக செயல்படமாட்டான்.மாறாக குடிமக்களின் (செயல்பாடுகளை) தலைவர்கள், அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுவான்.
அதிகாரிகளுக்கு பணிவிடை செய்பவர்களின் விஷயத்தில் (அதிகாரிகளின்) சிபாரிசை ஏற்றுக்கொள்வான்............

சில வரிகளுக்கு பிறகு  ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்:
நிச்சயமாக அல்லாஹ் அவனின் அடியார்களின் சிபாரிசை விருப்பமில்லாமல் இருந்தாலும் ஏற்றுக்கொள்வான்.
(அல்ஃபவ்ஜுல் கபீர் பக்கம்:22,23)

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் ஏற்காதீர் என கூறினாரா? குற்றச்சாட்டும் ! பதிலும் !


அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் ஏற்காதீர் என தலைப்பிட்டு பரேல்வி எழுதியுள்ளார்:
மெளலவி இஸ்மாயில் தெஹ்லவி கூறியுள்ளார்👉🏻 அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் ஏற்காதீர். (தக்வியதுல் ஈமான் பக்கம்:8) 
அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் ஏற்காதீர்.வேறு எவரையும் ஏற்பது முற்றிலும் மதிமயக்கமாகும். (தக்வியதுல் ஈமான் பக்கம்:8)
 (ஆதாரம்:தேவ்பந்தியத் கே புத்லான் கா இன்கிஷாப் 68,69 தேவ்பந்த் ஸே பரேல்வி தக் பக்கம் 354,அல்ஹக்குல் முபீன் 74)


பரேல்வி மெளலவி குலாம் ஹுஸைன் எழுதியுள்ளார்:
இந்த கொள்கையின் மூலம் நபிமார்கள், வானவர்கள்,வானலோக வேதங்கள் கட்டாயம் மறுப்பதாகிவிடும்.குப்ராக உள்ளது.
(ஆதாரம் ஷம்ஷேர் ஹுஸைனி பக்கம்:44,45)
இந்த குற்றச்சாட்டை முதன்முதலாக அஹ்மத் ரிஜாகான் பரேல்வி அல்இவ்கபதுஷ் ஷிஹாபிய்யாவில் 18,19 இல் எழுதியுள்ளார் என்பதை கவனித்தில் கொள்ளவேண்டும்.

நமது பதில்: உண்மை என்னவெனில் மனிதன் வெட்கம் எனும் ஆடையை கழற்றிவிட்டால் எந்த எல்லைக்கும் சென்றுவிடுவான்.மெளலானா அஹ்மத் ரிஜாகான்,அவனை சேர்ந்தவர்கள் தக்வியதுல் ஈமானில் முன்னால்,பின்னால் இருப்பதை விட்டுவிட்டு ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களின் வாசகங்களை வெட்டி ஒட்டி திரித்துள்ளனர்.தீனை வயிற்றுப் பிழைப்புக்காக விற்றுவிட்டர்களிடமிருந்து இவ்விதமான வெட்கங்கெட்ட தன்மை இருப்பது பாரதூரமானது இல்லை.நாளை யாராவது அசல் நூலை ஆராய்ந்து பார்த்தால்  ஏமாற்றம்,மோசடியின் திரை கிழிந்து விடும் என்பதை வெட்கங்கெட்டவர்கள் உணரவில்லையா? எதார்த்தம் என்னவெனில் வெட்கங்கெட்டவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் முதல் தலைப்பாக தவ்ஹீத் (ஏகத்துவ கொள்கை) ஷிர்க் (இணைவைப்பு) குறித்து எழுதியுள்ளார்: 

இந்த வசனத்தின் மூலம் தெரிகிறது.யாராவது ஒருவரை தனது உதவியாளராக கருதுபவன்.இதனையே எண்ணி அவரை வழிப்படும் காரணத்தினால் இறைவனிடத்தில் (உதவி) உண்டு.இவன் இணைவைப்பாளன்.பொய்யன்.
அல்லாஹ்வின் நன்றி மறந்தவன்.(தக்வியதுல் ஈமான் பக்கம்:29)

அல்லாஹுத்தஆலா சூரா முஃமீனூனில் அருளியுள்ளான்:

قُلْ مَنْ بِيَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَىْءٍ وَّهُوَ يُجِيْرُ وَلَا يُجَارُ عَلَيْهِ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
ஓவ்வொரு பொருளின் ஆட்சியும் எவன் கைவசம் இருக்கின்றது? அவன் பாதுகாக்கிறான், (அவனது தண்டனையிலிருந்து தப்ப) அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே – அவன் யார்? என நீஙகள் அறிந்தவர்களாக இருப்பின் (கூறுங்கள்) என்று கேட்பீராக! (அல்குர்ஆன் : 23:88)

سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ قُلْ فَاَنّٰى تُسْحَرُوْنَ‏
அ(தற்க)வர்கள் “(சகல அதிகாரமும்) அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவார்கள்” (அவ்வாறாயின்) நீங்கள் எங்கிருந்து சூனியமாக்கப்படுகிறீர்கள் (எவ்வாறு மதிமயக்கப்படுகிறீர்கள்) என்று கேட்பீராக!
(அல்குர்ஆன் : 23:89)

எப்போது காபிர்களிடத்தில் கேட்கப்படுமோ முழு உலகின் கட்டுப்பாடு யாரின் கைவசத்தில் உள்ளது? இதற்கு எதிரில் எந்த ஒரு உதவியாளனும் நிற்கமுடியாது எனும் போது அவர்களும் இதனையே கூறுவார்கள்.இது அல்லாஹ்வின் மேன்மை.பிறகு மற்றவர்களை ஏற்பது முற்றிலும் மதிமயக்கம்தான்.
(தக்வியதுல் ஈமான் பக்கம்:29)

வாசகர்களே! ஷாஹ் ஸாஹிப் அரபு முஷ்ரிகீன்களுக்கு பதில் தந்துள்ளார்.இதனை தன்னின் புறத்திலிருந்து கூறவில்லை.
மாறாக,குர்ஆன் வசனத்தை முன்வைத்து கூறியுள்ளார்.முழுமையான அரசன் சுய அதிகாரம் உள்ளவன் அல்லாஹ் மட்டும் தான்.இதற்கு எதிரில் வேறு எவரும் சிபாரிசு செய்பவராக, உதவியாளராக இருக்கமுடியாது எனும்போது அல்லாஹ்வை விட்டு தெய்வங்களை தேவைகளை நிறைவேற்றும் தீர்க்கும் என்பதாக கருதி வணங்குவது முற்றிலும் மதிமயக்கம் தான்.

அன்னார் கூறுவது,👇👇
விளங்கவைப்பது  என்ன என்பதை நாம் புரிய முடியும்?ஆனால் பரேல்விகள் எப்படி கருத்தை திரித்துள்ளனர் என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ளட்டும்!

ஷாஹ் ஸாஹிப் (ரஹ்) அவர்கள் இந்திய,பாகிஸ்தான் இணைவைப்பாளர்களின் ஆன்மாக்களான மூதாதையர்கள்,தந்தையர்களுக்கு பதிலடி தந்துள்ளார்.இதற்கு பகரமாக  பரேல்விகள் அன்னாரின் மீது பொய்யை புனைந்துள்ளனர்.
அன்னார் தொடர்ந்து எழுதுகிறார்...

அல்லாஹுத்தஆலா குர்ஆனில் கூறுகிறான்:
 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِىْۤ اِلَيْهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدُوْنِ‏
மேலும், நிச்சயமாக என்னைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் இல்லை, எனவே, என்னையே நீங்கள் வணங்க வேண்டும் என்று நாம் வஹீ அறிவிக்காமல் (நபியே!) உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை.
(அல்குர்ஆன் : 21:25)

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள் !
அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் ஏற்காதீர் ! எனும் சட்டத்தை அத்தனை நபிமார்களும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கொண்டு வந்துள்ளனர்.
ஷிர்கிலிருந்து தடுப்பது மற்றும் தவ்ஹீதின் கட்டளை எல்லா ஷரீஅத்துகளிலும் உள்ளது.இதுதான் வெற்றிக்கு வழி‌.இதனை தவிர மற்ற பாதைகள் தவறானது.
(தக்வியதுல் ஈமான் பக்கம்:42)

நடுநிலை வாசகர்களே கவனியுங்கள் !இங்கு ஷிர்க் குறித்து கூறுகிறார். வணங்கப்படுவதற்கும், வணக்கத்திற்கும் தகுதியானவன் அல்லாஹ் மட்டும் தான்.அவனை தவிர வேறு யாரையும் ஏற்காதீர்.நபிமார்கள், வேதங்கள்,மறுமை நாள் அனைத்தையும் மறுத்துவிட்டார் என்பது ஒரு போதும் இல்லை.(அல்லாஹ் பாதுகாப்பானாக)

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்பதை குறித்து நூலின் துவக்கத்தில் அன்னார் அவர்கள் எழுதியுள்ளார்:
உனது பரிசுத்தமான தாத் எனும் உள்ளமையின் மீது பல்லாயிரக்கணக்கான நன்றி.நமக்கு ஆயிரக்கணக்கான அருட்கொடைகளை தந்துள்ளாய்.உமது உண்மையான மார்க்கத்தை தந்துள்ளாய்.நேரான வழியில் நடத்தினாய்.அசலான தவ்ஹீதை கற்றுக்கொடுத்தாய்.
உமது பிரியத்திற்குரிய முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்திலே ஆக்கினாய்.
அவர்களின் வழியை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தந்தாய். அவர்களின் பிரதிநிதிகள் அன்னாரின் பாதையை காட்டினார்கள்.அதன் வழியில் நடந்தார்கள்.அவர்களின் பிரியத்தையும் தந்தாய்.உன்னையன்றி வேறு இறைவன் இல்லை.உனது பிரியத்திற்குரிய (முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்) மீது அவரின் குடும்பத்தார்கள்,தோழர்கள் மீது அவரின் அனைத்து பிரதிநிதிகள் மீது ஆயிரக்கணக்கான அருளும் சாந்தியும் உண்டாகட்டும்.அவரை பின்பற்றுபவர்கள் மீது ரஹ்மத்தை தந்து அவரை பின்பற்றுபவர்களில் எங்களை சேர்த்துக்கொள்வாயாக! ஆமீன் ரப்பல் ஆலமீன் 
(தக்வியதுல் ஈமான் பக்கம்:19)

முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள்,ஸஹாபாக்கள் பிரதிநிதிகளான தாபியீன்கள்,
நல்லோர்கள்,முஹத்திஸீன்கள்,
புகஹாக்கள் பாதையில் செல்வது அதில் மரணிப்பதை துஆ கேட்கிறார்கள்."அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் ஏற்காதீர்" என்பதாக அன்னார் கூறுவதாக குற்றம் சுமத்துவது எவ்வளவு பெரிய அநியாயம்? அப்பட்டமான காழாப்புணர்ச்சியை தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்? 

அன்னார் எழுதியுள்ளார் :
அசலான வணக்கம் ஈமானை சரிசெய்வது தான்.ஈமானில் குறைகள் இருந்தால் அவரின் எந்த ஒரு வணக்கமும் ஏற்கப்படாது.ஈமான் சரியாக இருந்து அவரின் வணக்கம் குறைவாக இருந்தாலும் அதிகம்தான். ஒவ்வொருவரும் விரும்பவேண்டும். ஈமானை சரி செய்வதில் பெரும் முயற்சி அதனை பெற்றுக்கொள்ள அனைத்து காரியங்களை விட முற்படுத்த வேண்டும்.(தக்வியதுல் ஈமான் பக்கம்:19) 

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் ஈமானின் மற்ற அம்சங்களை மறுத்துவிட்டார் .
இப்போதும் யாராவது கூறுவாரானால், நேர்மையற்ற தன்மையை தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? 

ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்: 

يا غلام لا تكن مع النفس و لا مع الهوى و لا مع الدنيا ولا مع الآخرة ولا تتابع سوى الحق عز وجل 

வாலிபரே நீர் மனதுடன்,மனோஇச்சையுடன்,
உலகத்துடன்,மறுமையுடன் ஆகிவிடாதீர் அல்லாஹ்வை தவிர யாரையும் பின்பற்றாதீர்.
 (அல்பத்ஹுர்ரப்பானி பக்கம்:84)

இந்த நூலின் முன்னுரையில் பரேல்விய அறிஞர் அப்துல் ஹக்கீம் ஷரப் காதிரி மொழிப்பெயர்ப்பு குறித்து எழுதியுள்ளார்:
அல்பத்ஹுர்ரப்பானி பலவகையான மொழிப்பெயர்ப்புகளில் வெளிவந்துள்ளது.முன்னால் உள்ள மொழிபெயர்ப்பு பாஜில் ஜலீல் ஹழ்ரத் மெளலானா முப்தி முஹம்மது இப்ராஹிம் காதிரி 
(அல்பத்ஹுர் ரப்பானி 72,73)

ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் நபிமார்களை,
ஸஹாபாக்களை,நல்லோர்களை
உலமாக்களை,புகஹாக்களை பின்பற்ற வேண்டாம்.
அல்லாஹ்வை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதாக எழுதியுள்ளார்கள் என்பதாக  பரேல்விகள் வாதிட தயாரா? ஷைக் அவர்களின் மீது குப்ர், அவமரியாதை ஃபத்வா அளிக்க தயாரா? (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அப்பாவியான ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்களின் மீது மட்டும் தான் பரேல்விகளின் அவதூறு?
 

makkah live

Sample Text

madina live