Pages

4 Jul 2021

நபிமார்கள், நல்லோர்களின் சிபாரிசை நம்புபவர்கள் அபூஜஹ்லை போன்ற முஷ்ரிக் என்ற குற்றச்சாட்டும் ! பதிலும் !



இந்த தலைப்பிட்டு பரேல்விகள் எழுதியுள்ளனர் :
மௌலவி இஸ்மாயில் தெஹ்லவி எழுதியுள்ளார் : ஏதேனும் (நபிமார்களை/நல்லோர்களை) தனக்கு சிபாரிசு செய்யும் வகீலாக எண்ணுபவர்,நேர்ச்சை செய்பவர் எதைப்போன்று எனில் அல்லாஹ்வின் படைப்பாளர்,அவனின் அடியார் எண்ணுபவர்.அவரும் அபூஜஹ்லும் இணைவைப்பில் சரிசமமானவர்கள்.
(தேவ்பந்தியத் கே புத்லான் கா இன்கிஷாப் பக்கம்:68)


கவ்கப்pt>கவ்கப் நூரானி எழுதியுள்ளார்:
நபி,இறைநேசரை அல்லாஹ்வின் படைப்பு,அடியார் எண்ணி வக்கீலாக,சிபாரிசு செய்பவராக புரிபவர்,உதவிக்காக அழைப்பவர்,நேர்ச்சை செய்பவரான முஸ்லிம் மற்றும் காபிரான அபூஜஹ்ல் இணைவைப்பில் சரிசமமானவர்கள் 
(தேவ்பந்த் ஸே பரேலி பக்கம்:35)

நமது பதில்:

பரேல்விகள் வழமைபோல்  மோசடி,பொய்யை புனைந்து திரித்துள்ளனர். இவர்களின் திரிபு செய்யும் கலையை பார்த்தால் யஹுதி அறிஞர்களும் வெட்கப்படுவார்கள்.பரேல்விகளில் ஒருவருக்காவது தைரியம்,துணிச்சல் இருந்தால் மேற்சொன்ன வாக்கியங்களை அப்படியே தக்வியதுல் ஈமானில் காட்ட முடியுமா? 

தக்வியதுல் ஈமானில் வரும் அசலான விஷயம்:
இந்த வசனத்திலிருந்து புரியமுடிகிறது. அல்லாஹுதஆலா உலகில் ஒருவருக்கும் கட்டுப்படுத்தும் ஆற்றலை தரவில்லை.ஒருவரும் யாரையும் காப்பாற்ற முடியாது.
அல்லாஹ்வின் தூதர் இருந்த சமயத்தில் காபிர்களும் சிலைகளை அல்லாஹ்விற்கு சமமாக கருதவில்லை என்பதையும் புரியமுடிகிறது.அதுமட்டுமின்றி அவனின் படைப்பு,அவனின் அடிமை என்பதாகத்தான் கருதினார்கள்.அவைகளை அவனுக்கு எதிரில் ஆற்றல் உண்டு என்பதாக கருதவில்லை.எனினும் இந்த அழைப்பு,நேர்ச்சை செய்தல்,வக்கீலாக,சிபாரிசு செய்பவர்களாக கருதியது தான் அவர்களின் குப்ர்,ஷிர்க்.எவரேனும் ஒருவர் யாரிடத்திலாவது இந்த முறையில் நடந்து கொண்டு அவரை அல்லாஹ்வின் அடியான்,படைப்புதான் கருதினால் அவனும் அபூஜஹ்லும் இணைவைப்பில் சமமாகுவார்கள்.(தக்வியதுல் ஈமான் பக்கம்:29)

ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் மீது குற்றம்சுமத்துவது பரேல்விகளின் உள்ளம் சீர்கெட்டதன் பேரிலாகும். தக்வியதுல் ஈமானின் அசலான வாசகத்தில் நபிமார்கள், நல்லோர்கள் அறவே இல்லை.ஆனால் பரேல்விகள் எழுத்தின் வேகத்தில் அநியாயமாக புகுத்தி விட்டனர்.ஹள்ரத் ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்) அவர்கள் நல்லோர்கள், நபிமார்களின் சிபாரிசை ஏற்றுக்கொள்கிறார்கள்.

அன்னார் தெளிவாக எழுதியுள்ளார்கள்:
நபிமார்கள்,நல்லோர்களின் சிபாரிசு அல்லாஹ்வின் விருப்பத்தின் பேரில் உள்ளது.
(தக்வியதுல் ஈமான் பக்கம்:28)

அல்லாஹ்வின் விருப்பத்தின் பேரில் சிபாரிசு செய்வார்கள்  என்பதாக இருந்தும் கூட பொய்யாக,நேர்மையின்றி அன்னாரின் மீது அவதூறை அள்ளி வீசுகின்றனர்.முஸ்லிமை அபூஜஹ்லை போன்ற எப்படி கூறுவார்? ஒரு வாதத்திற்கு நபிமார்கள்,நல்லோர்கள் என்பதாக பொருள் கொண்டாலும் ஷாஹ் ஷஹீத் (ரஹ்) அவர்களின் நோக்கமானது முன்னால் வாழ்ந்த இணைவைப்பாளர்கள் நல்லோர்களை சிக்கலை தீர்ப்பவர்கள்,தேவைகளை நிறைவேற்றுபவர்கள், உலகத்தை நிர்வகிப்பவர்கள் என்பதாக விளங்கி அவர்களின் பெயரில் நேர்ச்சை செய்பவர்கள்,
அல்லாஹ்விற்கும் அவர்களின் சிபாரிசை தடுக்கும் சக்தி இல்லை.இது போன்று நபிமார்களை,நல்லோர்களை சிபாரிசு செய்பவர்களாக புரிந்து அவர்களின் பெயரில் நேர்ச்சை செய்தால் சந்தேகமின்றி அபூஜஹலை போன்று இணைவைப்பில் சரிசமம்தான்.

ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் மக்கா முஷ்ரிகீன்கள் குறித்து எழுதியுள்ளார்கள்:
இணைவைப்பாளர்கள் இயற்கையை உண்டாக்குவதில் யாரையும் இணையாக்குவதில்லை.பெரும் காரியங்களை நிர்வகிப்பதில் அல்லாஹ்விற்கு (ஒருவரையும்) இணையாக்கவில்லை.அல்லாஹ் ஒரு காரியத்தை தீர்மானித்து விட்டால் ஒருவரும் தடுப்பதற்கு சக்தி பெறுவார்கள் என்பதையும் ஏற்பதில்லை.மாறாக அவர்களின் இணைவைப்பு சில அடியார்களின் குறிப்பான செயல்களில் உள்ளது.
பேரரசர் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட அடியார்களை அனுப்புவான்.சிறு பணிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக,சுய விருப்பம் பெற்றவர்களாக ஆக்கிவிடுவான்.பேரரசின் புறத்திலிருந்து தெளிவான உத்தரவு குறிப்பிட்ட காரியத்தின் பால் வரும் வரை அவர்களின் சிறுபணிகளில் குடிமக்களின் செயல்பாடுகளில் தானாக செயல்படமாட்டான்.மாறாக குடிமக்களின் (செயல்பாடுகளை) தலைவர்கள், அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுவான்.
அதிகாரிகளுக்கு பணிவிடை செய்பவர்களின் விஷயத்தில் (அதிகாரிகளின்) சிபாரிசை ஏற்றுக்கொள்வான்............

சில வரிகளுக்கு பிறகு  ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்:
நிச்சயமாக அல்லாஹ் அவனின் அடியார்களின் சிபாரிசை விருப்பமில்லாமல் இருந்தாலும் ஏற்றுக்கொள்வான்.
(அல்ஃபவ்ஜுல் கபீர் பக்கம்:22,23)

No comments:

Post a Comment