அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களின் தாய்மாமாவின் மீது சுமத்தும் குற்றச்சாட்டும் அதற்கான மறுப்பும்:
அஷ்ரப் அலி தானவி ரஹ் அவர்கள் அவரது "மல்பூஜாதிலே"
212 ம் பக்கத்தில்
அவரின் தாய்மாமாவைப் பற்றிய ஓர் சம்பவத்தை பதிவு செய்துள்ளார்கள் (அதனின்
சுருக்கம்) அப்துர்ரஹ்மான் கான் எனது மாமாவிடம் வேண்டினார்.மக்களுக்கு
பயனளிக்கும் வகையில் ஒரு பேச்சினை பேசுமாறு எனது மாமாவிற்கு பேச
விருப்பமில்லை.ஆகவே அவர் சொன்னார் அவர் ஒரு கட்டளையிடுவதாக அந்த கோரிக்கை
நிறைவேற்றப்பட்டால் மாத்திரம் பேசுவதாக மக்கள் அது என்ன கோரிக்கை? என
கேட்க, அவர் நான் நிர்வாணமாக சந்தைக்கு செல்ல வேண்டும் என் முன் பகுதியை
சிலர் இழுக்க வேண்டும்.பின்னால் விரலினால் விளையாடுதல் தடவுதல் சிறுவர்
கூட்டம் தன்னை பட்வா,பட்வா என அழைக்கவேண்டும் , என கூறினார்.(பட்வா என்றால்
விபச்சாரிகளை வைத்து அதிகமான பணம் சம்பாதிப்பவர் என்று அர்த்தமாகும்).
(
மல்பூஜாத்)
நமது மறுப்பு:
முதல் பதில்
முதலில் நாம் ஒரு விஷயத்தை கவனம் வைக்கவேண்டும்!
பெரியோர்களின் மல்பூஜாத்தை முன்வைத்து விமர்சிப்பதானது பரலேவிய
பெரியோர்களிடத்தில் ஏற்கப்படாது.இதனை நாம் சுயமாக சொல்லவில்லை.பரலேவிய
அறிஞர் நூலில் குறிப்பிட்டுள்ளார்: பெரியோர்களின் மல்பூஜாதிலே சில
விஷயங்கள் அவர்களின் பக்கம் தவறுதலாக இணைக்கப்பட்டுவிடுகிறது.இதற்கு
சாத்தியமும் உள்ளது.அசலான சம்பவம் ஒன்றாக இருக்கும்.எடுத்து சொல்பவரிடம்
தவறு ஏற்பட்டுவிடலாம்.இது எவ்வாறெனில் ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர்கள் பலமாக
இருப்பதுடன் சில சமயங்களில் ஹதீஸானது பலகீனமாக கருதப்படும்.(
عبارات اکابر
کا تحقیقی و تنقیذی جائزہ )
மற்றொரு பரலேவிய அறிஞர் குறிப்பிட்டுள்ளார்:
மல்பூஜாத்தை முன்வைத்து அதற்குரியவரை குறை சொல்ல கூடாது.மல்பூஜாத்தானது
வரலாற்று ரீதியாகவும்,எதார்தத்திலும் ஏற்கத்தக்கதல்ல.எனவே மல்பூஜாத்தை
முன்வைத்து அல்லாஹ்வின் நேசர்களை எந்த குறையும் சொல்லப்படாது.(رویئد اکابر
تحقیقی و تنقیذی جائز حصہ اول)
முக்கிய குறிப்பு:
பரலேவிகள் தேவ்பந்த் உலமாக்களின் மல்பூஜாதில்
விமர்சனங்களை வைப்பார்கள்.எனவே பரலேவிகளுக்கு எதிராக பல்வேறு விஷயங்களில்
மேற்சொன்ன பரலேவிகளின் பெரியோர்களின் நிலைப்பாட்டை எடுத்து வைத்து
அவர்களின் வாதங்களை முறியடிக்கலாம்.
பரலேவிகளின் முன்னோர்களிடம் மல்பூஜாதானது ஏற்கத்தக்கதல்ல எனும் போது அஷ்ரப்
அலி தானவி (ரஹ்) அவர்களின் மல்பூஜாத்தை மட்டும் விமர்சிப்பதானது
காழ்ப்புணர்ச்சியே தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
இரண்டாவது பதில்:
அஷ்ரப்ஸ்ஸவானிஹிலே ஹகீமுல் உம்மத் அஷ்ரப்
அலி தானவி (ரஹ்) அவர்களின் மாமாவைப் பற்றி கூறப்பட்டுள்ளது.அவர்
சூபியாக்களில் உள்ள மலாமதி என்ற பிரிவிசைச்சேர்ந்தவர்
ان سب مجموعہ حالات
انہیں کچھ ایسے بنادیا تھا جیسا کہ درویش میں ایک فرقہ ملامتیہ مشہور (اشرف
السوانح مطبوعہ دار الاشاعت کراچ)
அன்னாரின் ஒட்டுமொத்த நிலையானது அவர்களை இவ்வாறு ஆக்கியுள்ளது.எவ்வாறெனில்
ஞானிகளிலே பிரபல்யமான மலாமதிய்யா என்ற பிரிவுகளில் இவரும் உள்ளார்கள்.
மலாமதிய்யா என்றால் என்ன?
சூபியாக்களில் உள்ள பிரிவாகும்.மக்கள் நல்லதாக கருதாத செயலை அவர்களுக்கு
மத்தியில் தேர்ந்தெடுப்பார்கள்.அந்த செயல்களை மக்களின் முன்நிலையில் அந்த
செயலை செய்து தங்களின் மனதில் உள்ள பெருமைக்கு அடி கொடுப்பார்கள்.ஏனெனில்
எப்பொழுது மக்கள் அவர்களின் செயல்களின் காரணமாக அவர்களை திட்டுவதினால்
அல்லது சபிப்பதினால் அவர்களின் மனதில் உள்ள பெருமையும், நான்
என்பதும்,பெரியவன் என்பதும் அழிந்துவிடும் என்கிற நோக்கமாகும்.இது உள்ள
சீர்திருத்தத்தின் உயிராக உள்ளது. இதனைப்பற்றி பரிபூரணம் பெற்ற இறைநேசரான
ஹள்ரத் அலி கஜவ்ரி (ரஹ்) அவர்கள் இந்த பிரிவினைப் பற்றி இவ்வாறு அறிமுகம்
செய்கிறார்கள்.
سلكت طائفة من المشائخ الطريقة طريق الملامة و الملامة خلوص
المحبة تاثير عظيم و مشرب تام
பெரியோர்களின் தரீகத்தின் ஒரு பிரிவினர்
மலாமதி வழிமுறையின் படி நடக்கின்றனர் ஏனெனில் இதிலே கலப்பற்ற உள்ளம்,இறை
நேசத்தின் தாக்கம் பரிபூரணமான இன்பமானது மறைந்துள்ளது. (
كشف المحجوب)
பிறகு ஹள்ரத் அவர்கள் மூன்று வகையினரை கூறுகிறார்கள் அதில் மூன்றாவது
வகையினரை இவ்வாறு அறிமுகம் செய்கிறார்கள் உள்ளத்திலே
இணைவைப்பும்,வழிகேட்டின் மீது உள்ளத்தில் வெறுப்பானது நிரம்பி இருக்கும்
என்றாலும் வெளிப்படையில் ஷரீஅத்தை எடுத்து நடக்க மாட்டார்கள்.மேலும் எண்ணி
கொள்வார்கள் நான் மலாமதி வழிமுறையின் படி செயல்படுகிறேன். இந்த மலாமத்
வழிமுறையானது அவர்களின் பழக்கமாக மாறிவிடும்.இப்படி இருப்பதுடன்
மார்க்கத்தில் பற்றுதலுடன் இருப்பார்கள்.ஆனால் வெளிப்படையில் மலாமத் என்ற
நோக்கத்தில் நயவஞ்சகம்,முகஸ்துதி என்ற விதத்தில் தீனுக்கு மாற்றமாக
நடப்பார்கள்.மக்கள் திட்டுவதையும்,சபிப்பதையும், விமர்சிப்பதையும்
பயப்படாமல் எல்லா நிலையிலும் தங்களின் வழிமுறையின் படி
செயல்படுவார்கள்.மக்கள் அவர்களை எவ்வாறு அழைத்தாலும் சரி (
کشف المحجوب)
ஆக தானவி (ரஹ்) அவர்களின் தாய்மாமாவும் மலாமதிய்யா பிரிவைச்
சேர்ந்தவராவார்.வெளிப்படையில் இவ்வாறு பேசுவார்கள்.மக்கள் அவர்களை சபிக்க
வேண்டும்.மேலும் தங்களின் நோக்கத்தை அடைவதற்காக இவ்வாறு பேசுவார்கள்.
இன்றைய பரலேவிகள் ஒரு பக்கம் சூபியாக்கள் நல்லோர்கள் என்பதாக
வாதிட்டு கொண்டு மற்றொரு பக்கம் சூபியாக்களின் ஒரு பிரிவினரை
விமர்சிப்பதானது இவர்களின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து காட்டுகிறது.இந்த
குற்றச்சாட்டும் வலுவற்றதாக அமைந்துள்ளது.
மலாமதிய்யா பிரிவினரின் குணங்களை மேலும் விவரிக்கிறார்கள்:
மக்களிடத்தில்
சங்கையும்,அந்தஸ்தையும் பெறுவதினால் ஏற்படும் வெறுப்பானது வேறு எந்தக்
காரியத்தினாலும் அவ்வளவு வெறுப்பு ஏற்படுவதில்லை.(
كشف المحجوب)
அஷ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களின் தாய்மாமாவின் நோக்கமும் மக்கள் தன்னை
திட்டவேண்டும்,சபிக்க வேண்டும் என்பதாகும்.இதன் மூலம் தங்களின் இலக்கை
அடைவார்கள்.
ஹள்ரத் கஜவ்ரி (ரஹ்) அவர்கள், இப்ராஹிம் இப்னு அத்ஹம் (ரஹ்)
அவர்களின் சம்பவத்தை இந்த தலைப்பிலே எடுத்தெழுதியுள்ளார்கள் (அதனின்
சுருக்கம்)
இப்ராஹிம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்களிடத்தில் ஒருவர் கேள்வி
கேட்டார்.தாங்கள் தங்களின் நோக்கத்தில் எல்லையை எட்டிவிட்டீர்களா? அதற்கு
அன்னார் கூறினார்கள் ஆமாம்!
இருதடவை நோக்கத்தை அடைந்துள்ளேன் ஒரு தடவை
நான் கப்பலிலே பிரயாணம் செய்தேன்.எவரும் என்னை அறியவில்லை.ஏனெனில் கிழிந்த
பழைய ஆடையை அணிந்திருந்தேன். முடியும் நீண்டு இருந்தது.இந்த சமயத்தில்
கப்பலில் அனைத்து பிரயாணிகளும் என்னை கேலி செய்தனர்.அவர்களிலே ஒருவன்
என்னிடத்தில் வந்து எனது முடியை பிடித்து இழுத்து துன்புறுத்தினான்.என்னை
மற்றவர்களும் கேலி செய்து கொண்டிருந்தார்கள்.அந்த நேரத்தில் நான் எனது
இலக்கை எட்டினேன்.அந்த பழைய ஆடை மற்றும் துன்பமான நிலையிலே மகிழ்ச்சியை
உணர்ந்தேன்.எந்தளவிற்கெனில் எனது
மகிழ்ச்சியானது நோக்கத்தை அடைந்தது.அதன்
பிறகு கேலி செய்தவன் எழுந்து என் மீது சிறுநீர் கழித்தான் (
کشف المحجوب)
சிந்தித்துப் பாருங்கள்! தானவி (ரஹ்) அவர்களின் தாய்மாமாவின் சம்பவத்திலும்
இப்ராஹிம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்களின் சம்பவத்திலும் என்ன வித்தியாசம்
உள்ளது?
இப்ராஹிம் இப்னு அத்ஹம் (ரஹ்) கூறினார்கள் அந்த நபர் நிர்வாணமாக
மர்மஸ்தானத்தை பிடித்து சிறுநீர் கழித்தான்.அந்த நேரத்தில் எனது இலக்கை
அடைந்தேன் என்றார்கள்
இந்த இரு சம்பவத்திற்கும் மத்தியில் வித்தியாசம் தானவி (ரஹ்) அவர்களின்
தாய்மாமா தனது வெறும் விருப்பத்தை மட்டும் வெளிப்படுத்தினார்கள்.இப்ராஹிம்
இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் செயலையே எடுத்து சொல்லியுள்ளார்கள்
சுருக்கம் என்னவெனில் இந்த பிரிவினரின் நோக்கம் இது போன்ற
செயல்களால்,நடத்தையால் இலக்கை அடைவார்கள்.இந்த விஷயத்தை அறியாமை நிறைந்த
பரலேவியர்களுக்கு யார் புரியவைக்க முடியும்? காழ்ப்புணர்ச்சியின் காரணமாக
குருடாக உள்ளார்கள்
அதே சமயத்தில் இதனையும் புரிந்து கொள்ள வேண்டும்.பெரும்பான்மையான
ஷைகுமார்களிடத்தில் இந்த செயலானது ஆன்மா சீர்திருத்திருத்திற்கு
சரியானதல்ல.
மூன்றாவது பதில்:
அஷ்ரப் ஸவானிஹின் முதல் பாகம்/பக்கம் 56,57 யை படிப்பதன் மூலம் தானவி ரஹ் அவர்களின் தாய்மாமா மஜ்தூபாக (இறைகாதலில் தன்னிலை இழந்த
மாபெரும் தவசீலர், மெய்நிலை கண்ட
ஞானியாக) இருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.
மஜ்தூப்கள் விஷயத்தில் ரிளாகானின் நிலைப்பாடு எழுது கோலானது உயர்த்தப்பட்டு
விட்டது (மஜ்தூப்களை அல்லாஹ் நாளை மறுமையில் குற்றம்பிடிக்கமாட்டான்)
சில சமயங்களில் நல்லோர்களிடத்திலிருந்து شطحیات (மார்க்கத்திற்கு மாற்றமாக
அல்லாஹ்வின் இறைநேசர்களிடமிருந்து சுய விருப்பமின்றி,கட்டுப்பாடின்றி சில
வார்த்தைகள் வெளிப்படும்)
பரலேவிய அறிஞர் ஹனீஃப் குறைஷி குஸ்தாகி கோன் گستاخ کون என்ற நூலில்
இறைநேசர்களின் شطحیات சம்பந்தமான தனியொரு தலைப்பில் எழுதியுள்ளார்.
அஷ்ரப்
அலி தானவி (ரஹ்) அவர்களின் தாய்மாமா மஜ்தூப் இதனால் அவர்களின் கூற்றுக்கள்
شطح என்பதாக விளங்கப்படும். மஜாதிப்கள் விஷயத்தில் மலக்குகள் கூட தங்களின்
எழுதுகோலை உயர்த்திவிட்டார்கள்.ஆனால் அறியாமை நிறைந்த பரலேவிகள்
விமர்சிக்கின்றனர்.
அஹ்மத் ரிளாகான் பரலேவி "மல்பூஜாதில்" ஒரு மஜ்தூபின் சம்பவத்தை
எடுத்தெழுதியுள்ளார்கள் அதனின் சுருக்கம்:
உண்மையான மஜ்தூப் இவ்வாறு
அறியப்படுவார் ஷரீஅத்திற்கு எப்பொழுதும் எதிராக இருக்கமாட்டார்.حضرت سید
موسی سہاگ (ரஹ்) அவர்கள் பிரபல்யமான மஜ்தூப்களிலே
கட்டுப்பட்டவர்.அஹமதாபாத்திலே அவர்களின் மிர்ஜா ஷரீப் உள்ளது.நான் அதனை
ஜியாரத் செய்துள்ளேன்.மூன்றாம் பாலின (அலியாக செயற்கையான)தோற்றத்தில்
இருந்தார்கள்.ஒரு தடவை கடுமையான பஞ்சம் அரசர்,நீதிபதிகள்
ஒன்று கூடி ஹள்ரதிடம் துஆவிற்கு சென்றார்கள்.அவர்கள் துஆ செய்வதை
மறுத்தார்கள் ஏனெனில் நான் துஆ செய்வதற்கு என்ன தகுதி உள்ளது? என்றார்கள்
இதனால் மக்கள் கைசேதத்தால் கதறல்கள் எல்லையை எட்டியது.ஒரு கல்லை
எடுத்தார்கள்.வளையில் அணிந்திருந்த மற்றொரு கையின் பக்கம் கொண்டு
சென்றார்கள் வானத்தை நோக்கி முகத்தை உயர்த்தி கூறினார்கள் மழையே பொழி!
அல்லது என்னை உயர்த்தி கொள்! மேகங்கள் மலையைப் போன்று நீரை கொட்டியது.மழை
நீர் பெருக்கெடுத்து ஓடியது.மேலும் பெருக்கெடுத்த நீரால் வரண்ட பூமி
நிரம்பியது.ஒருநாள் ஜும்ஆ நாளில் ஜும்ஆ நேரத்தில் கடைவீதியில் சென்று
கொண்டிருந்தார்கள்.மற்றொரு பக்கம் நீதிபதிகள் ஊரின் ஜாமிஆ மஸ்ஜிதின் பக்கம்
சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அன்னாரிடத்தில் நன்மையை
ஏவினார்கள்.இந்த தோற்றமானது ஆண்களுக்கு ஹராமாகும்.ஆண்களுக்குரிய ஆடைகளை
அணியுங்கள்!தொழுகைக்கு வாருங்கள் என்றார்கள்.இதனை அன்னார் எதிர்க்கவில்லை.
மறுக்கவில்லை.வளையல்கள், ஆபரணங்கள்,பெண்களுக்கு ஒப்பான ஆடையை கழற்றி விட்டு
மஸ்ஜிதுக்கு சென்று குத்பா கேட்டார்கள்.எப்பொழுது ஜமாஅத் தொழுகை ஆரம்பமாகி
இமாம் அல்லாஹ் என்று தக்பீர் கூறினாரோ அப்பொழுது அன்னாரின் நிலை மாறியது
கூறினார் அல்லாஹ் அக்பர் எனது கணவன் உயிருள்ளவன்.மரணிக்க
மாட்டான்.எப்பொழுதும் மரணம் அடையமாட்டான்.இதனை என்னைப் போன்ற விதவைக்கு
கொடுக்கிறான்.இந்தளவிற்கு கூறியிருப்பார்.தலையிலிருந்து பாதம் வரையிலும்
அதே சிவப்பான ஆடையாக இருந்தது.
இந்த சம்பவத்தில் மார்க்கத்திற்கு எதிரான பல காரியங்கள்
அரங்கேறியுள்ளது என்றாலும் கூட ரிளாகான் பரலேவி அவர்கள், ஹள்ரத் ஸய்யித்
மூஸா அவர்களை இறைநேசர் என்பதாக கூறிகிறார்
.(1) அவர் ஆணாக இருந்தும் கூட
பெண்ணைப் போன்று நடந்துள்ளார் இவ்வாறு நடப்பதானது ஆண்களுக்கு
ஹராமாகும்.ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு ஒப்பாக நடக்கும் மனிதனை
சபித்துள்ளார்கள்
(2) அவர் சிவப்பு நிற ஆடையை அணிந்துள்ளார் இது ஆண்களுக்கு
ஹராமாகும்
.
(3) ஆபரணங்கள் அணிந்துள்ளார் இதுவும் ஆண்களுக்கு ஹராமாகும்
.(4)
ஜும்ஆ தொழுகைக்கு செல்லாமல் கடைவீதியில் சுற்றி திரிந்துள்ளார்.
(5)ஆணாக
இருப்பதுடன் அல்லாஹ்வை கணவன் என்கிறார் அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஆக இறைநிராகரிப்பும்,மார்க்கத்திற்கு எதிரானவைகளும் அவரிடம்
இருப்பதுடன் ரிளாகான் அவர்கள்,அவரை இறைநேசர் என்பதாகவும்,பிரார்த்தனை
ஏற்கப்படதகுதியானவர் என்பதாக கூறியுள்ளார்.அவரின் பிரார்த்தனையால் மழை
பெய்துள்ளது.பஞ்சமும் தீர்ந்துள்ளது.
மேற்சொன்னதைப் போன்று ரிளாகான் அவர்கள்,மற்றொரு மஜ்தூபை பற்றி
கூறியுள்ளார்கள் ஒரு மஜ்தூப் மஸ்ஜிதின் பக்கம் சென்று
கொண்டிருப்பார்.எவரேனும் ஒருவர் அவரிடத்தில் சென்றால் குறைந்த பட்சம்
ஐம்பது தடவை திட்டுவார்.எனக்கு அவரின் சமூகத்திலே செல்லும் ஆர்வம்
உள்ளது.
(تجلیات احمد رضا ،حيات اعلى حضرت)
இதற்கெல்லாம் பரலேவிகளின் பதில் எதுவோ அதுதான் நமது பதிலாகும்.
நான்காவது பதில்:
மல்பூஜாதில் விமர்சனத்தை எடுத்து வைத்த
பரலேவிகள் மிகப் பெரிய மோசடி செய்துள்ளனர்.மல்பூஜாதின் பக்கம்,பாகத்தை
கொடுத்துள்ளனர்.அதே நூலின் அடுத்த பக்கத்தையும் எடுத்தெழுதியிருந்தால்
இதற்கு பதில் அளிக்கும் தேவை கூட இல்லாமல் போயிருக்கும்.அதில் தானவி (ரஹ்)
அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்.எனது தாய்மாமாவின் இந்த
பேச்சுக்களாலும்,செயல்களாலும் அவரின் தொடர்பை துண்டித்து விட்டேன்.அல்லாஹ்
அவருக்கு ஷரீஅத்தை பின்பற்றும் பாக்கியத்தை அளிப்பானாக! என துஆ
செய்தேன்.மேலும் ஹாஜி ஸாஹிப் அவர்களை கனவில் கண்ட நிகழ்வையும்
கூறுகிறார்கள்:
என்னை அன்னார் தாய்மாமாவின் தொடர்பை தடுத்தார்கள். (
அதனைப் பற்றிய விவரம்
வருமாறு).
என் தாய்மாமாவாக இருந்த போதிலும் நான் மற்றவர்களின் நல்ல
நோக்கத்திற்காக வேண்டி முற்றிலும் அவர்களை விட்டும் ஒதுங்கி கொண்டேன்.அந்த
சமயத்தில் ஹள்ரத் ஹாஜி ஸாஹிப் (ரஹ்) அவர்கள் கனவில் கூறினார்கள் உங்களின்
மாமாவின் தொடர்பை துண்டித்து விடுங்கள். இல்லையெனில் சொறி பிடித்தவராக
ஆகிவிடுவீர்கள் கனவிற்கு விளக்கம் சொல்பவர்கள் கூறியுள்ளார்கள் .சொறி,தொழுநோயின் கனவிற்கு விளக்கமானது பித்அத்தாகும். அவரின் நிலையானது
மிகைத்து தடங்கவாதியாக இருந்தாலும் எதார்த்தத்தில் பித்அத்தாக
உள்ளது.அவரிடத்தில் எனது தொடர்பின் காரணமாக பொதுமக்களுக்கு தவறான எண்ணம்
ஏற்பட்டது.மற்றொரு பக்கம் எந்த நோக்கத்திற்காக அவரிடத்தில் தொடர்பு
வைத்திருந்தேனோ அந்த நோக்கமும் நிறைவேறவில்லை.நெருக்கடியானது நீங்க
வேண்டும் என எண்ணினேன். ஆனால் நெருக்கடி அதிகரித்தது.நல்ல முறையில்
காரணத்தை தெரிவித்து விட்டேன்.நல்ல முறையில் தஃவத்தும் கொடுத்தேன்.அவரின்
கடிதத்திற்கு இவ்வாறு பதில் கூறினேன் தங்களின் நிலையும்,சொல்லும்
ஷரீஅத்திற்கு ஏற்ப அமைய நான் துஆ செய்கிறேன் என்றேன் (ا
لافاضات الیومیة
مطبوعہ ادارہ تالیفات رشیدیہ)
தானவி (ரஹ்) அவர்கள் தனது மாமாவின் செயல்களை ஷரீஅத்திற்கு மாற்றமானது
என்று சொல்லி அவர்களுடன் தொடர்பை துண்டித்து விட்டதாக
தெளிவுப்படுத்தியுள்ளார்.மாறாக
அவருக்கு துஆவும் செய்துள்ளார்கள்.அவரின்
தவறையும் சுட்டி காட்டியும் உள்ளார்கள்.இவ்வாறு இருக்கும் போது அனைத்து
செயல்களை அவர்களின் மீது சுமத்துவதும், இதனை முன்வைத்து சத்திய உலமாக்களான
தேவ்பந்த் உலமாக்களை விமர்சிப்பதும்,தூற்றுவதும் அப்பட்டமான
அபாண்டமும்,ஏமாற்றுதலும் இல்லையா?
இந்த மல்பூஜாத்தை முன்வைத்து விமர்சித்தவாறு தானவி (ரஹ்) அவர்களின்
மீதுள்ள குரோதத்தை அருவருப்பான வார்த்தைகளால் பரலேவிகள்
வெளிப்படுத்துகின்றனர்.(
அதன் விவரம்)
நாம் தானவி ஸாஹிபின் மாமாவை
.......... அல்லது தானவி அவர்களின் மாமாவின் உறவை வைத்து....... இவ்வாறு
சொல்வதால் தேவ்பந்திகள் இதனை விமர்சனமாக எடுத்து கொள்ளக்கூடாது என
வாதிடுகிறார்கள்
நமது மறுப்பு:
அஹ்மத் ரிளாகானின் பின்வரும் கவிதையை முன்வைத்து அஹ்மத்
ரிளாகானை "
அலையும் நாய்" என்று கூறினால் பரலேவிகள் இதனை விமர்சனமாக எடுத்து
கொள்ளக்கூடாது.
ரிளாகான் (
தன்னைப் பற்றி கூறுகிறார்)
ரிளாகானே! எவராவது
உனது பேச்சை ஏன் செவிமடுக்க வேண்டும்?
உன்னிடத்திலிருந்துதான் ஆயிரக்கணக்கான
நாய்கள் சுற்றி திரிகிறது.(
حدائق بخشش حصہ اول )
ரிளாகான் பரலேவி நாய் அவரது இரண்டு பிள்ளைகள் உயர்ந்த நாய்கள்.
மியா ஷேஅன்னாரதுர் முஹம்மது ஷர்கபூரி பற்றி வாழ்க்கை
சரிதையில் எழுதப்பட்டுள்ளது:
மியா ஸாஹிப் ஒரு நாள் அதிகாலை நேரத்தில்
வீட்டில் அமர்ந்திருந்தார்கள்.அன்னாரது வீடானது நாளுக்கு நாள் திக்ரு உடைய
சபையாக மாற்றம் பெற்றது.ஒரு நாள் மூதாட்டி வந்து அன்னாரிடத்தில் கவலையுடன்
கூறினார்கள் தாங்கள் அதிகமான மக்களுக்கு வழிகாட்டுகிறீர்கள் எனக்கும் ஓர்
ஆசை உள்ளது.நான் அண்ணலாரின் ரவ்ளா ஷரீஃபை தரிசக்க ஆசைப்படுகிறேன்.மியா
ஸாஹிப் அவர்கள் கனிவாக கூறினார்கள் தரூத் ஷரீஃப் ஓதுங்கள்! ஓதும் நேரத்தில்
அங்கு இருப்பதாக சிந்தனை செய்யுங்கள்! என்றார்கள். மூதாட்டி அவர்கள்
அந்நேரத்தில் இதே சிந்தனையுடன் தரூத் ஷரீஃப் ஓதினார்கள் பிறகு
கட்டுப்பாட்டை மீறி கூக்குரலிட்டார்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'நான்
ரவ்ளாவிற்கு முன்பாக நிற்கிறேன் என்றார்கள்' மியா ஸாஹிப் கடுகடுத்தவாறு
எழுந்து நின்று கூறினார்கள்:
மக்கள் எவரேனும் "பட்வா" திரைக்குள் பின்னால் இருப்பதற்கு விடுவதில்லை.
"பட்வா" என்ற வார்த்தையானது மியா ஸாஹிப் தன்னை குறித்து
கூறியுள்ளார்கள்.எடுத்து சொல்வதிலே மாறிவிட்டது.இதன் மூலம் தனது
உள்ளத்திற்கு அடி கொடுத்துள்ளார்கள்.மியா ஸாஹிப் (ரஹ்) அவர்களின் வழமை
மட்டுமல்ல பிரபல்யமான பெரியோர்களிடமிருந்தும் இது போன்ற உதாரணங்கள்
கிடைக்கிறது.(منبع انوار مطبوعہ اویسی بک سٹال )
இந்த நூலை கோர்வை செய்தவர்
பரலேவிய பீர் தரீகத் ஜமீல் அஹ்மத் ஷர்கபூரியின் மகனார் ஜலீல் அஹ்மத் ஷர்கபூரியாவார். தன்னைத்தானே மியா ஸாஹிப்
"பட்வா"
என்று சொல்வதானது உள்ளப்பயிற்சியாகும்.இதற்கு பெரியோர்களிடமிருந்து
உதாரணங்கள் உள்ளன என்பதாக பரலேவி கூறியுள்ளார்.
ஆக தானவி (ரஹ்) அவர்களின் தாய்மாமாவின் மீதும் அன்னாரின் மீதும் இதனை
முன்வைத்து சத்திய உலமாக்களான தேவ்பந்த் உலமாக்கள் மீது அவதூறை அள்ளி வீசிய
பரலேவிகளுக்கு தக்க மறுப்பாகவும்,நடுநிலையாளர்களுக்
கு சத்தியத்தை
விளங்கி கொள்வதற்கு தூண்டுகோலாகவும் இந்த பதில்
அமைந்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment